Skip to main content

Posts

Showing posts from May, 2024

தஞ்சையில் கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர் பணி நிறைவு பாராட்டு விழா.

தஞ்சாவூர் கால்நடை பன்முக மருத்துவமனையில், முதுநிலை கால்நடை மருத்துவ மேற் பார்வையாளராக திறன்படபணியாற்றி பணி ஓய்வு பெறும்,  ஜான் பீட்டர் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா, தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில், மாலை 5 மணி அளவில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது.  பணி நிறைவு பாராட்டு விழா நிகழ்விற்கு கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குனர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையேற்று நடத்திட, இவ்விழாவில் துணை இயக்குனர்  பாஸ்கரன், உதவி இயக்குனர்கள்: சரவணன், அன்புச் செழியன், ஏஞ்சலா ஆகியோரும், கால்நடை ஆய்வாளர் சங்க, மாநில இணைச் செயலாளர்  தமிழ்வாணன் அவர்களும், கால்நடை உதவி மருத்துவர்களும் திரளான கால்நடை ஆய்வாளர்களும் கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற ஜான் பீட்டர் அவர்களை  வாழ்த்தினார்கள். விழா ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்து ராஜா அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியின் நிறைவாக  வழக்கறிஞர் சார்லஸ்  நன்றி கூறினார். செய்தியாளர்  வேங்கை குணா   

சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் அவர்களின் 255 ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு த வெ க சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது

சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் 255ஆவது பிறந்தநாள் விழா தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் உள்ள அவரது மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  விழாவில் தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடார சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள்,கழகத்தின் தோழர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

செங்கம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியில் அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து சுமார் 1.5 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு .!

 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து சுமார் 1.5 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள்  திருட்டு டாஸ்மாக் கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராக்கள் உள்ள ஹர்ட் டிஸ்க்கை உடைத்து எடுத்துச் சென்ற மர்ம நபர்கள்.  மதுபாட்டில்கள் திருட்டு தொடர்பாக செங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  செய்தியாளர் ஆ.செல்வகுமார்

தூத்துக்குடி பேச்சியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது..!

இதனையொட்டி இன்று 31ம் தேதி காலையில் விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், தனபூஜை, மகா கணபதி ேஹாமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை தீபாரதனை நடைபெற்றது.  மாலையில் மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், புனிதநீர் எடுத்து வருதல், விக்னேஸ்வர பூஜைகள் நடைபெறுகிறது. வரும் 1ம் தேதி நாளை காலை திருமுறை பாராயணம், உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது. மாலை விக்னேஸ்வரர் பூஜை, உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. ஜீன் 2ம் தேதி காலையில் மங்கள வாத்தியம், நான்குகாலை பூஜைகள் பேச்சியம்மாள் விமான கோபுரங்கள், செல்வசக்தி விநாயகா், பிரம்மசக்தி அம்மன், சந்தனமாாியம்மன், கருப்பசாமி, வைரவசாமி, ஆகிய பாிவாரமூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அன்று காலை 11மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக கமிட்டியினர் செய்துள்ளனர்.  செய்தியாளர் அ. ரவி

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.!

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி முழுமையாக அமைச்சர், அரசு துறை அதிகாாிகள் ஈடுபட்டு, பல்வேறு தொடங்கப்பட்ட பணிகளான புதிய கால்வாய் சேதமடைந்த சாலைகள் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் பல்வேறு பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலைகள் தார்சாலைகள் கழிவுநீர் கால்வாய்கள் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று பல்வேறு பகுதி பொதுமக்கள் ஏற்கனவே கோாிக்கை வைத்துள்ளனர்.  இந்நிலையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் பொட்டல்காடு ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து தங்களது குறைகள் குறித்து கேட்டறிந்தார். மக்களுடன் கலந்துரையாடலில் பேசும் போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் இந்த பகுதிக்கு புதிய திட்டங்கள் குறிப்பாக சாலை வசதி, மின்விளக்கு வசதி, செய்து கொடுக்கப்பட்டுள...

தூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை குறித்த விதிமுறைகள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் .!

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 2024ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பாக 36. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4ம் தேதிஅன்று நடைபெற உள்ளது தொடர்பாக வாக்கு எண்ணிக்கை குறித்த விதிமுறைகள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடனான ஆய்வுக் கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிதேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில், சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குகள் எண்ணும் முகவர்களை நியமனம் செய்தல், நியமனம் செய்யப்படும் முகவர்களுக்கான தகுதிகள், சட்டமன்ற தொகுதிவாரியாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்கு எண்ணும் முகவர்கள் செல்ல வேண்டிய நுழைவாயில் விபரங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் முகவர்கள் எவ்வாறு அமரவேண்டும் என்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. சட்டமன்ற தொகுதிவாரியாக வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு தேநீர் மற்றும் உணவு ஏற்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தின் போது ஆலோசிக்கப்பட்டது. இறுதி...

தூத்துக்குடி மாவட்டம் சுதந்திர போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் மணிமண்டபத்தில் 255 ஆவது பிறந்த நாள் விழா.!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், வல்லநாட்டில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் மணிமண்டபத்தில் அன்னாரது 255 ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு இன்று 31.5.24 மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.அஜய் சீனிவாசன் அவர்கள் வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் திரு.சிவக்குமார் அவர்கள்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சே.ரா.நவீன் பாண்டியன் அவர்கள் மற்றும் வீரன் வெள்ளையத்தேவன் அவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.  செய்தியாளர் அ. ரவி 

தூத்துக்குடி மாநகராட்சி முத்து நகர் கடற்கரை பூங்காவில் எல்.இ.டி திரை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்  உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை அழகுபடுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் . அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சி முத்து நகர் கடற்கரை பூங்காவில் நடைபெற்று வரும் எல்.இ.டி திரை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்  மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள்  உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் , பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான  தொ.நிர்மல் ராஜ் , மாநகர மீனவரணி அமைப்பாளர் .டேனி  கழக நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்.  செய்தியாளர் அ. ரவி 

கதிர்வேடு ஸ்ரீ கெங்கையம்மன், நாகாத்தம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா.!

மாதவரம் தொகுதி புழல் அடுத்த கதிர்வேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கெங்கையம்மன், நாகாத்தம்மன் ஆலயத்தில் 21-ம் ஆண்டு சித்திரை திருவிழா மறைந்த முன்னாள் புழல் ஒன்றிய குழு பெருந்தலைவரும் ஆலய தர்மகர்தாவான பர்ணபாஸ், முன்னாள் முன்னாள் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வதனாபர்ணபாஸ்  குடும்பத்தினர்கள் சென்னை மாநகராட்சி 23-வது மாமன்ற உறுப்பினர் ராஜன்பர்ணபாஸ், 31-வது மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு மற்றும் பிரேமலதா ராஜன், தர்மலிங்கம், பாபு, கர்ணன், சவிதாகர்ணன் ஆகியோர் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பந்தக்கால், காப்புக்கட்டுதல், பூங்கரகம் எடுத்தல்,  கணபதி பூஜை, லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரகம் ஹோமம் கலசநீர் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்மன் உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் மேளதாள வானவேடிக்கைவுடன் திருவீதி உலா நடைபெற்றது.இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கினர். இதில் ஆலய நிர்வாகிகள், சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்துகொண்ட...

