Skip to main content

Posts

Showing posts from July, 2023

பணியில் நேர்மையின்றி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - கன்னியாகுமரி மாவட்ட SP டி.என்.ஹரி கிரன் பிரசாத் எச்சரிக்கை!

நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள்(Highway patrol)மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு காவலர்களை புதியதாக நியமித்து உத்தரவிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்: பணியில் நேர்மையின்றி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை!  கன்னியாகுமரி மாவட்ட  மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப புதிதாக நியமித்து காவல் கண்காணிப்பாளர் டி.என்.ஹரி கிரன் பிரசாத்  உத்தரவு பிறப்பித்தார். இதில் ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் தாலுகா காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டனர். நெடுஞ்சாலை ரோந்து  மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவில் புதியதாக பணியமர்த்தப்பட்ட காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு  மாவட்ட காவல் அலுவலகத்தில்  கூட்டம்  நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், புதியதாக நெடுஞ்சாலை ரோந்து, மதுவிலக்கு பிரிவில் பணிமாற்றப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் எனவும், பொதுமக்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்ளவும், பணியின் போது  விழிப்புடனும்...

மதுரை மத்திய சிறைவாசிகளின் பயன்பாட்டிற்காக ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் புத்தகங்கள் மற்றும் இசை கருவிகளை சிறை கண்காணிப்பாளாரிடம் வழங்கினர்..!

தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ்புஜாரி ஐபிஎஸ்  கொண்டு வந்த கூண்டுக்குள் வானம் என்ற நூலகத் திட்டத்திற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெறப்பட்டு அதிக அளவில் பொதுமக்கள் சிறைவாசிகளை நல்வழிப்படுத்துவதற்காக அனைத்து மத்திய சிறைகளுக்கும் நூல்களை வழங்கி வருகின்றனர். தற்பொழுது திரைப்பட நடிகர்  ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர்  திரைப்படம் வெளிவருவதை முன்னிட்டு ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிறைத்துறைக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்  அதன் அடிப்படையில் மதுரை மத்திய சிறையில் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள்  ஜாபர் மற்றும் பால தம்புராஜ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்( ஓய்வு) திரு குமாரவேல் ஆகியோர் முன்னிலையில்சரவணன் திருப்பரங்குன்றம் பகுதி ரஜினி ரசிகர் மன்ற தலைவர் தலைமையில் சிறைவாசிகளின் பயன்பாட்டிற்காக சுமார் Rs 50,000 மதிப்பிலான நூலக புத்தகங்களை இன்று வழங்கியுள்ளனர்  மேலும் மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகள் தங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள இசைக் குழுவிற்கு ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்...

விளையாட்டு மைதானத்தில் குறுக்கே கான்கரட் சாலை அமைக்க வேண்டாம் என ஊர் பொதுமக்கள் மனு தாக்கல்..!

விளையாட்டு மைதானத்தில் குறுக்கே கான்கரட் சாலை அமைக்க வேண்டாம்  ஊர் பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ச உமாவிடம்  மனு அளித்தனர். நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ச. உமா இடம் இன்று மனு ஒன்றை கொடுத்தனர் விளையாட்டு மைதானத்தில் குறுக்கே கான்கரட் வீதி அமைப்பது சம்மந்தமாக.  புகார் என்று அழைத்துள்ள அந்த மனுவை  பாரதி ஜனதா கட்சி பிரமுகர் வள்ளிபுரம் வடிவேல் தலைமையில் அவர்கள் இந்த மனுவை மாவட்ட ஆட்சித் தலைவர் இடம் வழங்கினர். அந்த மனுவில் அவர்கள் காளிபாளையம் பஞ்சாயத்து பொன்னேரிபட்டி கிராமத்தில் நத்தம் பொரம்போக்கு சர்வே எண் : 220/13 என்னும் இடத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வளாகம் உள்ளது. இவ்விடத்தில் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் இப்பகுதி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் இம்மைதானத்தை விளையாடுவதற்கு பயன்படுத்தி வருகின்றனர் மற்றும் ஆண்டுதோறும் பொங்கல் மற்றும் தைபூசம் ஆகிய தினங்களில் ஊர் பொதுமக்கள் சார்பாக விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் மாலையில் மாணவர்கள் வாலி பால் விளையாடி வருகிறார்கள் ஆகையால...

போலியாக மருத்துவம் பார்த்து வந்த நபரை, மதுரை மாவட்ட ஆட்சியர் கையும் களவுமாக பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைப்பு..!

