Skip to main content

Posts

Showing posts from June, 2024

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில், 51-வது அகில இந்திய திராவிட மொழியியலாளர் மாநாடு.!.

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் 51-வது அகில இந்திய திராவிட மொழியியலாளர் மாநாடு,3-நாட்கள் நடைபெறுகிறது. மொழியியல், இலக்கியம், ஒப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு இவற்றின் சமகால ஆய்வுகள் பற்றிய மாநாடாக இது நடக்கிறது என்று துணைவேந்தர் திருவள்ளுவன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் வரும்,27-ம் தேதி முதல் 29.ம் தேதி வரை மூன்று நாட்கள் இந்த மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டின் நோக்கம் மொழியியல் கற்றல், கற்பித்தல், தேசிய கல்விக்கொள்கை, மாநிலக் கல்விக் கொள்கை இலக்கியம், ஒப்பிலக்கியம். மொழிபெயர்ப்பு தொடர்பாக, இன்றைய நவீனத் தொழில்நுட்பக் காலத்தில் நடைபெற்று வரும் ஆய்வுகள், அதன் போக்குகள் ஆகியவற்றை இளம் தலைமுறையினரின் பார்வைக்குக் கொண்டு வருவதே ஆகும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்த மாநாடு 2 -வது முறையாக நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 1983-ஆண்டில் 13-வது அனைத்து இந்திய திராவிட மொழியியலாளர்கள் மாநாட்டினை, தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்தி முத்திரை பதித்தது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும், உலகின் சிறந்த மொழியியலாளர்கள் வரிச...

திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

திருப்பூர் மாநகராட்சி மண்டலம் -1 வார்டு -13 அனுப்பர்பாளையம் புதூர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெறும் இலவச கண் சிகிச்சை முகாமை இன்று வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர் ராமதாஸ் அவர்களும், மண்டல தலைவர் உமாமகேஸ்வரி வெங்கடாஜலம் அவர்களும், வட்ட கழக செயலாளர்கள் சண்முகம், ரத்தினசாமி அவர்களும், வடக்கு மாநகர பொருளாளர் சரவணன் அவர்களும்,மாமன்ற உறுப்பினர் அனுசூயா தேவி அவர்களும், கழக நிர்வாகிகள் ஆறுச்சாமி,வடுகநாதன் அவர்களும்,ரோட்டரி சங்க நிர்வாகிகளும் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். செய்தியாளர் கோவிந்தராஜன் 

கும்முடிபூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் வாயில் கூட்டம் வாயில் கூட்டம் நடத்தி ஆலோசனை .!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பேட்டையில் அமைந்துள்ள வினோ மெக்கானிக் காற்றாலை உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார்  தொழிற்சாலை இங்கு  கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகபணிபுரியும்   நிரந்தரப் பணியாளர்கள்  நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு  ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை மேலும் அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் வாயில் கூட்டம் நடத்தி ஆலோசனை மேற்கொண்டு தொழிற்சாலை நிர்வாகம் விரைந்து தங்களது கோரிக்கைகளை  நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  கோரிக்கை வைத்தனர். இதில்  தொமுச பொதுச் செயலாளர் மணிபாலன் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன் மற்றும் தொழிற்சங்க செயலாளர் எஸ் வேலு சிறப்பு தலைவர் எஸ் ராஜசேகரன் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன் செயலாளர் சிவக்குமார் பொருளாளர் மூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் ராதாகிருஷ்ணன்  

இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்த நாளை கருப்பு தினமாக பாஜகவினர் பெரியபாளையத்தில் அனுசரித்தனர்.!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பாஜக கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் இந்தியாவில் முன்னால் பாரதபிரதமர்  இந்திராகாந்தி  அவர்கள் அவசரநிலை பிரகடனம்  அமல்படுத்திய நாளை கருப்பு நாளாக  நினைவு கூர்ந்தனர். இதில் பாஜக மாநில துணை  தலைவர் டால்பின் ஸ்ரீதரன் கலந்து கொண்டுஅவசர நிலை பிரகடனம் நடைபெற்று 50 ஆண்டுகள் கடந்ததை விளக்கிக் கூறினர் இதில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் பாஸ்கரன் ரவி புருஷோத்தமன் மாரிமுத்து நடராஜன் கோடீஸ்வரன் பரமானந்தம் நரேஷ் குமார்சந்திரசேகர் உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள்  பலர் பங்கேற்றனர். செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

மூத்த குடிமக்கள் நலச்சங்கம் மனமகிழ் சங்கமம் சார்பில், மனிதநேய மங்கையர் திலகம் விருது வழங்கப்பட்டது.!

மூத்த குடிமக்கள் நலச்சங்கம் மனமகிழ் சங்கமம், மாதாந்திர கூட்டம், தஞ்சை பெசன்ட் அரங்கில், இன்று(25.6.2024) காலை 10:00 - மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர், வா.செ.செல்வம்  தலைமை தாங்கினார், சங்க நிறுவனர்,தமிழ்ச் செம்மல், ஆதி. நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார், மாவட்ட துணைச் செயலாளர் துரை. கோவிந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார், சங்க பொதுச் செயலாளர், ஆர். பாஸ்கரன் அறிக்கை வாசித்தார்.  கரம்பயம் ஊராட்சி மன்ற தலைவர், திருமதி.மேனகா ஆனந்த்குமார் அவர்களுக்கு "மனிதநேய மங்கையர் திலகம்" என்ற விருதினை, டாக்டர் தாமரைச்செல்வி அவர்களால் வழங்கப்பட்டு பாராட்டுரையாற்றினார், சிலம்பாட்ட மாணவர்களுக்கு சீருடைக்கான தொகையை நன்கொடையாக சங்க பொதுச் செயலாளர்,ஆர். பாஸ்கரன் வழங்கினார்.80- வயதை நிறைவு செய்த சங்கத்தின் துணைச் செயலாளர், எம் சுந்தரராஜ்  அவர்களை அனைவரும் பாராட்டி, சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சிலம்பாட்ட மாணவர்களை தேர்வு செய்து கொடுத்த சிலம்பாட்ட ஆசிரியர், பிரபு அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டப்பட்டது. சங்கத் துணைத் தலைவர், முத்துக்குமரன் நன்றி கூ...

தையூர் முதல்நிலை ஊராட்சி பொருாளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள ஓரு ஏழைக் குடும்பத்திற்கு ரூ. 5,00,000 இலட்சம் மதிப்பில் புதிய வீடு .! தனது சொந்த செலவில் கட்டி தர உள்ள MR .ஜனார்த்தனன் பூமி பூஜை துவங்கி வைத்தார்..