மனித உரிமை அமைப்பின் தேசிய இயக்குனர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ் விசிக வில் இணைந்தார்.!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின்நிறுவனரும், தலைவருமான, எழுச்சித்தமிழர்  தொல். திருமாவளவன் எம்.பி. தலைமையில், தஞ்சையை சேர்ந்த ஐ.நா. மனித உரிமை அமைப்பின் தேசிய இயக்குனர் டாக்டர். பிரனேஷ் இன்பென்ட் ராஜ் (தலித் அல்லாதவர்) விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். என்பது குறிப்பிடத்தக்கதே. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலமான வேளச்சேரியில் உள்ள, தலைவரின் இல்லத்தில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமையிலும்,  தஞ்சை மைய மாவட்ட செயலாளர் கோ. ஜெய்சங்கர்  முன்னிலையிலும் ஐ .நா. மனித உரிமை அமைப்பின் தேசிய இயக்குனர் டாக்டர்.இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் (தலித் அல்லாதவர்) கடந்த 25- ம் தேதி  தன்னை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டார். அப்போது அவருக்கு தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சால்வை அணிவித்து அவரைவாழ்த்தி வரவேற்றார். நடைபெற்றஇந்த நிகழ்வின்போது,  தஞ்சை மாநகர செயலாளர் க.தமிழ்முதல்வன். அ.யோகராஜ் மாவட்ட அமைப்பாளர் தொ.வி.மு./ டி.என்.சி.எஸ்.சி. தொழிற்சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர். போராளி என்கின்ற பசுபதி, தஞ்சை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர...

ஓட்டப்பிடாரம் அருகே கப்பிகுளம் கிராமத்தில் மின்னொளி கபடிப் போட்டி நடைபெற்றது.!

இளைஞர்களின் விளையாட்டுத் திறனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கப்படுத்தி வருகிறார்.  ஓட்டப்பிடாரம் ஒன்றியப் பெருந்தலைவர் ரமேஷ் பெருமிதம் .ஓட்டப்பிடாரம் அருகே கப்பிகுளம் கிராமத்தில், பேச்சியம்மன், காளியம்மன் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு புதிய பறவை கபடிக் குழு, இளைஞர் மன்றம், ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய மின்னொளி கபடிப் போட்டி நடைபெற்றது.கபடிப் போட்டியில் முதலிடம் பிடித்த பால்ராஜ் நினைவுக் கபடிக் குழுவிற்கு ரூபாய் பதினைந்தாயிரம் கீழமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்கனி அரிச்சந்திரன் வழங்கினார். முதல்பரிசுக்கான சுழற்கோப்பையினை இளைஞர் மன்றம் மற்றும் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை இணைந்து வழங்கினர். இரண்டாம் பரிசாக ரூபாய் 12ஆயிரம் சென்னை கோழியின ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பேராசிரியர்  முனைவர் க.சங்கிலிமாடன் வழங்கினார். சுழற்கோப்பையினை அரசு ஒப்பந்ததாரர் அண்ணாதுரை மற்றும் தங்கையா, மாடத்தியம்மாள், சந்திரலேகா நினைவாக பெருமாள்சாமி ஆகியோர் இணைந்து வழங்கினர். இரண்டாம் பரிசினை கப்பிகுளம் புதிய பறவை கபடிக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.மூ...

மாற்றுத்திறனாளிகளுக்கான கோடை கால பயிற்சி முகாம் நிறைவு.!

தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் வைத்து மே 1 முதல் 26 வரை நடைபெற்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பாரா பயிற்சியாளர் விஜயசாரதி சிறப்பு பயிற்சி அளித்தார். பயிற்சி முகாமில் நிறைவு விழா 26ம் தேதி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஜூடூ, செயலாளர் ராஜேஷ், ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள். அதில் தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்கத்தின் தலைவர் முஹம்மது நசீர் துணைத் தலைவர்கள் வழக்கறிஞர்  கிறிஸ்டோபர் விஜயராஜ், கான்ஸ்டன்ட்  செயலாளர்  ஸ்டீபன் துணைச் செயலாளர் ஜெயலட்சுமி பொருளாளர் நீலராஜன் செயற்குழு உறுப்பினர்  ரிகானா பர்வீன், அஜீஸ்  ஆகியோர் கோடைகால பயிற்சி முகாமினை செய்திருந்தனர்.  பின்னர் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும், தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கத்திற்கும் நன்றினை தெரிவித்துக் கொண்டனர். செய்தியாளர் ரவி   

தூத்துக்குடியில் பொியசாமியின் நினைவுதினத்தை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் அமைச்சர் கீதாஜீவன்.!

 தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பெரியசாமியின் ஏழாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்கினார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர்  அருண் சுந்தர், மாவட்ட மாணவரணி அணி அமைப்பாளர் வக்கீல் சீனிவாசன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.  செய்தியாளர் ரவி  

மீனாட்சி மருத்துவமனையில் உலக அவசர சிகிச்சை தினம் கொண்டாடப்பட்டது.!

தஞ்சையில் ஒவ்வொரு ஆண்டும் மே 27ஆம் தேதி உலக அவசர சிகிச்சை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடத்தின் கருப்பொருளாக பருவநிலை மாற்றமும் ஒரு சுகாதார அவசர நிலையே என்பதாகும். இதனை வலியுறுத்தவும், பொதுமக்களில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தவும், உயிர் காக்கும் முதலுதவி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பா,50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் திடீர் குழு பிளாஸ் மாப் நடனமாடி விளக்கமளித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியை கிளீன்  தஞ்சை இயக்கத்தின் தலைவர்,டாக்டர். ராதிகா மைக்கேல் அவர்கள் தொடங்கி வைத்தார்.  மாலையில் பொது மக்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் கருவிகள் காட்சிப்படுத்தி விளக்கமளித்தனர். இந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய மீனாட்சி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அவசர ஊர்தி நிபுணர்களுக்கு பாராட்டும்,விருதும், வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழுடன் மரக்கன்று பரிசாக, வழங்கப்பட்டது. ...

லியாபியின் (LIAFI) தஞ்சை கிளை பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு.!

