வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் மாநகர திமுக மற்றும் வேலூர் சட்டமன்ற தொகுதி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மாநகர செயலாளர் ப .கார்த்திகேயன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார், மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, மாவட்ட பொருளாளர் சி.நரசிம்மன், மாவட்ட துணை செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் ,அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர் வாசுதேவன்
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் (Media - News Company) Email : News.kakithapoo@gmail.com www.kakithapoo.com Cell : +91 9962944433 | 044 42146943