Skip to main content

Posts

Showing posts from July, 2024

பா.ஜ.க. அரசை கண்டித்து உதகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை வஞ்சித்த ஒன்றிய பா.ஜ.க., அரசை கண்டித்து, கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பின்படி, நீலகிரி மாவட்ட திமுக சார்பில்,  உதகை ஏ.டி.சி ஜீப் நிறுத்தம் முன்பு கழக துணை பொதுச்செயலாளர் - கழக மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகு அந்தியூர் செல்வராசு அவர்கள் தலைமையில், மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் மற்றும் கழக முன்னணியினர் முன்னிலையில்  கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. செய்தியாளர் ரவி

தஞ்சாவூர் செம்மொழி லயன்ஸ் சங்க, மூன்றாம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா.!

தஞ்சாவூர் செம்மொழி லயன்ஸ் சங்க, மூன்றாம் ஆண்டு, 2024-25-ஆம் ஆண்டிற்கான  புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா, தஞ்சை பெசன்ட் அரங்கில்,26.7.2024 அன்று  மாலை,6:00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் செம்மொழி லயன்ஸ் சங்க தலைவர்,எஸ். சவுரிராஜ்  தலைமை தாங்கினார், எம்.ஜே. எப்.கே. பிரேம் புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு சிறப்புரை வழங்கினார். புதியதலைவர்,எஸ். முக்த்தார் அஷ்ரப்அவர்களின் தலைமையில் 2024-25 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணியேற்று கொண்டனர்.  புதிய தலைவர் எஸ். முக்த்தார் அஷ்ரப், செயலாளர், எஸ். விமால வினோலியா, பொருளாளர்,எஸ். தக்ஷிணாமூர்த்தியும் பணியேற்றுக் கொண்டனர். இதில் எ.ஓ.டாக்டர். டி.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினார். இந்த நிகழ்வில் மண்டல ஒருங் கிணைப்பாளர்கள்:ஆர்.ரவீந்திரன்,எம். செபாஷ் ரோலி,டி. ராஜ்குமார்,எஸ். பாஸ்கர், ஆரூர் அறிவு, ஜிகே. ஸ்ரீநாத், எம். செல்வமணி, எஸ்.வி.எஸ். சரவணன்,பி.ரஞ்சித், ஆர். சின்னத்துரை, எம். நூரூல் அமீன், ஆர். முருகானந்தம், ஜே. ரூபன்,ஜே.கே. ஆறுமுகம், ஸ்ரீநிவாசன்,எம். ஜெஸிந்தா நிர்மலா ...

மத்திய அரசின் பட்ஜெட்டில், தமிழகத்தை வஞ்சித்த பாஜக அரசை கண்டித்து, தஞ்சை மத்திய மாவட்ட மற்றும் மாநகர திமுக சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய பட்ஜெட்டில்  தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் திமுக  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அந்த வகையில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில், மத்திய மாவட்டம் மற்றும் மாநகர திமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு,மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்.எல்.ஏவுமான துரை.சந்திரசேகரன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை எம்.பி.ச. முரசொலி,எம்எல்ஏ.டி கே ஜி நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள்: எம்.ராமச்சந்திரன், து.செல்வம், மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட அவைத்தலைவர் இறைவன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஜித்து, மாநில மகளிர் அணி ஆலோசனை குழு உறுப்பினர் காரல் மார்க்ஸ், மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளரும், துணை மேயருமான அஞ்சுகம் பூபதி, மாவட்ட பொருளாளர் அண்ணா, மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகர நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, சரவணன், சுப்பிரமணியன், ஒன்றிய குழு தலைவர் செல்ல கண்ணு, ஒன்றிய செயலாளர் அருளானந்தசாமி, வல்லம் நகர திமுக செயலாளர் டி.கே.எஸ்.ஜி.கல்யாணசுந்தரம், பகுதி செயல...

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் நடத்தும் மாநிலம் தழுவியகண்டன ஆர்ப்பாட்டம்.!

மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலைக்கு கூடுதல் நிதி வழங்காததை கண்டித்தும்,100-நாள் வேலைக்கு கூடுதல் நிதி வழங்க கோரியும், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம், தஞ்சை பனகல் கட்டிடம் எதிரில், 26.7.2024  அன்று காலை 10:30- மணியளவில்  நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, வி.தொ.ச. தஞ்சை ஒன்றிய செயலாளர், டி. சண்முகவேலு தலைமை தாங்கினார்.வி.தொ.ச. மாவட்ட செயலாளர் ஆர்.வாசு துவக்கி வைத்தார். இதில் தஞ்சை ஒன்றிய செயலாளர்,கே. அபிமன்னன், மாவட்ட செயலாளர்,பி.எம். இளங்கோவன்,தவிச, ஒன்றிய செய.லாளர் எஸ்.கோவிந்தராஜ், விதொச,ஒன்றிய தலைவர்,கே. கண்ணன், பெண்விவசாய தொழிலாளர் அமைப்பு மாவட்ட கன்வீனர்,சி.சரிதா, ஒன்றிய தலைவர்,கே.  சௌந்தரராஜன்,P. முத்துசாமி ஆகியோர்கள் கண்டன உரையாற்றினார்கள். நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஒன்றிய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். செய்தியாளர் வேங்கை குணா

தஞ்சாவூர் சிகரம் லயன்ஸ் சங்க,புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா.

