Skip to main content

Posts

Showing posts from March, 2023

டேங்க் ஆப்ரேட்டர் பணி வழங்க லஞ்சம் கேட்ட ஊராட்சி மன்ற தலைவிக்கு காப்பு.!

டேங்க் ஆப்ரேட்டர் பணி வழங்குவதற்கு ரூபாய் 5 லட்சம் கேட்ட ஊராட்சி மன்ற தலைவியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா ,இடப்பிறை ஊராட்சியில் டேங்க் ஆப்ரேட்டராக கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்தவர் கோவிந்தசாமி. இந்நிலையில் கோவிந்தசாமி உடல் நலக்குறைவால் கடந்த 31. 12 .2022 இல் காலமானார். இதையடுத்து அவரது பணியை அவரது மனைவி பராசக்தி தொடர்ந்து இந்நாள் வரை செய்து வந்தார் .கணவர் இறந்ததால் கருணை அடிப்படையில் இந்த பணி பராசக்திக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவி ஜீவா என்பவர் கடந்த நான்கு மாதங்களாக பராசக்திக்கு மாத ஊதியம் தராமல் கிடப்பில் போட்டு விட்டார். இதனால் பராசக்தி நான்கு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் மிகவும் தவிப்புக்கு உள்ளானார். இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவியை நேரில் சந்தித்து தனக்கு நான்கு மாத சம்பளம் வழங்காமல் உள்ளீர்கள், அதை கொடுத்தால் தான் குடும்பம் நடத்த முடியும் என்று கேட்டுள்ளார் . அதற்கு ஊராட்சி மன்றத் தலைவி ஜீவா டேங்க் ஆப்ரேட்டர் பணி வழங்க வேண்டும் என்றால் எனக்கு நீ ரூபாய் 5 லட்சம் கொடு...

தமிழகத்தில் பிரம்மாண்டமான விவசாயிகள் மாநாட்டில், பிரதமர் கலந்து கொள்ள உள்ளார்

 பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருவதை வரவேற்கும் வகையில், தமிழகத்தில் விரைவில் நடத்தப்பட உள்ள நன்றி மோடி ஜி என்ற பிரம்மாண்டமான விவசாயிகள் மாநாட்டில், பிரதமர் கலந்து கொள்ள உள்ளார் என்று பாஜக விவசாயிகள் அணி மாநிலத் தலைவர் ஜி. கே. நாகராஜ் தெரிவித்துள்ளார்  நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொஞ்சனூர் என்ற பகுதியில் மாவட்ட  பாஜக விவசாய அணி சார்பில், மாவட்ட விவசாய அணி செயற்குழு கூட்டம் (31.3.23- மாலை) நடைபெற்றது.  இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக விவசாய அணி தலைவர் ஏ.கே. நடராஜன் தலைமை வகித்தார்.  இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் அங்கு அமைக்கப்பட்டு இருந்த விவசாயிகள் அமைத்திருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.  இந்தக் கூட்டத்தில் பாஜக மாவட்ட விவசாய அணி சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சேலம், நாமக்கல் மாவட்டங்கள் பயன்ப...

அண்ணாமலையார் தனது தந்தையான வல்லாள மகாராஜாவிற்கு திதி கொடுக்கும் நிகழ்வு முடிந்த மறுநாள் அண்ணாமலையாருக்கு மகாராஜாவாக பொறுப்பேற்கும் மகுடாபிஷேகம்

திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜாவிற்கு குழந்தை பேறு இல்லாமல், அண்ணாமலையாரை நினைத்து பிரார்த்தனை செய்தபோது, அண்ணாமலையாரே அவருக்கு குழந்தையாக பிறந்தார் என, தல புராணங்கள் கூறுகின்றன.  மேலும் வல்லாள மகாராஜா போரில் உயிர் நீர்த்தார் என்ற தகவல் அறிந்ததும் நாம் யார் ஈசானிய மைதானத்தில் நடைபெறும் தீர்த்தவாரியை பாதியில் முடித்துக் கொண்டு மேல தாளம் இன்றி அண்ணாமலையார் கோயிலுக்கு திரும்புவது ஐதீகம். அதேபோல் தனது தந்தையான வல்லாள மகாராஜாவிற்கு  ஆண்டுதோறும் மாசி மக தீர்த்தவாரியில் அண்ணாமலையார் திதி கொடுக்கும் வைபோகம் கீழ்பென்னாத்தூர் அடுத்த பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள துரிஞ்சலாறு கவுதம நதிக்கரையில்,  உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு  அருள்பாலித்து  பின்னர்,  அண்ணாமலையார் சூல வடிவில் துரிஞ்சலாறில் மூழ்கி தீர்த்திவாரி நடைபெறும் இதை தொடர்ந்து, சம்பந்தனுார் கிராம மக்கள், அண்ணாமலையாருக்கு சம்பந்தம் கட்டும் நிகழ்வு நடைபெற்று மறுநாளான இன்று அண்ணாமலையார் மகாராஜாவாக மகுடம் சூட்டும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை...

மகன் இறந்த துக்கம் தாளாமல் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!

காட்பாடி இருப்புப் பாதை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்பாடி நடைமேடை எண் 2ல் காஞ்சனா( 44) க/பெ செந்தில்குமார், சைதாப்பேட்டை, வேலூர் என்பவர் பெங்களூருவில் இருந்து டெல்லி செல்லும் விரைவு வண்டி ரயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.  காஞ்சனாவின் மகன் ஆனந்தன் கடந்த சனிக்கிழமை சாலை விபத்தில் திருச்சியில் இறந்துள்ளார். இந்நிலையில் ஈம காரியங்கள் செய்த நிலையில் மனம் உடைந்து காணப்பட்டார். இதற்கிடையில் காஞ்சனா வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இறந்த காஞ்சனாவின் உடல் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.காட்பாடி இருப்பு பாதை காவல் நிலைய ஆய்வாளர் சித்ரா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். செய்தியாளர் வாசுதேவன் 

மதுரை மேலத்தெரு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் 145 ஆம் ஆண்டு உற்சவ விழா..

 மதுரை மணி நகரம் மேலத்தெரு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் 145 ஆம் ஆண்டு உற்சவ விழா கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது.  உற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ விழாவை முன்னிட்டு அம்மனுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் தீபாரதனைகளும் நடைபெற்றன. நிகழ்ச்சி ஏற்ப்பாடுகளை தலைவர் சம்பத்குமார், செயலாளர் முருகன், பொருளாளர் ஜீவா தலைமையில் விழா கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர். செய்தியாளர் செந்தில் கணேஷ் 

காட்பாடி கிளித்தான்பட்டறையில் 5வது வட்ட திமுக சார்பில் - முதல்வர் பிறந்த நாள் விழா.!

வேலூர் மாவட்டம், காட்பாடி கிளித்தான்பட்டறையில் 5வது வட்ட திமுக சார்பில் தமிழக முதல்வரின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திமுக கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப்பொருள்களையும் 5வது வட்ட செயலாளர் விநாயகம் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது .இதை தொடர்ந்து மதியம் அனைவருக்கும் அறுசுவை விருந்தும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் வாசுதேவன்

“எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” முதல்வரின்வாழ்க்கைப் பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி - நேரில் சென்று பார்த்துப் பயனடைந்த அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்

மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களால் “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் முதல்வரின் 70 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம் குறித்த புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இக்கண்காட்சியை இந்துசமய அறநிலையத்துறையின் கீழ், சென்னை கொளத்தூரில் இயங்கிவரும் கல்லூரியான, அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் நேரில் சென்று பார்த்துப் பயனடைந்தனர்.