Skip to main content

Posts

Showing posts from July, 2025

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு,மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் 200 க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் மாநில தலைவர் குருநாதன் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.

அரியலூர் மாவட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 411 மனுக்களை பெற்று கொண்டார். இதில் ஆண்டிமடம்,கல்லாத்ததூர், தண்டலை,ராதாபுரம், காடுவெட்டி, மீன் சுருட்டி,மேலனிகுழி, இலையூர்,வாரியங்காவல், மருதூர், பொன்பரப்பி,சிறுகலத்தூர்,கொடுக்கூர், குவாகம், உடையார்பாளையம் இறவாங்குடி, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 200 க்கும் மேற்பட்ட செங்குந்தர் கைத்தறி நெசவாளர்கள் வந்து எங்கள் சமுதாயத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டவர்களுக்குவீடுகள்இல்லை. எனவே எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவை செங்குந்தர் முதலியார் ஜன சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.என் குருநாதன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமியிடம் அளித்தனர்.அப்போது செங்குந்தர் முதலியார் ஜன சங்கத்தின் மாநில பொருளாளர் ஜி.கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், கடலூர் மாவட்ட அவைத் தலைவர் பி.ராசு, ஆகியோர் உடன் இருந்தனர் செய்தியாளர் AVR பாலு

கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் பதவியேற்பு.

  கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் , கொளத்தூர் பெரவல்லூரில் உள்ள அவரது அலுவலகத்தில் புதியதாக பதவியேற்றார். திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை செய்து கொண்ட புகாரில் முன்னாள் கொளத்தூர் மாவட்ட காவல் துணை ஆணையர் பாண்டியராஜன் மாற்றப்பட்டதை தொடர்ந்து.  கொளத்தூர் காவல் துணை ஆணையராக குமார் பதவியேற்றார். அவர்  நம்மிடம் கூறும்போது ரவுடியிசம் , கட்டப்பஞ்சாயத்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் கஞ்சா விற்பனை, போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் பள்ளி கல்லூரிகள் அருகில் போதை தரும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது  பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  , பொதுமக்கள் தங்கள் குறைகளையும், இதுபோன்று குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களையும் நேரடியாகயும் சொல்ல 94981-74483 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசலாம் என தெரிவித்துள்ளார். செய்தியாளர் யுவராணி

114 ஆவது குருபூஜை விழா

தென்காசி மாவட்டம் இலத்தூர் கீழத்தெருவில் அமைந்திருக்கும் காஞ்சி மகான் தவத்திரு ஸ்ரீ சிவானந்த சிதம்பர சுவாமிகளின் 114வது குருபூஜை விழா நிகழும் மங்களகரமான 1200 ஆம் ஆண்டு விஸ்வா வசு வருடம்  ஆடி மாதம் 30 ஆம் நாள் பரணி நட்சத்திரத்தில் (13.8. 2025) வெள்ளிக்கிழமை சுவாமிகளின் 114 குருபூஜை விழா சிறப்பாக நடைபெற உள்ளது. காலை ஆறு மணிக்கு தன ஆகர்ஷன  சங்கல்ப பூஜையும், எட்டு மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் யாக பூஜையும்,  ஒன்பது மணிக்கு நல்லாசிரியர் பழனி பார்வதி மீனாட்சிசுந்தரம்  அவர்களின் "சித்தர்களின் மகிமை" என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவும், பத்து மணிக்கு  திருவாசகம் முற்றோதல் நிகழ்வும், பண்ணிரண்டு மணிக்கு அருள் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.  இதில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு இலவச "சித்த மருத்துவ முகாம் "மருத்துவர். எஸ் நடராஜன், மருத்துவர் இ சண்முகம், மருத்துவர்.  ஸ்ரீநிதி, மருத்துவர். கே. கிருஷ்ணவேணி, மருத்துவர். கே மாரி செல்வி மருத்துவக் குழுவின் "மருத்துவ முகாம் "நடைபெறுகிறது என்று விழா குழுவினர் தெரிவித்தனர். செய்தியாளர் சந்திரன்

தென்காசி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் காமராஜர் பிறந்தாள் விழா