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தையூர் முதல்நிலை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட இளவந்தாங்கல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் வசித்துவருபவர் வீரராகவன் அவரது மனைவி ஈஸ்வரி இவர்களுக்கு இரண்டு,மகன்கள் உள்ளனர்கள் . வீரராகவன் அருகில் உள்ள தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி வேலை செய்துவருகிறார். பொருாளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள இவர் இங்கு கட்டிடங்களுக்கு நடுவே ஓலைக்குடிசையில் வசித்துவருகிறார். இவரதுநிலையை தனது கட்சியினர்கள் மூலம் கேட்டறிந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி திருப்போரூர் ஒன்றியம் OMR ஜில்லா MR.ஜனா (எ) ஜனார்த்தனன் இவர்களுக்கு சிலநாட்டுகளுக்கு முன்பு ஆதரவு தெரிவித்து விரைவில் தங்களுக்கு ஓர்நற்செய்தி கூறுவதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து யாரும் எதிர்பாராதவகையில் கடந்த சனிக்கிழமையன்று கட்சியின் மாநிலத்தலைவர் விஜய் அவர்களின் 50வது பிறந்தநாளையொட்டி மாநிலப்பொதுச்செயலாளர்  புஸ்ஸிN.ஆனந்த் அறிவுறுத்தலின்படியும் , செங்கல்பட்டு மாவட்ட தலைவர் செங்கை சூரியநாராயணன் வழிகாட்டுதலின்படியும் வீரராகவன் ஈஸ்...

பொன்னேரி தடப்பெரும் பாக்கம் ஏரியில் அரசு மண்குவாரி லாரிகளை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்.!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம் ஏரியில்அரசு சவடு மண்குவாரியில் மண் லாரிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தங்கள் பகுதியில் கனமழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி அடிக்கடி பாதிப்புகள்  ஏற்படுவதாகவும் தங்கள் பகுதியில் மண்ணைக் கொட்டி நிரப்புவதற்கு உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண் லாரிகளை  சிறை பிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பொன்னேரி காவல்துறையினர் அவர்களிடம் சமரசம் மேற்கொண்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் தாழ்வான பகுதிகளில் மண்ணைக் கொட்டி சமப்படுத்த வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.  செய்தியாளர் ராதாகிருஷ்ணன் 

24-25ம் கல்வியாண்டுக்கான 1 முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைப்பெற்றது.!

 தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் திருமதி ரெஜினி மற்றும் வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் ஆண்டோ பூபால் ராயர் ஆகியோரின் செயல்முறைகளின் படி 2024-25ம் கல்வியாண்டு 1 முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் முதல் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சி தூத்துக்குடி நகர்ப்புறம் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 25.06.24   மற்றும்26.06.24 தேதிகளில் நடைபெறுகிறது . முதல் நாள் பயிற்சியை இன்று (25.6.24) தூத்துக்குடி நகர்ப்புற வட்டார கல்வி அலுவலர் திருமதி .சரஸ்வதி,  மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் முனைவர் திருமதி .தனலட்சுமி , மற்றும் ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் திருமதி ஜாய் விக்டோரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்பயிற்சியில் 147 தொடக்க நிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் . 8 ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டு எண்ணும் எழுத்தும் தமிழ் , ஆங்கிலம்,  கணக்கு குழு செயல்பாடுகள், தொழில்நுட்பத் துணை , ஐயங்களும் தெளிவ...

பெரிய கரும்பூர் கோவில் குளத்தில் மீட்கப்பட்ட ஐம்பொன் அம்மன் சிலையை கிராமத்தில் வழிபட மீண்டும் வழங்க கோரி கிராம மக்கள் மனு.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் இன்று நடைபெற்றது. தேவம்பேடு அகரம் பனப்பாக்கம்பெரிய கரும்பூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு நடைபெற்றது.  பெரிய கரும்பூர் பெருமாள் கோவில் குளத்தில் தூர்வாரும் பணியின் போது கடந்த ஆண்டு மீட்கப்பட்ட பொன்னியம்மன் ஐம்பொன் சிலையை தங்கள் கிராமத்தில் வைத்து வழிபட வழங்க வேண்டும் என கோரி  ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி பாபு கிராம மக்கள் மனு அளித்தனர்.  செய்தியாளர் ராதாகிருஷ்ணன் 

குடல் அடைப்புடன் பிறந்த குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் அடைப்பு நீக்கப்பட்டது .!

 குழந்தைகள் பிறந்து முதல் நாள் முதல் இரண்டு மூன்று நாட்களில் குடல் அடைப்பின் காரணமாக குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவுக்கு வந்தனர். அந்த குழந்தைகளுக்கு என்ன காரணத்தினால் குடல் அடைப்பு இருக்கிறது என்பதை கண்டு பிடித்து அந்த குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் அடைப்பு நீக்கப்பட்டுள்ளது. இன்று நான்கு பேர் அறுவை சிகிச்சை பின் கவனிப்புக்காக மருத்துவமனைக்கு வந்தார்கள்.  தலைமை மருத்துவர் டாக்டர் எஸ் வெங்கட சரவணன் மற்றும் உதவி பேராசிரியர் டாக்டர் டி முத்துக்குமரன் இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். செய்தியாளர் அ. ரவி

தூத்துக்குடியில் 5ஆயிரம் மரக்கன்று நடும் பணி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.!

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாநகர் பகுதிகளை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒரே நாளில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இப்பணியின் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் உள்ள ஸ்டெம் பார்க்கில் நடைபெற்றது. இப்பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாநகர் பகுதியை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக சுகாதாரமான காற்று மக்களுக்கு கிடைக்கும். எனவே, மாநகராட்சிக்குள்பட்ட பூங்காக்கள், பள்ளிகள் உள்ளிட்டவற்றில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.  ஸ்டெம் பார்க்கில் நீர்மருது, புங்கை, வேம்பு, ஈட்டி, நாவல், வேங்கை உள்ளிட்ட 6 வகையான மரங்கள் நடப்படுகிறன்றன என்றார். இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், வடக்கு மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், மாநகராட்சி நகர் நல அலுவலர் தினேஷ், சுகாதார ஆய்வ...

தூத்துக்குடியில் திமுக அரசை கண்டித்து அதிமுக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!

