Skip to main content

Posts

Showing posts from October, 2022

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது..

 திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-ம் திருநாளான நேற்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக பாலசுப்ரமணியருக்கு சிறப்பு ஆராதனை நடந்தேறியது. மாலை 5 மணியளவில்  முருகப்பெருமான் வீரபாகுவுடன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றது.  இதில் முதலாக, யானை முகம் கொண்ட தாரகாசுரனை முருகப்பெருமான் வதம் செய்தார். இதையடுத்து சிங்கமுகம் கொண்ட சூரபத்மனை வேலால் வதம் செய்தார். பின்னர் தன் முகம் கொண்ட சூரபத்மனை வதம் செய்தார். தொடர்ந்து மாமரமாகவும், சேவலாகவும் வந்த  சூரபத்மனை வதம் செய்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி முருகப்பெருமான் தன் வாகனமாக ஆட்கொண்டார். இந்த  சூரசம்ஹார விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் சித்ராதேவி, நிர்வாக அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் சந்துரு, மு.ஒன்றிய கவுன்சிலர் பகலவன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர்: சந்திரசேகர் 

கொடைக்கானலில் மரங்கொத்தி பறவை இனங்களை காப்பாற்ற வலியுறுத்தல்..!

கொடைக்கானலில் அரிய வகை தாவரங்கள், மூலிகை செடிகள், பறவை இனங்களும் உள்ளன. குறிப்பாக மரங்கொத்தி பறவை அதிக அளவில் காணப்பட்டது. காகம் போல் திரும்பிய திசையெல்லாம் இருந்த பறவைகள் எண்ணிக்கை பல மடங்கு குறைந்து விட்டதால் இயற்கை ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியின் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே உள்ளது. இங்கு மான், யானை, சிறுத்தை, காட்டெருமை, முயல் உள்ளிட்ட பல்வேறு வகை விலங்கினங்கள் உள்ளன. மேலும் அரிய வகை தாவரங்கள், மூலிைக செடிகள், பறவை இனங்களும் உள்ளன.  குறிப்பாக கொடைக்கானலில் மரங்கொத்தி பறவை அதிக அளவில் காணப்பட்டது. இங்கு நிலவும் இதமான சீதோஷ்ணம் மற்றும் அடர்ந்த வனப்பகுதி ஆகியவை பறவை மற்றும் விலங்கினங்களுக்கு சாதகமாக இருந்து வந்தது. ஆனால் வனப்பகுதியை ஒட்டி ஆக்கிரமிப்பு மற்றும் குடியிருப்புகள் அமைந்ததால் விலங்கினம் ஊருக்குள் வரத் தொடங்கியது. இதே போல பறவை இனங்களும் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்று விட்டது.  கொடைக்கானலில் அபூர்வமாக தென்பட்ட மரங்கொத்தி பறவைகள் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. காகம் போல் திரும்பிய திசையெல்லாம் இருந்த பறவைகள் எண்ணிக்கை பல மடங்கு கு...

திண்டுக்கல் அருகே செல்போன் டவரில் ஏறி ரகளை செய்த வாலிபர்..!

திண்டுக்கல் நாகல்நகரில் சிறுமலை செட் பகுதியில் நேற்று மாலையில் கையில் பையுடன் வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். பின்னர் இரவு 7 மணிக்கு மேல் அப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைந்துள்ள இடத்துக்கு சென்ற அந்த வாலிபர், தான் வைத்திருந்த பையை கீழே வைத்தார். பின்னர் அதில் இருந்த 2 தேசியக்கொடிகள், அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் கொடிகள், பட்டாசுகள் மற்றும் கோரிக்கை எழுதப்பட்ட மனு ஆகியவற்றை வெளியே எடுத்தார்.  பின்னர் கோரிக்கை மனுவை செல்போன் கோபுரத்தின் அருகில் வைத்துவிட்டு கொடிகள், பட்டாசுகளுடன் செல்போன் கோபுரத்தில் ஏற தொடங்கினார். இதற்குள் அப்பகுதியில் இருள் சூழ்ந்ததால் செல்போன் கோபுரத்தின் மேல் வாலிபர் ஏறுவதை யாரும் கவனிக்கவில்லை. இதற்கிடையே செல்போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்ற அந்த வாலிபர் தேசிய கொடிகள், அரசியல் கட்சி கொடிகளை அப்பகுதியில் கட்டி வைத்துவிட்டு பட்டாசுகளை அங்கிருந்தபடியே வெடிக்க தொடங்கினார்.  இதை எடுத்து இரவு 8 மணிக்கு அவரை கீழே இறக்கி போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். அவர் பெயர் மூக்கையா என்றும், போதையில் இது மாதிரி செய்வதும் விசாரணையில் தெரிய வந்தது. போலீச...

ஒட்டன்சத்திரத்தில் நிதி நிறுவனத்தில் ரூ.59 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது..!

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே சாமியார்புதூரை சேர்ந்தவர் செல்வபிரகாஷ்(29). இவர் ஒட்டன்சத்திரத்தில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திருமண வேலைகளில் பிசியாக இருந்ததால் கணக்கு வழக்குகளை நிதிநிறுவன ஊழியர்களிடம் ஒப்படைத்திருந்தார். திருமணம் முடிந்து மீண்டும் நிதிநிறுவனத்திற்கு வந்த செல்வபிரகாஷ் வசூல் பணம் குறித்து கேட்டார். அப்போது ஊழியர்கள் அந்த பணத்தை மற்றவர்களுக்கு பைனான்ஸ் கொடுத்துள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் பேச்சில் நம்பிக்கை ஏற்படாததால் ஜெயபிரகாஷ் விசாரித்தார். அதில் பணம் யாருக்கும் கொடுக்காமல் ரூ.59 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. எனவே, இவர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மேலாளர் ஜெயபிரகாஷ்(23), ரகுராமன்(21) ஆகிய இருவரும் நிதி நிறுவனத்தில் ரூ.59 லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆய்வாளர் வினோதா தலைமையில் சார்பு ஆய்வாளர் ராஜகோபால் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை செய்து, வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக ஜெ...

