Skip to main content

Posts

Showing posts from August, 2023

பாழும் கிணற்றில் சாக்குமூட்டையில் 25 வயது மதிப்பு தக்க பெண் சடலத்தால் பரபரப்பு..!

பாழும் கிணற்றில்  சாக்குமூட்டையில் 25 வயது மதிப்பு தக்க பெண் சடலத்தால் பரபரப்பு. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேர்ந்தமரம் கடையநல்லூர் மெயின் ரோட்டில் வடபுறம் வலசை கிராமத்திற்கு மேல் புறம் உள்ள குளத்து கரையில் பழுதடைந்த கிணத்தில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணை சாக்குப்பையில் கட்டி கிணற்றுக்குள் வீசி சென்று உள்ளனர் தற்போது கடையநல்லூர் காவல்துறை சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது மேலும் இந்தப் பெண் யார் எதனால் கொலை செய்யப்பட்டால் யார் இங்கு கொண்டு வந்து போட்டது என்ற கோணத்தில் கடையநல்லூர் காவல்துறை விசாரணை செய்து வருகிறது இந்த நாள் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திரன்  

விவேகானந்தா பார்மசி, நர்சிங், அலைடு ஹெல்த் சயின்ஸ் மற்றும் பிசியோதெரபி கல்லூரிகள் விளையாட்டு விழா..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு  விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் விவேகானந்தா பார்மசி, நர்சிங், அலைடு ஹெல்த் சயின்ஸ் மற்றும் பிசியோதெரபி கல்லூரி உள்ளிட்ட பாரா மெடிக்கல் கல்லூரிகளின் விளையாட்டு விழா    (07.08.2023) நடைபெற்றது இவ்விழாவிற்கு  விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலர் வித்யரத்னா டாக்டர் மு கருணாநிதி  தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குனர்   கிருஷ்ணவேணி கருணாநிதி , துணை மேலாண்மை இயக்குநர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன் இணை செயலாளர் டாக்டர் ஸ்ரீ ராக நிதி  அர்த்தநாரீஸ்வரன், துணை தாளாளர் டாக்டர் கிருபாநிதி இயக்குநர் நிவேதனா கிருபாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விவேகானந்தா அலைடு ஹெல்த் சயின்ஸ் மற்றும் பிஸியோதெரபி  கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.எ. ராஜ்குமார்  வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட   திருச்செங்கோடு துணை காவல் துறை  கண்காணிப்பாளர் பி. எம். இமயவரம்பன்  ஒலிம்பிக் ஜோதி ஏற்றிவைத்து விளையாட்டு போட்டியை துவங்கி வைத்தார்.  பி. எம். இமயவரம்பன்  பேசு...

மணிப்பூர் மாநிலத்தின் பெண்களுக்கு எதிராக நடந்த பேரவலத்தை கண்டித்து செய்யாறில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

செய்யாறில் மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பேராவலத்தை கண்டித்து கிருத்துவ சமூக நீதி பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.  திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா அலுவலகம் எதிரில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு பாஸ்டர் எரேமியா தானியேல் தலைமை தாங்கினார்.  பாஸ்டர்கள் கிருபாகரன், நெகேமியா, பாக்கியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தை கட்சி நகர செயலாளர் சாண்டில்யன் வரவேற்றார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் மா.கு.பாஸ்கரன், தொகுதி செயலாளர் ஏ.குப்பன், மண்டல துணை செயலாளர் மேத்தா ரமேஷ், வேதாச்சலம், பன்னீர்செல்வம், மரியதாஸ், சக்கரவர்த்தி, இமானுவேல், டேவிட் ராஜ், ஜேக்கப் ஆகியோர் மணிப்பூர் பேராவலத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்யாறு, வந்தவாசி, ஆரணி பகுதிகளைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர், நாகவளவன், காளிமுத்து, சத்தியமூர்த்தி, ஞானசேகரன், சுதாகர், வெங்கடேசன், ராமு, மேனகா, உண்ணாமலை, ஏழுமல...

சென்னை வியாசர்பாடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது..!

சென்னை வியாசர்பாடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது. கஞ்சாவை பறிமுதல் செய்து வியாசர்பாடி போலீசார் நடவடிக்கை.. சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு பெண்கள் மூலமாக சில்லறை முறையில் விற்பனை செய்யப்படுவதாக வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து வியாசர்பாடி போலீசார் நேற்று மாலை வியாசர்பாடி கல்யாணபுரம் அருகே வாகன சோதனைக்காக நின்று கொண்டிருந்தனர் அப்போது சந்தேகத்திற்கு இடமாக நடந்து வந்த மூன்று பெண்களை வழிமறித்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர் இந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின்னான தகவல்களை தெரிவிக்கவே  மகளிர் போலீசார் உதவியுடன் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர் விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த விநாயகி, கவிதா, விஜயா என்பதும் அவர்கள் மறைத்து எடுத்து வந்திருந்த பொட்டலங்களை சோதனை செய்த போது அது போதைக்கு பயன்படுத்தப்படும் கஞ்சா பொருள் என தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடம் மேல்விசாரணை செய்த போது அவர்கள் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து அதனை சில்லறை முறையில் வாடிக்கையாளர்கள் செல்போனில்...

காதல் மனைவி உயிரிழந்த சோகத்தில் கணவரும் தூக்கிட்டு தற்கொலை..!

சென்னை செங்குன்றத்தில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம். காதல் திருமணம் செய்த கணவர் அமிர்தகுமாரும் தூக்கிட்டு தற்கொலை. மனைவி உயிரிழந்த விரக்தியில்  மனம் உடைந்து காணப்பட்ட அமிர்த குமார்   நேற்று நள்ளிரவு மனைவியின் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டதாக தகவல்.   உடலை கைப்பற்றி செங்குன்றம் போலீசார் விசாரணை..  கர்ப்பிணிப் பெண் நிவேதா கடந்த ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை செங்குன்றம் அடுத்த தண்டல்கழனி பகுதியை சேர்ந்தவர் அமிர்தகுமார். இவர் டிடிஎச் டிஷ் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நிவேதா (19) 9மாதங்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கு முதலாம் ஆண்டு திருமண நாள். திருமண நாளுக்கு வாழ்த்து சொல்வதற்காக அமிர்தகுமாரின் சகோதரி மெர்சி  ஞாயிற்றுக்கிழமை இவர்களது வீட்டிற்கு வந்த போது நிறைமாத கர்ப்பிணியான நிவேதா தூக்கிட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.  அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நிவேதாவை ம...

10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டிரைவர் போக்சோவில் கைது..!

வேலூர் மாவட்டம் , அணைக்கட்டு தாலுகா , ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு  திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.  இதையடுத்து  அவரது பெற்றோர்கள் அருகில் உள்ள ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அந்த மாணவி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இது குறித்த தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த மாணவியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். மாணவி கொடுத்த தகவலின் பேரில் மாணவியின் எதிர் வீட்டில் வசிக்கும் வேணுகோபால் (40 )என்பவர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரிடம் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் இரண்டு மாத கர்ப்பமாக ஆகியுள்ளார்.  இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பத்தாம் வகுப்பு பயிலும் மாணவியை கர்ப்பம் ஆக்கிய காமுகன் வேணுகோபாலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.  இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த வேப்பங்குப்பம் போலீ சார் நீதிமன்றத்தில் ஆஜ...