தூத்துக்குடி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தால் உயிரிழந்த 58 பேரின் இறப்பிற்கு நீதி கேட்டும், தமிழகத்தில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் கள்ளச்சாராய மரணத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக கோரியும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திட அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.அதன்படி தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே அதிமுக ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மாவட்ட அதிமுக செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களுமான எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ ஆகியோர் பங்கேற்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கள்ளச்சாராயம் மரணத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என கண்டன கோஷமிட்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, முன்னாள் எம்.ல்.ஏக்கள் சின்னப்பன், மோகன், பெருமாள், மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி இணை செயலாளர் பெருமா...

மாப்பிள்ளையூரணி இந்திரா நகாில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமாா் ஆய்வு.!

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமாிப்புதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் வழிகாட்டுதலின்படி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதை சூழற்சி முறையில் 59 குக்கிராமம் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளுவது மட்டுமின்றி தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் புதிதாக சில பணிகளையும் செய்து தரவேண்டும் என்று தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமாரிடம் பொதுமக்கள் கொடுக்கும் கோாிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகா் பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலைஅமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வைத்த கோாிக்கையை ஏற்று புதிதாக நடைபெறும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்து ஓப்பந்த தாரர்களிடம் நல்லம...

தொழிலாளர் நலத்துறை- நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் கலந்தாய்வு கூட்டம்.!

திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நலத்  துறை-  (அமலாக்கம்) சார்பில்  நுகர்வோர் சங்கங்கள் உடனான காலாண்டு கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் 24.06.2024 திங்கள் அன்று மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் அ. ஜெயக்குமார் (அமலாக்கம்) அவர்கள் தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் நிர்வாகிகள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். மேலும் இதில் பல்லடம் தாலூக்கா நுகர்வோர்  விழிப்புணர்வு இயக்கம்  தலைவரும் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு  சங்கங்கள் கூட்டமைப்பின் ஓருங்கிணைப்பளருமான மணிக்குமார் பேசுகையில், மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் ஏஜென்சிகளில் பெட்ரோல் டீசல் நிரப்புகையில் லிட்டருக்கு 100 மிலி வரையில் எடைஅளவு  குறைக்கப்படுவதாகவும்  , எடையளவு ,விலை விபரம் காட்டும் வாகன  எரிபொருள் விநியோகி மெஷினில் குழறுபடி செய்து ஏமாற்றுவதாகவும் புகார்கள் எழுகிறது. எனவே பெட்ரோல் பங்குகளில் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.  மளிகைக்கடை,டிபார்ட்மென்டல் ஸ்ட...

தஞ்சையில், திராவிடத் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

தஞ்சை, திருநெல்வேலியில் சாதி மறுப்பு திருமணம்செய்துகொண்ட, மதன்குமார்-தாட்சாயணிக்கு  உரிய பாதுகாப்பு வழங்கிட கோரியும், நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கிய கும்பலை கொண்ட தடுப்பு சட்டத்தில் கைது செய்யகோரியும், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டுமெனவும், திண்டுக்கல் மாவட்டத்தில் அருந்தியர்களுக்கு தொடர்ந்து நடக்கும் சாதிய படுகொலை தீண்டாமை வன்கொடுமையை கண்டித்தும்,  திராவிடத் தமிழர் கட்சி சார்பில்,(24.6.2024) நேற்றைய முன்தினம் மாலை,5:00- மணியளவில், பனகல் கட்டிடம் முன்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.வீ. ரெங்கராஜ் தலைமை தாங்கினார், மாவட்ட அமைப்பு செயலாளர் கே.சண்முகம், மாவட்ட பொருளாளர்,எம். தாமோதரன், மாவட்டத் துணைத் தலைவர்,கே. சம்பந்தம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நீலகிரி பகுதி செயலாளர்,செல்வ சுப்ரமணி ஆசியோர்கள் முன்னிலை வகித்தனர், திராவிட தமிழர் கட்சி மாநில அமைப்பு செயலாளர், விடுதலை வீரன் துவக்க உரையாற்றினார். கீதா மாவட்ட செயலாளர், சி. அமர்சிங், தமிழ்நாடு தீண்டாமை முன்னண...

சர்வதேச யோகா தினத்தில்,க.புதூர் உயர்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகள் 405 -பேர் யோகாசனம் செய்தனர்.!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கல்வி மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியம், செ.புதூர் உயர்நிலைப் பள்ளியில், இன்று சர்வதேச யோகா தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை கோ. தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட ஜே.ஆர்.சி இணை அமைப்பாளர்  ச.கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர்,க. நேதாஜி அனைவரையும் வரவேற்றார்.   கும்பகோணம் அறிவுத் திருக்கோயில் பேராசிரியர் அருள்நிதி,ஆர். கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் அருள்நிதி,ஜி. அய்யண்ணன், நல்லாவூர் தவமையப் பொறுப்பாசிரியர் லயன்.அருள்நிதி தங்க. சம்மந்தம் ஆகியோர் இணைந்து சிறப்பாக யோகா பயிற்சி அளித்தனர். ஆறாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை உள்ள 405- மாணவ, மாணவிகளும்,15- ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். யோகாசனத்திற்கு மாணவர்களைத் தயார் செய்யும் விதத்தில், சூடேற்றும்  பயிற்சி வழங்கப்பட்டது.  பத்மாசனம், வஜ்ராசனம், சூரிய நமஸ்காரம், ஏகபாதாசனம், பிறையாசானம், உட்கட்டாசனம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஆசனங்களையும், பிராணயாமம் உள்ளிட்ட மூச்சுப் பயிற்சிகளையும், மாணவர்களுக்கு வழங்கினர்.  யோகாசனம் ச...

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், மாலை நேர தர்ணா போராட்டம்.

தஞ்சைமாவட்டத்தின் சார்பில், 21.06.24 அன்று மாலை 4:00 - மணிக்கு, தமிழக முதல்வர் அவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாலை நேர தர்ணா ஆர்பாட்டம், தஞ்சைமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர்,A.வீராச்சாமி தலைமையில் நடைபெற்றது.அனைத்து மாவட்ட நிர்வாகிகளான: எஸ்.கருணாநிதி, கே.இராமாமிர்தம், ஆர்.மகாலெட்சுமி, எஸ்.கலா ஏ. நாவலரசன், கே.மூத்துராமன், ஆர்.மதிவாணன். ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர், மாவட்ட செயலாளர்   இரவிச்சந்திரன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர், A. ரெங்கசாமி, திருச்சி மாவட்ட செயலாளர் C.A பாபு, திருவாரூர் மாவட்ட செயலாளர், C. பிரகாஷ். தஞ்சை வடக்கு வட்ட செயலாளர், சி. அஜெய் ராஜ், தெற்கு வட்ட செயலாளர், ஏ. தமிழ்மாறன், ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி, மு. மாவட்ட செயலாளர், முருகன், த. புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க பொதுச் செயலாளர், A.ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்கள். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர்,எஸ். கோதாண்டபாணி நிறைவுரையாற்றினார், நிகழ்ச்சியின் நிறைவாக மாவட்ட பொருளாளர்,ஆர். மதியழகன் நன்றி...

இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியினர் மின்வாரியத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி  வருகின்றனர் மேலும் விவசாயிகளுக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்காததால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர் இது குறித்து மின்வாரியத்திடம் பலமுறை  முறையிட்டும் சாலை மறியல் உள்ளிட்ட  பல்வேறு போராட்டங்கள் நடத்தியும்  பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படாத நிலையில் போதிய மின் ஊழியர்கள் நியமிக்க வேண்டும் மின்உபகரணங்களை வழங்க வேண்டும் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்  புதிய துணை மின் நிலையத்தை ஏமைக்கவேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரியத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்  கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால் இனிமின்கட்டணத்தை செலுத்தாமல் ஒத்துழையாமல் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர். பின்னர் பேரணியாக சென்று பொன்னேரி மின்வாரிய செயற்பொறியாளர் அவர்களிடம் மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்தில்மாவட்ட செயற்குழு ...

மத்திய அரசை கண்டித்து ஊத்துக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக நீதிமன்ற புறகனிப்பு.!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்   குற்றவியல் சட்டங்களை சமஸ்கிருதத்திலும் இந்தியிலும் மொழிமாற்றி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் தன்னிச்சையாக சட்டம் இயற்றியதை கண்டித்தும் வழக்கறிஞர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க வலியுறுத்தியும்  ஊத்துக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற  வழக்கறிஞர்கள் இரண்டாவது நாள் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற புறக்கனிப்பு செய்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் நீதிமன்ற பணிகள் அனைத்தும் முடங்கிய நிலை உள்ளது இதனால் நீதிமன்றத்திற்கு வாய்தா மற்றும் பெயில் எடுக்கவரும் மக்கள் தினறி வருகின்றனர். செய்தியாளர் துரை பன்னீர் செல்வம்  

ஊத்துக்கோட்டை C.S.I. தேவாலயத்தின் பிராத்தனை ஜெபகோபுரம் மர்ம நபர்களால் உடைப்பு.! நடவடிக்கை எடுக்ககோரி C1.காவல் நிலையத்தில் புகார்.!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் விவேகானந்தா சாலை முதல் தெருவில் C.S.I.வெற்றி சிலுவை தேவாலயம் 2009 ஆம் ஆண்டு கட்டப்பட்டு வழிபாட்டுத்தலமாக செயல்பட்டு  கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆலயத்தின் முகப்பில் பொதுமக்களின்குடும்ப பிரச்சினைகளுக்காகவும் அவர்களின்  நலன்களுக்காகவும் பிராத்தனை கோபுரம் கட்டபப்டு கிறிஸ்தவரின் புனித நூலான வேதாகமம் அதிலே வைக்கப்பட்டு கண்ணாடியால் மூட பட்டிருந்ததாக கூறுகின்றனர். தினமும் அவ்வழியாக வருகிறவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்கள் பிள்ளைகளுக்காகவும் குடும்ப நலனுக்காகவும் பிரார்த்தனை செய்து விட்டு செல்வதாகவும் சொல்ல படுகிறது இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர்களால்  ஜெப கோபரத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு அதிலிருந்த புனித நூலான வேதாகமம்  சூறையாடபட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியுற்ற சபை ஆயர்  இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊத்துக்கோட்டை C1காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுககிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுகிறது. செய்தியாளர் துரை பன்னீர் செல்வம் 

குவியம் திரை ரசனைக் கூடுகையின் 46ஆம் நிகழ்வு நடைபெற்றது.!

குவியம் திரை ரசனைக் கூடுகையின் 46ஆம் நிகழ்வு மிகச் சிறப்பாக  நடைபெற்றது. இம்மாத நிகழ்விற்கென இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் வெளியான 'Kaathal - The Core (2023, Malayalam)' திரைப்படத்தை தேர்ந்து கொண்டிருந்தோம். உரையாடல் படத்தின் உருவாக்கம் குறித்து மட்டுமின்றி, கதையின் மையம் முன்வைக்கிற LGBTQ+ குறித்தும் கிளை பிரிந்தது. திருநங்கைகள், திருநம்பியர் குறித்த சமூக ஏற்பே பல காலத்திற்குப் பிறகு பல கட்டங்களைக் கடந்து சமீப காலங்களில் தான் மெல்ல மெல்ல முன்னேற்றம் காண்கிறது. சூழல் இப்படியிருக்க பால் புதுமையினர்கள் உள்ளிட்டோர் குறித்த சமூகப் புரிதலே பொதுவெளியில் இன்னும் பரவலாக்கப்படாத நிலையில், அவர்களை ஏற்றுக் கொள்ளல் என்பதற்கு இன்னும் காலம் பிடிக்கும். இதுதான் யதார்த்தம்.  கலந்துரையாடலில் ஜியோ பேபி அவர்கள் எடுத்துக் கொண்ட கதையை திரைமொழியில் கையாண்ட விதமே திரைப்படம் குறித்த பேச்சில் மையப்பொருளாக ஆனது. படம் நெடுகிலும் மிக நுட்பமான, கவித்துமான அழகுகளை மிக நேர்த்தியாக ஒளித்து வைத்திருப்பார் இயக்குநர். அதனை உரையாடலின் வழியாக ஒவ்வொருவரும் கண்டதைச் சுட்டிக் காட்டிப் பேசியதும், திறனாய்வு செய்யப்ப...

அரசு பண்ணையில் மாடு முட்டி இறந்த கோவிந்தராஜ் குடும்பத்திற்கு,ரூ.10-லட்சம் இழப்பீடும், அரசு பணியும் வழங்க ஏஐடியூசி கோரிக்கை.!

தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை அரசு உயரின கால்நடை  பெருக்க பண்ணையில், பத்தாண்டுகளுக்கு  மேலாக தினக்கூலியாக பணிபுரிந்து வரும், சேதுராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் வயது(45) நேற்று(19-6-24)  பண்ணையில் மாடு பராமரிப்பின்போது மாடு முட்டி இறந்துவிட்டார். இவருக்கு வயதான தாய்,மனைவி மற்றும் 13-வயதில் மகனும்,  10-வயதில் மகளும் உள்ளனர். இறந்த கோவிந்தராஜ் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு,ரூ.10-லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும், எதிர்காலத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்,அரசு பண்ணையில் எவ்வித பாதுகாப்புமின்றி பணிபுரிகின்ற பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றபட வேண்டும், பல ஆண்டுகளாக தினக்கூலிகளாக பணிபுரிந்து வருகின்ற  பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்று  ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர் வேங்கை குணா  

இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின்,54வது பிறந்தநாள் கொண்டாட்டம்.!

இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 54 வது பிறந்தநாள் விழா, தஞ்சை பழைய பேருந்து நிலையத்தின் அருகில், நேற்றைய தினம் மாலை 5 மணி அளவில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர், பி.ஜி. இராஜேந்திரன் தலைமை தாங்கினார், மாநகர மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் லட்சுமி நாராயணன், மாநில செயற்குழு உறுப்பினரும், பொறியாளருமான   ஜேம்ஸ், மாநில செயற்குழு உறுப்பினர், வயலூர் இராமநாதன், சொக்க ரவி, வல்லம் பாட்ஷா, கோவி. மோகன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் வழக்கறிஞர் ஜான்சன் வர்த்தக பிரிவு தலைவர் சந்திரசேகரன், பொதுச் செயலாளர்கள்: கரந்தை கண்ணன், செந்தில் சிவகுமார், சேவா தல தலைவர் திருஞானம், பூதலூர் அன்பழகன், ஆறுமுகம். வீரமோகன், கோவிந்தராஜ்,குருசாமி, பீட்டர்,ஜி. கண்ணன், சௌந்தர்ராஜன்,  சச்சிதானந்தம், சாந்தா ராமதாஸ்,சுப்பு தங்கராசு, இயேசு, சுரேந்தர், பூதலூர் இராமமூர்த்தி, அசோக், மாரியம்மன் கோவில் குமாரசாமி, அருண் சுபாஷ், ராஜு, இன்னாள் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதன் பின்பாக அனைவருக்கும் இனிப்பு...

திருவையாறு வட்டார காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியின்,54 -வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.!

திருவையாறு வட்டார காங்கிரஸ் சார்பில், இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின்,54-வது பிறந்தநாள் விழா, திருவையாறு பேருந்து நிலையம் அருகே,19.6.2024 இன்று காலை 11 மணியளவில்  கொண்டாடப்பட்டது. அதன் பின்பாக, பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், பொதுமக்கள்  அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சீரும், சிறப்போடு  கொண்டாடப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு திருவையாறு வட்டார காங்கிரஸ் தலைவர், என்.ராஜலிங்கம் தலைமை தாங்கினார், தஞ்சை வடக்கு மாவட்ட பொருளாளர், வழக்கறிஞர், ஆர்.எம். ராஜு முன்னிலை வகித்தார். நடைபெற்ற இந்த நிகழ்வில் நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இலக்கிய அணி தலைவர் சுரேஷ், மாணிக்கம், நமச்சிவாயம், சேகர், பட்டுசுப்ரமணியன், மணிகண்டன், வெங்கடேஷ், ஆறுமுகம், திருக்காட்டுப்பள்ளி இராஜேந்திரன், பஞ்சாபிகேசன், பார்த்திபன், கனகராஜ், திருவையாறு வட்டார காங்கிரஸ், ஏனைய இன்னாள், முன்னாள் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர், நிகழ்ச்சியின் நிறைவாக  பசுபதி ராஜா நன்றி கூறினார். செய்தியாளர் வேங்கை குணா  

தஞ்சையில், ராகுல் காந்தி அவர்களின்,54-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.!

தமிழ்நாடுமாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆணைக்கிணங்கவும்தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர்,பி.ஜி. இராஜேந்திரன் வழிகாட்டுதலின்படி, தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில், தஞ்சை மாநகராட்சி 40-வது வார்டில், ரவி தலைமையில்,இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின், 54-வதுபிறந்தநாள் விழா இன்று காலை 10:00 மணியளவில் கொண்டாடப்பட்டது.  இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதேபோன்று தஞ்சை மாநகர 45-வது வார்டிலும் ராகுல் காந்தியின், 54 -வது பிறந்தநாள்,கே. புண்ணியம் தலைமையில்  கொண்டாடப்பட்டது, இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள்  வழங்கபட்டது. நடைபெற்ற இந்த இரு நிகழ்விற்கும், கீழ்கண்டவர்களேபொறுப்பேற்றார்கள்.  செல்வராஜ், பரமானந்தம், அகஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநகர மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில் சிவகுமார், தஞ்சை கோட்டை தலைவர் எம்.மகேந்திரன், வர்த்தக பிரிவு தலைவர் சந்திரசேகர்,தஞ்சை வடக்கு மாவட்ட எஸ்சி/எஸ்டி பிரிவு தலைவர் அருண் சுபாஷ், மரிய சூசை,  ஆதிநாராயணன், எஸ். ஆனந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் பி.எல்.ஆர். சேகர், ...

தஞ்சையில்,மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தின் செயற்க்குழு கூட்டம் நடந்தது.!

தஞ்சையில் நடைப்பெற்ற மூத்த குடிமக்கள் நல சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்திற்கு தென்னை விஞ்ஞானி,டாக்டர். வா.செ.செல்வம் தலைமை தாங்கினார், நிறுவனர், புலவர் ஆதி. நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார், பொதுச் செயலாளர் பாஸ்கர் வரவேற்புரையாற்றினார், துணைச் செயலாளர் துரை. கோவிந்தராஜ், துணைத் தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.80-வயதை நிறைவுச் செய்யும் சங்கத்தின்செயற்குழு உறுப்பினர் சுந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு செய்யப்பட்டது. இக்கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களான: தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து, புதிய பேருந்து நிலையத்திற்கு மேரிஸ் கார்னர் வழியாக நாஞ்சிக்கோட்டை சாலை, இ.பி. காலனி, கெஜலட்சுமி நகர், வழியாகச் சென்று கொண்டிருந்த மினி பேருந்துணை, சரியாக நாள் ஒன்றுக்கு மூன்று முறையாவது தவறாமல் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும். என்று மாவட்ட ஆட்சியரை இச்சங்கம் கேட்டுக்கொள்கின்றது. பொதுவாகவே நகரத்தின் எல்லைக்குட்பட்ட  புறநகர் பகுதிகளில் நாய்களின் தொந்தரவு அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாநகராட்சியை கேட்டுக் கொள்கின்ற...