ராணிப்பேட்டையில் குடும்ப பிரச்சினை காரணமாக இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!

 ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த சென்னசமுத்திரம் கிராமம், டோல்கேட் தெருவை சேர்ந்த பிச்சைமணி என்பவரின் மகன் கார்த்திக் (வயது 22).  தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் அமிர்தவல்லிக்கும் கடந்த 2020 ஆண்டு திருமணம் நடைபெற்றது.   இந்த நிலையில் இருவருக்கும் சிறு சிறு குடும்ப பிரச்சனை காரணமாக கார்த்திக் அமிர்தவல்லியிடம் அடிக்கடி சண்டையிட்ட வந்த நிலையில், அவரது மனைவி அம்மா வீட்டிற்கு கிளம்பி உள்ளார். இதனை அடுத்து கார்த்திக் நேற்று முழுவதும் அதிக மதுபோதையில், குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர், வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  மேலும் இச்சம்பவம் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி  வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செய்தியாளர்: சுரேஷ்குமார் 

தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் பத்திரிகையாளர்களின் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் பத்திரிகையாளர்களின் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம்.. பத்திரிகையாளர்களின் சட்ட பாதுகாப்பு, உரிமை, அங்கீகாரம், இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வென்றெடுக்க தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் தலைவர் சிவகுமார், பொதுச்செயலாளர் கதிர்வேல், துணைத்தலைவர் பெஞ்சமின் ஆகியோர் தலைமையில் 28.10.2022 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பாஜகவின் சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளர்.கரு.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு  ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து  சிறப்புரையாற்றினர். பாஜகவின் ஊடக பிரிவு மாநில தலைவர் ரங்கநாயகுலு, அகில இந்திய மீனவர் சங்க அண்ணா& எம்.ஜி.ஆர் திராவிட மக்கள் கழக நிறுவனர் தலைவர் முத்துராமன் சிங்கபெருமாள், புரட்சி தமிழகம் கட்சியின் நிறுவனர் & தலைவர் ஏர்போர்ட் த.மூர்த்தி, பாஜகவின் சென்னை பெருங்கோட்ட ஊடக பிரிவு பொறுப்பாளர் டி.பி.எஸ்.செந்தில்குமார் , ஆல் இந்தியா பிரஸ் மீடியா அசோசியேஷன் தலைவர்  டாக்டர் ஆ.வேல்முருகன், நான்காம் தூண் பாதுகாப்பு சங்கம் தலைவர் ஏ.ராபர்ட்ர...

வீட்டிற்கு முன்பாக பழைய இரும்பு வியாபாரி கொடூரமாக வெட்டிக்கொலை..திண்டுக்கல் அருகே பகீர் சம்பவம்!

 திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த வீரக்கல் அருகே தெற்கு மேட்டுப்பட்டி சேர்ந்தவர் தண்ணி வண்டி (என்ற) சின்னத்துரை (60) இவருக்கு கலையரசி (56) என்ற மனைவியும், கனகராஜ் (36) என்ற மகனும், நாகஜோதி (34) என்ற மகளும் உள்ளனர். பழைய இரும்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை கிராமம் கிராமமாக சென்று வியாபாரம் செய்து வரும், சின்னத்துரை தெற்கு  மேட்டுப்பட்டியில் தனது மனைவி கலையரசியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை தெற்கு மேட்டுப்பட்டியில் இரண்டு பேர் சின்னத்துரையிடம் தகராறில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.  பின்னர், இரவு சுமார் 7 மணி அளவில், சின்னத்துரை வீட்டிற்கு சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சின்னத்துரை வீட்டு அருகே அவரை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் கழுத்து, தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு, சின்னத்துரை சம்பவ இடத்திலே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பத்தின் போது அவரை தடுக்க சென்று அவரது மனைவி கலையரசியை தாக்க முயன்றனர். அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து, தகவ...

எஸ். ஆர். எம்மில் தேசிய அளவிலான தொழில்நுட்ப மேலாண்மை விழா...

 செங்கல்பட்டு மாவட்டம்  காட்டாங்குளத்தூரில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில், தேசிய அளவிலான தொழில்நுட்ப மேலாண்மை விழாவான ‘ஆரூஷ்’ 16வது பதிப்பின் தொடக்க விழாவில், ஹோமிபாபா நேஷனல் இன்ஸ்ட்டியூட் நிறுவனர் டாக்டர் அனில் ககோட்கர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். இந்த டெக்னோ மேனேஜ்மென்ட் ஃபெஸ்ட் , இன்று முதல் தொடங்கி இந்த மாதம் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நான்கு நாள் விழாவில் நாடு முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் புகழ்பெற்ற நபர்களின் உரை, பயிற்சிபட்டறைகள், தொழில் முனைவோர் உச்சிமாநாடு, தொழில்துறை மாநாடு, மற்றும் கண்காட்சிகள் நடைபெறும். உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டாண்ட்ஃ போர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் நிறைய புதிய படைப்புகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இந்தியாவிலும் அதேபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். நமது நாடு சிறந்த நிறுவனங்களின் தாயகமாகும், அவர்களில் சிறிய சதவீதத்தினர் இதுபோன்ற செயல்களை மேற்கொண்டாலும், நாம் நிறைய அதிசயங்களை சாதிக்க முடியும் என கூறினார்.  புதுமை மற்றும் தொழில் முனைவோரை ஊக்...