தஞ்சாவூர் சிகரம் லயன்ஸ் சங்க,2024-25-ஆம் ஆண்டிற்கான, புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா, தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை, ஈஸ்வரி நகர் அருகே உள்ள, ௹பிஹாலில், 24.7.2024 அன்று மாலை 6:30 மணியளவில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியானது  தஞ்சாவூர் சிகரம் லயன்ஸ் சங்கதலைவர், சில்வஸ்டர் எட்வின் பிரபு  தலைமையில் நடைபெற்றது, முன்னாள் மாவட்ட ஆளுநர்,கே.சேது சுப்ரமணியன் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி, அவர்களை வாழ்த்தி சிறப்புரை வழங்கினார்.2024-25 ஆம் ஆண்டிற்கான, புதியபொறுப்பாளர்கள்,எ.உதயகுமார் தலைமையில் பணியேற்கப்பட்டனர். புதிய தலைவர்,எ. உதயகுமார்,செயலாளர்,கே. கண்ணன், பொருளாளர்,ஜி. கண்ணன், முதல் துணைத்தலைவர், ஜி.நந்தகோபாலன், இரண்டாம் துணைத் தலைவர்,எஸ். மாரிமுத்து, இணைச்செயலாளர் யூ. சுதர்சன், இணைபொருளாளர்,  எ.ஜான்சன் பீட்டர், ஒருங்கிணைப்பாளர், பி.பாலசுப்ரமணியன், துணை ஒருங்கிணைப்பாளர், எஸ்.தமிழ்ச்செல்வன், உறுப்பினர் வளர்ச்சி தலைவர்,எ. பாபிலோன்சுந்தர், உறுப்பினர் வளர்ச்சி துணைத்தலைவர்,  எஸ்.மார்ட்டின் அந்தோணிசாமி, தலைமைப் பண்பு ஒருங்கிணைப்பாளர், எம்.சுகந்தவள்ளி, சேவைத்திட்ட ஒருங்கிணைப்பாள...

மின்சாரக் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜூலை 29-ல் ஆர்ப்பாட்டம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் கட்சி அலுவலக கூட்டரங்கில் 24.7.24 அன்று மாலை 3 மணிக்கு மாவட்ட நிர்வாக குழு   உறுப்பினர் வெ.சேவையா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, துணைச் செயலாளர் கோ. சக்திவேல் ,   மாவட்ட பொருளாளர்   ஜி. பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் சி.சந்திரகுமார், ஆர். இராமச்சந்திரன், பா. பாலசுந்தரம், வீர மோகன், அ.கலியபெருமாள் ஜி.பாஸ்கர், தி. திருநாவுக்கரசு, சி.பக்கிரிசாமி,த.கண்ணகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஏழை எளிய நடுத்தர மக்களை பாதிக்க கூடிய  மின்சார கட்டண உயர்வை உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்ப பெற வலியுறுத்தி  தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு ஜூலை 29 அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும்,இந்திய மக் களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக தற்போதுள்ள சட்ட விதிப்படியான  உரிமைகளை பறிக்கின்ற  வகையில் பாராளுமன்றத்தில் விவாதிக்க வாய்ப்பளிக்காமல்  ஒன்றிய அரசு புதிய குற்றவியல் சட்டத்தை ஜூலை1 முதல் அமுல்படுத்தியுள்ளது.  நாடு முழுதும் வழக்கறிஞர்கள் உற...

காவிரி நீர் உரிமை கோரி தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம்.!

தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள்,விவசாய சங்கங்கள் சார்பில், நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, திராவிடர் கழக தலைவர், ஆசிரியர், கி.வீரமணி தலைமை வகித்து பேசியதாவது:நாம் எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை  இந்த ஒரு அறப்போரிலே முடிவு செய்கிறவர்கள், நாம் அல்ல. நம்முடைய எதிரி தான் அதை முடிவு செய்கிறார்கள். அந்த வகையில் தான்,இன்றைக்கு இந்த தமிழ்நாட்டுக்கே எதிரியாக உள்ளது என்றால்,அதுதான் டெல்லியில் நடக்கக்கூடிய மைனாரிட்டி பிரதமர் மோடியின் அரசுதான். பிரிவினைவாதம் என்பதை துவக்கி வைத்தது பிரதமர் மோடி தான்.  தேசிய ஜனநாயக முன்னணி என்ற  அமைப்பினுடைய பிரதமர் தான் மோடி. ஒன்றிய அரசின் நாற்காலி காலாக உள்ள  இருவருக்கு மட்டுமே பட்ஜெட்ல நாங்கள் ஏராளமாக கொடுக்கிறோம் என்று கொடுத்துள்ளனர். பீகார் மற்றும் ஆந்திராவிற்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்கள் என்பது எதிரிகள் அல்ல. கூட்டாளிகள். வரி யார் கொடுப்பது. எங்கள் உரிமை என்ன ஆவது. நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தாலும் அதை அமல்படுத்த வில்லையே. போராடி பெற்றது தான் காவிரி நீர் மேலாணமை ஆணையம...

மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து, அ.இ.அ.தி.மு.க தஞ்சாவூர் மத்திய மாவட்ட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

கழகப்பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர் கட்சி தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்கவும், நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும்,கழக அமைப்பு செயலாளருமான, இரா.காமராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியும், நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்தமுயற்சிக்கும், திமுக அரசை கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம். தஞ்சை மத்திய மாவட்ட கழகம் சார்பில், தஞ்சை தலைமை தபால் நிலையம் எதிரில், 23/7/2024  அன்று காலை 10:30- மணியளவில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளரும், ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவருமாகிய,மா.சேகர் தலைமை தாங்கினார். தஞ்சை மாநகர செயலாளர் என்.எஸ்.சரவணன், மாவட்டக் கழக அவைத்தலைவர், என். நாகராஜன், மாவட்ட கழக இணை செயலாளர் சாவித்திரி கோபால், மாவட்ட கழக துணை செயலாளர்,எம். மாசிலாமணி, மாவட்டக் கழக துணை செயலாளர் வெண்ணிலா பாலை ரவி, கரந்தை,த. பஞ்சாபிகேஷன், கோட...

