Skip to main content

Posts

Showing posts from August, 2024

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின், 15-வது வட்ட மாநாடு.!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தஞ்சை வடக்கு வட்டம்,15-வது வட்ட மாநாடு, தஞ்சை பெசன்ட் அரங்கில்,17.8.2024 அன்று மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்ட தலைவர்,எம். சுப்பிரமணி தலைமை தாங்கினார்,வட்ட துணைத் தலைவர்,பி. சதீஷ்குமார் வரவேற்புரை ஆர்வற்றினார், வட்ட இணை செயலாளர்,கே. மூர்த்தி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார், மாவட்டத் தலைவர் (பொறுப்பு) பி.முருகன் துவக்க உரையாற்றினர், வட்டச் செயலாளர், சி.அஜெய்ராஜ்   செயலாளர். அறிக்கையை வாசித்தார், பட்ட பொருளாளர், ஜெ. பலராமன்  வரவு, செலவு, அறிக்கையினை வாசித்தார். அதன் பின்பாக விவாதம்- தொகுப்புரை- புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.  தொடர்ச்சியாக மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர்,ஏ.ஆர். கவிதா, முன்னாள் படைவீரர் நலத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில தலைவர் ஏ.சுகுமாரன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர், டி. மோகன்ராஜ், தமிழ்நாடு மாநகராட்சி அலுவலர் சங்க மாநிலத் துணைத் தலைவர்,பி.  மதிவாணன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க  மாநில செயலாளர், கே. பழனிச்சாமி,  இந...

அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், விலங்கியல்த்துறை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.!

அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், விலங்கியல்த்துறை சார்பாக, பூச்சிநச்சியியல் கருத்தரங்கம், 20.8.2024 அன்று  காலை 10 மணி அளவில் ஜான் போப் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக  கடவுள் வாழ்த்து ஒலிக்க, குத்துவிளக்கேற்றி வைத்து நிகழ்ச்சியானது துவங்கியது.  இந்த கருத்தரங்கிற்கு வருகை தந்த அனைவரையும் விலங்கியல் துறைத்தலைவர் முனைவர்,க.தாஸ் அவர்கள் வரவேற்றார், இந்நிகழ்ச்சிக்கு இக்கல்லூரியின் தாளாளர் அருட்தந்தை. முனைவர், ஜான் சக்ரியாஸ் தலைமையேற்று தலைமை உரையாற்றினார். இக்கல்லூரி நிர்வாக அருட்தந்தை ஆரோன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்த சிறப்பு வாய்ந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக, மன்னர் சரபோஜி அரசு கல்லூரியின் விலங்கியல்த்துறை பேராசிரியர், முனைவர் சுகுமாரன் கலந்து கொண்டு பூச்சு நச்சுயியல் தொடர்பான கருத்துக்களை மிகத் தெளிவாகவும், விளக்கமாகவும், மாணவ, மாணவியரின் மனதில் நிற்கும் அளவிற்கு  நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தார்.  இவர்,10- முனைவர் பட்ட மாணவர்களை உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பல்வேறு  கல்லூரிகளைச் ச...

முதியவருக்கு ஆஞ்சியோ மூலம் இதயவாழ்வு மாற்று சிகிச்சை.! - தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சாதனை

இதய (தமனிகளில்) நாளங்களில் கண்டறியப்படும் அடைப்புகளுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டிக்ஸ் வழியாக வழக்கமாக ஸ்டெண்ட் பொருத்துதல் செய்யப்படுவது பொதுவானதாக இருக்கிற நிலையில், இதய வால்வுகளில் உள்ள அடைப்புகளுக்கு இது தற்போது பயன்படுத்தப்படுகிறது.83- வயதான ஒரு புதிய ஆண் நபரின்  இதய வாழ்வில் இருந்த அடைப்பை அகற்றுவதற்கு ஆஞ்சியோ பிளாஸ்டி-TAVI சிகிச்சையை தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை வெற்றி பெறுமாக செய்திருக்கிறது. இதய தமனிகளில் உருவாகி இருக்கும் அழைப்புகளுக்கு சிகிச்சை அளிக்க ஸ்டண்ட் பொருத்துதல் பொதுவாக பயன்படுத்தும் ஒரு செயல் உத்தியாகும். இதய வாழ்வில் உள்ள அடைப்புகளை அகற்றுவதற்கு இது செயல்முக்தியை மருத்துவமனை டெல்டா பிராந்தியத்தில் பயன்படுத்திருப்பது, ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகவும், முன்னேற்ற செயல்பாடாகவும் இருக்கிறது. மிக குறைவான ஊடுருவல் கொண்ட இந்த செயல்முறையின் மூலம் சிறப்பான சிகிச்சை பலனை டெல்டா பகுதியில் பெற்றிருக்கின்ற மூன்றாவது நபராக ஸ்ரீ ராமநாதன் என்ற இந்த நோயாளி இருக்கிறார். கடுமையான இதய வாழ்வு அடைப்பு இவருக்கு இருப்பது பரிசோதனை உறுதி செய்யப்பட்டது. இத்தகைய நிலைக்கு வாழ்வு மாற்று அறுவை சிகி...

விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

புழல் ஊராட்சி ஒன்றியம் விளாங்காடுபாக்கம் முதல் நிலை ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் ச.பாரதி சரவணன் தலைமையில் நடைபெற்றது. புழல் ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், பாரத தூய்மை இயக்கம், ஜல்ஜீவன் திட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, தரமான சாலை, குடிநீர் வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கலாவதி நந்தகுமார், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் என்.ஆனந்தி நாகராஜன், ர.தர்மிரவி, ஏ.எல்,மாரி, எஸ்.அருணாதேவி சீனு, என்.மாரியம்மாள் நரசிம்மன், க.சத்தியசீலன், மு.நிலவழகி இனியன், எஸ்.ரதி சீனிவாசன், செயலர் கே.வி. மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செய்தியாளர் ரஞ்சித் 

ஆங்காடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

சோழவரம் ஊராட்சி ஊராட்சி ஒன்றியம் ஆங்காடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கிரிஜா நித்யானந்தம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் மதன்ராஜ்,  வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தினி, உதவி செயற்பொறியாளர் சங்கீதா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இக்கூட்டத்தில் ஊராட்சியில் செய்ய வேண்டிய பல்வேறு பணிகள்  குறித்து ஆலோசனை செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  இதில் வார்டு உறுப்பினர்கள் விமலா, செல்வி, சங்கர், சுமதி, ஈஸ்வரி, ரஞ்சிதா, வெங்கடேசன், குணசுந்தரி மற்றும்  கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் ஊராட்சி செயலர் தனசேகர் அனைவருக்கும் நன்றி கூறினார். கிராமம் பொதுமக்கள் மகளிர் குழுக்கள் இளைஞர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். செய்தியாளர் ரஞ்சித்

பனங்காட்டூர் ஹரிகரனுக்கு பாராட்டு மழை

சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்டம் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்த உமராபாத் பனங்காட்டூர் பகுதியைச் சார்ந்த ஹரிகரன் அவர்களுக்கு பனங்காட்டூர் மக்கள் உற்சாக வரவேற்பு பாராட்டு மழை குவிந்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உம்ராபாத் பனங்காட்டூர் பகுதியைச் சார்ந்த முருகேசன் மலர் அவர்களின் இளைய மகன் திரு. ஹரிஹரன் MSC, பெங்களூரில் தனியார் மருந்தகத்தில் வேலை செய்கிறார். ஹரிகரனின் குருவான சின்ன தம்பி அவர்கள் ஆரம்ப காலத்தில் பயிற்சி கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளார் ஹரிகரன் இளம் வயதிலேயே சிலம்பாட்டத்தில் மிகவும் ஆர்வமும் சாதிக்க துடித்தவர். தொடர்ந்து பல்வேறு போட்டியில் கலந்து வெற்றி பெற்றுள்ளார். தற்போது தேசிய அளவிலான சிலம்பாட்டம் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்து பிறந்த மண்ணுக்கு பெருமைத் தேடி தந்துள்ளார், இந்த சாதனையை கொண்டாடும் விதமாக அவரது மாமா சரத்குமார் உமா சங்கர், விக்னேஷ், சேதுபதி குடும்பத்தார் அபிநயா, அபிஷேக் மற்றும்  பனங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் இளைஞர்களும் ஹரிஹரன் வருகையொட்டி வானவேடிக்கை தாரை தப்பட்டை, மேல ...

தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் தொடர் கலை நிகழ்ச்சி

நம் நாடு சுதந்திரம் பெற்று, 78- ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,78-வது சுதந்திர தினத்தை  இந்தியா முழுவதுமாக, ஆகஸ்ட் 15-அன்றுசுதந்திர தின விழாவாக கொண்டாடப்படுகிறது.  சுதந்திர திருநாள் அன்று கலைகளின் தலைநகரமாக விளங்கும் தஞ்சாவூரில் உள்ள சிவகங்கை பூங்காவில், பூங்காவில் பூங்காற்று என புதிய நிகழ்வாக,குரு திருமதி.அருணா சுப்பிரமணியம் அவர்களின், ஶ்ரீ சக்தி நாட்டிய கலாலயம் மாணவிகள் நடத்திய, பரதநாட்டிய கலை நிகழ்ச்சி, 15.8.2024 அன்று மாலை,5:00- மணியளவில்  நடைபெற்றது. புதிதாக நடைபெறும் இந்நிகழ்ச்சியினை,  சிறப்பு விருந்தினர், தஞ்சை மாநகராட்சி மேயர்,சண். இராமநாதன் அவர்கள் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிகளை ஆடல் வல்லான் நாட்டியாலயா நிறுவனர், திருவையாறு கலைசுடர்மணி குரு, க.வஜ்ரவேல் மற்றும் தஞ்சாவூர் சோழர் கலை மன்றம் தலைவர், கலை நன்மணி,ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் ஆகியோர் ஒருங்கிணைத்து வழங்கினார்கள். இந்தபரதநாட்டிய நிகழ்ச்சியானது  வாரம் தோறும் தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகியமூன்று தினங்களும் பரதநாட்டியம்/ கரகம்/ காவடி/ கட்டைக்கால்/ கிராமிய இசை/ வயலின்/ வீணை/பட்டி மன்றம்...