திருவள்ளூரில் பொன்னேரி தேவத்தம்மன் கோவிலில் நாக சதுர்த்தி விழா..

 திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தேவத்தம்மன் நகரில் பழமைவாய்ந்த அருள்மிகு தேவத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நாக சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு அம்மனுக்காக விரதமிருந்து மஞ்சளாடை அணிந்து வந்த பெண்கள் கோவிலின் பின்புறம் சுயம்புவாக அமைந்த புற்றுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி பால் மற்றும் முட்டை ஊற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.  இதனை தொடர்ந்து மலரலாங்கரத்தில் ஊஞ்சலில் வீற்றிருந்த தேவத்தம்மன்  தாயாருக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் பூசாரி காஞ்சனா மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.  செய்தியாளர்: சந்திரசேகர் 

திண்டுக்கல்லில் கோர விபத்து..! இரண்டு பேர் பலி..! இரண்டு பேர் பலத்த காயம்..!

 வேடசந்தூர்  அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் வீரமணி (வயது 31) பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் தற்பொழுது வேடசந்தூர் தங்க ராஜா தியேட்டர் பின்புறமாக உள்ள எஸ் எஸ் தேவி நகரில் குடியிருந்து வரும் நிலையில், தனது மகள் இரண்டு வயது கிருஷ்காவிற்கு உடல் நலக் குறைவு காரணமாக திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு, தனது காரில் தனது பெரியம்மா ராஜேஸ்வரி (வயது 52), மனைவி பிரியங்கா (26), மூத்த மகள் கிருஷ்கா (2), நான்கு மாத கைக்குழந்தை சாதனாதேவி ஆகியோருடன் சென்று விட்டு, மீண்டும் வேடசந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது பிரபுமில் முன்பாக திடீரென பன்றி குறுக்கே புகுந்ததால், பன்றியின் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபொழுது பாலத்தின் தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில், வீரமணியின் பெரியம்மா ராஜேஸ்வரியும், நான்கு மாத கைக்குழந்தையான சாதனாதேவியும் பரிதாபமாக பலியானார்கள்.  வீரமணியின் மனைவி பிரியங்காவிற்கு கால் எலும்பு முறிந்தது. வீரமணி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். இரண்டு வயது குழந்தை கிருஷ்கா காயம் இன்றி தப்பினார். விபத்து நடந்த இடத்தில் இருந...

பழனி அருகே ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயன்ற கொள்ளையர்கள்..!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே அழகாபுரியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்றிரவு இங்கு புகுந்த மர்மநபர்கள் தரைப்பகுதியை சேதப்படுத்தி எந்திரத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். தரையை இடித்து எந்திரத்தை எடுக்க முடியாததால் முயற்சியை கைவிட்டு திருடர்கள் தப்பியுள்ளனர். இதனால் பணம் பறிபோவது தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பழனி போலீசார் அந்தப் பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம் அமைந்துள்ள இடத்தில் கைரேகை மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடையங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளைச்சம்பவங்கள், பெண்களிடம் நகை, செல்போன் பறிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்தியாளர்: அரியநாயகம் 

திண்டுக்கல் அருகே குடி போதையில் சாமி சிலை உடைப்பு..!

 திண்டுக்கல் அவர்லேடி பள்ளி அருகே சிகேசி காலனியில் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கே பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறும். மேலும் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து நேர்த்திக்கடனாக தீச்சட்டி எடுத்து பூக்குழி இறங்குவார்கள். தினமும் பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்துவதையும் வழக்கமாகக் கொண்டு இருப்பார்கள்.  இந்த கோயில் முன்பு தினமும் பொதுமக்களே காவல் காப்பது வழக்கம். இந்நிலையில் சிலையை குடிபோதையில் மர்ம நபர் உடைத்தார். இதுகுறித்து நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி சி டிவி கேமராவை ஆய்வு செய்து நள்ளிரவு நேரத்தில் குடி போதையில் அட்டகாசம் செய்த நபர் குறித்தும் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர்: அரியநாயகம் 

கூடுவாஞ்சேரி அருகே வீடுகளை இடிக்க அதிகாரிகள் வந்ததால்.. ஆதனூர் ஊராட்சியில் பரபரப்பு..!

 செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சியில், ஆதனூர், டிடிசி நகர், கொருக்கந்தாங்கல், லட்சுமிபுரம், பலராமபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரத்தில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் மக்கள் குடியிருக்கும் வீடுகளை இடிக்க கூடாது என்று கூறி ஏற்கனவே கடந்த இரண்டு முறை உண்ணாவிரதம் இருந்தனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், மூன்று தலைமுறைக்கும் மேலாக 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் லட்சுமிபுரத்தில் குடியிருந்து வருகின்றோம். ஆனால் நாங்கள் இருப்பது குடியிருப்பு என்பதை மறைத்து வருவாய்த்துறையினர் கொடுத்த பொய்யான தகவலின் பேரில், அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு தமிழக அரசு இடம் ஒதுக்கி கொடுத்துள்ளது. இதுகுறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இதில் வழக்கு நிலுவையில் உள்ளதை கூட பார்க்காமல் வருவாய்த்துறை அதிகாரிகள் எங்களது வீடுகளை இடிப்பதற்காக பலமுறை தொந்தரவு செய்து வருகின்றனர். இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூற...

பொன்னேரி நகராட்சியில் தொடர் காய்ச்சல்.. டெங்கு பரவலை தடுக்க கோரிக்கை..!