மத்திய-மாநில அரசு பணிகள் மற்றும் பொதுத்துறை பணிகள் அனைத்தும் தமிழ்நாட்டவர்க்கே வழங்க வேண்டும்.! சிபிஐஎம்எல் மக்கள் விடுதலை தஞ்சையில் பரப்புரை

நாடு விடுதலை பெற்ற பிறகு மத்தியில் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்ட அதிகாரம் படிப்படியாக குறைக்கப்பட்டு, அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசே பறித்துக் கொண்டது. ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு நீட் தேர்வால் பறிபோனது. காவிரி நதிநீர் பிரச்சனைக்கு இன்றளவும் தீர்வு ஏற்படாதது, ஜிஎஸ்டி  வரி கொள்கையில் மாநிலங்களின் வருவாய் பறிபோனது, மாநில பட்டியலில் உள்ள கல்வியை பொதுப் பட்டியலுக்கு கொண்டு சென்று அந்தெந்த மாநில அரசுகளே கல்வி கொள்கையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பறித்துக் கொண்டது உள்ளிட்டு அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகிறது. தற்போது  ஒன்றிய பிஜேபி அரசின் ஆட்சியில் கடந்த,10- ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மத்திய அரசு நிறுவனங்கள், மாநில அரசு நிறுவனங்களின் பணிகள் மற்றும் பொதுத்துறைகளின் பணிகளில் குறிப்பாக ரயில்வே, வங்கி, நிலக்கரி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில்  வட மாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது, தமிழ்நாட்டு இளைஞர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய நிலைமையிலே உள்ளனர். இந்த நிலையில் மற்ற மாநிலங்களில் அந்த மாநிலங்களின் இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என...

தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகத்தில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.!

வங்கி தேசியமாக்கள் தினத்தை முன்னிட்டு,  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையின் சார்பில் தஞ்சாவூர் மேக்ஸ் விஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையுடன் இணைந்து  இலவசக் கண் பரிசோதனை முகாம்  19.07.2024 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெற்றது. மதிப்புயர் பதிவாளர் முனைவர் சி.தியாகராசன் அவர்களும் பாங்க் ஆஃப் இந்தியா (BOIOASZ) தலைவர் திரு.மணிவண்ணன் அவர்களும்  தலைமையேற்று இலவச கண்பரிசோதனை முகாமைத் தொடங்கி வைத்தனர்.  பதிவாளர் அவர்கள் கூறியதாவது கண்ணின் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் ஒளித்திறனைப் பாதுகாக்கும் பொருட்டு தொலைக்காட்சிப்பெட்டி, கைப்பேசி ஆகியவற்றை அதிக நேரம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டுமெனவும் கண்பரிசோதனையின் அவசியத்தையும், கண்தானத்தின் சிறப்புகளையும்  விளக்கிக் கூறினார். மேலும் பாங்க் ஆஃப் இந்தியா முதன்மை மேலாளர் திரு.ஜகஸ்பிரியன், கிளை மேலாளர் செல்வி கவிப்ரியா மற்றும் அலுவலர் திரு விக்னேஷ் மணிவண்ணன், மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சு.முருகன், வங்கி ஊழியர்கள் ஆகியோர் பங...

தஞ்சாவூர் அக்ரோ சிட்டி லயன்ஸ் சங்க, 14-ஆம் ஆண்டு பணியேற்பு விழா.!

தஞ்சாவூர் அக்ரோ சிட்டி லயன்ஸ் சங்க,. 14-ஆம் ஆண்டு பணியேற்பு விழா, தஞ்சை கோல்டன் ஜூப்ளி ஹாலில், 21.7.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை, 6:30- மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் அக்ரோ சிட்டி லயன்ஸ் சங்க தலைவர்,எஸ். சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட இரண்டாம். துணை ஆளுநர், விஜயலட்சுமி சண்முகவேல், புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி அவர்களை வாழ்த்தி சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில்: புதிய பொறுப்பாளர்களாக பதவி ஏற்றுக்கொண்ட நீங்கள், லயன்ஸ் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் இச்சங்கம் முன்னோடி சங்கமாக விளங்க உங்களுடைய உடல் உழைப்பை பயன்படுத்தி இச்சங்கத்திற்கு புகழை சேர்க்க வேண்டும். லயன்ஸ் சங்க கூட்டத்திற்கு வரும் அனைவரும், லயன்ஸ் பேஜை அணிந்து வர வேண்டும். லயன்ஸ் சங்கத்தினுடைய நிகழ்ச்சிகளில் அணிவிப்பதை தவிர்த்து, இனி வரும் காலங்களில் அதற்கான தொகையினை சங்கத்திற்கு வழங்கினால், இது சங்கத்தின் வளர்ச்சிக்கு பேர் உதவியாக இருக்கும் என இதனைஒரு கோரிக்கையாக வைக்கின்றேன்.    என இவ்வாறு கூறினார். டாக்டர்.டி. ஸ்டாலின் புதிய உறுப்பினர்களை இணைத்து அவர்...

தஞ்சையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநகர பேரவைக் கூட்டம் நடைபெற்றது.!

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தஞ்சை மாநகர பேரவை அலுவலக கட்டடத்தில் நடைபெற்றது .இந்த பேரவைக்கு, யூ. காதர் உசேன்  தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் காரல் மார்க்ஸ்  பேரவையை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட தலைவர் சுதந்திர பாரதி நிறைவுறையாற்றினார். மாநில தலைவர் இப்ராஹிம் சிறப்புரை வழங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் பிரபாகர் ,பேராசிரியர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் சக்திவேல். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பேரவையில் புதிய மாநகர நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் .தலைவராக பி.அருண்,துணைத் தலைவர்களாக சதாசிவம் ,ஆலம் கான் ,பாலச்சந்தர், செயலாளராக ஹரி பிரசாத் ,துணை செயலாளராக பிரவீன், அலெக்சாண்டர், சுரேந்தர், பொருளாளராக காதர்உசேன், உள்ளிட்ட 19-பேர் கொண்ட மாநகர குழு தேர்வு செய்யப்பட்டனர் . பேரவையில் கீழவாசலில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மார்க் கடையை உடனே அகற்ற வேண்டும்.விளார்ரோடு அண்ணா நகர் பகுதிகளில் சுற்றி தெரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும், விளார்ரோடு பூச்சந்தையில் இருந்து பர்மா காலனி வரைக்கும் போக்...

தஞ்சையில் அருணகிரிநாதர் இசைச் சங்கம் சார்பில் தவில் வித்வான் கலைமாமணி கரந்தை சண்முகம் பிள்ளை,104-வது பிறந்தநாள் இசைவிழா.!