தூத்துக்குடி நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்லத்தில் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்லம், துளசி சோசியல் சர்வீஸ் டிரஸ்ட், தாயகம் அறக்கட்டளை, தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை சார்பில் தூத்துக்குடி நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்ல வளாகத்தில் வைத்து இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.  இம்முகாமிற்கு நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்ல மேலாண்மை இயக்குனர் ஏ.முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் ஜெயபால், காவல் உதவி ஆய்வாளர் (ஓய்வு) ஹென்சன் பவுல்ராஜ், அய்யடைப்பு முன்னால் ஊராட்சி மன்றத்தலைவர் ஆ.ஆதிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நியூ பாசக்கரங்கள் நிர்வாக இயக்குனர் எம்.செல்வகுமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கண் மருத்துவ முகாமின் நோக்கம் குறித்து துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் எஸ்.தனலெட்சுமி பேசினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் எம்.ஏ.தாமோதரன் கலந்து கொண்டு இலவச கண் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். நாகர்கோயில் பெஜான்சிங் கண் மருத்துவமனை மருத்துவர் அருண், ஒருங்கிணைப்பாளர் சுந்தர் குழுவினர் மக்களுக்கு கண் ப...

தேனி மாவட்டம் கூடலூரில் கள்ளச்சாராயம் விற்ற கணவன் மனைவி கைது

தேனி மாவட்டம், கேரள  செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பழக்கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்பனைசெய்வதாக போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது.  இது சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் இருந்து போலீசார் விரைந்து சென்று அப்பபகுதிகள் சோதனையிட்டனர் . அப்பொழுது முல்லைப்  பெரியாறு ஆற்றின் பாலத்திற்கின் கீழ் திராட்சை கழிவுகள் மற்றும் கருப்பட்டி போன்ற ரசாயன பொருட்களுடன் மறைத்துவைத்திருந்த  சுமார் 80 லிட்டர் அளவிலான கள்ள சாராயம் கைப்பற்றப்பட்டது. இதில் அப்பகுதியில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு 200, 300 என விற்றது தெரிய வந்தது. இதை அடுத்து கூடலூர் காலனி பகுதியை சேர்ந்த சந்திரன் மற்றும் அவருடைய மனைவி  கைது செய்து சிறையில் அடைத்தனர். செய்தியாளர் பிரபு

இந்திய மிஷனரி சங்கத்தின் ஆதரவு விற்பனை விழா தூத்துக்குடியில் சபை மக்கள் பொருட்கள் வாங்கி ஆதரவு

தூத்துக்குடி தென்னிந்திய திருச்சபையின் ஒரு அங்கமாக விளங்கும் ஐஎம்எஸ் எனும் இந்திய மிஷனரி சங்கமானது 1903ம் ஆண்டு பிஷப் அசரியா என்பவரால் தொடங்கப்பட்ட  இந்திய பணத்தைக் கொண்டு இந்திய நிர்வாகத்தின் மூலம் இந்திய மக்களை சந்தித்து  சுவிசேஷம் அறிவிக்கக் கூடிய ஒரு மிஷனரி இயக்கமாகும்.  இந்த இயக்கத்தின் மூலம் இந்தியாவில் உள்ள 27 மாநிலங்களில், 284 மாவட்டங்களில், 56 ஆயிரத்து 650 கிராமங்களில் 1163 ஆராதனை குழு ஏற்படுத்தி, 463 ஆலயங்கள் மூலம் 31எழை எளிய மக்களுக்கான விடுதிகள், இரண்டு மருத்துவமனைகள் மற்றும் 77 தையல் பயிற்சி பள்ளிகள், 7  கணினி பயிற்சி பள்ளிகள், 7  கல்விச்சாலைகள் அறியாமையினால் மூடநம்பிக்கையில் வாழும் மக்களை அறிவாற்றல் உள்ள மக்களாக மாற்றும் பணி என பல்வேறு சமூகப் பணிகள் இந்த  மிஷினரி ஊழியம் மூலம்  நடைபெற்று வருகிறது.      இந்த மிஷினரி ஊழியத்தில் 2500 க்கும் மேற்பட்டோர் இந்தியா முழுவதும் பணியாற்றி வருகின்றனர்   இவர்களுடைய தேவைகளை சந்திக்கும் வண்ணமாகவும் புதிய ஆலயங்கள், புதிய கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் கட்டுவதற்கு தேவையான நிதி ஆதார...