  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் அடங்கிய குண்ணமஞ்சேரி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பெரியவர்கள், சிறுவர்கள் என பத்துக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு சிறுவனுக்கு லேசான டெங்கு அறிகுறி அடையாளம் காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனவே தொடர் காய்ச்சல் ஏற்பட்டுள்ள இந்த பகுதியில் சுகாதார துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  செய்தியாளர்: சந்திரசேகர் 

தமிழ்நாடு பேட்மிட்டன் சேம்பியன்ஷிப் போட்டியில் திண்டுக்கல் மாணவர்கள் சாதனை..!

தமிழ்நாடு பேட்மிட்டன் அசோசியேசன் சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 20ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 11 வயதுக்கு உட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கான தமிழ்நாடு பேட்மிட்டன் சேம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழ்நாடு முழுவதும் 280க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் பெண்களுக்கான போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் பழனி கே.எஸ். பேட்மிட்டன் அகாடமியை சேர்ந்த வீரர்களான ஜெய சப்தா ஸ்ரீ சாம்பியன்ஷிப் பட்டத்தையும், ஆண்களுக்கான போட்டியில் சரண் 3-வது பரிசையும் பெற்றனர்.  சாம்பியன் பட்டம் பெற்ற ஜெயசப்தாஸ்ரீ அடுத்த வாரம் உத்திரபிரதேசம் நொய்டாவில் நடைபெற உள்ள தேசிய பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் நேரடியாக கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார். பரிசை வென்ற ஜெய சப்தாஸ்ரீக்கு மற்றும் சரணுக்கு தமிழ்நாடு பேட்மிட்டன் அசோசியேசன் மாநிலச் செயலாளர் அருணாச்சலம், துணைத் தலைவர் மாறன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். மேலும் மாவட்ட பேட்மிட்டன் செயலாளர் நாராயணன், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பழனி பேட்மிட்டன் அகாடமியின் பயிற்சியாளர் சதீஷ்குமார் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். செ...

தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்...

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். எதிர்பாராத சுற்றுலா பயணிகளின் வருகையால் சிறு குறு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். பல முக்கிய இடங்களில்,  கொடைக்கானலில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இடைவிடாத கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதோடு வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்ததாலும், வழக்கமாக தீபாவளி பொருட்கள் வாங்க கூட மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டதாலும், பெரும்பாலான கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்தது.  நேற்று மழை இல்லாத போதும் இதமான சீதோஷ்ணம் நிலவியது. வார இறுதிநாள் மற்றும் தீபாவளி விடுமுறைக்காக சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் கொடைக்கானலில் வெறிச்சோடி காணப்பட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக பிரையண்ட் பூங்கா, ஏரிச்சாலைப்பகுதிகளில் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். அங்கு சைக்கிள் சவாரி, குதிரை சவாரி, படகு சவாரி செய்து உற்சாகம...

பழனியில் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்..

பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உப கோவிலான பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி லட்சுமிநாராயண பெருமாள், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் லட்சுமி நாராயண பெருமாள், கருடாழ்வார் உலா வந்தனர். முன்னதாக சிறப்பு யாகம் நடைபெற்றது.  இதில் உபயதாரர் கந்தவிலாஸ் அதிபர்கள் செல்வகுமார், பிரேமா செல்வகுமார், நவீன்விஷ்ணு, நரேஷ்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கந்த விலாஸ் செல்வகுமார், நவீன்விஷ்ணு, நரேஷ்குமரன் ஆகியோருக்கு கோயில் சார்பில் பரிவட்டம் கட்டப்பட்டு மாலை மரியாதை செய்யப்பட்டது . இந்நிகழ்ச்சியில் முன்னாள் கோவில் கண்காணிப்பாளர் முருகேசன் , பழனி கோவில் கண்காணிப்பாளர் அழகர்சாமி மணியம் சேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  செய்தியாளர்: அரியநாயகம் 

திண்டுக்கல் வடமதுரை அருகே நடந்த விபத்தில் பள்ளி மாணவன் உட்பட இரண்டு பேர் பலி..!

பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டம் பிலாரிப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் லண்டன் பிரசாத் (வயது 37). இவர் வேல்வார்கோட்டையில் உள்ள நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது வேளாங்கன்னியில் இருந்து கேரளா நோக்கி வந்த கார் பயங்கரமாக மோதியது. அந்த காரை கேரள மாநிலம் மறையூர் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் வின்சென்ட் என்பவர் ஓட்டி வந்தார்.  இந்த விபத்தில் சைக்கிளில் வந்த லண்டன் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் கவிழ்ந்ததில் அதில் வந்த எரிக் (11) என்ற சிறுவன் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர்: அரியநாயகம் 

திருவண்ணாமலையில் புள்ளி மான்கள் மற்றும் முயல் வேட்டையாடிய 4 நபர்கள் கைது..!

 திருவண்ணாமலை அருகே உள்ள தச்சம்பட்டு காப்பு காட்டு பகுதியில் வனச்சரகர் சீனிவாசனுக்கு வந்த ரகசிய தகவலின்படி, நேற்று அதிகாலை 01:30 மணி அளவில் சீனிவாசன் தலைமையில் வனக்காப்பாளர்கள் லட்சுமி, சுல்தான், சிரஞ்சீவி, மணி வேலன், கொண்ட குழுவினர் அதிரடியாக தச்சம்பட்டு காப்புக் காட்டுக்குச் சென்று 2 புள்ளி மான்களை வேட்டையாடிய ஆண்டியார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி (வயசு 36), விக்னேஷ் (வயசு 26), காட்டு ராஜா (வயசு 29), விஜய் (வயசு 23), ஆகிய 4 நபர்களை அதிரடியாக கைது செய்தார்கள். கைது செய்யும் போது இறந்த நிலையில் ஒரு புள்ளி மான் மற்றும் புள்ளிமான் மாமிசத்தை விற்பனை செய்ய இருந்த நிலையில், இறந்த நிலையில் ஒரு புள்ளி மானும், மான் தோல் மற்றும் உரிமை இல்லாத ஒரு நாட்டுத் துப்பாக்கி, நெற்றி பேட்டரி, கத்தி, மூன்று இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை அதிரடியாக பறிமுதல் செய்து இரண்டு புள்ளி மான்களை வேட்டையாடிய அந்த நான்கு நபர்களையும் ரகசிய தகவலின் படி அதிரடியாக கைது செய்தார்கள். செய்தியாளர்: மூர்த்தி 

தவறவிட்ட செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்..

