Skip to main content

Posts

Showing posts from June, 2025

கலைஞரின் 102 வது பிறந்த நாளை வெகுவிமர்சியாக கொண்டாடிய திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுகவினர்

கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் திமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் ஜோதி நகர் கிளைக் கழக செயலாளரும் , தொழிலதிபரும், மக்கள் சேவகருமான கேஏடி .அன்பு ஏற்பாட்டில் கலைஞரின் 102 வது பிறந்த நாளையொட்டி கழகக் கொடியேற்றி கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவியும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் வெகு விமர்சியாக கொண்டாடிய கட்சியினர்கள் ! செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கேளம்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் கோவளம் செல்லும் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ள ஜோதி நகர் பகுதியில் இன்று காலை 10.00 மணி அளவில் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகம் கேளம்பாக்கம் ஊராட்சி கிளைக் கழகம் சார்பில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஜோதி நகர் கிளைக் கழகச் செயலாளரும், தொழிலதிபரும், மக்கள் சேவகருமான கே. ஏ .டி அன்பு தலைமை தாங்கினார் . கேளம்பாக்கம் கிளைக் கழக செயலாளர் ராஜா மோசஸ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்கள்.கட்சியினர்களானமோகன் ,கனகராஜ், நடராஜ் வேணுகோபால் ஆகியோர்கள் அனைவரையும் வரவேற...

கலைஞர் பிறந்தநாளில் 10 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் 102 கா்ப்பினிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கினார் அமைச்சர் கீதாஜீவன்

கலைஞாின் சாதனைகளையும் வரலாறுகளையும் யாரும் மறைத்துவிட முடியாது 10 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் 102 கா்ப்பினிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.  தூத்துக்குடி திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி 102வது பிறந்தநாளையொட்டி வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் முன்பு உள்ள கருணாநிதி சிலைக்கு வடக்கு மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன்,  மாலை அணிவித்து மலர் தூவி மாியாதை செய்து லட்டு வழங்கினார்.    பின்னர் பழைய பேருந்துநிலையம் அருகில் அமைச்சர் கீதாஜீவன் கேக்வெட்டி பொதுமக்களுக்கு வழங்கிய பின் அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி ஊட்டசத்து பெட்டகம் வழங்கிய பின்னா் கலைஞா் அரங்கில் 102 கா்ப்பிணி பெண்களுக்கு 14 வகையான சத்து பெட்டகம் 1 கிலோ போிச்சம்பழம் 1 சேலை எவா்சில்வா் தாம்பலம் ஆப்பிள் ஆரஞ்சு மாதுளை பழங்கள் ஊக்கத்தொகை வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்  14 வயதில் தமிழ் கொடியேந்தி தமிழக மக்களுக்காகவும் தமிழ்நாட்டிற்காகவ...

காமென்வெல்த் யோகாசன போட்டியில் கும்மிடிப்பூண்டி மாணவர்கள் சாதனை

கும்மிடிப்பூண்டி,ஜூன்.3. இந்தோனேஷியா நாட்டில் நடைபெற்ற காமென்வெல்த் யோகாசன போட்டியில், இந்திய அணியில் இடம் பெற்ற கும்மிடிப்பூண்டி ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மைய மாணவர்கள், 11 தங்கம் வென்று சாதனை படைத்தனர். இந்தோனேஷியா நாட்டில் உள்ள பாலி தீவில், அண்மையில் காமென்வெல்த் நாடுகள் அளவிலான யோகாசன போட்டிகள் நடந்தன. காமென்வெல்த் யோகாசன விளையாட்டு சம்மேளனம் நடத்திய இந்த யோகா போட்டியில், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உட்பட, 12 நாடுகளில், இருந்து 250 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.  இதில் இந்திய அணி சார்பில் 32 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 32 பேர் கொண்ட இந்திய அணியில், கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா மைய மாணவர்கள், 11 பேர், பயிற்சியாளர் சந்தியா தலைமையில் இடம் பெற்றிருந்தனர். பின் வயது வாரியாக பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டியில், கும்மிடிப்பூண்டி மாணவர்கள், 11 பேரும், அவரவர் பிரிவில் தங்கம் வென்று முதல் இடங்களை பிடித்தனர்.  காமென்வெல்த் போட்டியில் பங்கேற்ற அனைவரும் தங்கம் வென்று சாதனைபடைத்த மாணவர்கள் நாடு திரும்பிய நிலையில், கும்மிடிப்பூண்டியில் அவர்களுக்க...

மக்களுடன் முதல்வர் திட்டம் – மூன்றாம் கட்ட முகாமை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள்  பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகளில் நடத்தப்படும் மூன்றாம் கட்ட முகாம் 04.06.2025 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (02.06.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது; மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய சிறப்பு திட்டங்களில் ஒன்றான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் நகர் பகுதிகள், ஊரக பகுதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டது. மேலும், ஊரகப்பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்ற...