சென்னையடுத்த மாதவரம் பொன்னியம்மன் மேடு அய்யர் தோட்டம் பகுதியில் அரபி மதரஸா இஸ்லாமிய பள்ளி இயங்கி வருகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த நசீர் என்பவர் கொடுங்கையூரை சேர்ந்த அக்தர் (வயது 26) என்பவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன் வாடகைக்கு விட்டுள்ளார். இந்த இஸ்லாமிய பள்ளியில் பீகாரை சேர்ந்த அப்துல்லா (வயது 20) என்பவர் பிள்ளைகளுக்கு பாடம் நடத்திவரும் ஆசிரியராக இருந்து வருகிறார். இப்பள்ளியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுமார் 10 வயது முதல் 12 வயதுள்ள ஆண் சிறுவர்கள் 12 பேர் இஸ்லாமிய பாடம் கற்க இங்கேயே தங்கி பாடங்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் சைல்டு ஹெல்த் கேர் பள்ளியில் சிறுவர்களின் அபயக்குரல் கேட்பதாக ரகசிய தகவல் வந்ததின் பேரில், கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் ராஜாராமுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு புழல் உதவி கமிஷனர் ஆதிமூலம் மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் மற்றும் போலீசாருடன் அங்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டபோது , அங்கு சிறுவர்கள் பயத்தில் இருந்தது தெரிந்தது . பின் அவர்களை பார்த்தபோது முகம், கை, கால், முதுகு பின்மறைவிட பகுதிகளில் அடித்து தழ...
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி குழுமம் (Media - News Company) Email : News.kakithapoo@gmail.com www.kakithapoo.com Cell : +91 9962944433 | 044 42146943