லியாபியின் (LIAFI) தஞ்சை கிளை பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு, தஞ்சை பெசன்ட் அரங்கில், 25.5.2024 அன்று காலை 9:30  மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை கிளை, தலைவர்.எஸ். ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார், தஞ்சை கோட்டப்பொருளாளர், எஸ். ரஜினிகாந்த் முன்னிலை வகித்தார்,தஞ்சை கிளையின் செயலாளர், டி.ஆரோன்ராஜ் வரவேற்புரையாற்றினார். தஞ்சை கிளை பொருளாளர், கே.முரளி செல்வம் வரவு, செலவு கணக்கை சமர்ப்பித்தார், செயற்குழு உறுப்பினர், ஆர். வீரமணி, செயற்குழு உறுப்பினர், பி. ரகுநாதன்,எம்.எ. முருகையன், எல். குப்பு கண்ணன் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினர். இதன் பின்பாக புதிய நிர்வாகிகளை ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்ட நிர்வாகிகளான: பொன்.காசிநாதன் தலைவராகவும்,டி. வசந்தராஜ் செயலாளராகவும்,வி. மகேந்திரன் பொருளாளராகவும், எம்.எ. முருகையன் செயற்குழு உறுப்பினராகவும், எல். இன்பசேகரன் செயற்குழு உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் புதிய நிர்வாகிகளை, பழைய பொறுப்பாளர்களான: தலைவர், எஸ். ரவிச்சந்திரன், செயலாளர்,டி. ஆரோன்ராஜ், பொருளாளர்,கே. முரளிசெல்வம்  ஆகியோர் தங்களது பொறுப்புகளை புதிய...

மெய்யூர் Ensure அறக்கட்டளை ராம் பிறந்த நாள் விழா.!

மெய்யூர் Ensure அறக்கட்டளை நிர்வாகி ராம் அவர்களின் 36வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த மெய்யூர்  அரசினர் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் Ensure கல்வி அறக்கட்டளையின் சார்பில் அறக்கட்டளை நிர்வாகி ராம் அவர்களின் 36வது பிறந்த நாளை முன்னிட்டு நம்பாக்கம், தேவந்தவாக்கம், நெல்வாய், மெய்யூர், பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிக விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நான்கு பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இப்பள்ளிகளுக்கான பெயிண்டிங்க் கழிப்பறை வசதிகள் பாத்ரூம் வசதி மற்றும் 43 Inch LEDTv போன்ற கல்வி உபகரணங்களளை  Ensure கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் சமூகசேவகர் ஜெரி செயலாளர் பிரகாஷ் அறங்காவலர்கள் ஸ்ரீதர், ராம், பிரகாஷ், சில்பா அவர்கள் கலந்து கொண்டு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார்கள் நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் அறுசுவை உணவு பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் மெய்யூர் விஜயக...

மாதவரம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம்.!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது கட்சியை பலப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தனது கட்சி நிர்வாகிகள் மூலம் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மாதவரம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் ஆணைக்கிணங்க செங்குன்றம் அடுத்த தீர்த்கரையம்பட்டு சமுதாய நலக்கூடத்தில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், கிளைக் கழகங்கள் துவங்குவது குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக்கழக மாவட்ட,ஒன்றிய,,நகர நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். செய்தியாளர் ரஞ்சித் 

பாடியநல்லூர் முதல்நிலை ஊராட்சியில் வாரச் சந்தை திறப்பு.!

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் முதல்நிலை ஊராட்சிபில் தரமான காய்கறி, பழங்கள், மளிகை பொருள்கள், உணவுப் பொருள்களை குறைந்த விலையில் பொதுமக்கள் வாங்குவதற்காக சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற முயற்சி எடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி நடராஜன் தலைமையேற்று வாரச் சந்தையை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பிரியதர்ஷினி சரவணன், வார்டு உறுப்பினர்கள் எஸ்.முத்துக்கண்ணன், இ.தேவி, என்.வேலு, எம்.ராணி, பி.சுரேஷ், எம்.கமருன்னிசா, ஆர்.லட்சுமணன், கே.வளர்மதி, கே,ராஜேஷ், வி.வசந்தி, ஜெ.சிவகாமி, கே.ராஜேஷ், டி.ஆர். வாணி, கே.ராஜவேலு, ஏ.பிஸ்மில்லா, ஊராட்சி செயலாளர் கே.ஆர்.சுரேஷ், போக்குவரத்து உதவி ’ஆய்வாளர் சரவணன், இயற்கை பாதுகாப்புக் குழு மாநில அமைப்பாளர் காஜா இப்ராஹீம்,மாநில தலைவர் இ.மாரியப்பன், புள்ளிலைன் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கே.மாதவன், எத்திராஜ் உள்ளிட்ட ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். திறப்பு விழா அன்று வாரச் சந்தைக்கு வருகை தந்த அனைவருக்கும் ப்ரஷான சிறு கீரை, முருங்கைக் கீரை, தண்டுக் கீரை உள்ளிட்ட பல்வேற...

தூத்துக்குடி திமுக முன்னாள் செயலாளர் பெரியசாமியின் 7ம் ஆண்டு நினைவு தினம்.!

 தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பெரியசாமியின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி மலர் அஞ்சலி செலுத்தினார்கள். தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும் எம்.எல்.ஏவுமான  பெரியசாமியின் 7ம்  ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு நினைவிடத்தில் பெரியசாமியின் மனைவி எபனேசர், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏக்கள் மார்க்கன்டேயன் சண்முகையா, மற்றும் ராஜாபொியசாமி, மேயர் ஜெகன் பெரியசாமி, அசோக்பெரியசாமி, அவரது மருமகன்கள் ஜீவன்ஜேக்கப், சுதன்கீலர், மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் 500 பேருக்கு வேஷ்டி, 500 பேருக்கு சேலை, மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி மரக்கன்று நட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். நிக...

கடையநல்லூர் சாதனா வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு.!

சங்கரன்கோவிலில் தடம் அறக்கட்டளை சார்பாக மாணவ மாணவிகளுக்கு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?  என்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சாதனா வித்யாலயா பள்ளி மாணவ மாணவியர்கள் அரசு பொதுத் தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்றமைக்கு பாராட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் திருமதி பிரிசில்லா பாண்டியன் வழக்கறிஞர் அவர்கள் பாராட்டி கேடயம்  வழங்கி பாராட்டினார்கள். தடம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் டாக்டர் வியங்கோ பாண்டியன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பழனி பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி பேராசிரியர் குளத்தூரான் அவர்கள், புளியங்குடி மனோ கல்லூரி முதல்வர் கண்ணன் அவர்கள், சாதனா வித்யாலயா பள்ளி முதல்வர் மயில் கண்ணு  ரமேஷ் அவர்கள் தாளாளர் ரமேஷ் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மருதம் பயிற்சி மையம் கற்பகராஜ் பெற்றோர்கள் மாணவர்கள் பாராட்டினார்கள்.  செய்தியாளர் சந்திரன் 

சமத்துவ மக்கள் கழக தூத்துக்குடி மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம்.!

சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்ட உயர்மட்ட குழு கூட்டம். மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை நாடார் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாநகரச் செயலாளர் உதயசூரியன் மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் பத்ரகாளி முத்து தொழிற்சங்க செயலாளர் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா தூத்துக்குடியில்  2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் விழாவிற்கு சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத் தலைவர் திரு எர்ணாவூர் நாராயணன் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும். மேலும் இவ்விழாவில் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கௌரவிக்க வேண்டும்  நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் ...

பேரம்பாக்கம் சின்ன மண்டலி கிராமத்தில் ஆரூரம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா.!

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த சின்ன மண்டலி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆரூரம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் ஜாத்திரை திருவிழா கடந்த 19ஆம் தேதி காப்பு கட்டலுடன் துவங்கி ஏழு நாட்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் உச்சக்கட்டமாக  ஜாத்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஊர் எல்லையிலிருந்து மேளதாளம் முழங்க வீதிகளில் வலம்வந்த ஆரூரம்மனை கிராம மக்கள் மஞ்சள் நீராட்டி உற்சாகத்துடன் வரவேற்றனர். இதனை தொடர்ந்து எட்டு நாட்களாக விரதமிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தேங்காயை தரையில் உருட்டியபடி கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தேங்காயை உடைத்து கிராம தேவதையான ஆரூரம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து தீப்பந்தம் ஏந்தியபடி பக்தர்கள் புடைசூழ கையில் நெய்விளக்கேந்தியபடி போலாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற பாகசாலை விழாவில் ஏராளமான பக்தர்கள் இடுப்பில் ஊசி நூல் குத்தியபடி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மிகவும் விமரிசையாக நடைபெற்ற இவ்விழாவில் சென்னை, தி...

செங்குன்றம் அங்காளம்மன் திருக்கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை.!

செங்குன்றத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டு 51 அடி உயரம் உள்ள ஸ்ரீ அம்பிகை சிலை, கருநிலை ஸ்தூபி, கோபுரம் மற்றும் ஆலய பரிவார மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வருகின்ற ஜூன் மாதம் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவிற்கு வேத மந்திரங்கள் ஓத யாகசாலை பூஜையுடன் பந்தக்கால் நடப்பட்டு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு  ஆலய வளாகத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கருவறையில் உள்ள ஸ்ரீ அங்காளம்மனுக்கு பாலஸ்தாபனம் நடைபெற்றது. இதில் விழா குழுவினர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், கவுன்சிலர்கள், வியாபார பொதுமக்கள், காவல்துறையினர் பெண்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். செய்தியாளர் ரஞ்சித் 

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், பேரரசு பெரும்பிடுகு முத்தரையருக்கு மாலை அணிவித்து மரியாதை.!

பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் அவர்களின் 1349 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருச்சி பாரதிதாசன் சாலையில் ஒத்தக்கடையில் அமைந்துள்ள  பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு, மாவட்ட கழக  செயலாளர் - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநகர செயலாளர் மு.மதிவாணன் அவர்களின் தலைமையில் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், துணை மேயர் திவ்யா இவர்களின் முன்னிலையில், மாலை அணிவித்து மரியாதை  செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில்  மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி ஒன்றிய, நகர, பேரூர், வட்டக் கழக கழகச் செயலாளர் , நிர்வாகிகள், வட்ட, வார்டு, கிளை கழகச் செயலாளர்கள்,  மாவட்ட - மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்  கலந்து சிறப்பித்தனர். செய்தியாளர் சங்கரராமன்

செங்குன்றம் பாடியநல்லூரில் புத்த பூர்ணிமா விழா.!

செங்குன்றம் அடுத்த சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூரில் உள்ள புனித புத்தர் ஆலயத்தில் இந்தோ பர்மா புத்தர் ஆலயம் மற்றும் கலாச்சாரம் சார்பில் புனித புத்தர் பூர்ணிமா விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிக்குக்கள் கலந்துகொண்டு பௌத்த கொடியுடன் பஞ்சசீலம் கொள்கைகள் ஏற்றப்பட்டு புனித புத்தர்க்கு பூர்ணிமா சிறப்பு பூஜைகள் செய்து பௌத்த வேதங்களை பக்தர்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் முன்னதாக பெண்கள்  சீர்வரிசை தட்டுடன் ஆலய போதி மரத்தினை சுற்றி வந்து மரத்திற்கு நீர் ஊற்றி புத்தரை வழிப்பட்டனர்.   இதில் இந்தோ பர்மா புத்தர் கோயில் நிர்வாகிகள் தலைவர் சேகர், செயலாளர் குமார், பொருலாளர் பாஸ்கர், துணைத்தலைவர் விஸ்வநாதன், துணை செயலாளர் சண்முகம் மற்றும் செங்குன்றம், பாடியநல்லூர் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்துகொண்டு புத்தரை வழிப்பட்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஆலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. செய்தியாளர் ரஞ்சித்  

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின்,33ஆம் ஆண்டு நினைவேந்தல்.!

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தலை யொட்டி, தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில், தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து, மௌன அஞ்சலி பேரணியாக புறப்பட்டு, தஞ்சை கீழவாசலில் உள்ள காமராஜர் சிலை அருகே மௌன அஞ்சலி முடிவுற்றது. நடைபெற்ற மௌன அஞ்சலி பேரணிக்கு, தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி ஜி இராஜேந்திரன் தலைமை தாங்கினார், முன்னாள் மாவட்ட தலைவர், நாஞ்சி.கி.வரதராஜன், தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர்,பொறியாளர்,ஜேம்ஸ், மானிடர் செயற்குழு உறுப்பினர்,வயலூர் இராமநாதன், தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள்: கரந்தை கண்ணன், செந்தில் சிவகுமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் பழனியப்பன்,வழக்கறிஞர் ஜான்சன்,சிபிஐ மாவட்ட செயலாளர் முத்து உத்தரவாதி, சிபிஎம்நகர செயலாளர் வடிவேலன்,   கோட்டை தலைவர்  மகேந்திரன், தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட தலைவர் திருஞானம், தஞ்சை மாநகர மாவட்ட மகளிர் அணி சேவா தல தலைவி, தமிழ்ச்செல்வி, கோமதி, தஞ்சை வடக்கு மாவ...

தஞ்சையில் நரசிம்ம ஜெயந்தி விழா.!

