Skip to main content

Posts

Showing posts from September, 2022

’மிஷன் 2047’ CD... PFI போட்ட பிளான்..? அதிர்ந்து போன உள்துறை அமைச்சகம்..!

 ’மிஷன் 2047’ CD... PFI போட்ட பிளான்..? அதிர்ந்து போன உள்துறை அமைச்சகம்..! PFI எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை செய்த விஷயம் தான் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனுடன் தொடர்புடைய RIF, CFI, AIIC, NCHRO, நேஷனல் உமன் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா பவுண்டேஷன் மற்றும் ரிஹாப் பவுண்டேஷன், கேரளா ஆகியவையும் தடை செய்யப்பட்டுள்ளன. முன்னதாக 17க்கும் மேற்பட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ ரெய்டு நடத்தி பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 1,300க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த சூழலில் பி.எஃப்.ஐ அமைப்பினரின் வீடுகள், அலுவலகங்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் ரெய்டு நடத்திய மத்திய புலனாய்வு அமைப்புகளின் கைகளில் அதிர்ச்சியூட்டும் பல்வேறு விஷயங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பி.எஃப்.ஐ தலைவரான முகமது நதீமிடம் இருந்து முக்கிய ஆவணம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.அதில் ஐ.இ.டி குண்டுகளை எளிதில் கிடைக்கக் கூடிய பொருட்களை பயன்படுத்தி எப்படி தயாரிப்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்ற ஆவணம் மற...

2 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்..

 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்  முதலமைச்சர் அவர்கள் "பசுமை தமிழகம்"  திட்டத்தின் மூலம்  தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள்  நடப்படுவதற்கு  அறிவுறுத்தியதன் அடிப்படையில் இன்று  திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம்,  ஏகாட்டூர் கிராமத்தில்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக   மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணிகளை  மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்  .சா.மு.நாசர்   துவக்கி வைக்கும்  விதமாக மரக்கன்றுகளை நடவு செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ்  .  முன்னிலையில்பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார். செய்தியாளர் ஆசைத்தம்பி  

விஐடி பல்கலைக்கழக மாணவரின் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இரண்டு திருடர்கள் கைது..

  கா ட்பாடி விஐடி பல்கலைக்கழக மாணவரின் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இரண்டு திருடர்கள் கைது.. வேலூர் மாவட்டம் காட்பாடியில் விஐடி தனியார் பல்கலைக்கழகம் உள்ளது இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர் அதில் அவர்கள் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் விஐடி பல்கலைக்கழக மூன்றாவது கேட்டின் அருகில் நான்காம் ஆண்டு பிடெக் படிக்கும் மாணவர் அபினய் குமார் ரெட்டி என்பவர் தனது யமஹா R15 என்ற விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார் இதனை நோட்டமிட்ட இரண்டு பேர் இருசக்கர வாகனத்தை திருட முயன்றனர் அவர்களை அடித்து உதைத்து காட்பாடி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர் காட்பாடி காவல் நிலைய உதவியாளர் பால வெங்கட்ராமன் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில் அவர்கள் காட்பாடி தாராபடவேடு குளக்கரை பகுதியை சேர்ந்த பாலா (எ) பலராமன் மற்றும் காட்பாடி பாரதி நகரை சேர்ந்த சீனு (எ)சீனிவாசன் என்பதும் இவர்கள் மீது திருட்டு வழிபறி கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்தது இதனை அடுத்து இருவரையும் காட்பாடி குற்றவி...

டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு கொள்ளை..!! போலீசார் விசாரணை..!!

 ""டாஸ்மாக் கடையில் திருட முயற்சி  சுவரில் துளையிட்டு துணிகரம் போலீசார் விசாரணை!!!   காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் பெரும்புலிப்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற் பார்வையாளராக நந்த குமார் பணிபுரிந்து வருகிறார். விற்பனை யாளர்களாக தனஞ் செழியன் , ஏழுமலை ஆகியோர் வேலை பார்க்கிறார்கள் . நேற்று முன்தினம் இரவு மூன்று பேரும் டாஸ் மாக் கடை பூட்டி விட்டு வீட்டிற்கு சென் றுள்ளனர்.  பின்னர் நேற்று மதியம் விற்ப னையாளர்கள் பேரும் ரண்டு கடையை திறக்க வந்த போது கடையின் பின் பக்கத்தில் மர்ம நபர் கள் துளையிட்டு திருட முயற்சிசெய்தது தெரியவந்தது . இத னையடுத்து விற்பனை யாளர்கள் கடையை ஆய்வு செய்த போது கடையில் 38 பீர் பாட்டில்கள் உடைத்து நொருக்கப்பட்டிருந் மதுபாட்டில்கள் திருட்டு போகவில்லை. இது தொடர்பாக மேற்பார்வையாளர் நந்தகுமார் அவளூர் போலீஸ் நிலையத் தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.