தூத்துக்குடி உப்பாத்து ஓடையில் தூர்வாரும் பணியை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், கயத்தாறு, கடம்பூர் வழியாக வரும் காட்டாற்று வௌ்ளம், உப்பாத்து ஓடை வழியாக தான் கடலுக்கு செல்லும், கடந்த கால வௌ்ளத்தில் இந்த பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. மழைக்கு முன்பாக, அரசு சார்பில் ஓரு புறம் உப்பாத்து ஓடை தூா்வாறும் பணி நடந்தாலும், உப்பள அதிபர்கள், அமைச்சர் சொந்த நிதி உள்ளிட்டவை மூலம் 2 கிட்டாச்சி வாகனம் மூலம், தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது.  இந்த பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்து கூறுகையில் மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெரு மழையினால் மிகப்பொிய சேதம் ஏற்பட்டது. காட்டாற்று வௌ்ள உபாி நீா், உப்பாத்து ஓடை வழியாகத் தான் கடலுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இந்த ஓடையில் 3 இடங்களில் வௌ்ளத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதில் ஓரு இடத்தில் அவை சாி செய்யப்பட்டது. இரண்டு இடத்தில் சீர் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. திருச்செந்தூர் ரோட்டில் உப்பாத்து ஓடையில் துவங்கி உபாி நீர் கடலுக்கு செல்லும் வரை ஓடை 6 கி.மீட்டர் தூரத்திற்கு தனியார் பங்களிப்புடன் ...

வெள்ளானூர் அரசு பள்ளியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானூர் ஊராட்சி ஆரிக்கம்மேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை விழிப்பு உணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி ஸ்மார்ட் கிளாஸ் துவக்க விழா, சீனிவாச நகரில் புதிய டிரான்ஸ்பார்மர் துவக்க விழாவும் வெள்ளானூர் ஊராட்சி மன்றத் தலைவரும் மாவட்ட பிரதிநிதியுமான வெள்ளானூர் அ.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் மோரை மு.தயாளன் முன்னிலை வகித்தார். அரசு மேல்நிலைப்பள்ளி முதல்வர் பசுபதி, ஜெயராம் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளிடையே போதை விழிப்பு உணர்வு உறுதிமொழி வாசகங்களை வாசிக்க மாணவ-மாணவிகள், பள்ளி ஆசிரிய - ஆசிரியைகள் உறுதிமொழி ஏற்றனர். வெள்ளானூர் ஊராட்சி சீனிவாச நகரில் புதிய டிரான்ஸ்பார்மரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் துவக்கி வைத்தார். மின்வாரிய செயற்பொறியாளர் சௌந்தரராஜன், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் சன், உதவி பொறிய...

புழல் கதிர்வேட்டில் புதிய மின்மாற்றியை திறந்து வைத்தார் மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம்

புழல்  கதிர்வேடு புதிய மின்மாற்றி துவக்க விழா மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமையேற்று துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். 31வது வட்டச் செயலாளர் அன்பின் மகேஷ் அனைவரையும் வரவேற்றார். மாதவரம் மண்டல குழு தலைவர் எஸ்.நந்தகோபால், பெருநகர சென்னை மாநகராட்சி 31வது வார்டு மாமன்ற உறுப்பினர் சங்கீதா பாபு, மின்வாரிய செயற்பொறியாளர் சௌந்தரராஜன், உதவி செயற்பொறியாளர் பாலச்சந்திரன், உதவி பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 30வது வட்டச் செயலாளர் டி.சுந்தரம், 31வது அ வட்ட நிர்வாகிகள் நாகராஜ், சூசைமுத்து, ரமேஷ்,  குணபூசணம், மனோகரன், பால கணேசன், காங்கிரஸ் புழல் வட்டாரத் தலைவர் சந்திரசேகர், இளைஞர் அணி உதயா, ஜனா, பிஎஸ்என். தயாளன்,  மாவட்ட பிரதிநிதி ஆனந்தராஜ் மகளிர் அணி லீலாவதி, மனோன்மணி, சகிலா,  உள்ளிட்டோர் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். செய்தியாளர் ரஞ்சித் 

நாட்றம்பள்ளி அருகே சுடுகாட்டுக்கு வழி வேண்டி சாலை மறியல்

நாட்றம்பள்ளி அருகே குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சுடுகாட்டுக்கு வழி வேண்டும் என  பதாகைகள் ஏந்தி சாலை மறியல் போராட்டம்.  போடாத சாலைக்கு பில் போட்டு பணம் எடுத்துள்ளதாக  குற்றச்சாட்டு, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளனூர் பகுதியில் சுமார் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஊருக்கு செல்ல சாலை வசதி இல்லை  எனவும் சுடுகாட்டிற்கு செல்ல வழி இல்லை மேலும் இங்கு உயிர் காக்க அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் கூட வருவதில்லை எனக்கூறி சாலை வசதி வேண்டுமென  பலமுறை கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது.  இதுகுறித்து  துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்கும் பொழுது ஆல்ரெடி இப்பகுதிக்கு சாலை போட்டு விட்டதாகவும் அதுக்கு பணம் எடுக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்களும், பள்ளி குழந்தைகளும்  சாலை வசதி வேண்டுமென்று பதாகைகள் ஏந்தி  ஜங்களாபுரம் வழியாக நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் மற்றும் ஜங்களாபுரம் ஊராட்சி மன்...