தேனியில் செல்போன் திருட்டு மற்றும் பொது இடங்களில் செல்போனை மக்கள் தொலைத்துவிட்டு தேடுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு செல்போன்களை தவற விட்டவர்கள், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தேனி போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அவ்வாறு மக்கள் தவறவிட்ட 25 செல்போன்களை போலீசார் மீட்டனர். இதையடுத்து மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, தேனி போலீஸ் நிலையத்தில் இன்று நடந்தது. செல்போன்களை அதற்கு உரியவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி ஒப்படைத்தார். இதில், அல்லிநகரத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று தனது செல்போனை தவறவிட்டார். அவருடைய செல்போனை போலீசார் மீட்டுக்கொடுத்தபோது, ஒரு ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு தீபாவளிக்கு தனது செல்போன் கிடைத்துள்ளதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன் மற்றும் போலீசார் உடனிருந்தனர். செய்தியாளர்: விக்னேஷ் 

புழலில் தனியாருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற பி.ஜே.பி பிரமுகர்கள் இருவர் கைது..!

 சென்னை, அண்ணாநகரை சேர்ந்த நவநீத் என்பவருக்கு சொந்தமான புழல் காவாங்கரை மாரியம்மாள் நகரில் நான்கரை ஏக்கர் நிலத்தில் வீட்டுமனைகள் அமைத்து, அதனை விற்பனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் காவாங்கரையை சேர்ந்த அமர்நாத் ( வயது 39) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதியன்று புழல் பகுதியில் வசிக்கும்  23 வது வார்டு  பி.ஜே.பி பிரமுகர்  வெங்கடேசன் ( வயது 51) அவருடைய நண்பர் அதே பகுதி  வட்ட செயலாளர் ஏழுமலை (வயது 55) ஆகியோர்கள் நிலத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளரிடம் சென்று நீங்கள் வீட்டுமனை அமைப்பதற்கு, இது பாதை என காரணம் காட்டி  இதில் மனைபிரிவு அமைத்தால் மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் எனவும், எனவே அதனை சரிசெய்ய பணம் கொடுக்க வேண்டும் என அவர்களுக்கு மிரட்டல் விடுத்தனர். இதற்கு நிலத்தின் உரிமையாளர் செவிசாய்காததால் கட்சி பிரமுகர்கள் மாரியம்மன் நகர் நாலாவது குறுக்கு தெருவில் செல்லும் வழியின் குறுக்கே ஒரு கம்பத்தை நட்டி வைத்து, அதில் பி.ஜே.பி கொடியை ஏற்றி வைத்தனர்.     இச்சம்பவம் குறித்து  மேலாளர் அமர்நாத் புழல் காவல் ...

பள்ளி வளாகத்துக்குள் புகுந்த அரிய வகை ஆமை..

ஆண்டிப்பட்டி அருகே பிச்சம்பட்டியில் உள்ள மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் நேற்று ஆமை ஒன்று ஊர்ந்து வந்தது. இதனை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர், ஆண்டிப்பட்டி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆண்டிப்பட்டி வன அலுவலர் அருள்குமார் தலைமையில் வனவர் விக்னேஷ், வனக்காப்பாளர் முருகன், வனக்காவலர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, ஆமையை பார்வையிட்டனர். அப்போது அந்த ஆமை, நன்னீரில் மட்டும் வளரும் அரிய வகை ஆமை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஆமையை வனத்துறையினர் மீட்டு, வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்து மருத்துவ சிகிச்சை அளித்தனர். பின்னர் ஆண்டிப்பட்டி நக்கலகரடு காப்புக்காட்டில், நீர் நிலைகள் நிறைந்த பகுதியில் அந்த ஆமையை வனத்துறையினர் விட்டனர். செய்தியாளர்: விக்னேஷ் 

நக்கீரன் கோபால் நற்பணி மன்றம் துவக்க விழா முன்னிட்டு 100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோட்டு பேணா வழங்கல்..

 கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் ஊராட்சியில் நக்கீரன் கோபால் நற்பணி மன்றம் துவக்கவிழா  நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஒன்றிய முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு நிருபர் பாசார் செல்வேந்தின், செந்தில், நிருபர் மருதுபாண்டியன், நிருபர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.அறிவழகன், பிரசாந்த், ராமன், ரமேஷ், நிருபர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். கல்யாணசுந்தரம், ராஜராஜசோழன், வெங்கடேஷ், பிரகாஷ், பிரதீப், மாரி, ராஜா, கார்த்திக் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், தலைமை ஆசிரியர் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டுவைத்து 100 க்கும் மேற்ப்பட்ட மாணவர்களுக்கு நோட்டு பேணா மற்றும் இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் நல்லதம்பி, வெங்கடேசன், குயான்சந்தோஷ், சுதாகர், அஜித்குமார், புகழேந்தி, சின்னையன்,பாஸ்கர், திருவள்ளுவன், சுதாகர், மணிகன்டன், காசிநாதன், மகேந்திரன், ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்,முடிவில் விமல் நன்றி கூறினார். செய்தியாளர்: மருது பாண்...