மதுரை மாவட்டம், வலையங்குளம்  கிராமத்தில்  மாவட்ட ஆட்சியர் அவர்கள் களஆய்வின் போது பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற புகார் மனுவின் பேரில்,  வலையங்குளம் கிராமத்தில் கீதா கிளினிக் என்ற பெயரில் அழகர்சாமி,  சித்த மருத்துவர் என பெயர் பலகை வைத்து அலோபதி மருந்து மாத்திரைகளைக் கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த நபரை, மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் கள ஆய்வின் போது நேரடியாக சென்று கையும் களவுமாக பிடித்து, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட இணை இயக்குனர் நலப் பணிகள் அவர்களுக்கும், காவல் துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார்கள்.  இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட இணை இயக்குனர் நல பணிகள் அவர்கள் தலைமையிலான குழு வலையங்குளம் கிராமத்தில் கீதா கிளினிக் என்ற பெயரில் செயல்பட்டு வந்த மருத்துவமனையை ஆய்வு செய்து, மருந்து மாத்திரைகள் மற்றும் பிற உபகரணங்களை பறிமுதல் செய்து மருத்துவமனையை சீல் இட்டனர். போலியாக  மருத்துவம் பார்த்து வந்த நபரை காவல் துறையினரிடம்  ஒப்படைத்துள்ளனர். செய்தியாளர் செந்தில்கணேஷ் 

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் நடைப்பெற்ற தேய்பிறை அஷ்டமி திதி யாகம்..!

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தேய்பிறை  அஷ்டமி திதியை முன்னிட்டு மாலை 6 மணியளவில் ஸ்ரீ அகோர கபால பைரவருக்கு ரத்த அபிஷேகம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. அனைத்து பக்தர்களும் திரளாக வந்து பூஜையில் கலந்து கொண்டு ஐயனின் அருள் பெற்றனர்.அதாவது பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் குடும்பத்தில் தங்களுக்கு உள்ள கஷ்டங்கள் தீருவதோடு சுபிட்சம் ஏற்படும். கால பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பம் உயர்ந்த நிலைக்கு செல்லும் என்பது ஐதீகம். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகமசெய்யப்பட்டன. பூஜையை  அங்காளம்மன் கோயில் நிர்வாகியும், அகில இந்திய சிவாலய கூட்டமைப்பு தலைவர், ஶ்ரீஅகோர காளி பீட நிறுவனருமான அகோரி குரு ஶ்ரீராம்ராஜ் செய்திருந்தார். செய்தியாளர் வாசுதேவன்  

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டிட பணிகள் நிறைவு..!

 நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையினை ரூ.23.00 கோடி மதிப்பீட்டில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்த  கூடுதல் மருத்துவமனை கட்டடம்  கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணிக்கம் பாளையம் அரசு துணை செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவியர் விடுதி கூடுதல் கட்டடத்தினை தமிழக  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்   திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சிக்கு தமிழக வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் .எ.கே.பி.சின்ராஜ் , திருசெங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன்  திருச்செங்கோடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் எஸ்.எம்.மதுரா செந்தில்  ஆகியோர் முன்னிலை வகிக்க, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா  தலைமை வகித்தார். திருச்செங்கோடு அரசு மருத்துவமனையினை ரூ.23.00 கோடி மதிப்பீட்டில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்த கூடுதல் மருத்துவமனை கட்டடமானது 5835 ச.மீட்டரில் தரைத்தளத்துடன் கூடிய 5 தளங்கள் கொண்ட கட்டட...

காட்பாடியில் ராணுவ வீரர்களுக்கு இன்டர்நெட் சேவை தொடக்கம்..!

வேலூர் மாவட்டம், காட்பாடியில் ராணுவ வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இன்டர்நெட் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள ராணுவ வீரர்கள் சிஎஸ்டி கேண்டீன்,  இ சி எச் எஸ் அருகில் ஒரு இன்டர்நெட் சேவை மையம்  தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் மற்றும் இந்நாள் ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் ஆவண சிக்கல்கள் மற்றும் அதனை சரி செய்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.  அதனை சரி செய்யும் பொருட்டு இச்சேவை மையம் தொடங்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கையை ஏற்று சிஎஸ்டி கேண்டீன் அருகில் இது தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த சேவை மையத்தை தொடங்கி வைக்க முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் சங்கத்தின் தலைவர் சிவக்குமார் மற்றும் உறுப்பினர்கள் இ சி எச் எஸ் எஸ் ஓசி சி ஓ எல் கே என்.ட நாயுடு சோல்ஜர் போர்டு உதவி இயக்குனர் எல்டிசிஓஎல் ஞானசேகரன் கௌரவ தலைவர் கே சுந்தர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி இந்த இன்டர்நெட் சேவை மையத்தை தங்களது திருகரங்களால் தொடங்கி வைத்தனர் இந்த...

