Skip to main content

தஞ்சை மாநகரம் மற்றும் ழ பதிப்பகம் இணைந்து வழங்கும் நூல் வெளியீட்டு விழா.!

தஞ்சை மாநகரம் மற்றும்"ழ பதிப்பகம் ஒருங்கிணைத்த நூல் வெளியீட்டுவிழா,தஞ்சை பெசன்ட் அரங்கில்,நடைபெற்றது.இந்த நிகழ்வில்,தஞ்சை மாநகரத்தின் பொருளாளர்,  ஜோ.வியானி விஷ்வா,கல்லூரி மாணவி,ம. வைதீஸ்வரி  அனைவரையும் முறையாக வரவேற்று நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்கள். செவிலியர்தினம் மற்றும் அன்னையர் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவிகள் இலக்கியா,இனியா,இருவரும் நல்லதொரு பாடலைப் பாடினார்கள்.  எழுத்தாளர் குறித்து மாநகரச் செயலாளர் முனைவர்,சங்கீதா சரவணன், அறிமுகம் செய்தார். திரைப்பட இயக்குனர், விஜய். மகேந்திரனின் "தலைமுடியும் தலையெழுத்தும்” சிறுகதைத் தொகுப்பினை மாநகரத் தலைவர் எழுத்தாளர், அகிலா கிருஷ்ணமூர்த்தி வெளியிட, மாவட்டச் செயலாளர் முனைவர் ச.அய்யாறு புகழேந்தி,திரைப்பட இயக்குநர் ராசி.மணிவாசகன்,மாநில செயற்குழு உறுப்பினர் எழுச்சிக் கவிஞர் கோ.கலியமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தஞ்சை மாநகரத்தின் சார்பில்,தஞ்சை மாவட்ட கௌரவத் தலைவர்,மரு. பா.கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளருக்கு சிறப்பு செய்தார். 

திரை இயக்குநர் ராசி. மணிவாசகன் அவர்களின்  வாழ்த்துரை நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக இருந்தது. ஒரு நல்ல கதை இந்தச் சமூகத்திற்கு எப்படியான பங்களிப்பைச் செய்ய முடியும் என்பதை உதாரணத்துடன் விளக்கினார்கள். இதன தொடர்ந்து விஜய் மகேந்திரன் இயக்கவிருக்கும் “நரகம்” படத்திற்கும் வாழ்த்துகளைக் கூறினார். அடுத்ததாக,"ழ பதிப்பகத்தினை" தமிழ் மொழியின் சிறப்புகளோடு ஒப்பிட்டு வாழ்த்தியதோடு, படைப்பிலக்கியத்தின் சிறப்பினை முனைவர், ச.புகழேந்தி எடுத்துக்கூறினார். கிடைத்த குறைவான நேரத்தில் சிறுகதைத் தொகுப்பின் மிக நுட்பமான உள்ளீடுகளை, சமகால சமூகக் கற்பிதங்களோடு, சமூகத் தேவைகளோடு பொருத்திப்பார்த்து மிகச் சிறப்பான அறிமுகத்தை, ஸ்ரீ மணிமேகலை பரத், மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழக திட்ட மேலாண்மை அலுவலர் முனைவர், ச.சந்திரசேகர், இருவரும் முன்வைத்தார்கள். கதைகளோடு சேர்ந்து நம்மை பயணப்பட வைக்கிற அற்புதமான உத்தி அவர்களிடம் இருந்தது.

திடீர் வரவாக ஆச்சரியப்பட வைத்தவர் துப்பாக்கிக் கவிஞர் கோ.கலியமூர்த்தி அவர்கள். ரஷ்ய ,பிரெஞ்ச், தமிழ் படைப்புகளின் மொழிக் கூறுகளோடு காவிரி எழுத்தாளர்களின் சிறப்பம்சங்களையும் தனக்கே உரித்தான கம்பீரக் குரலில் வாழ்த்திச் சென்றார். சிறப்பு அழைப்பாளர்களுக்கு பயனாடைகளும், புத்தகங்களும், வழங்கி சிறப்பிக்கப்பட்டது. எழுத்தாளர் முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை வழங்கினார்.இந்தச் சமூகத்தில் யாரும் சொல்லத்தயக்குகின்ற, மறைக்கப்பட்ட, துணிச்சலான, பெண்களுக்கான, கதைக் களத்தை இந்தத் தொ..Sகுப்பு பேசுகிறது என்றார்.

எழுத்தாளர் விஜய் மகேந்திரன் ஏற்புரை வழங்கினார். கதைக் களம் மற்றும் கதை மாந்தர்கள் உருவான விதம், சினிமாவுக்கும் இலக்கியத்திற்குமான உறவுநிலை, சிறுகதைக்கும், திரைக்கதைக்குமான இயங்குதளம் இவைகளோடு  தொகுப்பு உருவான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.எண்ணற்ற இலக்கிய ஆர்வலர்களும் திரைக் கலைஞர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அத்தனை பேருக்கும் முறையாக நன்றி தெரிவிக்கப்பட்டு குழுப் புகைப்படத்தோடு விழா நிறைவடைந்தது.இசையோடு தொடங்கி, பதிவுகளை நேர்த்தியான புகைப்படங்களாக எடுப்பதோடு, எப்போதும் தஞ்சை மாநகரத்திற்கு பக்க பலமாக விளங்கும் பாடகர் இந்துமணி மற்றும் மருத்துவர் பா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.



செய்தியாளர் வேங்கை குணா 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...