 தேசிய முற்போக்கு திராவிட கழகம் தென்காசி தெற்கு மாவட்டம் சார்பாக கல்வி கண் திறந்த பெருந்தலைவர் ஐயா காமராஜர் திரு உருவ சிலைக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பழனிசங்கர், மாவட்ட அவை தலைவர், தென்காசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சுரண்டை சங்கரலிங்கம், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சந்துரு சுப்ரமணியம், மகளிர் அணி மாவட்ட செயலாளர் மயிலம்மாள்,  மாவட்ட துணை செயலாளர், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முக்கூடல் மாதவன் பிரின்ஸ், மாவட்ட சமூக வலைத்தளனி துணைச்செயலாளர் பிச்சையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் கடையம் தங்கச்சாமி, பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் அண்ணன் ரவிச்சந்திரன், கடையம் வடக்கு சுப்பையா சரவணன்,  கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் உதயகுமார், ஆழ்வார்குறிச்சி சண்முகம் சேட், சாம்பவர் வடகரை அண்ணன் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கருப்பு நிலா கணேசன்,  கீழப்பாவூர் ஒன்றிய துணை செயலாளர் நாகல்குளம் கண்ணன், கீழப்பாவூர் ஒன்றிய துணைச் செயலாளர் வேல்குமார், கண்ணன், அ.நா.பட்டி கண்ணன், மகளிர் அணி மாவட்டத் துணைச் செயலாளர் இசக்கியம்மாள், ஆலங்குளம் கஸ்தூரி, சைலஜா, கடையம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவ...

வாரச்சந்தை ஏலம் விடுவதாக கூறி, வாயிற்கேட்டை பூட்டிய பேரூராட்சி நிர்வாகம்

 வாரச்சந்தை ஏலம் விடுவதாக கூறி, வாயிற்கேட்டை பூட்டிய பேரூராட்சி நிர்வாகம், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அவதி....  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பேரூராட்சி அலுவலகத்தில் வாரச்சந்தை இன்று ஏலம் நடைபெற்று வருகிறது.  இதனால் காலை முதலே வாயில் கேட்டை பூட்டி வைத்துள்ளதால், வரி செலுத்த வந்த பொதுமக்கள் வரி செலுத்த முடியாமல் திரும்பி சென்று கவிதை அவதி அடைந்தனர்,  அங்கு வந்த பெண் ஒருவர் கூறும் போது, வாரச்சந்தை ஏலம் விடுவது என்றால் விடுமுறை நாட்களில் விடலாம், அல்லது வேறு இடங்களில் ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம், அதை தவிர்த்து பேரூராட்சி அலுவலகத்தின் வாயிற்கேட்டை பூட்டி வைத்துள்ளது, எங்களைப் போன்று அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தருகிறது,  அதுபோன்று ஒரு அலுவலகத்தின் வாயில் கேட்டை பூட்டுவது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தெரிவித்தார். செய்தியாளர் அண்ணாதுரை

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்.

 தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில்  காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்.  அருட் சகோதரி முனைவர் ரூபா அவர்களின் தலைமையிலும் துணை முதல்வர் எம் எஸ் டி மதுரவல்லி அவர்கள் தலைமையில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.  கல்லூரி மாணவி களின் முயற்சியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சிவந்தாகுளம் தூத்துக்குடி மாணவிகளுக்கு நோட்டு, பேனா, புத்தகம், ஜாமென்ட்ரி பாக்ஸ், கல்லூரி முதல்வர் துணை முதல்வர் அவர்களால் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.  மாணவிகளின் துணைத் தலைவி மரிய ரேச்சல் பள்ளி மாணவிகளுக்கு காமராஜரின் சிறப்புகளை எடுத்துக் கூறினால். இனிப்புகள் வழங்கி இவ்விழா இனிதே முடிவுற்றது இதனை தமிழ்த்துறை தலைவி.  முனைவர். மி.ஜோஸ்பின் ரேணுகா. முனைவர்.க. ஜெய மலர் அவர்கள் ஏற்பாடு செய்தனர். செய்தியாளர் ஜேம்ஸ் ரவி