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடியிருப்பவர்களுக்கு கனிமொழி எம்பி மூலம் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.! ஜமாபந்தியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கோாிக்கை மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி  கூட்டத்தில் மாவட்ட வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உஷாவிடம் அளித்துள்ள நான்கு கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கடந்த 2023ல் பெய்த கனமழையால் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கின் காரணமாக ஊராட்சி பகுதியில் உள்ள குடியிருப்பு மனைகள் சேதமடைந்தன. குடியிருப்பு மனைகளுக்கு நிவாரண உதவிதொகை வழங்கும் பொருட்டு மாப்பிள்ளையூரணி கிராம நிா்வாக அலுவகம் மூலமாக மனுக்கள் பெறப்பட்டு தகுதியுடைய நபர்களின் வங்கி கணக்கில் ரூ10 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது அவ்வாறு நிவாரண தொகை பெறப்பட்டவர்களின் 257 நபர்களின் பெயர் பட்டியல் மட்டுமே வீடு வழங்கும் வகைக்காக வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து இவ்வலுவலகத்திற்கு வழங்கப்பட்டது. அப்பட்டியல் ஆய்வு  செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு வீடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நிவாரண தொகையான ரூ 10 ஆயிரம் பெற்றிருப்பவர்களின் பெயர்கள் விடுபட்...

தூத்துக்குடியில் 5வது வார்டுக்குட்பட்ட அய்யர்விளை பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு.!

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை வௌ்ள காலத்திற்கு பின்பு நடைபெற்று வரும் பணிகளை சூழற்சி முறையில் பார்வையிட்டு வருவது மட்டுமின்றி அடுத்து வரும் மழைகாலத்திற்கு முன் கால்வாய், தூர் வாருதல், முறைப்படுத்தி, செயல்படுத்த வேண்டும் என்று அதிகாாிகளுக்கு பல்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்ட நிலையில் 5வது வார்டுக்குட்பட்ட அய்யர்விளை வடக்கு பகுதியில் தனது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 57 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் மற்றும் மின் மோட்டார் அறை அமைப்பதற்கான பணிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் அந்தோணி பிரகாஷ் மார்சலின், ஜெயசீலி , வட்டப்பிரதிநிதி பாஸ்கர். வட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன்,  மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர். செய்தியாளர் அ. ரவி

முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் 116-வது பிறந்த நாளை மாநகர காங்கிரசார் கொண்டாடினர்.!

தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில், முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் 116-வது பிறந்தநாள் விழா,  (18.6.2024) இன்று மேரீஸ் கார்னர், தீன் காம்பளக்ஸில் உள்ள, தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர்,பி.ஜி. இராஜேந்திரன்  தலைமை தாங்கினார், மாநகர மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், மாநில பொதுக்குழு உறுப்பினர், ஜேம்ஸ், பொதுச் செயலாளர்கள்: கரந்தை கண்ணன், செந்தில்சிவகுமார் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர், கக்கன் பிறந்த நாளான, (18.6.2024) இன்று அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.  அதன் பின்பாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது, இந்த நிகழ்வில் முன்னாள் மாநகரத் தலைவர் சதாசிவம், பூதலூர் இராமமூர்த்தி, ஒரத்தநாடு கை செந்தில், செயலாளர் ஏ.வடிவேலு, தஞ்சை கோட்டைத்தலைவர், பி.ஜி. பிரபாகரன், நெசவாளர் பிரிவு தலைவர்,எ.என். ஆதிநாராயணன், மாவட்ட காங்கிரஸ் எ.அடைக்கலச்சாமி, வர்த்தக பிரிவு தலைவர்,கே. சந்திரசேகரன்,எஸ்சி/எஸ்டி பிரிவு தலைவர் சுந்தர்,கோட்டைச் செயலாளர்,எம். மகேந்திரன...

அமைச்சர் தா மோ அன்பரசன் முன்னிலையில் மாற்றுக் கட்சியைச் சார்ந்த 25க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர்.!

 செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம்  முதல்நிலை ஊராட்சியில் வசித்துவரும்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியைச்சேர்ந்தவர்கள் ,மற்றும் புதியவர்கள் என சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் அங்கம் வகித்துவரும் கட்சிபதவிகளிலிருந்து பொறுப்புகளிலிருந்தும் அடிப்படை உறுப்பினர்களிலிருந்து விலகி தங்களை திராவிட முன்னேற்ற கழகம் கட்சியில் இணைத்துக்கொள்ளும் நிகழ்ச்சி இன்று காலை சுமார் 10.00மணியளவில் நடைப்பெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகச்செயலாளரும் , முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் , ஒன்றியக்குழுப் பெருந்தலைவருமான எஸ்.ஆர்.எல் .இதயவர்மன் முன்னிலைவகித்தார் கழகத்தின் காஞ்சிவடக்கு மாவட்ட கழகச்செயலாளரும் , தமிழ்நாடு குறுசிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா. மோ. அன்பரசன் தலைமையில் அஇஅஇதிமுக கட்சியினர்கள் மற்றும்  புதியவர்கள்  ஆகியோர்கள்  தங்களை திமுக கழகத்தில் இணைத்துக் கொண்டனர்கள் . புதியதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கட்சிவேட்டிஅணிவித்து வரவேற்றார்.இதனைத்தொ...

பொதுமக்களோடு இருந்து ஐந்து ஆண்டு காலம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன்.! - சசிகாந்த் செந்தில்

 திருவள்ளூர்  மாவட்டம்  கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுவாயல் கவரப்பேட்டை பெத்திகுப்பம்  பகுதியில்  திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர்  சசிகாந்த் செந்தில் தமிழகத்தில் அதிக அளவு 5, 72,155 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை ஒட்டி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன்  மேல தாளங்கள் முழங்க பல்வேறு பகுதிகளுக்கு சென்று நன்றி தெரிவித்தார் அப்போது அவருக்கு பட்டாசு வெடித்தும்  மாலை  அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 100 நாட்கள் பணியில் 400 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் முறையாக பணிகள் வழங்கவில்லை எனவும் மகளிர் மகளிர்க்கு மாதம் 8,000  ரூபாய் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் . அப்போது நன்றி தெரிவித்து பேசிய  சசிகாந்த் செந்தில் பொதுமக்களோடு இருந்து ஐந்து ஆண்டு காலம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பேன் என்றும் பாராளுமன்றத்தில் நாங்கள் 240 பேர் செல்கிறோம்  கலாட்டா செய்வோம் என்றும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் நன்றி அறிவிப்பில் பங்கேற்காதது குறித்து பேசுகையில் நன்றி ...

முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் 116-வது பிறந்தநாள் விழா.!

தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில எஸ்சி/எஸ்டி, பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் ஆகியோரது ஆணைக்கிணங்க,  முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் 116-வது பிறந்தநாள் விழா, அம்மாபேட்டை புலவர் நத்தம் கீழ் பாதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (18.6.2024) இன்று நடைபெற்றது.(இப்பள்ளியானதுகக்கன் அவர்கள் அமைச்சராக இருந்த காலத்தில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதே).  இந்நிகழ்ச்சிக்கு  தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்/எஸ்டி பிரிவு தலைவர் அருண் சுபாஷ் தலைமை தாங்கினார், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார், கக்கன் பிறந்த நாளான, (18.6.2024)  இன்று அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்பாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து அப்பள்ளியில். பயிலும் மாணவ, மாணவிகள்,65-பேருக்கு நோட்டு, பேனா, பென்சில், வாய்ப்பாடு உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்பட்டது. நடைபெற்ற இந்த நிகழ்வினை அம்மாப்பேட்டை, எஸ்சி/எஸ்டி பிரிவு வட்டார தலைவர் வேலுச்சாமி மிகச...

பொன்னேரி சின்னக்காவனம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த 108 ஈஸ்வரர் கோவில் திருக்குளத்தை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு.!

 திருவள்ளூர் மாவட்டம் சின்னக்காவனம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த 108 ஈஸ்வரர் கோவில் திருக்குளத்தை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பொன்னேரி நகராட்சி நான்காவது வார்டு உறுப்பினர் பரிதா ஜெகன் இன்று பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தார். மேலும் 20க்கும்  மேற்பட்ட பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா முதியோர் உதவித்தொகை வழங்க பயனாளிகள் சார்பில் கோரிக்கை மனுக்கள்  வழங்கப்பட்டது. செய்தியாளர் ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி சி எம் மேனிலைப்பள்ளியில் திருக்குறளியா் அணி துவக்கவிழா நடைபெற்றது

உலகத் திருக்குறள் மையம்   சாா்பில்  தூத்துக்குடி  சி எம்  மேனிலைப்பள்ளியில்   18.06.2024  செவ்வாய்கிழமை  மதியம்   மாணவ  மாணவியா்களிடையே  திருக்குறளியா் அணி  புதிதாக  துவங்கப்பட்டது    தலைமை  திருமதி   வள்ளியம்மாள்  அவா்களும்  திருமதி  சங்கரேசுவாி  திருமதி வள்ளியம்மாள்    ஆகியோா் முன்னிலை வகித்தாா்கள்.  வருகின்ற  ஜீலை மாதம் முதல் வாரம் நடைபெறும் திருக்குறள் வினாடி வினா போட்டி  காண் ஔி மூலமாக  நடைபெற இருப்பதால்  தமிழகம் முழுவதும்  பள்ளிகளில் பயிற்சி நடை பெறுகிறது .அதன் ஒரு பகுதியாக  தூத்துக்குடியில் பயிற்றுனராக திருக்குறள் அன்பழகன் செயல்பட்டாா்கள். இன்றைய  தொடக்க நாள் நிகழ்வில் 1 முதல் 12  ஆம்  வகுப்பு வரை உள்ள மாணவ  மாணவியா்கள்  கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா். செய்தியாளர்  அ. ரவி

தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கினார் கனிமொழி கருணாநிதி எம்.பி.!

இன்று (18/06/2024) தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 64 மாணவர்களை நேரில் அழைத்துப் பாராட்டி, கல்வி ஊக்கத்தொகையை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி வழங்கினார். முதல் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு 25 ஆயிரம், இரண்டாவது அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு 15 ஆயிரம், மூன்றாவதாக அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மற்றும் புத்தகப் பையைக் கனிமொழி எம்.பி வழங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உடனிருந்தார். செய்தியாளர்  அ. ரவி

கேளம்பாக்கம் சாத்தாங்குப்பம் கிராம இளைஞர்களுக்கு விளையாட்டுத் துறையில் ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் சீருடை மற்றும் கிரிக்கெட் பேட் வழங்கி வாழ்த்து.!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் வண்டலூர் செல்லும் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ள 01வதுவார்டு சாத்தங்குப்பம் கிராமத்தில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை சுமார் மாலை சுமார் 06.30மணியளவில்  இயங்கிவரும்  சேலஞ்ச் கிரிக்கெட் கிளப் 03வதுஅணிகளுக்கு புதிய கிரிக்கெட் சீருடை மற்றும் புதியபேட் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்வில் அணியின் கேப்டன் அப்பு தலைமை தாங்கினார் .துணைக்கேப்டன் ஆகாஷ் அனைவரையும் வரவேற்றார் . சிறப்பு அழைப்பாளராக கேளம்பாக்கத்தில் வசித்துவருபவரும் ,திமுக கட்சியின் ஜோதிநகர் கிளை கழகச்செயலாளரும் , தொழிலதிபரும் ,மக்கள் சேவகருமான  K .A .D. அன்பு வருகைப்புரிந்தார் . இவருக்கு அணியின் சார்பில் பட்டாசு வெடித்தும் சால்வையுடன் ஆள்யூர மலர்மாலையணிவித்தும் வரவேற்பளிக்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து சேலஞ்ச்கிரிக்கெட் அணியில் உள்ள அனைவருக்கும் வீரா்களின் பெயர்பதித்த கிரிக்கெட் சீருடைகளை மக்கள்சேவகர் அன்பு வழங்கி சிறப்புரையாற்றினார். அடுத்ததாக அணியினர்களுக்கு மூன்றுகிரிக்கெட் பந்து மற்றும் ஓரு கிரிக்கெட் பேட்டையும்...

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி தெற்கு மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன் ஏற்பாட்டில் 200 ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பத்தில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் புத்தகப்பை, நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ஸ்கேல் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நலத்திட்டம் வழங்கும் விழா  எட்டயபுரம் ரோடு, மேம்பாலம் முன்பு நடைபெற்றது.  தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் நலத்திட்ட உதவி வழங்கினார்.  நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர்சின்னத்துரை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் பிரபு, மாவட்ட  சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், விக்னேஷ், பிரபாகர், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், மாநகராட்சி எதிர்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், பொறுப்பாளர் சென்பகசெல்வன், மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் ...