தஞ்சாவூர் கொண்டிராஜ பாளையத்தில் அமைந்துள்ள கீழ சிங்கர் என அனைவராலும் அழைக்கப்படும்,ஸ்ரீ கமலவள்ளி தாயார் ஸ்மேத ஸ்ரீ யோக நரசிம்ம பெருமாள் ஆலயத்தில் யோக நரசிம்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு, 22/5/2024 புதன்கிழமையன்று, காலை 7 மணிக்கு மேல் 9 மணிக்குள் சரி மஹாஸதர்சன  ஸ்ரீ லட்சுமி நரசிம்ம மகாலட்சுமி ஹோமமும், காலை,9:00 மணிக்கு மேல் 10 -30 மணிக்குள், விசேஷ திருமஞ்சனம்  ஆராதனையும், 10:30 மணிக்கு மேல் நரசிம்ம ஜெயந்தி விழாவும் நடைபெற்றது. கடம் புறப்பாடுகோயில் வளாகத்தின் உள்ளே  சுற்றி வந்து, அதன் பின்பாக மூலவர் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்மிக லிமர்சையாக நடைபெற்றது.  இந்தநரசிம்ம ஜெயந்தி விழாவில் பக்த கோடிகளும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு, ஸ்ரீ யோக நரசிம்மரின் அருளை பெற்றனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும், சுவாமி பிரசாதங்களும் வழங்கப்பட்டது. நரசிம்ம ஜெயந்தி விழாவின் தொடர்ச்சியாக, 23.5.2024 வியாழக்கிழமை காலை,9:00  மணிக்கு சிறப்பு சங்கல்பம், சுவாமி புறப்பாடும் நடைபெற்றது, இந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகளை  சுவாதி திருமஞ்சன கமிட்டி நி...

கணித மேதை ராமானுஜன் வாழ்ந்த இல்லத்தை, ஆவணத்துறையின் இயக்குனர் பார்வையிட்டார்.

மத்திய அரசின் தேசிய ஆவணத்துறையின் பொது இயக்குனர், அருன் சிங்கால் இ.ஆ.ப,  துணை இயக்குனர்  தேவேந்திர சர்மா, தென் மண்டல இயக்குனர் முருகேசன் (பாண்டிச்சேரி) உள்ளிட்ட உயர்நிலைக் குழு நேற்று கும்பகோணம், சாரங்கபாணி தெருவில் உள்ள கணிதமேதை ராமானுஜன் வாழ்ந்த இல்லத்திற்கு வருகை தந்து,அங்கிருந்த அவருடைய சிலைக்கு மாலை அணிவித்தார்கள். மேலும் அவர் வாழ்ந்த வீட்டைப் பார்வையிட்டு நன்றாக  பராமரிப்பதற்காகப் பாராட்டு தெரிவித்தனர்,  அவர்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், பேராசிரியர் சுகுமாரன், திரு. காரத்தி,  முருகானந்தம், பேரா. நடராஜன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து கணிதமேதை ராமானுஜம் பயின்ற கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்தார்கள்.  அவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன், பழைய மாணவர் சங்கத்தின் செயலர் சிவகுமார், மோகன்,  மற்றும்ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவிகள் வரவேற்பு அளித்தனர்.பள்ளி வளாகத்தில் இருந்த கணிதமேதை ராமானுஜன் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்பித்தார் கள்.. பின்னர் ராமானுஜன் பயின்ற வகுப்பறைகளையும், பள்ளியில் இருந்த அவருடைய...

தூத்துக்குடி தருவை குளத்தில் சுற்றுலா படகு சேவை துவங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு.!

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடலுக்குள் இயக்கப்பட்ட சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டு விட்டது இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர் இப்பகுதியை சுற்றுலா தளமாக மேம்படுத்தும் பொருட்டு கடலில் உள்ள  அரிய வகை  உயிரினங்களை பொதுமக்கள் காணும் வகையில் சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா மையம் இங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கடலில் பவளப்பாறைகள் உள்ளிட்டவைகளை சுற்றுலா பயணிகள் காண்பதற்காக கண்ணாடி நிலைப்படகு வடிவமைக்கப்பட்டது. இந்த படகு சேவை கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் தொடங்கப்பட்டது. பயணத்தின் போது மழைத்துளியைப் போல விழும் அயிரை மீன்கள் கூட்டமாக துள்ளி குதிப்பதையும் கரும்பச்சை நிறத்தில் தெரியும் கடல் நீர் கடலுக்குள் பவளப்பாறைகள் கலர் மீன்கள் ஜெல்லி மீன்கள் ஆகியவற்றையும் கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பினர். இந்நிலையில் கண்ணாடி இலை படகை வனத்துறையினர் தூத்துக்குடிக்கு கொண்டு சென்று விட்டனர் இதனால் ஒரு படகு மட்டும் இயக்கப்பட்டு வந்தது இந்தப் படகிலும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் ஓட்டை விழுந்தது இதனால் படகு சேவை முற்றிலும் முடங்கியது படையில் ஏறுவதற்காககடலில் அமைக்...

சுருட்ட பள்ளி ஸ்ரீ பள்ளிகொண்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரதோஷ பூஜை.!

திருவள்ளூர் மாவட்டம் ஆந்திரா எல்லையான ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்ட பள்ளியில் ஸ்ரீ பள்ளி கொண்டேஸ்வர ஸ்வாமி தேவஸ்தானத்தில் ஸ்ரீ சர்வமங்களா உடனான பிரதோஷ பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது பிரதோஷத்தையொட்டி, ஸ்ரீ நந்தீஸ்வர சுவாமிக்கும், ஸ்ரீ வால்மீகேஸ்வர சுவாமிக்கும் ஒரே நேரத்தில் ப்ரதோஷ பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. திங்கட்கிழமையான நேற்று  ஆலயத்தில் சுவாமி அம்பாளுக்கு ருத்ரஹோமம், ருத்ராபிஷேகம், மஹா அபிஷேகம் நடைபெற்றது. இந்த பிரதோஷ பூஜைக்கு ப்ரசாத உபயதார்பாரத பிரதமர்  நரேந்திர தாமோதர தாஸ் மோடியின் பெயரில் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் இருவர் கலந்து கொண்டு பிரசாதம் வழங்கினர்அவர்களுக்கு கோவில் முறைப்படி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆலய செயல் அலுவலர்,ஆலய சேர்மேன், அர்ச்சகர்கள் மற்றும் சிப்பந்திகள் கலந்து கொண்டனர். செய்தியாளர் துரை பன்னீர் செல்வம்

தஞ்சையில் பொறியியல் மாணவர்களுக்கு, மண்டல அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது.

தஞ்சை, திருச்சி,நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களுக்கான மண்டல அளவிலான பேச்சுப்போட்டி, தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில பொறியாளர் அணி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார், செயலாளர் மாநில துணைச் செயலாளர்கள் பரமேஷ் குமார் நரேந்திரன் வெற்றி பெற்ற பொறியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகர், துணை மேயர் அஞ்சும் பூபதி ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பேசினார், இந்தநிகழ்வில் தஞ்சை மாவட்ட தலைவர் இளங்கோ, அமைப்பாளர் ராம்சேகர், துணை அமைப்பாளர்கள் பொன்.கா.லெனின், மணிரத்தினம்,கவிநாதன் ராஜுவ் பாலையா, தினேஷ், தினகர், சீனிவாசன்,ஆகியோர் இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். செய்தியாளர் வேங்கை குணா  

தமிழ்நாடுசத்துணவு ஊழியர் சங்க 40-வது ஆண்டு துவக்க தின விழா.!