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா: தவெகவினார் கொண்டாட்டம்

 பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா: தவெகவினார் கொண்டாட்டம்  தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் தமிழக வெற்றி கழகம் சார்பில் கர்மவீரர் காமராஜர்  123 வது பிறந்த நாள் விழா பேருந்து நிலையத்தின் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தவெக கழக தலைவர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க  பொதுச் செயலாளர்  அறிவுறுத்தலின்படி  தஞ்சை மத்திய மாவட்ட வல்லம் பேரூர் கழகம் சார்பாக வல்லம் பேருந்து நிலையத்தில் அருகில்  காமராஜர் சிலைக்கு  மாலை அணிவித்து மலர் தூவி இனிப்பு வழங்கினார்கள். இந்நகழ்சியில், அமீர் பாட்சா, பாரதி, மகேஷ், சகாயம், தாவூத்,மனோகர்,உள்ளிட்ட பலநிர்வாகிகள்  கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். செய்தியாளர் இயேசு ராஜ்

இரட்டையூரணியில் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்

 இரட்டையூரணியில் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்  எம்எல்ஏ தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மதிய உணவு தந்த கல்வியாளர் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 123- வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் மேற்கு ஒன்றியம் இரட்டையூரணி ஊராட்சியில் உள்ள  கர்ம வீரர் காமராஜர் திருஉருவ சிலைக்கு ராமநாதபுரம் திமுக மாவட்டகழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்  அதனை தொடர்ந்து அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில்  ஒன்றிய நகர் கழக செயலாளர்கள் மக்கள் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். செய்தியாளர் அசோக் குமார்

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கத்தில் உள்ள எம்.எஸ்.ஜே.எம். இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் கலைஞர் அறிவித்த கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு காமராஜர் பிறந்த நாள் விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஏ.ஆர்.வி.மலையம் சம்பத் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் வி. சுமதி வாச உடற் பயிற்சி ஆசிரியர் எட்வின் அனைவரையும் வரவேற்றார். இதில் நந்தம்பாக்கம் கே.என்.பி.பள்ளி தாளாளர் வைகுண்ட ராமன், குமணன்சாவடி ஜவஹர்லால் நேரு வித்யாலயா பள்ளி தாளாளர் ராகேஷ் கமலக்கண்ணன், வணிகர் சங்கங்களின் பேரவை தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கிச்சா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமன் ராஜா வெள்ளையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காமராஜர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்குவது போல இந்த...

ஆரம்பாக்கத்தில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா

பெருந்தலைவர் காமராசரின் 123வது பிறந்தநாள் விழா கும்மிடிப்பூண்டி அடுத்த  ஆரம்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய  தொடக்க பள்ளியில் நடைபெற்றது.  நிகழ்வில் கல்வி கண் கொடுத்த கர்மவீரர் காமராஜர் திருவுருவ படத்திற்கு கும்மிடிப்பூண்டி மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சியினர்  மலர்தூவி மரியாதை செய்து வீர வணக்கம் செலுத்தினர். இதன் பிறகு மாணவ மாணவியர்ககுக்கு, கும்மிடிப்பூண்டி மேற்கு வட்டார தலைவர் மாவீரன் எஸ்.எஸ். பெரியசாமி சார்பில் இனிப்பு,எவர்சில்வர் தட்டு, வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் போட்டோ செல்வம், மாவட்ட செயலாளர்கள் கும்ப்ளி ஆர்.மணி, டூபாண்ட் வி. ராஜேந்திரன் , வட்டார துணை தலைவர்  ஏடுர்  எஸ்.வினோத், வட்டார செயலாளர் ரோஷநகரம் சி. தினகரன், எகுமதுரை  ஆட்டோ முரளி, ஆரம்பக்கம் பி.நடராஜன்.. மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் . செய்தியாளர் பிரான்சிஸ்

தென்காசி ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு மூதாட்டி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி !!