தஞ்சையில் தி.மு.க. சார்பில், கலைஞர், கருணாநியின்,6-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.!

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு தினம்,(7.8.2024) இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மத்திய மாவட்டம் மற்றும் மாநகரம்‌ மற்றும் ஒன்றியம், பேரூர் தி.மு.க. சார்பில், மத்திய மாவட்ட செயலாளரும்,சட்டமன்ற உறுப்பினருமான, துரை.சந்திரசேகரன்  தலைமையில்,தஞ்சை ரயிலடியிலிருந்து ஏராளமான தி.மு.க.வினர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு, கலைஞர் அறிவாலயத்திற்கு வந்தனர். அதன் பின்னர் கருணாநிதியின் உருவ சிலைக்கு, துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள்: டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, செல்வம்,  தஞ்சை மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான, சண். இராமநாதன், மாநில மருத்துவ அணி துணை. செயலாளரும், தஞ்சை மாநகராட்சிதுணை மேயருமான,டாக்டர். திருமதி.அஞ்சுகம் பூபதி, மாவட்ட அவை தலைவர் இறைவன், மாவட்டத் துணைச் செயலாளர்கள்: புண்ணியமூர்த்தி , மணிமாறன், கனகவள்ளி,மாவட்ட பொருளாளர் அண்ணா,  ஒன்றிய செயலாளர்கள்: அருளானந்தசாமி, செல்வகுமார்,பகுதி செயலாளர்கள்: சதாசிவம்,  நீலகண்டன், மத்திய மாவட்ட இளை...

மக்களுடன் முதல்வர் திட்டம் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் தஞ்சாவூரில் தொடங்கி வைத்தார்.!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை ஊராட்சி ஒன்றியம் இராமாபுரம் ஊராட்சியில், ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை திருவையாறு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், துரை. சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். தமிழக முழுவதும் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் தற்போது தொடங்கப்பட்டு, நடைமுறையில் இருந்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை ஊராட்சி ஒன்றியம், இராமாபுரம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற வளாக எதிர்புறம்  இத்திட்டம் இன்று காலை தொடங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு திருவையாறு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், துரை. சந்திரசேகரன் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள வழங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் வை.ஜெயந்தி மாலாகேசவன், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் அருளானந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இராமாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் அன்பு சித்ரா பிரபாகரன் வரவேற்றார். இராமாபுரம் ஊராட்சிக்குட்பட்ட நரசநாயகபுரம், திருவேதிகுடி, நாகத்தி, ராஜேந்திரன் உமையவள் ஆற்காடு ஆகிய பகுதிகளில் இருந்து ...

சோழ தேச ஓய்வு பெற்ற படை வீரர்களால் உருவாக்கப்பட்ட பூங்காவினை பராமரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்.!

சோழ தேச ஓய்வு பெற்ற  படைவீரர்கள் சங்கம் சார்பில், தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை, பைபாஸில் குப்பை கூலங்களாக இருந்த இடத்தினை சுத்தம் செய்து,    சாலை இரு புறங்களிலும், சுமார் ரூ.2.5-லட்சம் மதிப்பிலான, சந்திராயன்3- பூங்கா, வீரத்தாய் பூங்கா, இதனை சோழ தேச ஓய்வுப்பெற்ற படை வீரர்களால்  உருவாக்கப்பட்டது தான் இந்த அழகுமிக்க பூங்கா.   இந்தப் பூங்காவினை  தஞ்சை மாநகராட்சி மேயர், சண். இராமநாதன் பொன் கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.  இந்தப் பூங்காவினை சோழ தேச ஓய்வு பெற்ற  படை வீரர்கள் சங்கம் சார்பாக, வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒரு லாரி தண்ணீர் விலைக்கு வாங்கி, இந்தப் பூங்காவினை பசுமையோடு பாதுகாத்தும், பராமரித்தும் வந்துள்ளார்கள். ஆனால் இரண்டு நாட்களுக்குள் பசுமையோடு காணப்படும் பூங்கா  காய்ந்து விடுகிறது எனவும் அறியப்பட்டோம். நாளடைவில் இந்தப் பூங்காவினை இவர்களால் முழுமையாக  பராமரிக்க முடியாத நிலையில், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி தலைவரை நேரில் பார்த்து இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளார்கள், இதனைக் கேட்ட  ஊராட்சி மன்ற தலைவர், நாங்கள் இதனை எவ்வாறு பர...