காட்பாடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து பிரிவு போலீசார்..!

 வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் உத்தரவுப்படி, காட்பாடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மேற்பார்வையில் வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கன்னியப்பன், சிறப்பு உதவி ஆய்வாளர் மேகநாதன் ஆகியோர் 2 சக்கர வாகனங்களை ஆய்வு செய்தனர். தலைக்கவசம், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், 2 சக்கர வாகன உரிமம் ஆகியவற்றை ஆய்வு செய்து அபராதம் விதித்தனர். அபராத தொகையை நீதிமன்றத்தில் கட்ட சொல்லி அறிவுறுத்தினர். போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கினர். செய்தியாளர் வாசுதேவன் 

வேலூரில் ஐஎஃப்எஸ் நிதி நிறுவன இயக்குநர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!

வேலூர் மாவட்டத்தில் மட்டும் 3 இடங்களில் சோதனை மேற்கொண்டு வரும் அமலாக்கபிரிவு அதிகாரிகள் சத்துவாச்சாரி,காட்பாடி மற்றும் மேல்பாடி ஆகிய மூன்று இடங்களில் நேற்று  காலை முதல் மாலை வரை தீவிர சோதனை நடத்தினர். அதிக வட்டி தருவதாக கூறி பொது மக்களிடம் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.இதையடுத்து நிதி நிறுவன இயக்குநர்கள் ஜனார்த்தனன், லட்சுமி நாராயணன், வேத நாராயணன் மற்றும் மோகன் பாபு ஆகியோர் தலைமறைவு ஆயினர். இதையடுத்து  ஐஎஃப்எஸ் நிதி நிறுவன இயக்குநர்களின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தினர். வேலூர் மாவட்டம், காட்பாடி ஐஎஃப்எஸ் நிதி நிறுவன இயக்குநர்களின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை திடீர் சோதனை மேற்கொண்டனர். அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் சுமார் ரூ.6 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை முதல் ஐஎஃப்எஸ் நிதி நிறுவன இயக்குநர்களின் உறவினர்கள் வேலூர் மற்றும் காட்பாடி,  மேல்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவர்களது இல்லங்களில்...

விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருது..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் (தன்னாட்சி)  கல்லூரிக்கு சிறந்த  கல்லூரிக்கான விருது இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தாள் நிறுவனம் இணைந்து  வழங்கி உள்ளது  இந்த சிறந்த கல்லூரிக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது இந்த விழாவில் மருத்துவம், செவிலியர், பொறியியல், கலை அறிவியல், போன்ற தமிழகத்தில் உள்ள  பல கல்லூரிகள் பங்கு பெற்ற . இதில் கலை அறிவியல் கல்லூரிக்கான விருதை.  திருச்செங்கோடு விவேகனந்தா கலை அறிவியல் கல்லூரிக்கு சிறந்த பெண் தொழில் முனைவோர்க்கான நடவடிக்கைகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது  இவ் விருதை தமிழக பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்க கல்லூரி முதல்வர் டாக்டர்.பேபி ஷகிலா பெற்றுக்கொண்டார். விருதை தங்கள் சார்பில் பெற்றுக்கொண்டு வந்த கல்லூரி முதல்வர் டாக்டர்.பேபி ஷகிலாவை  விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு.கருணாநிதி மேலாண்மை இயக்குநர்  கிருஷ்ணவேணி கருணாநிதி  துணைத் தாளாளர் டாக்டர...

விஏஓ மனைவியிடம் தாலி செயின் பறிப்பு: பைக் கொள்ளையர்கள் அட்டகாசம்!