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வந்த பாலவிநாயகர் கோவில் தெரு,T.N.புதுக்குடி,புளியங்குடியை, சார்ந்த  செண்பகவல்லி என்ற முதியவர் ஒருவர் தன் இரு மகனுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார் அதில்,சுமார் 40 வருட காலமாக புறம்போக்கு இடத்தில் மண்குடிசை கட்டி வசித்து வருவதாகவும் அந்த வீட்டில் உடல் ஊனமுற்ற மகள், காசநோய் வாய்ப்பட்ட கணவர் என மிகவும் வறுமையில் வயிற்று பிழைப்பு இன்றி வாழ்ந்து வருவதாகவும்.  இந்நிலையில் என்வீட்டின் மேல்புறம் உள்ள சக்திமாரியம்மன் கோவிலை விரிவுபடுத்தி கட்டிடம் கட்டி வருகின்றனர். அதனால் தெருவில் உள்ள கழிவுநீர் ஓடை அடைத்ததாகவும் பலமுறை மனு கொடுத்ததாகவும்  தெரிவித்தார். என் வீட்டை இடிப்பதற்காக  பரமசிவன், ஆவணி, பழனிச்சாமி , பாலசுப்பிரமணியன் கண்ணன், கார்த்தி, கணேசன், திருமலைச்செல்வி கவுன்சிலர்,  பாலமுரு கன்கவுன்சிலர் சகோதரர், மேலும் சிலர்   என்வீட்டை காலி செய்யவும் சொல்லுகின்றனர் எனவும் மனுகொடுத்திருந்தேன் தற்போது வரை என் மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கத்தில  போர் குழாய...

சாக்கோட்டை பகுதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் நூற்றுக்கு மேற்பட்டோர் காயம்

 சாக்கோட்டை பகுதியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் நூற்றுக்கு மேற்பட்டோர் காயம்.... துரிதமாக செயல்பட்ட அரசுமருத்துவ குழு.... பாராட்டும் பொதுமக்கள். சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு சொந்தமான அருள்மிகு சாக்கை வீரசேகர உமையா யாம்பிகை திருக்கோவில் காரைக்குடிக்கு அருகே உள்ள சாக்கோட்டையில் உள்ளது . இக்கோவிலின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.  இதில் 500க்கும் மேற்பட்ட காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயங்கள் ஏற்பட்டு நிலையில், அங்கு செயல்பட்டு வந்த  புதுவயல் அரசு ஆரம்ப நிலையத்தின் மருத்துவ குழு துரிதமான சிகிச்சையாலும், மேல் சிகிச்சைக்கு 108 வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் .  மேலும் புதுவயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் சாதனா அவர்களின் தலைமையில் செயல்பட்ட மருத்துவ குழு துரித சிகிச்சை எடுத்து காயம் அடைந்தவர்களை மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தும், வீட்டிற்கும் அனுப்பி வைத்தனர், இதைப் பார்த்த பொதுமக்கள் மருத்துவ குழுவை வெகுவாக பாராட்டியதுடன்...

தூத்துக்குடி ஏரலில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக மூத்த நிர்வாகி சக்திவேலை நேரில் சந்தித்து நலம் விசாரித்த கனிமொழி கருணாநிதி எம்.பி! தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் முன்னாள் ஒன்றிய கழகத் துணைச் செயலாளர், ஏரல் பேரூர் கழக துணைச் செயலாளர் சக்திவேல் அவர்களை கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரிக்குமாறு கூறியிருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஏரலில்  உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக மூத்த நிர்வாகி சக்திவேலை, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணநிதி நேரில் சந்தித்து நலம், விசாரித்து நிதியுதவி தொகையை வழங்கினார். மேலும், கனிமொழி கருணாநிதி எம்.பி தொலைபேசி வாயிலாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு, முதலமைச்சர் சிறிது நேரம் திமுக மூத்த நிர்வாகி சக்திவேலிடம் உரையாடி, உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். செய்தியாளர் ரவி

ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தில் 450 க்கும் மேற்பட்ட நெசவாளர் செங்குந்தர் குல பெண்கள் இலவச மனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் செங்குந்தர் முதலியார் ஜன சங்கத்தின் வீட்டு மனை பட்டா இல்லாத நெசவாளர் செங்குந்தர் குல மக்களுக்கு  தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 3 சென்ட் இலவச மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது சம்மந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு செங்குந்தர் முதலியார் ஜன சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.என்.குருநாதன் தலைமை வகித்தார்.இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில பொருளாளர் ஜி.கணேசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், கடலூர் மாவட்ட அவைத் தலைவர் பி.ராசு, அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் ஏ.முருகேசன்,ஜி.செல்வகுமார்,எஸ், ஆர்.வி.வெங்கடேசன், என்.நீலமேகம்,சி.காளிதாஸ் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் இலவச மனை கேட்டு 450 க்கும் மேற்பட்ட பெண்கள் மனு கொடுத்தனர்.முடிவில் மாநில இளைஞர் அணி செயலாளர் வி.வெங்கடேசன் நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை செங்குந்தர் முதலியார் ஜன சங்கத்தின் பொறுப்பாளர்கள் செய்து...