முன் விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் பிரபல ரவுடிகள் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு

முன் விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் பிரபல ரவுடிகள் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு அம்பத்தூர் அடுத்தபாடி,  புது குப்பம் பகுதியை சேர்ந்தவர் அழகுமுருகன்(25), ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கடந்த 2019 ம் ஆண்டு தனது நண்பருடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது வழிமறித்த மோகன் தரப்பினர் ஆயுத பூஜைக்கு பணம் கேட்டபோது பணம் தர மறுத்ததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அழகு முருகனை மோகன், டேனியல் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததில் அழகு முருகன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இந்த சம்பவத்தில் பிரபல ரவுடிகளான மோகன்(25), டேனியல்(23), மற்றும் 17 வயது சிறுவர்கள் மூன்று பேர் என மொத்தம் 5 பேரை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3 ல் நடந்து வந்தது. நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட மோகன், டேனியல் ஆகிய இரண்டு பேரு...

உலக பிரசித்திப் பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் அமைச்சர் கீதாஜீவன் பிரார்த்தனை

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) பனிமய மாதாவின் பெருவிழா கொண்டாடப்படுகிறது.  தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய 442-வது ஆண்டு பெருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை பல்வேறு பங்கு மக்கள் சார்பில் திருயாத்திரை திருப்பலிகள், இளையோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், வணிகர்கள், பொது நிலையினர், துறவியர், நோயாளர்கள் என பல்வேறு தரப்பு மக்களுக்கான சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. மாலையில் செபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. 3-ம் திருவிழாவான கடந்த மாதம் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் மாபெரும் நற்கருணை பவனி நடந்தது. 10-ம் நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து பல்வேறு திருப்பலிகள் நடந்தன. இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. பின்னர் இரவு 9 மணிக்கு மேல் ஆலய வளாகத்தில் மட்டும் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) பனிமய அன்னையின் பெரு...

செங்குன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா ரொட்டி, பால், முட்டை

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ஆணைக்கிணங்க அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் வழிகாட்டுதல்படி சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் அம்பத்தூர் ஜி.பாலமுருகன் தலைமையில் பள்ளி பயிலும் மாணவ - மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் மாதவரம் தொகுதி செங்குன்றம் நகரம் சார்பில் விலையில்லா ரொட்டி, பால், முட்டை வழங்கும் திட்டம் கடந்த மூன்று வாரங்களாக வழங்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக விலையில்லா ரொட்டி, பால், முட்டை, பழம்  வழங்கும் நிகழ்ச்சி 4வது வாரமாக செங்குன்றம் தமிழக வெற்றிக் கழகம் நகர தலைவர் விஜி தொடங்கி வைத்தார்.  இதில் தமிழக வெற்றிக்கழக செங்குன்றம் நகர நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர் ரஞ்சித் 

மாதவரம் தணிகாசலம் நகர் மழைநீர் கால்வாய் புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

நீர்வள ஆதாரத் துறை சார்பில் அயனாவரம் மற்றும் மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ள தணிகாசலம் நகரில் 91 கோடியே 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில உபரிநீர் கால்வாயினை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தணிகாசலம் கால்வாய் மொத்தம் 3050 மீட்டர் நீளம் கொண்டது. கடந்த பருவமழையின்போது தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாய் அமைந்துள்ள பகுதிகளில் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, முதலமைச்சர் 9.11.2021 அன்று வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டு, வெள்ளப் பாதிப்புகளை தவிர்க்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து, பருவமழைக் காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க 91.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாயினை திறந்தவெளி கால்வாய் மற்றும் மூடிய வடிவிலான கால்வாயாக மேம்படுத்தும் பணியினை முதலமைச்சர் 30.08.2023 அன்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் தணிகாசலம் நகர் கால்வாயினை அகலப்படுத்தி கூடுதலாக உபரிநீர் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டு திறந்தவெளி கால்வாயாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின்போது இந்து சம...

பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் 30ஆம் ஆண்டு ஆடித் திருவிழா முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, மற்றும் பா. பெஞ்சமின் பங்கேற்பு.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் மிகவும் பழமையான, ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் உள்ளது. இங்கு 30-ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.  இதை தொடர்ந்து அம்மன், சாமுண்டீஸ்வரி, துர்க்கை, மகாலட்சுமி, கருமாரி, சரஸ்வதி, கம்பாநதி, கர்ப்பிணி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 9ம் நாள் விழா திருவள்ளூர் மத்திய மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவரும் முன்னாள் நகர மன்ற தலைவரும் கோயில் தர்மகத்தாவுமான பூவை எம்.ஞானம் மற்றும் கழக மருத்துவர் அணி நிர்வாகி ஞா.பிரேம்குமார் ஆகியோர் ஏற்பாட்டில் மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா பூவை எம். ஞானம், நிர்மலா ஞானம், முன்னால் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் மற்றும் குடும்பத்தினர், விழா குழுவினர், உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இதில்  ...