விஏஓ மனைவியிடம் தாலி செயின் பறிப்பு: பைக் கொள்ளையர்கள் அட்டகாசம்!  காட்பாடி மெட்டுக்குளத்தில் விஏஓ மனைவியிடம் தாலி செயினை பறித்துச் சென்ற பைக் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளம் பகுதி செக் போஸ்ட் வீதியைச் சேர்ந்தவர் திலீப் குமார். இவர் விஏஓவாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கோமதி (31). இவர்கள் இருவரும் நேற்றுமுன் தினம் மாலை சினிமாவுக்கு சென்றுள்ளனர். சினிமா முடிந்து வீட்டுக்கு டூவீலரில் திரும்பி வந்துள்ளனர். காட்பாடி மெட்டுக்குளம் செக் போஸ்ட் வீதியில் சென்றபோது எதிரில் பஜாஜ் பல்சர் மோட்டார் பைக்கில் வந்த இரண்டு கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கோமதி கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து திலீப் குமார் கொடுத்த புகாரின் பேரில் காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், காட்பாடி டிஎஸ்பி பழனி மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து மோட்டார் பைக்கில் வந்து பெண்ணின் தாலி செயினை பறித்துச் சென்ற கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இப்படி இ...

மதுரையில் கட்டப்பட்டு வரும் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்தை எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு..!

 மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பதற்கான கட்டுமானப் பணிகளை  பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து,  பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு  செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தென்னகப்பகுதியிலே தமிழர்களின் அடையாளமாக விளங்குகின்ற ஜல்லிக்கட்டிப் போட்டிகளுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய  ஒரு பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்படும் என்று கடந்த 21.01.2022-அன்று நடைபெற்ற சட்டமன்ற  கூட்டத்தொடரில் அறிவித்தார்கள். அதனடிப்படையில், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஊராட்சியில்  66 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூபாய்.44.6 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 77,683 சதுரஅடி பரப்பளவில் இந்த அரங்கம் அமைக்கப்படுகிறது.  இந்த அரங்கில் பிரம்மாண்ட நுழைவுவாயில் தோரணம், 50 ஆயிரம் கொள்ளலவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, காளைகள், ...

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்ற செல்ல பிரானிகளுக்கான கண்காட்சி..!

கோவை உப்பிலிபாளையம் ஆடிஸ் வீதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், ஐபாவ்ஸ் தலைவர் உமா மகேஸ்வரன் பேட்டி,   இன்டி பெட் அனிமல் வெல்பேர் சொசைட்டி சார்பாக, கோவையில் முதல்முறையாக  பெட் கார்னிவல், மற்றும் பூனை கண்காட்சி கோவை இந்துஸ்தான் கல்லூரியில் வருகின்ற, ஜூலை, 8ம்தேதி மற்றும் 9ம்தேதி என இரு நாட்கள் நடைபெற உள்ளது எனவும், இதில், பூனை மற்றும் நாய்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தபட்டு, அதற்கான சான்றிதழ்கள் வழங்க இருப்பதாக, கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்ததில்,  இன்டி பெட் அனிமல் வெல்பேர் சொசைட்டி தலைவர்  உமா மகேஸ்வரன், செய்தியாளர்களிடம் தெரிவித்தார் மேலும் அவர் இது குறித்து கூறுகையில்...  கோவையில் வரும் 8ம்தேதி மற்றும் 9ம்தேதி, செல்ல பிரானிகள் கண்காட்சி மற்றும், சர்வதேச பூனைகள் கண்காட்சி நடத்த இருப்பதாகவும், இதில் 200க்கும் மேற்பட்ட நாய்களும் 150க்கும் மேற்பட்ட பூனைகளும், அனைத்து விதமான செல்ல பிரானிகளும் இதில் கலந்து கொள்ள இருப்பதாகவும், ஒட்டகம், மாடுகள், பாம்புகள், குதிரைகள் இடம் பெற உள்ளது, மேலும் இந்த கண்காட்சியில் இந்தியாவில் விலை உயர்...

ஷீரடி ஸ்ரீ அக்ஷ்ய பாபா ஆலயத்தில் 11ம் ஆண்டு குரு பூர்ணிமா பெருவிழா..!!