20 நிமிடம் தீப்பந்தம் சுழற்றி உலக சாதனை

கும்மிடிப்பூண்டி, ஜூலை.14:  கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் டி.கே.வரதராஜ் ஆசான் சிலம்ப கலைக்கூடத்தின் சார்பில் நூறு சிலம்ப மாணவர்கள் 20 நிமிடம் தீ பந்தம் சுழற்றும்  உலக சாதனை நிகழ்வு கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் டி.கே.வரதராஜ் ஆசான் சிலம்ப கலைக்கூடம் மற்றும் யுனிகோ ஓல்ட் ரெக்கார்ட் நிறுவனம் இணைந்து சிலம்ப வீரர்கள் தீப்பந்தத்தை சுழற்றி உலக சாதனை நிகழ்வை நடத்தினர். இந்த உலக சாதனை நிகழ்வை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி. ஜெ. கோவிந்தராஜன் துவக்கி வைத்தார். சமூக ஆர்வலர் ரவி , குங்பூ பயிற்சியாளர் டி.கண்ணன் வரவேற்றனர். நிகழ்வில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், துணைத் தலைவர் கேசவன், கும்மிடிப்பூண்டி நகர திமுக செயலாளர் அறிவழகன் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து டி.கே.வரதராஜ் ஆசான் சிலம்பாட்ட கலைக்கூடத்தை சேர்ந்த 132 மாணவர்கள் தீப்பந்தத்தை சிலம்பம் போல் 20நிமிடம் சுழற்றி உலக சாதனை படைத்தனர். இவர்களது இந்த உலக சாதனை யூனிக்கோ ஓல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கும்மி...

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

சாக்கோட்டை அருள்மிகு சாக்கை வீரசேகர உமையா அம்பிகை திருக்கோவில் தேர்த்திருவிழா

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு சொந்தமான அருள்மிகு சாக்கை வீரசேகர உமையா அம்பிகை திருக்கோவில் காரைக்குடிக்கு அருகே உள்ள சாக்கோட்டை பகுதியில் அமைந்துள்ளது.  இக்கோயிலின் தேர்த்திருவிழா என்பது வரலாற்று புகழ் பெற்றதாகும். ஆனி மாதத்தில் நடைபெறும் திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இதன் தொடர்ச்சியாக ஒன்பதாம் நாள் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.  இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.   நானூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார்கள் பாதுகாப்பு பணியினை மேற்கொண்ட நிலையில், தேவகோட்டை சார் ஆட்சியர்ஆயுஷ் வெங்கட் , வட்டாட்சியர் ராஜா, மற்றும் வருவாய் துறையினர், மருத்துவத்துறையினர், தீயணைப்பு துறையினர், மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். செய்தியாளர் அண்ணாதுரை

பாவூர்சத்திரத்தில் மனமகிழ் மன்றங்களைத் திறக்க அனுமதிக்கக் கூடாது

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் தனியார் மனமகிழ் மன்றங்களைத் திறக்க அனுமதிக்கக் கூடாது என தே.மு.தி.கமாநில பொதுக்குழு உறுப்பினர் கருப்பு நிலா மா.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:பாவூர்சத்திரம் அருகே திருநெல்வேலி- தென்காசி நான்குவழிச் சாலையில் கீழப் பாவூர் செல்லும் விலக்கு பகுதி, பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரிச் சந்தையிலிருந்து ஆவுடையானூர் செல்லும் சாலைப் பகுதி ஆகிய 2 இடங்களில் மனமகிழ் மன்றங்களைத் திறப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன.  தனியார் பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், மார்க்கெட் என பொதுமக்கள் அதிகம் வந்துசெல்லும் பகுதிகளாக இருப்பதால் அங்கு மனமகிழ் மன் றங்களைத் திறக்கக் கூடாது என பல்வேறு சமூக ஆர்வலர்கள், கட்சியினர், பொதுமக்கள் சார்பில் ஆட்சியரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனினும், பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.  தனியார் மதுக்கடைகளைத் திறப்பதன்மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தவறான வழியில் செல்வதற்கு வழிவகுத்து விடக் கூடாது. எனவே, தனியார் மனமகிழ் மன்றங்களைத் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது பொதுமக்கள் சார்பாக கோரி...