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க 40-வது ஆண்டு துவக்க தினவிழா, ஒரத்தநாடு ஒன்றியத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி துணை தலைவர், என்.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் கலா அவர்கள் முன்னிலைஏற்க, மாவட்ட செயலாளர், தி. இரவிச்சந்திரன் சங்க கொடியை ஏற்றினார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட கிளை செயலாளர், தம்பியா  கலந்து கொண்டார். இதில் முன்னணி ஊழியர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர். இதேபோன்று அம்மாபேட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் கண்ணம்மாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர், S. கருணாநிதி முன்னிலையில் மாவட்ட செயலாளர், தி.இரவிச்சந்திரன் சங்க கொடியை ஏற்றினார். இதில் முன்னணி ஊழியர்கள் மற்றும் பலர்கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக  பொருளார் உஷா அனைவருக்கும் இனிப்பு வழங்க நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது. திருவிடைமருதூர் ஒன்றியத்தில்,ஒன்றிய தலைவர் மணிமேகலை தலைமையில், மாவட்டச் செயலாளர், தி.இரவிச்சந்திரன் சங்க கொடியை ஏற்றினார்.இதில் முன்னணி நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  செய்தியாளர் வேங்கை குணா

தீர்த்த கரையம்பட்டில் கால்பந்து பயிற்சி வீரர்களுக்கு சீருடை வழங்கிய திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்

தீர்த்த கரையம்பட்டில் கால்பந்து பயிற்சி வீரர்களுக்கு சீருடை  வழங்கிய திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம்பட்டு கிராமத்தில் கோடைக்காலத்தில் மாணவர்களின் விளையாட்டுத் திறமையை மேம்படுத்தவும் விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளவும் கால்பந்து பயிற்சி நடைபெற்று வருகின்றது.  இப்பயிற்சியில் பங்கு கொள்ளும் 50க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு ஜெர்சி மற்றும் ஷார்ட்ஸ் தேவை என்று பயிற்சியாளர்கள் கதிரவன், சந்திரகுமார், இளம்பாரதி, எழில், சாரதி, ஹரிஷ் ஆகியோர் புழல் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் செ. யுவராஜிடம் வைத்த வேண்டுகோளை ஏற்று உடனடியாக அதற்கான ஏற்பாடு செய்து சிறுவர்களுக்கு வழங்கினார். அவருக்கு பயிற்சியாளர்கள், சிறுவர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில் தியாகு, அறிவழகன், மோசஸ், அருண், கலை, சாலமன், பிரேம், சேது,தினேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செய்தியாளர் ரஞ்சித் 

சோழவரம் பெருங்காவூர் ஸ்ரீ கங்கையம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

சோழவரம் ஒன்றியம் பெருங்காவூர் ஊராட்சி மதுரா மேட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கங்கையம்மன் ஆலயத்தின் 3-ம் ஆண்டு தீமிதி திருவிழா கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கணபதி ஹோமம்,கொடிஏற்றுதல், காப்புகட்டுதல், கரகம் எடுத்தல், வாடைபொங்கல் வைத்தல் மற்றும் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு கூழ்வார்த்தல், கும்பப்படையல் பூஜை நடைபெற்றது.  அதனை தொடர்ந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட காப்புகட்டிய பக்தர்கள் தீகுண்டத்தில் இறங்கி திரு நடனம் புரிந்து தங்களின் நேர்த்தி கடனை அம்மனுக்கு செலுத்தினர். இத்திருவிழாவிற்கு பெருங்காவூர் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்வீட்டிகோபி, துணைத்தலைவர் சுகாசினி சரவணன் மற்றும் ஆலய நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இத்திருவிழாவை முன்னிட்டு ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முடிவில் அம்மன் உற்சவர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட...

தமிழ்ப் பல்கலைக்கழக வளாகக்கல்வியில் பயிலும் மாணவர்களின்,மே 2024 பருவ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்ப் பல்கலைக்கழக வளாகக்கல்வியில் பயிலும் மாணவர்களின்,மே 2024 பருவ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் பல்கலைக்கழக வளாகக் கல்வியியல்வழியாக இளங்கல்வியியல், கல்வியியல்  நிறைஞர், முதுகலை (தமிழ் வரலாறு, நாடகம், இசை, சிற்பம்) முது அறிவியல் (கணிப்பொறி, சுற்றுச்சூழல் அறிவியல்)  ஒருங்கிணைந்த முதுகலை(தமிழ், வரலாறு, நாடகம்) முனைவர் பட்டம், பட்டயம்,சான்றிதழ் ஆகிய பட்டப் படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு (சுமார்,900-பேர்) மே 2024 பருவத் தேர்வுகள்,2.5.2024 முதல்11.5.2024 வரைநடைபெற்றன. இத்தேர்வுகள் எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளை விடியிடும் வகையில் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டுள்ளன. தேசிய தர மதிப்பீட்டு குழுவின் விதிகளின்படி ஏழு நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிட்டால் அதற்கான சிறப்பு மதிப்பெண்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதற்கு கேட்போம் தமிழ் பல்கலைக்கழக வளாக கல்வியின் வழியாக நடைபெற்ற தேர்வு முடிவுகள் ஆறு நாட்களுக்குள்ளாகவே குலத் தலைவர்கள் முன்னிலையில் கேது கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) முனைவர்,பெ. இளையாப் பிள்ளைஅவர்களால், (17.5.2024)   வெளியி...

ஆடுதுறை வேலன் மோட்டார்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரின் தந்தையார்,எ. ஆர் முருகேசன். படத்திறப்பு விழா.