அருணகிரிநாதர் இசைச் சங்கம் சார்பில் தவில் வித்வான் கலைமாமணி சண்முகம் பிள்ளை 104-வது பிறந்தநாள் இசை விழா தஞ்சையில் நடைபெற்றது.தஞ்சை பெத்தண்ணன் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திருவையாறு அரசர் கல்லூரி முன்னாள் முதல்வர் சண்முக செல்வகணபதி வரவேற்றார். தமிழ்ப் பல்கலைக்கழக இசைத்துறை முனைவர் கற்பகம் இசை விழா அறிமுக உரையாற்றினார்.  அரண்மனை தேவஸ்தானம் மூத்த இளவரசர் பாபாஜி ராஜாபான்ஸ்லே மற்றும் தமிழ் மேதை குரு தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மூத்த நாதஸ்வர தவில் மற்றும் சாக்ஸ்போ கலைஞர்களான  பாலகிருஷ்ணன், தியாகராஜன், குஞ்சிதபாதம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். மற்றும் சிறப்புமிகு சாதனையாளர்கள் கோவிந்தராஜன், கற்பகம், இராதாகிருஷ்ணன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக மாநகராட்சி மேயர் சண். இராமநாதன் நன்றி கூறினார். முன்னதாக மங்கல இசை, சிறப்பு நாதஸ்வர தவில் இசை ஆகியவை நடைப்பெற்றன.  செய்தியாளர் வேங்கை குணா

அருள்மிகு வெள்ளைப் பிள்ளையார் திருக்கோவிலில் மண்டகப்படி விழா நடைப்பெற்றது.!

தஞ்சை கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள, மிகவும் பிரசித்திப் பெற்ற, அருள்மிகு ஸ்ரீ,  வெள்ளை பிள்ளையார் திருக்கோவில்,85- ஆம் ஆண்டு, ஆடி முதல் வெள்ளி மண்டகப்படி மிகச் சிறப்பாக நடைபெற்றது. வருடந்தோறும் நடைபெற்று வருவது போன்று, இந்த ஆண்டும், தஞ்சை விஸ்வகர்மா ஆச்சாரியார்கள் சமூகத்தினரால் நடத்தி வரும் மண்டகப்படி விழாவானது, ஆண்டுக்கு ஆண்டு, மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோன்று இந்த ஆண்டு 19.7.2024 அன்று பகல், 12-மணிமுதல் மதியம் 1.30- மணிக்குள் சிறப்புஅபிஷேக ஆராதனையும், அதனைத் தொடர்ந்து அன்னதான உபசரிப்புவிழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த அன்னதான நிகழ்வில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இரவு,7:00- மணியளவில், செண்டை மேளம் இசை முழங்கவும்,  நாதஸ்வர இன்னிசை நிகழ்வோடு சுவாமி புறப்பாடு  நிகழ்வு தொடங்கியது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் விழா குழுவினர், விஸ்வகர்மா நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். வெள்ளை பிள்ளையார்,ஆலய குருக்கள், அலங்கார சக்கரவர்த்தி,கே. கணேச சிவம் குருக்கள்  சுவாமி அலங்காரம் செய்தபின், மூலவருக்குசிறப்பு அ...

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் நடைபெறும் பணிகளை நகர பஞ்சாயத்துகளின் இணை இயக்குனர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 13 வார்டில் நடைபெறும் சுடுகாட்டு சிமெண்ட் பாதை சமுதாயக் கூடம் புதிய கழிப்பறைகள் மற்றும்  அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெறும் பணிகள் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நுழைவு வாயில் கழிவுநீர் கால்வாய் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் இடங்களை பேரூராட்சிகளின் இணைஇயக்குனர் S.ஜெயக்குமார் உதவி செயற்பொறியாளர் சரவணன் செயல் அலுவலர்   P. சதீஷ்   பார்வையிட்டு ஆய்வு செய்தனர் இந்த ஆய்வில் பேரூராட்சி தலைவர்  A.அப்துல் ரஷீத் கவுன்சிலர் T.அருணாச்சலம்  வழக்கறிஞர்  ஜெய்கிருஷ்ணண்  ஒப்பந்தக்காரர்கள் பெரம்பூர் ரஜினி E.பார்த்திபன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்  செய்தியாளர் துரை பன்னீர்செல்வம்

தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தொடர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான போதை பொருட்களை முழுமையாக தடுத்து, நாளைய சமூகத்தை நல்லதொரு சமூகமாக உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பானது  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அறக்கட்டளையோடு இணைந்து தொடர் போதை விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகிறது. பழையகாயல், கோரம்பள்ளம், முத்தையாபுரத்தை தொடர்ந்து தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி குரூஸ்புரத்தில் வைத்து போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத் தலைவரும், மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்புப் படை உருப்பினருமான எம்.ஏ.தாமோதரன் தலைமையில்  நடைபெற்ற பேரணிக்கு வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வம், நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்லத்தின் நிர்வாக இயக்குனர் ஏ.முத்துப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக சாமுவேல்புரம் மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ருஃபினா ரொட்ரிகா  அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக  தூத்துக்குடி மாநகர...

வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியம் வெள்ளானூர் ஊராட்சி அரசு பள்ளியில் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ ஆய்வு

 தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமையில், மாதவரம் தொகுதி, வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானூர் ஊராட்சி ஆரிக்கம்பேடு அரசு பள்ளியை ஆய்வு செய்தும், கணபதி நகர் பகுதியில் நூறு நாள் வேலை செய்யும் பெண்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து பிஸ்கட், குளிர்பானங்களை வழங்கினார். வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மோரை கோ.தயாளன், மாவட்ட கவுன்சிலரும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளருமான மோரை மு.ச திஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெள்ளானூர் ஊராட்சி மன்றத் தலைவர் அ.பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார். இதில் வில்லிவாக்கம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, மாவட்ட ஒன்றிய துணைச் செயலாளர்கள் குணா தயாநிதி, ஏ.ராமதாஸ், மாவட்ட பிரதிநிதி பம்மதுகுளம் வி.பி. அண்ணாதுரை, கிளைச் செயலாளர் புனிதவேல், இளைஞரணி வடிவேல், சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள்,  பள்ளி தலைமையாசிரியர், ஆசிரிய - ஆசிரியைகள் கலந்துகொண்டனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் ரூபா...