வேலூர் மாநகர், அரியூர் கார்த்தி நகரில் எழுந்தருளி அருள் பாலித்து பக்தர்களின் குறைகளை நீக்கி சகல ஐஸ்வர்யத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஷுரடி ஸ்ரீ அக்ஷ்ய பாபாவிற்கு பதினோராம் ஆண்டு குரு பூர்ணிமா பெருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. பதினோராம் ஆண்டு குரு பூர்ணிமா பெரு விழாவை முன்னிட்டு காலையில் அபிஷேகம் மற்றும் நான்கு வேளை ஆரத்தி தொடர் அன்னதானம் நடைபெற்றது. அதாவது அதிகாலை 5 மணிக்கு காக்கட ஆரத்தியும், காலை 6:30 மணிக்கு அபிஷேகமும், காலை 7.30 மணிக்கு நைவேத்தியம், ஆரத்தியும், பிற்பகல் 11 மணிக்கு அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு மத்திய ஆரத்தியும், மாலை 5:30 மணிக்கு அபிஷேகமும், மாலை 6:30 மணிக்கு ஆரத்தி நடந்தது. இரவு 7.30 மணிக்கு சாவடி ஊர்வலமும், இரவு 8 மணிக்கு சாவடி ஆரத்தி அன்னதானமும், இரவு 10 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடந்தது. இரவு 8 மணிக்கு விசேஷ புஷ்ப அலங்காரத்துடன் பல்லக்கு சாவடி ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ அக்ஷ்ய பாபாவின் அருளை பெற்றனர். குரு பூர்ணிமா அன்று இரவு கண் விழித்திருந்தால் தங்களின் கோரிக்கைகள் பாபாவின் அருளால் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று ஒரு...

மதுரை மாவட்டம், அய்யனார்குளம் ஊராட்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்..!!

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் அய்யனார்குளம் ஊராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஊராட்சி மன்ற தலைவர் அனிதா பிரகலாதன் தலைமையில் நடைபெற்றது இம் முகாமில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் புதிய உதவித்தொகை ஜல்ஜீவன் மிஷன் போன்ற அடிப்படை திட்டங்கள் தொடர்பாக கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரவீனா,ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் உடன் இருந்தனர். அதனை தொடர்ந்து கொடிக்குளம் ஊராட்சியிலும் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ராமன் கிராம மக்களிடமிருந்து கோரிக்கைகளை மனுவாக பெற்றார். இதில் துணைத் தலைவர் கனி ஊராட்சி செயலாளர் இளங்கோவன் உடன் இருந்தனர். செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமர் ஆய்வு மேற்கொண்டார். செய்தியாளர் செந்தில்கணேஷ்   

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கபடி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி,  2-ம் ஆண்டு தென்னிந்திய அளவிலான ஆடவர் மற்றும் மகளிர் A Grade கபடி போட்டிகள் கடந்த 30-ம் தேதி தொடங்கி, 3 நாட்களாக  நடைபெற்றன. முன்னதாக, மாநில பொதுப்பணி, நெடுஞ்சாலை துறை அமைச்சர்  எ.வ. வேலு,  வனத்துறை அமைச்சர் Dr. மா. மதிவேந்தன் ஆகியோர் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.  இந்தப் போட்டியில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 40 அணிகள் கலந்துகொண்டு விளையாடினர். போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்றன.  திருச்செங்கோடு உதயா ஸ்போர்ட்ஸ் கிளப், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக, திருச்செங்கோடு ஒன்றிய திமுக ஆகியவை இணைந்து நடத்திய இப்போட்டிகளின் இறுதிப் போட்டிகள் நள்ளிரவையும் தாண்டி, 03.07.2023  அதிகாலை 2 மணிவரை வரை நடைபெற்றன.  இதன்படி, மகளிர் பிரிவு இறுதிப் போட்டியில், ஒட்டன்சத்திரம் SMVKC அணியும், கோபி PKR அணியும் மோதினர். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 35 க்கு 33 என்ற புள்ளி...

இரண்டு மாதமாக தங்கள் பகுதிக்கு மின்சாரம் விநியோகம் இல்லை என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சேளூர் நாடு ஊராட்சி பொதுமக்கள் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். ச. உமாவிடம் மனு ஒன்றை வழங்கினார்கள் அதில் கடந்த 2  மாதமாக தங்களின் சேளூர் நாடு பகுதியில் மின்சாரம் விநியோகம் இல்லை.  இதனால் சேளூர் பகுதி மக்கள் மின்சாரம் இல்லாமல் தினமும் சிரமப்பட்டு கொண்டிருக்கிற நிலையில் இது குறித்து அங்குள்ள மின்சார வாரிய அலுவலரிடம் தகவல் சொல்லியும் சம்பந்தப்பட்ட உயர் மின்சார துறை அலுவலரிடம் தகவல் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதியை பெண்களும் ஆண்களும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்க நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வருகை தந்திருந்தனர் அவர்கள் இதுகுறித்து செய்தியாளருக்கு பேட்டி அளிக்கும் போது தங்கள் பகுதி குடியிருப்புகள் மற்றும் இதர மின்சார பயன்பாட்டிற்கு மின் இணைப்பு இல்லாமல் இரவு நேரங்களில் இருட்டில் மூழ்கடிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்ததோடு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்...