வடபெரும்பாக்கம் சென்னை மாநகராட்சி பள்ளியில் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

வடபெரும்பாக்கம் சென்னை மாநகராட்சி பள்ளியில் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த அருந்ததியருக்கான 3% சதவீத இட ஒதுக்கிட்டிற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியதை வரவேற்கும் விதமாக, மாதவரம் சட்டமன்றத் தொகுதி, 17வது வட்டம் வடபெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள, சென்னை மாநகராட்சி துவக்கப்பள்ளியில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்தமிழ் அறிஞர் ஐயா கலைஞரின் திருவுருவப்படத்திற்கு, மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் எம் நாராயணன் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பென்சில் பேனா ஜாமென்ட்ரி பாக்ஸ் மற்றும் லட்டு ஆகியவற்றை,  மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் எம். நாராயணன், வட்டச் செயலாளர் கே. கருணாகரன் வட்டக் கழக நிர்வாகிகள் சி பாலாஜி...

காரனோடை அருகே ஆத்தூர் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

காரனோடை அருகே ஆத்தூர் ஊராட்சியில்  சிறப்பு மருத்துவ முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சோழவரம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவரும் சோழவரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளருமான மீ. வே. கர்ணாகரன் தலைமையில் நடைபெற்றது. ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சற்குணம், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜி.ஆர். பத்மநாபன், ஆத்தூர் ஊராட்சி கழக திமுக செயலாளர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் தீபா நாகராஜ், சுகவேணி முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளருமான மாதவரம் எஸ். எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு முகாமை துவக்கி  வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்புப் பெட்டகமும், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும் வழங்கினார். இதில் பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனை மருத்துவர் ஜெயதீபா, சோழவரம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் அ.காசிம் முகம்மது, துணைச் செயலாளர் கி.வீரம்மாள், மாவட்ட பிரதி...

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கிய கனிமொழி கருணாநிதி

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கிய கனிமொழி கருணாநிதி ஆர்.இ.சி.லிமிடெட் மற்றும் ALIMCO (இந்திய காப்புக் கை கால் உற்பத்தி கழகம்) இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் சிறப்பு முகாம் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. முகாமில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, ரூபாய் 35,77,717 மதிப்பீட்டில் 186 மாற்றுத்திறனாளிகளுக்கு 385 உதவி உபகரணங்கள் (ஜாய்ஸ்டிக் மூலம் இயக்கப்படும் சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர சைக்கிள்கள், சக்கர நாற்காலிகள், மடக்கக்கூடிய சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல், பிளாஸ்டிக் காலிபர்ஸ்) உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி: ஒன்றிய அரசு எந்தப் பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்கத் தயாராக இல்லை; அவர்களே தேசிய பேரிடராக தான் இருக்கின்றனர் என்று கூறினார். இந்த நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்ட...

செங்குன்றம் அருகே தமிழ்நாடு டைய்ஸ், கெமிக்கல்ஸ் மெர்ச்சண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் கலந்தாலோசனைக் கூட்டம்

செங்குன்றம் அருகே தமிழ்நாடு டைய்ஸ், கெமிக்கல்ஸ் மெர்ச்சண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் கலந்தாலோசனைக் கூட்டம்  அண்மையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த நிலையில் ரசாயன கிடங்கில் இருந்து சட்டவிரோதமாக மெத்தனால் பெறப்பட்டு கள்ளச்சாராயம் தயாரித்தது தெரிய வந்தது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கிடங்குகளில் ரசாயன மூல பொருட்கள் விற்பனையை ஒழுங்குப்படுத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.  இதன் ஒரு பகுதியாக சென்னை செங்குன்றம் அடுத்த கிராண்ட்லைன் ஸ்ரீ வி.என். சர்மா கன்வென்ஷன் சென்டரில் தமிழ்நாடு டைய்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் மெர்ச்சண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் கலந்தாலோசனைக் கூட்டம் சங்கத் தலைவர் மகாவீர் போரா தலைமையில் ஆவடி மாநகர காவல் ஆணையர் கே.சங்கர் கலந்தாலோசனை நடத்தினார். செயலாளர் கே.நரேஷ், பொருளாளர் கிரண் சந்த், பிளாட் ஓனர்ஸ் அசோசியேஷன் தலைவர் அசோக் ராட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது பேசிய கிடங்கு உரிமையாளர்கள் காவல்துறையை அணுகுவதில் சற்று கடினமாக உள்ளதாகவும், காவல்துறை மக்களின் நண்பன் என்பது போல எளிமைப்படுத்திட வேண்டும் என்றனர். மேலும் ப...

அருந்ததியர்களுக்கு மூன்று சதவீதம் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பால், ஆதித்தமிழர் பேரவையினர் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம் .!