பூந்தமல்லி ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம் எம்எல்ஏ கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு சார்பில், பல்வேறு மாவட்டங்களில்,  பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.  அதன் தொடர்ச்சியாக பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உள்பட்ட நசரத்பேட்டை, அகரம் மேல், வரதராஜபுரம், மேப்பூர் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் நசரத்பேட்டையில் நேற்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி ஒன்றிய குழு பெருந்தலைவர் பூவை ஜெயக்குமார் தலைமை தாங்கினார் .  பூந்தமல்லி ஒன்றிய திமுக செயலாளர் ப.ச.கமலேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் திவ்யா பொன்முருகன், கலையரசன், ஒன்றிய கவுன்சிலர் உமா மகேஸ்வரி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி கிருஷ்ணசாமி எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்ட முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மருத்துவ துறை, மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை, வீட்டு வசதி துறை, காவல்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பிற்படுத்தப்பட்டோர் மி...

தஞ்சாவூரில் நான்கரை வயது சிறுவனின் கால்களை அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றிய மீனாட்சி மருத்துவமனைக் குழு.!

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின்  எலும்பியல்சிகிச்சை துறையின் தலைவரும், முதுநிலை வல்லுநருமான, டாக்டர். கே. பார்த்திபன் அத்துறையின் இணை சிறப்பு நிபுணர் டாக்டர்,எஸ். சண்முக ஹரிஹரன் ஆகியோர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை செயல்முறைகளினால் காயமடைந்த சிறுவனின் காலில் இயக்க செயற்பாடும் மற்றும் இயல்பான தோற்றமும், மீண்டும் மீட்க பட்டு இருக்கின்றன. இவ்விபத்திற்கு முன்பு இருந்தவாறு இயல்பாக நடக்கவும், ஓடவும், இந்த வெற்றிகரசிகிச்சை வழிவகுத்திருக்கிறது. கீழ்ப்புற காலில் கடுமையான எலும்பு முறிவு மற்றும் துண்டிக்கப்பட்ட இரத்த நாளத்தின் காரணமாக,முதலில்  சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த, ஒருதனியார் மருத்துவமனையில் முழுகாலையும் வெட்டி அகற்றுவது அவசியம் என்று இச்சிறுவனுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.எனினும், மீனாட்சி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருந்த போது, காயம் அடைந்த காலில் இறந்த திசுக்கள் முற்றிலும் உடனடியாக அகற்றப்பட்டு, காயத்திற்கு தையல் போடப்பட்டது. அத்துடன் இரத்த ஓட்டத்திற்கு பாதிப்பின்றி வெளிப்புறத்தை பொருத்தும் செயல்பாடும் மேற்கொள்ளப்பட்டு, தொற்று வராமல் தடுக்கப்பட்டது. ...

கேளம்பாக்கம் திருவள்ளூவர் கல்வி மன்றம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மூன்று அரசுப்பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர்.!

 செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் நேற்று கல்வி கண்திறந்த காமராஜரின் 122வது பிறந்தநாளையொட்டி கேளம்பாக்கம் ஊராட்சி மன்றம், கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் திருவள்ளூவர் கல்வி மன்றம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் என்னும் தலைப்பில் கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் மூன்று அரசுப்பள்ளிகளுக்கு  மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை சீர்வரிசையாக வாகனங்களில் எடுத்துச்செல்லும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியானது வண்டலூர்  செல்லும் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கேளியம்மன் கோவில் எதிரே அமைந்துள்ள அன்னை சமுதாய நலக்கூடத்திலிருந்து துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு  கேளம்பாக்கம் சாத்தாங்குப்பம் விரிவாக்கப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் எக்ஸ்பிரஸ் எஸ்.எல்லப்பன் தலைமை தாங்கினார். கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் திருவள்ளூவர் கல்வி மன்றத்தின் நிறுவன இயக்குனர் கா.கோ.பழனி முன்னிலை வகித்தார் . ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாஸ்கரன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக கேளம்பாக்கம் முதல்நிலை ஊர...

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா.!

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் திருச்சி மாவட்டம் சார்பில், பத்திரிகையாளர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா, 13.07.2024 அன்று திருச்சி அருண் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.சரவணன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ராக்போட் டைம்ஸ் ஆசிரியர் எஸ்.ஆர்.லட்சுமி நாராயணன் அவர்கள் பத்திரிகையாளர் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை, கல்வி உபகரணங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாநில துணைத் தலைவர் புதிய சகாப்தம் ஆசிரியர் என்.அறிவழகன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் ஜன முரசு ஆசிரியர் எஸ்.முகமது கனி முன்னிலையில், மாநில நிர்வாக குழு உறுப்பினர் SST.அரசப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் அரசியல் அங்கதம் ஆசிரியர் த.நவீன்மணி, திருச்சி மாவட்ட செயலாளர் சையது முஸ்தபா, மாவட்ட பொருளாளர் எஸ்.முருகானந்தம் , மாநில ஒருங்கிணைப்பாளர் பேனா முள் ஆசிரியர் பா.கார்த்திக், அமைப்பு செயலாளர் சட்ட களஞ்சியம் ஆசிரியர் நெல்லை கலைமணி, அவைத் தலைவர் ஜி.ஶ்ரீதர், துணை செயலாளர் போலீஸ் பார்வை  எம்...

புதுப்பாக்கம் மின்அழுத்த குறைபாட்டினை போக்கும் வகையில் 100கேவிதிறன் கொண்ட புதியமின்மாற்றியை அமைத்து கொடுத்த ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஆறுமுகத்திற்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள் !