தூய்மை பணி காவலர்களுக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் உணவு வழங்கினார்.!

தூத்துக்குடி இந்தியா வல்லரசு நாடாக உருவாக வேண்டும். எதிர்கால இந்தியா எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் அமைய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்து தனது பதவிகாலத்தில் பணியாற்றிய காலத்தை இன்று வரை இளைய தலைமுறையினர் மட்டுமின்றி பலரும் போற்றும் வகையில் அவரது செயல்பாடு அமைந்தது. இதற்கு முன்னோட்டமாக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஓரு கிராமத்தின் வளர்ச்சிதான் இந்த நாடு முதுகெலும்பாக திகழ்வதற்கு காரணமாக அமைகிறது. அப்படி பட்ட பகுதிகளை தான் நாம் எல்லா வகையிலும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் அதன் மூலம் அப்பகுதி மக்கள் எவ்வித குறைபாடுகளின்றி வாழ வேண்டும். என்று பல்வேறு கட்ட நிகழ்வுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். அதன் வழியில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆலோசனைபடி பல்வேறு கட்டமைப்பு பணிகளை முறைப்படுத்தி மாப்பிள்...

திருவள்ளூர் ஆண்டார்குப்பம் பாதாள கங்கையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா.!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த பாதாள கங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலின் 15 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டலுடன் துவங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது.பத்து நாட்கள் கோலாகலமாக விழா நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மேளதாளம் முழங்கிட அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாள் கம்பீரமாக வீற்றிருக்க கரகம், அக்னிச்சட்டி ஏந்தியவர்கள் அக்னி குண்டம் இறங்கினர்.இதையடுத்து காப்பு கட்டி விரதமிருந்த 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தியுடன் அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.விழாவின் நிறைவாக அம்மன் வீதிவுலா நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஆர்த்தி ஹரி பாபு நீலகண்டன் ராமலிங்கம் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கோவிலில் பொன்னேரி தீயணைப்பு துறை அதிகாரி சம்பத் தலைமைய...

செங்குன்றம் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

சென்னை செங்குன்றத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் புனரமைக்கப்பட்டு அங்கு 61 அடி உயரமுள்ள ஸ்ரீ அம்பிகை கருநிலை ஸ்தூபி, கோபுரம் அமைக்கப்பட்டு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக   நடத்தப்பட்டது.முன்னதாக யாகசாலையில் விக்னேஸ்வர பூஜை, தன பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம்,நாடி சந்தனம் உள்ளிட்ட நான்கு கால பூஜைகள் நடைபெற்று பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கும்ப கலசத்தில் கிராம பெரியவர்கள் முன்னிலையில் புறப்பட்டு அம்பிகை கருணை நிலைஸ்தூபிக்கும்,முகப்பு கோபுரத்திற்கும்  கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மூலமூர்த்தி அங்காளம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் பல்வேறு வண்ண மலர்களாலும் வாசனை திரவியங்களாலும் அலங்கரிக்கப்பட்டு மகா தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் செங்குன்றம் சுற்று வட்டார பொதுமக்கள் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் மூன்று நாட்களும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.இவ்விழாவினை நாரவாரிக்குப்பம்...

எம்எல்ஏ சுதர்சனம் தலைமையில் புத்தகரத்தில் திமுக மாவட்ட மீனவர் அணி சார்பில் கறி விருந்து சாப்பாடு.!

தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் மாபெரும் வெற்றி விழாவை முன்னிட்டும் சென்னை வடகிழக்கு மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் எஸ்.என்.கோதண்டன் ஏற்பட்டில் 1000க்கும் மேற்பட்டோருக்கு கறி விருந்து சாப்பாடு வழங்கும் நிகழ்ச்சி புழல் சூரப்பட்டு இந்திரா நகர் டேங்க் அருகே நடைபெற்றது.சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமை தாங்கி கறி விருந்தை  ஏழை எளியவருக்கும்,பொதுமக்களுக்கும் வழங்கினார். இதில் மாதவரம் மண்டல குழு தலைவர் எஸ்.நந்தகோபால், மாதவரம் தெற்கு பகுதி செயலாளர் ஜி.துக்காராம் பெருநகர சென்னை மாநகராட்சி 32 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் அவை தலைவருமான இ.ஏழுமலை, 32 வது வட்டக் கழக செயலாளர் எம்.சரவணன் ஆகியோர் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் 32 வது  (அ) வட்ட செயலாளர் துரை ஸ்ரீஇராமுலு, 33வது வார்டு மாமன்ற உறுப்பினர் குட்டி மோகன், 32 வது வட்ட திமுக நிர்வாகிகள் ரமணன், விஜயலட்சுமி ஆனந்த், சிவில் எம்.செல்வம், தேவி கௌதமன், கே.பத்...

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.!

 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக அமைதிக்காக  கூட்டு யோகா நிகழ்ச்சி  தூத்துக்குடியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான முத்து நகர் கடற்கரையில் நடைபெற்றது.பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் என்ற அமைப்பு சார்பில் இந்த சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்திய நாட்டின் பழமையான யோக முறைகள் இன்று உலகை முழுமையாக ஈர்த்து வருகின்றது.பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முயற்சியின் காரணமாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21ஆம் தேதி சர்வதேச யோக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.யோகா என்பது அலை பாயாக்குடிய மனதை ஒருமுக படுத்த உதவுகிறது, நீங்களும் திருப்பதி அடைந்து, உங்களை சார்ந்தவர்களையும் திருப்பதி படுத்த முடியும் என எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி  மாணவிகள் சூரிய நமஸ்கார யோகாசனத்தை நடனமாக செய்து காண்பித்தனர் .அதனை தொடர்ந்து. பள்ளி மாணவ, மாணவியர்கள் தனுராசனம், கருடாசனம், மரகத ஆசனம், சக்கர ஆசனம், பூரண தனுராசனம், விருச்சிக ஆசனம், ஏகபாத சிரசாசனம், பூரண சிரசாசனம், துதிபாத சக்கர ஆசனம், மஜ்ஜியாசனம், சிரசாசனம் என பல்வேறு வகையான ஆசனங்களை செய்து காண்பித்தனர்.ஞாயிற்ற...