ஓசூர் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் மீது இளம்பெண்கள் தொடர் புகார்..! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு..?

ஒசூரில் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் 6 லட்சம் ரூபாய் செலவில் சிகிச்சை மேற்கொண்ட பெண்னுக்கு அதிகப்படியான டோஸ் மருந்துகளாலும், சரியான சிகிச்சை இல்லாததாலும் அபார்ஷன் ஆனதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தொட்டி பகுதியை சேர்ந்தவர் ஜவகர்(28). சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த மீனா இருவரும் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் ஒசூரில் உள்ள  ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் கடந்த 2022 -ம் ஆண்டு நவம்பர் முதல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கருமுட்டையும், ஜவகரிடம் பெறப்பட்ட விந்தனுக்கள் சரியான முறையில் இருப்பதாக ஐஸ்வர்யா நிர்வாகம் தெரிவித்ததால் கணவன் - மனைவியும் 5 லட்சம் ரூபாய் மேல் செலவிட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்த நிலையில், மே மாதம் 26 -ம் தேதி மீனாவிற்கு கருமூட்டை செலுத்தி இரு சிசுக்களும் வளர தொடங்கியிருப்பதாக கூறியதாகவும் 100 சதவீதம் குழந்தை உருவாவதில் எவ்வித சிக்கலும் இல்லை என உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து, ஜவகர், இந்த மாத தொடக்கத்...

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் அமைச்சர் ஆய்வு!

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும்                    வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன்                          பால்வளத்துறை அமைச்சர்  த.மனோ தங்கராஜ் கலந்தாய்வு  மேற்கொண்டார். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து,                    துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்                பி.என்.ஸ்ரீதர் தலைமையில், பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேற்று (01.07.2023) ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் - கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை (கட்டடம், நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், நெடுஞ்சாலைத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில், நடைபெற்...

புதிய மனிதர்கள் பாரதிய ஜனதா கட்சியின் பக்கம் வேகமாக வருகின்றார்கள், அவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டியது பாஜக நிர்வாகிகளின் கடமை - மாநிலத் தலைவர் அண்ணாமலை

புதிய மனிதர்கள் பாரதியா ஜனதா கட்சியின் பக்கம் வேகமாக வருகின்றார்கள் நம் அனைவரும் அவர்களை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கக்கக்கூடிய ஒவ்வொரு சகோதர சகோதரிகளும் கூட இருக்கு  நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே அண்ணாமலை கொடியேற்றி வைத்து பேச்சு  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் காவேரி ஆற்று பாலத்தின் அருகில் உள்ள பயணியர் மாலதி அருகில் பாஜக கொடி ஏற்றி வைத்து  தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே அண்ணாமலை பேசியதாவது:-  பலர் பா. ஜ. க கட்சியோடு சேர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்றும் மிக முக்கியமாக பாரதிய ஜனதா கட்சி இணைய  வேண்டும் என்கின்றார்கள்  அதனால் தான் புதிய நபர்கள் பாரதி ஜனதா கட்சியின் பக்கம் வேகமாக வருகின்றார்கள் நம் அனைவரும் அவர்களை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கக்கக்கூடிய ஒவ்வொரு சகோதர சகோதரிகளும் கூட இருக்கு  நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே அண்ணாமலை கொடியேற்றி வைத்து பேச்சினார்   தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே அண்ணாமலை இன்று கா...

காட்பாடி போக்குவரத்து காவல்துறை சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கு சாலை விழிப்புணர்வு நோட்டீஸ் !!

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் உத்தரவுப்படி, காட்பாடி போக்குவரத்து ஆய்வாளர் ஆலோசனையின் பேரில், காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், அதேப்போல் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.  ஓட்டுநர் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். 3 பேர் வாகனத்தில் உட்கார்ந்து செல்லக்கூடாது என்பதை வலியுறுத்தி காட்பாடி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கன்னியப்பன், சிறப்பு உதவி ஆய்வாளர் மேகநாதன் ஆகியோர் டூவிலரில் செல்வோரிடம் விழிப்புணர்வு நோட்டீஸை வழங்கினர். செய்தியாளர் வாசுதேவன்