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் உள்ள 08வது வார்டு கவரைத்தெரு அருகே புதுப்பாக்கம் பிரதானசாலையையொட்டி 100கேவி திறன் கொண்ட புதியமின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது .இந்நிகழ்ச்சிக்கு புதுப்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் லலிதாகிரிபாபு முன்னிலை வகித்தார் . மாம்பாக்கம் துணைமின்நிலைய ஆக்கமுகவர் அனைவரையும் வரவேற்றார் . சிறப்பு அழைப்பாளராக புதுப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி மன்றத்தலைவரும் திமுக கட்சியைச்சேர்ந்தவான புதுப்பாக்கம் எம்.ஆறுமுகம் கலந்துகொண்டு புதியமின்மாற்றியின் செயல்பாட்டினை துவங்கிவைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.  இந்நிகழ்வில் செங்கல்பட்டு மின்வாரிய தலைமை பொறியாளர் அருணாச்சலம் , மறைமலைநகர் செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம்  புதுப்பாக்கம் ,சிறுசேரி ஒன்றியக்குழு உறுப்பினர் ஆதிலட்சுமிகண்ணபிரான் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் , பொதுமக்கள் மின்சாரவாரிய ஊழியர்கள் எனதிரளாக கலந்துகொண்டனர்கள். இதுகுறித்து துணைத்தலைவர் லலிதாகிரிபாபு கூறுகையில் எனது இந்த 08வதுவார்டில்...

கல்வி வள்ளல் காமராஜரின்,122-வது பிறந்தநாள் சிறப்பு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.!

கல்வி வள்ளல் காமராஜரின்,122-வது பிறந்தநாள் சிறப்பு கூட்டம், தஞ்சாவூர் கீழ ராஜவீதியிலுள்ள,' பெரியார் இல்லத்தில்,15/7 /2024 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதுக்குடி அரசு ஆதித்திராவிடர்நல உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர், செ.சந்திரசோதி தலைமை தாங்கினார்.மாவட்ட ப.க.தலைவர்,ச. அழகிரி வரவேற்புரையாற்றினார், திராவிடக் கழக காப்பாளர்,மு. அய்யனார், திராவிடர் கழக தஞ்சை மாவட்ட தலைவரும், வழக்கறிஞருமான,சி. அமர்சிங், இந்திய காங்கிரஸ் மாநில  பொதுக்குழு உறுப்பினர், வயலூர் இராமநாதன், இந்திய காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர், லட்சுமி நாராயணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய்த்துறை பா.பார்த்தசாரதி தொடக்க உரையாற்றினார், தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர்,பி.ஜி. இராஜேந்திரன்  பட்டறிவின் மாமேதை காமராஜர் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்,மாநில அமைப்பாளர் ப.க. கோபு. பழனிவேல், மாவட்ட செயலாளர் பாவலர் பொன்னரசு, மாவட்ட அமைப்பாளர்   கௌதமன்  ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பகுத்தறிவாளர் கழகம் செய...

திருவேற்காட்டில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் .!

திருவேற்காடு நகராட்சி பகுதியில் டெங்கு கொசு புழு உற்பத்திக்கு காரணமாக இருந்த தனியார் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.திருவேற்காடு நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக நகர் மன்ற தலைவர் என்.இ.கே மூர்த்தி, ஆணையாளர் கணேசன் ஆகியோர் ஆலோசனையின் படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அதன்படி திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு புழு உருவாக காரணமாக இருப்பவர்களுக்கு அபராதம்  விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதனையும் மீறி அலட்சியத்துடன் செயல்பட்டு டெங்கு கொசு புழு உருவாக காரணமாக இருப்பவர்களை கண்டறிந்து அபராதம் வசூலிக்க ஆணையர் கணேசன் நகராட்சி சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார்.அதன்படி  துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் குருசாமி, பிரகாஷ் மேற்பார்வையாளர்கள்,  டெங்கு ஒழிப்பு பரப்புரையாளர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்...

கர்மவீரர் காமராஜர் அவர்களின்,122-ஆம் ஆண்டு பிறந்த நாளில், தஞ்சையில் கொடியேற்று விழா.!

கர்மவீரர் காமராஜர் அவர்களின்,122-ஆம் ஆண்டு பிறந்த நாளில்,தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில், 15-இடங்களில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்று விழா நிகழ்ச்சிக்கு தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. இராஜேந்திரன்  தலைமையேற்று, மருத்துவக் கல்லூரி  முதல் வாசல், நடராஜபுரம்காலனி, கோ ஆப்பரேட்டிவ் காலனி, ராணிப்பேரேடெக்ஸ் அருகில், குந்தவை நாச்சியார் கல்லூரி அருகில், குழந்தை இயேசு கோயில் அருகில், ஆர்.ஆர். நகர், மானம்பு சாவடி, கரந்தை, கீழவாசல் காமராஜர் சிலை அருகில், உள்ளிட்ட பகுதிகளில் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  அதன் பின்பாக  அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாநகர மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன், இந்திய காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் வயலூர் இராமநாதன், பொதுச் செயலாளர் செந்தில் சிவகுமார், பொருளாளர் பழனியப்பன், முன்னாள் கவுன்சிலர் சாந்தா ராமதாஸ், நீலகிரி வட்டார செயலாளர்  செல்வ சுப்ரமணியன், மற்றும் பல கலந்து கொண்டு சிறப்பித்தனர். செய்தியாளர் வேங்கை குணா

சோழவரம் அருகே காரனோடையில் மக்களுடன் முதல்வர் இல்லம் தேடி அரசு சேவை முகாம் .!

சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரனோடை, ஆத்தூர், பழைய எருமை வெட்டிபாளையம், புதிய எருமை வெட்டிபாளையம், ஞாயிறு, சோத்து பெரும்பேடு, நெற்குன்றம் உள்ளிட்ட ஏழு ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் இல்லம் தேடி அரசு சேவை முகாம் காரனோடை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம்  தலைமை ஏற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சோழவரம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவரும் சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளருமான மீ.வே. கருணாகரன் முன்னிலை வகித்தார். சோழவரம் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தினி, பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார்கள்.முகாமில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் எரிசக்தி துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை, காவல் துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை திறன் மேம்பாட்டு துறை உள்ளிட்ட 21 துறைகள் மூலம் பொது மக்களுக்கு தேவையான கோரிக்கை மனுக்கள் பெற்று கணினியில் பதிவு செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டது. இம்முகாமில் வட்டாட்சிய...