செ.புதூர் ஆர்எஸ். மோட்டார்ஸ், ஆடுதுறை வேலன் மோட்டார்ஸ் நிறுவனங்களின். உரிமையாளர், லயன்.மு. இராஜசிங்கார வேலன் தந்தையார் ஏ.ஆர். முருகேசன் நினைவேந்தல்,. கும்பகோணம், டாக்டர். மூர்த்தி சாலை அருகே உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர்  செ.இராமலிங்கம், தலைமை வகித்தார். சட்டமன்ற தலைமைக்கொறடா. முனைவர் கோவி. செழியன் முன்னிலையில் கதராடை வேந்தர், சேவைச் செம்மல்,எ. ஆர்.முருகேசன் திருஉருவப் படத்தை,  கும்பகோணம், டாக்டர். மூர்த்தி. சாலையில் உள்ள அவரது இல்லத்தில்,  கூட்டுறவுத்துறை பணிநிறைவு துணைப் பதிவாளர் ந. குணசேகரன் திறந்து வைத்தார். ஸ்ரீ சோழா கல்வி நிறுவனத் தாளாளர் ஆர்.சிவசைலம், ஆசிரியை விஜயஸ்ரீ,  எஸ்.புதூர் ஸ்கை வெல் ஷைன் லயன்ஸ் சங்க சாசனத் தலைவர்,ச. கார்த்திகேயன், பொறியாளர் விஜய்,. மற்றும் உறவினர்களும், நண்பர்களும் புகழஞ்சலி செலுத்தினர்.காதி கிராப்ட் மேலாளர் மு.இராஜாராமன் நன்றி கூறினார். செய்தியாளர் வேங்கை குணா

கும்முடிபூண்டி கரும்பு குப்பம் அருள் மிகு ஸ்ரீ நிவாசா பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

கும்முடிபூண்டி கரும்பு குப்பம் அருள் மிகு ஸ்ரீ நிவாசா பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர் புதுகும்முடிபூண்டி கரும்பு குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ நிவாச பெருமாள் கோவிலில்  கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது   ஸ்ரீமான் சதீசன்   ராமானு தாசன் பட்டாச்சாரியார் தலைமையில் யாக கலச பூஜைகளுடன் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கொண்டு கோபுர கலசங்களுக்கும் ஸ்ரீநிவாசா  பெருமாளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சாமி தரிசனம் செய்தனர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கி கோவில் நிர்வாகத்தினர் சிறப்பித்தனர். இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான  டி.ஜெ.கோவிந்தராஜன் ஒன்றிய குழு தலைவர் கே.எம். எஸ்.சிவக்குமார் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் அஸ்வினி சுகுமாரன், ஒன்றிய கவுன்சிலர்கள்,மதன்மோகன் சீனிவாசன், ...

மெய்யூர் கிராமம் விவசாய நிலத்தில் கழிவுநீர் கலப்பதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயி குமுறல் நடவடிக்கை எடுக்ககோரி முதல்வருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை

மெய்யூர் கிராமம் விவசாய நிலத்தில் கழிவுநீர் கலப்பதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயி குமுறல் நடவடிக்கை எடுக்ககோரிமுதல்வருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை திருவள்ளூர்மாவட்டம்  பூண்டிஒன்றியம் ஊத்துக்கோட்டை தாலுக்கா  மெய்யூர் ஊராட்சியில்மழை நீர் வடிகல் கால்வாயில்ஒட்டுமொத்த  கழிவுநீர் கலந்து விவசாய நிலத்தில் சேர்வதால் நிலத்தடி மண் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டு காலமாக விவசாயம் செய்ய முடியாமல்விவசாய குடும்பம் குமுறி வருவதாகவும் சொல்லப்படுகிறது இதனால் பாதிக்கப்பட்ட எம் சி ராஜா விவசாயி என்ற விவசாய குடும்பம் பலமுறை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கும் முதலமைச்சரின் தனி பிரிவுக்கும் புகார் மனு அனுப்பியும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது இதனால் பாதிப்படைந்த விவசாய குடும்பம் வாழ்வாதாரம் இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும் கூறப்படுகிறது எனவே தமிழக முதல்வர் அவர்களும் மாவட்ட ஆட்சியர் அவர்களும் போர்க்கால அடிப்படையில் இதன் மீது கவனம் செலுத்தி விவசாய நிலத்தில் கலக்கப்படும் கழிவு நீரை அப்புறப்பட...

புழல் ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன் பிறந்தநாள்

சென்னை வடகிழக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட புழல் ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன் பிறந்தநாள் விழா அவரது இல்லத்தில் நடைபெற்றது.இவ்விழாவில் சென்னை வடகிழக்கு மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். பிறந்தநாள் விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் விளாங்காடுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ச.பாரதி சரவணன் வரவேற்றார். மகன்கள் ச.தனுஷ், ச.ரோகேஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் பிரியாணி வழங்கி அனைவரையும் உபசரித்தனர்.  செய்தியாளர் ரஞ்சித்  

தூத்துக்குடி மாவட்டம் குடிநீர் மற்றும் சாலை அமைக்கும் பிரச்சனைகளை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார் .!

தூத்துக்குடி  மாப்பிள்ளையூரணி ஊராட்சியில்  அமைந்துள்ள கீதாஜீவன் நகர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் பிரச்சனை மற்றும் சாலை அமைக்கும் பிரச்சனைகளை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர்  R.சரவணக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக அதிகாரிகளிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு  கொண்டு  பேசினார்.  அதனைத்  தொடர்ந்து  இரண்டு பணிகளையும் உடனடியாக முடித்து தருவதாக பொதுமக்களுக்கு உறுதி அளித்தார். செய்தியாளர் ஆ .ரவி

தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் நியாய விலைக் கடை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.!

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.12.70 இலட்சம் மதிப்பீட்டில்  புதிதாக கட்டப்பட்டுவரும் நியாய விலைக் கடை கட்டுமானப் பணிகளை உயர்திரு.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கோ.லட்சுமிபதி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.05.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.இரா.ஐஸ்வர்யா, இ.ஆ.ப., உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.உலகநாதன், உதவி செயற்பொறியாளர் திருமதி.வெங்கடேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (ஆழ்வார்திருநகரி) திருமதி.பாக்கியம் லீலா, திரு.சித்தார்த்தன் ஆகியோர் உடனிருந்தனர். ஜேம்ஸ் ரவி  

ஊத்துக்கோட்டை அருகே தொம்பரம்பேட்டில் பைரவி கோயில் திருவிழா

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தொம்பரம்பேட்டில் எழுந்தருளி உள்ள பைரவர் திருக்கோவிலின் சித்திரை கத்திரி திருவிழா மிகவும் விமர்சியாக கொண்டாடப் பட்டது  ஆண்டு தோறும் இம்மாதத்தில் இந்த பைரவர் கோவில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது இந்த ஆண்டும் நேற்று திருவிழா காலையில் துவங்கி இரவு முழுவதும் பலவகையான அபிஷேகங்கள் பூஜைகளோடு நடைபெற்று இரவு பைரவரை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு வான வேடிக்கை பட்டாசுகள்  மற்றும் கிராமிய தாரைதப்பட்டை மேளதாளங்களோடு வீதி உலா வந்தது பக்தர்கள் அனைவரும்  குடும்பமாக  வந்து தேங்காய் உடைத்து கர்பூரம் தீபம்ஏற்றி வழிபட்டுசாமி தரிசனம் செய்தனர் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஏராளமான மக்கள்  சாமிதரிசனம் செய்தனர்  ஊத்துக்கோட்டை தாலுகா செய்தியாளர் துரை பன்னீர்செல்வம்

