திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள கல்யாணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், ஆரணி அடுத்துள்ள பையூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவருடன் ரம்யாவுக்குத் திருமணம் மீறிய தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. கணவருக்குத் தெரியாமல், பெருமாளை அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கிறார் ரம்யா. மனைவி ரம்யாவின் நடத்தையில் சுதாகருக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மனைவியின் தவறான தொடர்பு தெரியவந்ததால், கடும் மனஉளைச்சலுக்கு ஆளான சுதாகர், கோழிப்புலியூர் கிராமத்தில் வசிக்கும் தனது நண்பன் சீனுவளவனைச் சந்தித்து, தனது மனைவியின் நடத்தை விவகாரம் குறித்துக் கூறி வேதனைப்பட்டிருக்கிறார். சீனுவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரணமல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். நண்பன் சுதாகரை சமாதானப்படுத்திய வி.சி.க நிர்வாகி சீனுவளவன், அவரது மனைவியுடன் திருமணம் மீறிய தொடர்பிலுள்ள பெருமாளை கண்டிப்பதற்காகச் சென்றுள்ளார். ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென ரம்யா மீது சீனுவளவனுக்கு அக்கறை ஏற்பட்டது....
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் (Media - News Company) Email : News.kakithapoo@gmail.com www.kakithapoo.com Cell : +91 9962944433 | 044 42146943