அருந்ததியர்களுக்கு  முன்னாள் முதல்வர்,  முத்தமிழ் அறிஞர்  டாக்டர். கலைஞர் அவர்களாலஅருந்ததியர்களுக்கு  வழங்கப்பட்ட. மூன்று சதவீத உள் ஒதுக்கீடு  செல்லும் என  உச்ச நீதிமன்றத்தால்  வழங்கப்பட்ட தீர்ப்பையொட்டி   1.8.24. அன்று மாலை 6:00 மணியளவில்  தஞ்சை ரயிலடியில்,  ஆதித்தமிழர் பேரவையினர்   பட்டாசுகள் வெடித்தும்,  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.   இந்நிகழ்வில்   மாநில  கலை இலக்கிய அணி துணைச். செயலாளர்,எம்.பி. நாத்திகன்,   ஆதித்தமிழர் பேரவையின் தஞ்சை மாவட்ட தலைவர்,பி. தானி வேல்,  ஆதித்தமிழர் பேரவையின் தஞ்சை மாவட்ட செயலாளர், பி.தியாகராஜன்,   ஆதித்தமிழர் பேரவையின்  தஞ்சை மாவட்ட பொருளாளர்  வள்ளிமுத்து,  ஆதித்தமிழர் பேரவையின்  தஞ்சை மாவட்ட துணைத் தலைவர், கே.ஆர்.பி.  மணி,  ஆதித்தமிழர் பேரவையின் முன்னாள் மாவட்ட செயலாளர், இரா. மாயன்,  நீலகிரி வட்டார காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்  செல்வ சுப்ரமணி, திமுக கரந்தை பகுதி பொறுப்பாளர,...

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றார்.!

தூத்துக்குடி சேலத்தில் நடைபெற்ற 2024-25ம் ஆண்டிற்கான மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டியைச் சேர்ந்த மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ் தனது குழுவினருடன் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கோவில்பட்டியைச் சேர்ந்த பயிற்சியாளர்  மங்கள்ராஜ் மற்றும் கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர். செய்தியாளர் ஆ. ரவி 

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் டூவிபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் ரேஷன் அாிசியின் தரம் எப்படி இருக்கிறது. என்பதை ஆய்வு செய்த அமைச்சர் புதியதாக தற்போது கூட்டுறவுத்துறை மூலம் நேரடியாக வழங்கப்படும் கோதுமை மாவு எப்படி இருக்கிறது என்று கேட்டறிந்தார். பின்னர் சேமியா உள்பட பொருட்களை எடுத்து ஆய்வு செய்தார். துவரம்பருப்பு பாமாயில் போன்ற பொருட்கள் மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார். பாமாயில் துவரம்பருப்பு முழுமையாக வழங்கப்பட்டு வருவதாக ஊழியர் கூறினாா்.மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் அதிஷ்டமணி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர் ரவீந்திரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார் மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர். செய்தியாளர் ஆ. ரவி  

மாதவரம் வட பெரும்பாக்கம் பகுதியில் ரேஷன் கடை திறப்பு விழா.!

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, 17வது வட்டம், வட பெரும்பாக்கம் பகுதியில் முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட பகுதி நேர ரேஷன் கடையை முழு நேர ரேஷன் கடையாக மாற்றி தமிழக அரசு ஆணை வழங்கியதையடுத்து ரேஷன் கடை திறப்பு விழா வடபெரும்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு உணவு பொருட்களை  வழங்கினார்.மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் எம்.நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர் கே.கருணாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  செய்தியாளர் ரஞ்சித்

நீலகிரி, குன்னூர் கரன்சி பகுதியை சார்ந்தவர்கள் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழப்பு.!

குடும்பத்தினருக்கு மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் மற்றும் நிர்வாகிகள் நேரில் ஆறுதல். 30.7.2024 வயநாடு மாவட்டம், மேப்பாடி சூரல்மலை பகுதியில்  ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, குன்னூர் கரன்சி ஐயப்பன் காலனியை சார்ந்த ரவிச்சந்திரன் அவர்களின் மகள் மருமகன் பேரப்பிள்ளை ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இவர்களது உடல்கள் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டு, உறவினர்கள் குன்னூர் கரன்சி பகுதிக்கு வருகை தந்தனர்.தகவல் அறிந்தவுடன், நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் கழக நிர்வாகிகளுடன் இவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று நீலகிரி மாவட்ட திமுக சார்பில் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார். உடன் குன்னூர் நகர கழக செயலாளர் எம்.இராமசாமி, குன்னூர் ஒன்றிய கழக செயலாளர் பிரேம்குமார், மாநில சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் இரா.அன்வர்கான், மாநில  விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் பா.மு.வாசிம் ராஜா,பொதுக்குழு உறுப்பினர் எம்.சதக்கத்துல்லா, மாவட்ட தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் மகாலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர் மகாலிங்கம், ஒன்றிய ...