மது போதையில் வாகனம் ஓட்டினால் கைது - எஸ்.பி.பாஸ்கரன் எச்சரிக்கை..!

 பட்டாசு வெடிக்கும் போதோ அல்லது வேறு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இலவச தொலைபேசி எண் 100-ல் போலீசாரையும், 112-ல் தீயணைப்புத் துறையினரையும், அவசர மருத்துவ உதவிக்கு 108 ஆம்புலன்சையும் உடனே அழைக்க வேண்டும். அதேபோல் விதிமுறைகளை பின்பற்றி உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு விற்க வேண்டும். உரிமம் பெறாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது மது குடித்து விட்டு போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க குற்றத்தடுப்பு போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். தீபாவளியை குழந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று SP.பாஸ்கரன் தெரிவித்தார். செய்தியாளர்: அரியநாயகம் 

திண்டுக்கல்லில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி..! கொலையை வீடியோ காலில் பார்த்து ரசித்த கொடூரம்..!

 திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியின் மகன் நவீன்குமார்(35). இவர் தனியார் கடையில் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு தனது நண்பருடன் வீட்டை  விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இன்று காலையில் கோடாங்கிபட்டி குளத்துக்கரையில் உள்ள ஒரு பாறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.  கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகே மதுபாட்டில்கள் கிடந்தன. எனவே குடிபோதையில் உடன் வந்தவர் நவீன்குமாரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்து அவரை தேடினர். கொலை செய்யப்பட்ட நவீன்குமாருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், பிரகாஷ்(6) என்ற மகனும்,தியா(3) என்ற மகளும் உள்ளனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் வந்து விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.  இதுகுறித்து...

கொளத்தூரில் பள்ளி மாணவன் காய்ச்சலால் திடீர் மரணம்..!

 சென்னை, கொளத்தூர் பகவதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கார் ஓட்டுனராக வேலை செய்கிறார். அவரது மனைவி ஜெயப்பிரதா, அவர்களுக்கு  2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் தீபக் ( வயது 13)  அங்குள்ள தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி சென்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பிய தீபக்கிற்கு திடீரென காய்ச்சல் வந்ததால், அவரது பெற்றோர் வீட்டில் இருந்த காய்ச்சல் மாத்திரையை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை பள்ளி செல்ல தீபக்கை எழுப்பியபோது படுக்கையில் அசைவின்றி இருந்துள்ளார். தொடர்ந்து  எழுப்பியபோதும் மயக்க நிலையில் இருந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனே அருகிலுள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்று காண்பித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் செய்வதறியாது திகைத்து அழுது புலம்பினர்.இச்சம்பவம் பற்றி கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீபக்கின் உடலை கைப்பற்றி அரசு க...

பழனி கோவில் உற்சவருக்கு நாளை சிறப்பு பூஜை..

 பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், மலைக்கோவில் உற்சவர் சின்னக்குமாரருக்கு இன்று (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு மேல் சிறப்பு பூஜை, கலாகர்ஷணம், ஜடிபந்தனம் ஆகியவை நடைபெறுகிறது.  தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் சின்னக்கு மாரருக்கு கலசாபிஷேகம், மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்று பிரதிஷ்டை செய்யப்படுகிறது. எனவே நாளை மதியம் 1.30 மணி வரை உற்சவர் சிலைக்கு உபய அபிஷேகங்கள் நடைபெறாது. உச்சிக்கால பூஜை முடிந்து மதியம் 1.30 மணிக்கு மேல் உபய அபிஷேகங்கள் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. செய்தியாளர்: அரியநாயகம் 

தனியார் பள்ளியில் 3 வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி..! திண்டுக்கல்லில் பரபரப்பு..!

 திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள அட்சுதா மெட்ரிகுலேஷன் பள்ளி விடுதியில் தங்கி 11ம் வகுப்பு படிக்கும் மாரம்பாடி சேர்ந்த அந்தோணி ராஜ் மகள் மரிய ரோஸ். இவரது தாய் ஸ்டெல்லா அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார். தந்தை அந்தோணி ராஜ் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாணவி பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார்.  மாணவி நேற்று இரவு 3 வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைத்தார். பள்ளி ஊழியர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள், போலீசார் என பல்வேறு தரப்பினரும் அந்த பள்ளிகள் விசாரணை  நடத்தி வருகின்றனர். செய்தியாளர்: அரியநாயகம் 

திண்டுக்கல் அகர முத்தாலம்மன் கோவில் திருவிழா..

 திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே அகரத்தில் பிரசித்தி பெற்ற அகரம் முத்தாலம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் பல்லி சகுனம் உத்தரவு கேட்டு, உத்தரவு கொடுத்து விட்டால் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான உத்தரவு கொடுத்துவிட்டதால், திருவிழா 9ம் தேதி இரவு சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள், புராண நாடகங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் அம்மனின் பண்டாரப் பெட்டி மற்றும் உற்சவர் கொலு மண்டபத்திற்கு எழுந்தருளும் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனின் கண் திறப்பு நடந்தது. ஆயிரம் பொன் சப்பரத்தில் உலா வந்து கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். பக்தர்களுக்கு தரிசனம் அளித்துவிட்டு அம்மன் அங்கிருந்து புஷ்ப விமானத்தில் புறப்பட்டு வாணகாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் இரவு 12 மணிக்கு மேல் வாணவேடிக்கை நிகழ்ச்சி விடிய விடிய நடந்தது. அம்மன் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சொருகு பட்டை விமானத்தில் பூஞ்சோலைக்கு செல்லும் நிகழ்ச்சி நட...

திண்டுக்கல்லில் ரயிலில் அடிபட்டு பெண் மயில் பலி..!

 திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் கரந்தமலை உட்பட பல இடங்களில் மயில்கள் எண்ணிக்கை அதிகளவு பல்கி பெருகி உள்ளது. குள்ள நரிகளின் கூட்டம் குறைந்ததால் மயில்களின்  எண்ணிக்கை பல்கி பெருகி உள்ளதாக  ஆராய்ச்சியாளர்கள் கணக்கெடுத்துள்ளனர்.தொடர்ந்து  ரயில்கள் வரும்போது மோதி மயில்கள் பலியாகின்றன. இதனால் மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வரும் நிலை உள்ளது.  இந்நிலையில் ரயில்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மைசூர் - தூத்துக்குடி செல்லும் ரயில் இன்ஜினில் பெண் மயில் அடிபட்டு இறந்தது.ரயில்வே காவல்துறையினர் மயிலின் உடலை கைப்பற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். செய்தியாளர்: அரியநாயகம் 

திண்டுக்கல் அருகே விளாம்பட்டியில் கிட்டங்கி இல்லாததால் திறந்தவெளியில் காயும் நெல்மணிகள்..

தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து 3 மாதத்திற்கு முன்பு முதல் போக சாகுபடிக்காக வைகை அணையிலிருந்து பெரியார் பிரதான கால்வாயில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீரை பயன்படுத்தி நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள அணைப்பட்டி, விளாம்பட்டி, ராமநாதபுரம், வட்டப்பாறை பகுதிகளில் விவசாயிகள் நெல் முதல் போக சாகுபடி செய்தனர்.  தற்போது அறுவடை செய்த நெல் மணிகளை விளாம்பட்டியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையம் முன்பு வெட்டவெளியில் திறந்த நிலையில் கொட்டி வைத்துள்ளனர். கடந்த 2 தினங்களாக நிலக்கோட்டை பகுதியில் பெய்த மழையால் நெல் மணிகள் நனைந்தது. இருப்பினும் ஆங்காங்கே தார்ப்பாய் போட்டு விவசாயிகள் மூடி வைத்துள்ளனர். அதிக அளவு மழை நீடித்தால் நெல்மணிகள் முளைக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இதுபோன்ற பாதிப்பில் இருந்து மீள விவசாயிகள் விளாம்பட்டியில் நெல் மணிகளை பாதுகாப்பாக வைக்க கிட்டங்கி கட்ட வேண்டும் என...

நிலக்கோட்டையில் நீண்டகாலத்திற்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்த சிக்னல்..

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால் ரோடு பகுதி நிலக்கோட்டை திண்டுக்கல் சாலை, மதுரை பெரியகுளம் சாலை, நிலக்கோட்டை அணைப்பட்டி சாலை ஆகிய 4 சாலைகளையும் இணைக்கும் பகுதியாகும். இந்த நால் ரோடு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டு வந்தது. சில நேரங்களில் நால் ரோட்டில் வாகனங்கள் இடித்துக்கொண்டு விபத்து ஏற்பட்டு வந்தது.  இதனை போக்கும் விதமாக நிலக்கோட்டை பகுதி விவசாயிகள், வர்த்தக சங்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் நிலக்கோட்டை நால் ரோட்டில் சிக்னல் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று தற்போது தமிழக அரசு நான்கு புறங்களிலும் சிக்னல் வைத்து பணியை தொடங்கியுள்ளது. இப்பணியை நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகன் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர்: அரியநாயகம் 

திண்டுக்கல்லில் தேங்கும் மழை நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள்..பொதுமக்கள் அவதி..!

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் நகரில் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடங்கி கனமழை கொட்டி வருகிறது. இதனால் நகரில் உள்ள பல்வேறு சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி வருகின்றன. அந்த குழிகளில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது.  கடந்த சில வாரங்களாக வைரஸ் மற்றும் இன்புளுயன்சா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், கொசுக்கள் உற்பத்தி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. தொடர்மழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் குப்பகைள் கூட முறையாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்பை சேர்ந்தவர்கள், இதுபோன்ற பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். செய்தியாளர்: அரியநாயகம் 

மாதவரம், புழல், மணலி சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது..!

  சென்னை  அடுத்த மாதவரம், புழல், மணலி ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்கள்  அடிக்கடி திருடு  போவதாக காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாக  மாதவரம் காவல் நிலைய தனிப்படை உதவி ஆய்வாளர்  சிவசங்கரன்  தலைமையிலான போலீசார் சம்மந்தப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை  வைத்து  ஆய்வு மேற்கொண்டு  வாகனங்களை திருடும் மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.  இந்நிலையில், மாதவரம் ரவுண்டானா அருகில்   நின்றுகொண்டிருந்த  தேடப்பட்டு வரும் நபரான  வியாசர்பாடி பாரதிநகரை சேர்ந்த விக்ரம்( வயது 37 ) என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது, அவர் கொடுத்த தகவலில் இருசக்கர வாகனங்களை  திருடி அதனை புதுப்பேட்டையில் உள்ள உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து விற்று விடுவதாக கூறியதின் பேரில், புதுப்பேட்டையை சேர்ந்த குலா மொய்தீன் ( வயது 50 ) ஷேக் முகமது (வயது 28) ஆகிய இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் இருசக்கர வாகனத்தை  திருடி தங்கள...

பெரியகுளத்தில் அதிமுக கட்சியின் 51-ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்..

 அஇஅதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்து 51வது ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அண்ணா சிலை அருகில் அதிமுக கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நகரச் செயலாளர் அப்துல் சமது தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்லமுத்து,நகர்மன்ற குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம்,மாவட்ட பிரதிநிதி அன்பு, மேற்கு ஒன்றிய துணை செயலாளர் முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவுகோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால்,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகானந்தம், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் தவமணி,எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் முத்து, மாவட்ட விவசாய அணி கண்ணன்,எம்ஜிஆர் மன்ற நகரச் செயலாளர் ராஜவேல்,கீழ வடகரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகர்,ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் பாலு, கவுன்சிலர்கள் முத்துலட்சுமி, அழகேசன், நிர்வாகிகள் ஆசிக், முத்துப்பாண்டி, முத்துக்குமார், ராஜேந்திரன், கதிரேசன், நந்தகுமார், பழனிச்சாமி, பிரபாகரன...

தேனி அருகே நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற புதுமண தம்பதி உள்பட 3 பேர் உயிரிழப்பு..!

 தேனி மாவட்டம், போடி அருகே  அமைந்துள்ள பெரியாத்து கோம்பை நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற தேனியைச் சேர்ந்த  அழகுராஜா, காவியா, மற்றும் போடியைச் சேர்ந்த சஞ்சய் ஆகிய மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதில் அழகுராஜா மற்றும் காவியா  கடந்த மாதம் திருமணமான புதுமணத் தம்பதிகள் என்பதும் சஞ்சய் வெளிநாட்டில் படித்து விட்டு தற்போது விடுமுறைக்காக போடிக்கு வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. போடி காவல் துறையினர், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு பேரிடர் மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்கள் உடலை கைப்பற்றினர்.உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டு, காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். செய்தியாளர்: விக்னேஷ் 

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் நிரம்பி வழியும் நல்லதங்காள் அணை..

 திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் நல்லதங்காள் அணை நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. கொடைக்கானல், தாண்டிக்குடி ,ஆடலூர் உட்பட பல இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அருவிகளில் நீர் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஓடைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நிரம்பாத நல்லதங்காள் அணை தற்போது பெய்த மழையால் நிரம்பி வழிப்பதால் விவசாயிக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த கொத்தயம் அருகே உள்ள நல்லதங்காள் அணை நிரம்பியது . இதனால் பல ஏக்கர் விவசாயம் நீர்ப்பாசனம் பெறுகிறது. இது மகிழ்ச்சியாக உள்ளது.தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது, என்றனர். செய்தியாளர்: அரியநாயகம்  

கொடைக்கானலில் மக்களை மிரட்டி வரும் காட்டெருமைகளால் பீதி..!

கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் அடிக்கடி புகும் காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகும் காட்டெருமைகள் ஒரு சில நேரங்களில் தெருப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களையும் தாக்குவது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. இதே போல் நேற்று கொடைக்கானல் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்குள் புகுந்த காட்டெருமை நீண்ட நேரம் உள்ளேயே உலா வந்தது.  பணி மனையை ஒட்டியுள்ள பஸ் நிலையத்திற்குள் புகுந்து விடுமோ என்று பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் நின்று கொண்டிருந்தனர். நீண்டநேர இழுபறிக்கு பின் பணிமனைக்குள் உள்ள புதர் பகுதிக்குள் புகுந்தது. அதன் பின்னர் பணிமனை ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர். கொடைக்கானல் நகர் பகுதிக்குள் உலா வரும் காட்டெருமைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள்ளே விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். செய்தியாளர்: அரியநாயகம் 

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் திருவுருவ உலோக சிலையில் உலக சாதனை நிகழ்வு..

 முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 91 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கொளத்தூர் அடுத்த புழல் வினாயகபுரம் பிர்லா அவென்யூ பகுதியில் உள்ள  நிக்கோலா பவுண்டேசன் இந்திய தொழில் தொடர்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் , 9155  எண்ணிக்கையில் உலோகத்திலான நட்டுகள், வாஷர்கள்  கொண்டு  அப்துல் கலாம் சிலை வடிவமைக்கப்பட்டு, அதனை  உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிகாரப்பூர்வ உலக சாதனை மேலாளர் கிரிஸ்டோபர் டேய்லர் கிராஃப்ட் (யு.எஸ்.ஏ) கலந்துகொண்டு சிலையை ஆய்வு மேற்கொண்டு உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  புழல் காவல் உதவி கமிஷனர் ஆதிமூலம் , முன்னாள் உதவி காவல் கமிஷனர் ராமநாதன்   . வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு சமூக ஆர்வலர் பாபு மற்றும் நிக்கோலா பவுண்டேசன் நிறுவன தலைவர் சுந்தரபாண்டியன் செந்தமிழன் மற்றும் நிர்வாகத்துறை கல்வித்துறை ஆராய்ச்சி துறை பாதுகாப்புத்துறை சமூக பாதுகாப்புத்துறை மற்றும் தொழில்துறை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். செய்திய...

திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு காரணமாக ரயில்கள் ரத்து..!

திண்டுக்கல் மாவட்டத்தில் வெள்ளனூர் - புதுக்கோட்டை, திண்டுக்கல் - அம்பாத்துரை, ராஜபாளையம் - சங்கரன் கோவில் ரயில் நிலையங்கள் இடையே பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காக ரயில் பாதை பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக திருச்சி - மானாமதுரை - திருச்சி முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் (06829/06830) 16ந் தேதி முதல் 31ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சிவகங்கை - மானாமதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திண்டுக்கல் - அம்பாத்துரை ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 16ந் தேதி முதல் 26ந் தேதி வரை கோயம்புத்தூர் - நாகர்கோயில் பகல் நேர விரைவு ரயில் (16322) செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும்.  இதே காலத்தில் சென்னை - குருவாயூர் விரைவு ரயில் (16127) மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள் காலதாமதமாகவும் வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் கால தாமதமாகவும் இயக்கப்படும். இதனால் இந்த 3 நாட்களுக்கும் குருவாயூர் விரைவு ரயிலுக்கு, வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி முன்பதிவி...