பெரம்பலூர் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தார்கள். திரு.ராமராஜன் அவர்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அடிகிணறு வெட்ட வழிவகை செய்ய வேண்டுமென்றும், கொட்டரை நீர்தேக்கத்தில் மாற்றுப்பாதை அமைத்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். திரு.ராஜீ அவர்கள் மானாவாரி பயிர்களுக்கு கோடை உழவு மானியம் கூடுதலாக வழங்க வேண்டுமெனவும், அனைத்து நீர் நிலைகளிலும் நில அளவை செய்து தூர்வார வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். திரு.கருணாநிதி அவர்கள் லாடபுரம் பகுதியில் அரசு மருத்துவமனையை சுற்றி சீரமைத்து தர வேண்டுமென கேட்டுக்கொண்டார். திரு.ராஜா அவர்கள் மக்காச்சோளத்திற்கு பயிர் காப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்தி விரைவில் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். திரு.செந்தில்குமார் அவர்கள் அரும்பாவூர் பகுதியில் குடிதண்ணீர் கிணறு உள்ள பகுதியில் சீரமைத்து தர வேண்டுமென ...