மெய்யூர் Ensure அறக்கட்டளை நிர்வாகி ராம் அவர்களின் 36வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த மெய்யூர் அரசினர் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் Ensure கல்வி அறக்கட்டளையின் சார்பில் அறக்கட்டளை நிர்வாகி ராம் அவர்களின் 36வது பிறந்த நாளை முன்னிட்டு நம்பாக்கம், தேவந்தவாக்கம், நெல்வாய், மெய்யூர், பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நான்கு பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இப்பள்ளிகளுக்கான பெயிண்டிங்க் கழிப்பறை வசதிகள் பாத்ரூம் வசதி மற்றும் 43 Inch LEDTv போன்ற கல்வி உபகரணங்களளை Ensure கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் சமூகசேவகர் ஜெரி செயலாளர் பிரகாஷ் அறங்காவலர்கள் ஸ்ரீதர், ராம், பிரகாஷ், சில்பா அவர்கள் கலந்து கொண்டு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார்கள் நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் அறுசுவை உணவு பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் மெய்யூர் விஜயகாந்த் ஒருங்கிணைத்திருந்தார் ஊத்துக்கோட்டை தாலுகா செய்தியாளர் துரை பன்னீர்செல்வம்.
செய்தியாளர் பன்னீர்செல்வம்

Comments
Post a Comment