புள்ளி லைன் குப்பாமணிதோப்பு ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் அருகே அதிமுக சார்பில் தண்ணீர்ப்பந்தல் திறப்பு

புள்ளி லைன்  குப்பாமணிதோப்பு ஸ்ரீ கெங்கையம்மன் கோயில்  அருகே அதிமுக சார்பில் தண்ணீர்ப்பந்தல் திறப்பு  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க  செங்குன்றம் அடுத்த புள்ளி லைன் ஊராட்சி குப்பா மணி தோப்பு  ஸ்ரீ கெங்கையம்மன் கோயில்  அருகே அதிமுக சார்பில் நீர், மோர் தண்ணீர்ப்பந்தல் திறப்பு விழா கண்ணதாசன் சங்கரன் ஏற்பாட்டில் புழல் ஒன்றிய  கழக செயலாளர் சுப்பிரமணி  தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.  இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள்  பால்வளத்துறை அமைச்சரும்  திருவள்ளூர்  கிழக்கு மாவட்ட செயலாளருமான  மாதவரம் வி.மூர்த்தி சிறப்பு அழைப்பாளராககலந்துகொண்டு புள்ளி லைன் ஊராட்சி  ஸ்ரீ கெங்கையம்மன் கோயில் அருகே   நீர், மோர் தண்ணீர்ப்பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்கள் தாகம் தீர்க்க மோர், இளநீர், வெள்ளரி, தர்பூசணி, ஐஸ்கிரீம்  மற்றும் சுவையான குளிர்பானங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் விஜயகுமார், கோபால், கோவிந்தன்...

அஇஅதிமுக சார்பில் தீர்த்த கரையம்பட்டு ஊராட்சியில் நீர் மோர்பந்தல் திறப்பு விழா

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தணிக்க, நீர் மோர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி செங்குன்றம் அருகே தீர்த்தகரையம்பட்டு ஊராட்சி  அதிமுக அலுவலகம்  எதிரே  முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமார மாதவரம் வி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் சார்பில் ஆளுயர மாலை, கிரீடம்,சால்வை, அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  அதனை தொடர்ந்து தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து ஏழை எளியவருக்கு நீர்மோர், கூல்டிரிங்ஸ் தர்பூசணி, இளநீர், வெள்ளரி, கிருணிபழம் உள்ளிட்ட பழங்களை வழங்கினார்.இதில் புழல் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி கழக செயலாளர் அன்பிற்கரசு, அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் ஜெ. டேவிட்சன், தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதா டேவிட்சன், கிளை செயலாளர்கள் ஏ.செங்குட்...

ஆரணி பேரூராட்சியில் பாழடைந்த குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பாதுகாப்பாக அகற்றம்..

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் உள்ள இருக்கும் தெருவில் உள்ள 40 ஆண்டுகள் மேற்பட்ட பழைய குடிநீர் தேக்க தொட்டி சேதம் அடைந்து விட்டதால் புதிய குடிநீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு முதல் கட்டமாக பழைய குடிநீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டது.சுமார் மூன்று மணி நேரம் வேலைகள் நடைபெற்ற பின்னர் முழுமையாக குடிநீர் தேக்க தொட்டி சரிந்தது அப்போது தூசி துகளுடன் பலத்த சத்தத்துடன் கட்டுமானம் கீழே சரிந்து விழுந்தது. பொதுமக்களுக்கு பாதிப்பு இன்றி குடிநீர் தேக்க தொட்டியினை இடித்தனர் .இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்து வெளியேறினர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காவல்துறை பாதுகாப்புடன் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட்டது. செயல் அலுவலர் தாமோதரன், உதவி ஆய்வாளர் முனிரத்தினம் ,துப்புரவு மேற்பார்வாளர் குமார், மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். செய்தியாளர் ராதாகிருஷ்ணன் 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையதில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக கழகப் பொதுச்   செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் உத்தரவின் படி  திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி  ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு முன்னிலையில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட   ஈகுவார்பாளையம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.எம் சிவக்குமார் ஏற்பாட்டில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் எம்எல்ஏ சிறுணியம் பலராமன் குடிநீர் பந்தலையும்   திறந்து வைத்து பொது மக்களுக்கு இளநீர், தர்பூசணி, பழ வகைகள் ,மோர்,வெள்ளரி  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி  ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.எம்.எஸ் சிவக்குமார்  மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டி.சி.மகேந்திரன்  ஆரம்பாக்கம் ஜெ சுரேஷ்  மாநில மீனவர் அணி துணை  செயலாளர் தகவல் தொழில்நுட்பு பிரிவு ராஜா, மற்றும் ஆரோன்,சிரஞ்சீவி,அசோக்குமார்,பாபு,ராஜா,அருண்,கார்த்திக்,சிவா,அரிபாபு,யுவராஜ்,அனிபா,இமான்,நேதாஜி,நந்தகுமார்,ரவிசந்திரன்,ரஞ்சித் உள்ளிட்ட அதிமுக  நிர்வாகிக...

தஞ்சை மாநகரம் மற்றும் ழ பதிப்பகம் இணைந்து வழங்கும் நூல் வெளியீட்டு விழா.!

தஞ்சை மாநகரம் மற்றும்"ழ பதிப்பகம் ஒருங்கிணைத்த நூல் வெளியீட்டுவிழா,தஞ்சை பெசன்ட் அரங்கில்,நடைபெற்றது.இந்த நிகழ்வில்,தஞ்சை மாநகரத்தின் பொருளாளர்,  ஜோ.வியானி விஷ்வா,கல்லூரி மாணவி,ம. வைதீஸ்வரி  அனைவரையும் முறையாக வரவேற்று நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்கள். செவிலியர்தினம் மற்றும் அன்னையர் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவிகள் இலக்கியா,இனியா,இருவரும் நல்லதொரு பாடலைப் பாடினார்கள்.  எழுத்தாளர் குறித்து மாநகரச் செயலாளர் முனைவர்,சங்கீதா சரவணன், அறிமுகம் செய்தார். திரைப்பட இயக்குனர், விஜய். மகேந்திரனின் "தலைமுடியும் தலையெழுத்தும்” சிறுகதைத் தொகுப்பினை மாநகரத் தலைவர் எழுத்தாளர், அகிலா கிருஷ்ணமூர்த்தி வெளியிட, மாவட்டச் செயலாளர் முனைவர் ச.அய்யாறு புகழேந்தி,திரைப்பட இயக்குநர் ராசி.மணிவாசகன்,மாநில செயற்குழு உறுப்பினர் எழுச்சிக் கவிஞர் கோ.கலியமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தஞ்சை மாநகரத்தின் சார்பில்,தஞ்சை மாவட்ட கௌரவத் தலைவர்,மரு. பா.கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளருக்கு சிறப்பு செய்தார்.  திரை இயக்குநர் ராசி. மணிவாசகன் அவர்களின்  வாழ்த்துரை நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக இ...