தூத்துக்குடி பத்ரகாளியம்மன்கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.!

தூத்துக்குடி காமராஜர் 122வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் துவக்கி வைத்தார். உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் அந்தோணி கண்ணன், மாவட்ட பிரதிநிதி சேர்மபாண்டியன், கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்சலின், வட்டச்செயலாளர் அசோக்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கா்,  மற்றும் கோவில் தர்மகர்த்தா ஆறுமுக பாண்டியன் காரியதரிசி தங்ககுமார் மற்றும் மணி, அல்பட், உள்பட பலா் உடனிருந்தனர். செய்தியாளர் ஆ.ரவி

டெல்டாபாசனத்திற்கு காவிரியில் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், தமிழ்நாடு விவசாய சங்கங்கள் ரயில் மறியல் போராட்டம்.!

காவிரி டெல்டாவில் சுமார்,15- லட்சம் ஏக்கரில் குருவை மற்றும் சம்பா சாகுபடிகள் நடந்து வந்துள்ளன.காவிரியில் சரியாக தண்ணீர் வராததாலும், பருவ மழைகள் அடிக்கடி பொய்த்துப் போவதாலும் குருவை,தாளடி,        சம்பா சாகுபடிகள் தொடர்ச்சியாக பாதித்து வருகின்றன. இந்த நிலையில் காவிரி ஆணையம், ஒழுங்காற்று குழு முடிவின்படி காவிரியில் தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டது .ஆனால் கர்நாடக அரசு தங்கள் அணைகளில் நீர் இருப்பு போதுமானதாக இல்லை என்ற பொய்யான காரணத்த்தைக்கூறி காவிரியில் தண்ணீர் விட மறுத்து விட்டது. காவிரியில் தண்ணீர் விடுவது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவையும் கர்நாடகா அரசு மதிக்கவில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களின் குடிநீர் தேவையை கருதியும், குருவை மற்றும் சம்பா சாகுபடிக்கான வேலைகளுக்காகவும் கர்நாடக அரசு ஏற்கனவே மாதம் தோறும் தரவேண்டிய சுமார் 41 டிஎம்சி தண்ணீரை தர வலியுறுத்தியும்,    காவிரி ஆணையம், ஒழுங்காற்று குழு முடிவின்படியும் தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விடவும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவும் ,ஒன்றிய...

காமராஜர் பிறந்த நாளையொட்டி தனியார் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி.!

பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா பள்ளி தாளாளர் மலையம் சம்பத் தலைமையில் நடைபெற்றது. இதில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காமராஜர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அரசு பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுவது போல் இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா மிதிவண்டிகளை கடந்த சில ஆண்டுகளாக வழங்கி வருகிறது இந்த நிலையில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஆண்டும் இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 90 மாணவ, மாணவிகளுக்கு விலை உயர்ந்த சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.  இதில் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். குறிப்பாக இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் புதிதாக பள்ளியில் 6 ம் வகுப்பு ...

தருவைக்குளம் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில் அதிக மதிப்பெண் மற்றும் விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .!

 பெருந்தலைவா்  காமராஜாின்  122 வது  பிறந்த  நாளில்  தருவைக்குளம்  காமராஜா் நற்பணி மன்றம்   சாா்பில்  விளையாட்டுப் போட்டியில்  மற்றும்  அரசு  பொதுத் தோ்வில்  அதிக மதிப்பெண்கள்  பெற்றுள்ள  பள்ளி  மாணவ  மாணவியா்க்கு  அதிக  மதிப்பெண்கள்  பெற்றுதந்த  வகுப்பு ஆசிாியா்க்கும்  தங்கநாணயங்கள் மற்றும் வெள்ளி நாணயங்கள் மற்றும்  பாிசுகள்  வழங்கும்  நிகழ்வு  நடைபெற்றது.  விளையாட்டுப் போட்டியில் வெற்றிப்பெற்ற  மாணவ  மாணவியா்க்கு  தருவை்குளம்  பங்கு தந்தை அருட்தந்தை  வின்சென்ட்  அவா்கள்  தலைமை  தாங்கி  பாிசு  வழங்கினாா்கள்  தொடா்ந்து  அரசு மேல்நிலைப்பள்ளியில்  அதிக மதிப்பெண்  பெற வைத்த  ஆசிாியா்க்கு  தங்கநாணயம் வழங்கினாா்கள் மாணவ  மாணவியா்க்கு  வெள்ளி நாணயம்  வழங்கினாா்கள் இந் நிகழ்வில்  பள்ளித் தலைமையாசிாியா் அண்டோ அவா்களும்   காமராஜா்  நற்பணி மன்ற...

காலை உணவுத் திட்டம் என்பது திமுக அரசின் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்க வேண்டும்.! - கனிமொழி கருணாநிதி பெருமிதம்

அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி இன்று (15/07/2024) தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள வி.வி.டி நினைவு தொடக்கப் தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார். பின்னர்,மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் பேச்சுக் கொடுத்தபடியே அமர்ந்து காலை உணவை உட்கொண்டார்.முன்னதாக பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் திருஉருவப்படத்திற்கு கனிமொழி கருணாநிதி எம்.பி மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்வில் பேசிய கனிமொழி எம்:பி: கலைஞர் கருணாநிதி அவர்கள் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக சட்டத்தை இயற்றி, எந்த நாளை அறிவித்தாரோ. அதேநாளில் நம்முடைய முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறக்கூடிய பள்ளியில் விரிவாக்கி இருக்கிறார்.முதலமைச்சர் பேசும்போது நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், அந்த மகிழ்ச்சிக்கு வாய்ப்பு அளித்த மக்களை அத்தனை பேருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என...

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றதையடுத்து வாக்காளர்களுக்கு கனிமொழி நன்றி தெரிவித்தார்.!

 தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி மீண்டும் போட்டியிட்டு 5,40,729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரொவீனா ரூத் ஜோன் ஆகியோர் போட்டியிட்டனர். கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் 2 முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி கருணாநிதி வெற்றி பெற்றார். எனவே, வாக்களித்த பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.  நேற்று (15/07/2024) விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குறிக்குச்சாலையில் தொடங்கி வேடநத்தம், குளத்தூர், வைப்பார், வேம்பார், சூரங்குடி, அரியநாயகபுரம், விளாத்திகுளம், கரிசல்குளம், நாகலாபுரம், சின்னவ நாயக்கன்பட்டி, புதூர், சிவலார்பட்டியில் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.  தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமை...

காமராஜர் பிறந்தநாள் விழா: அதிமுகவினர் மரியாதை!

தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தூத்துக்குடியில், மறைந்த முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் வ.உ.சி மார்கெட் முன்புறம் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், அமைப்புச் சாரா ஓட்டுநரணி  மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளருமான இரா.சுதாகர், பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ், முருகன், நட்டார்முத்து, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் ஜூலியட் உட்பட பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர் ஆ. ரவி  

ஊத்துக்கோட்டை வட்டார நாடார் ஐக்கிய சங்கத்தின் சார்பில் காமராஜரின் 122 வது ஆண்டு பிறந்தநாள் விழா.!

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் வட்டார நாடார் ஐக்கிய சங்கத்தின் சார்பில்  கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது முன்னதாக காலை 9.30 மணி அளவில் காமராஜர் திருமண மண்டபத்தில் இருந்து  புறப்பட்டு  அண்ணா பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர்  சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அறுசுவை உணவும் அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை 4:00 மணியளவில் ஊத்துக்கோட்டை நாடார் ஐக்கிய சங்கத்தின் தலைவரும் சமூக சேவகருமான C.பரமசிவம் செயலாளர்  T.தங்ககுமார் பொருளாளர்  M.பூபாலன் தலைமையில் அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி பெண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியான கோதண்டராமன் உயர்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 10 மாணவ மாணவிகளுக்கு அவர்கள் கல்வித்தரத்தை ஊக்கவிக்கும் வண்ணமாக முதல் பரிசு ரூபாய் 5000மும் இரண்டாம் பரிசு ரூபாய் 3000மும் மூன்றாம் பரிசாக தல இரு நபர்களுக்கு 2000 மும்  நினைவு கேடயம்வழங்கி பாராட்டி வாழ்த்தினார்கள்இந் நிகழ்வில் பள்ளியின் தல...

கும்மனூர் சிஎஸ்ஐ பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் துவக்கி வைத்தார்.!

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி புனித அன்னாள் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஊராட்சி ஒன்றியம், கும்மனூர் ஊராட்சியில் உள்ள கும்மனூர் சி.எஸ்.சி பள்ளியில் காலை உணவு திட்டம் துவங்கும் நிகழ்ச்சி சோழவரம் ஒன்றிய துணை பெருந்தலைவரும், சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளருமான மீ.வே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்தார். இதில் கும்மனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜி.வேதா முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஆலய செல்வி வரவேற்புரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியில்  வட்டார வளர்ச்சி அலுவலர், கல்வி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் து.அரசன், கும்மனூர் நா.குமரேசன், நா.பரசுராமன், பாஸ்கர் மற்றும் கழக முன்னோடிகள்  ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செய்தியா...

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.!

தூத்துக்குடி காமராஜ் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 41 வது வார்டு சார்பில் மேல சண்முகபுரம் பகுதியில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். வார்டு தலைவர்கள் வெள்ளைச்சாமி அண்ணாமலை சாமி ராம்குமார் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி ஆகியோர் கலந்து கொண்டு 25 பெண்களுக்கு சேலை 25 ஆண்களுக்கு வேஷ்டி 50 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.  நிகழ்ச்சியில் மாநில பொது குழு உறுப்பினர் சந்திரபோஸ், ஐ.என்.டி.யு.சி மாநில செயலாளர் ராஜ், மண்டல தலைவர் ராஜன், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், ஊடக பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், மாநகர் மாவட்டத் துணைத் தலைவர்கள் பிரபாகரன், சின்ன காளை, அருணாச்சலம், சாந்தி மேரி, ஜெயஜோதி, நெப்போலியன், மாவட்ட செயலாளர் நாராயணசாமி, ஜெயராஜ், குமார முர...

தூத்துக்குடியில் பா.ஜ.க சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா.!

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பாக காமராஜர் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு  வஉசி மார்க்கெட்டில் உள்ள அவரது திரு உருவசிலைக்கு பிஜேபி ஓபிசி அணி மாநில துைணத் தலைவர் விவேகம் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், துனணத் தலைவர் சிவராமன்,  மாநில பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, விருந்தோம்பல் பிரிவு மாநில செயலாளர் பாலமுருகன், பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மாசானம்,  மண்டல தலைவர்கள் சிவராமன் மாதவன், பொதுச் செயலாளர்கள் சண்முகசுந்தரம்,  பால்மனோகர், அசோக்குமார், மாவட்ட அணி தலைவர்கள் காளிராஜா,  சுந்தர்கணேஷ், சேர்மகுருமூர்த்தி, சின்னதங்கம், விஜயன், ஒம்பிரபு, கலைசெல்வன், துைணத் தலைவர்கள் பொய்சொல்லான், சந்தனகுமார், செயலாளர் கனி, பொறுப்பாளர்கள் மாரியப்பன் வேல்கனி கொரைரா, பொருளாளர் பாலகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் ஆ. ரவி

தூத்துக்குடி செல்வவிநாயகபுரத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா.!

தூத்துக்குடி முத்துநகர் நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பாக காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவையொட்டி செல்வ விநாயகபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், கவுன்சிலர் தெய்வேந்திரன் தொழிலதிபர்கள் கனிராஜ், அன்னதுரை, கணேஷ்குமார், முருகன், அருண்ஜெயக்குமார், தினேஷ்குமார், கிறிஸ்டோபர், உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் பால்ராஜ், மற்றும் ராஜேந்திரகுமார் செய்திருந்தனர். செய்தியாளர் ஆ. ரவி