ஷைன் சமுதாயக் கல்லூரியில் செவிலியர் மாணவர்களின் உறுதி ஏற்பு விழா

கும்மிடிப்பூண்டியில் உள்ள ஷைன் சமுதாயக் கல்லூரியில் லேம்ப் லைட்டிங் எனப்படும் செவிலியர் படிப்பில் முதலாண்டு சேர்ந்த மாணவர்கள் செவிலியர் படிப்பு முடித்து உடல் நலம் குன்றியவர்களுக்கு மருத்துவ சேவை அழிப்பது குறித்த உறுதி ஏற்பு விழா  நடைபெற்றது. இந்த உறுதி ஏற்பு விழாவில் ஷைன் சமுதாயக் கல்லூரி  நிறுவன தலைவரும் ஷைன் அறக்கட்டளையின் அரங்காவலருமான ஆரோன் மற்றும் அறங்காவலர் திரு அம்மு ஆரோன் தலைமை தாங்கினார்.  தொடர்ந்து 2025 ஆம் ஆண்டில் செவிலியர் படிப்பு பயில சேர்க்கை பெற்ற மாணவர்களின் உறுதி ஏற்பு விழா வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ஏஞ்சல் ,ஆதி தமிழர் விடுதலை கட்சியின் பொருளாளர் இளஞ்செழியன், கிறிஸ்தவர்கள் ஐக்கிய நலவாழ்வு சங்கத்தின் மாநில பொது செயலாளர் தயாபேஸ் , பிர்லா கார்பன் நிறுவன மனித வளத்துறை அதிகாரி பெர்னாண்டஸ், தமிழக ஊரக வளர்ச்சி திட்டத்தின் வட்டார தலைவர் நாகராஜ் மற்றும் சிவபாலன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.  விழாவின் இறுதியில் மாணவர்கள் செவிலியர் படிப்பிற்கான உறுதி ஏற்றனர். தொடர்ந்து மாணவ மாணவியருக்கு இனிப்புகள் மற்றும் பரிச...

சுதந்திர போராட்டவீரர் மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் 268 வது பிறந்தநாள்விழா

 தாய் நாட்டின் விடுதலைக்காகவும் மானத்தை காப்பதற்காகவும் நாங்கள் மரணத்தை முத்தமிடவும் தயார் என்று கர்ஜித்த இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர்  மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் 268- வது குருபூஜை விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் , ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தமிழ்நாடு யாதவ மாகாசபை கிழக்கு மாவட்டத்தின் சார்பாக ராமநாதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருவுருவ படத்திற்கு. ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான  காதர்பாட்சா முத்துராமலிங்கம் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய நகர் கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் யாதவ மகாசபை நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். செய்தியாளர் அசோக் குமார்

கமுதி அருகே பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட 5 வகுப்பறை கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கைதட்டி மகிழ்ச்சியடைந்தனர்.  பின்னர் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் தங்கபாண்டியன்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுலைமான், தலைமையாசிரியை  சாந்தி, உதவி தலைமையாசிரியை  பாக்கியலெட்சுமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழா முடிவில் ஆசிரியர் பொன்மாடசாமி நன்றி கூறினார். இதே போல் கமுதி -கோட்டைமேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின்  புதிய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். செய்தியாளர் அசோக் குமார்

அபிமுகன் தருமச்சாலை சார்பில் அன்னதானம்

கும்பகோணம் அபிமுகன் தருமச்சாலை  நிர்வாகி மகாலிங்க தேசிகர் பேசியதாவது .ஆனி மாத வழிபாடுகளான  27 நட்சத்திர பூஜைகள், சித்தர்களின் குருபூஜை மற்றும் தினமும் அன்றைய தினத்திற்கு உரிய சித்தர்களின்  மாதாந்திர நட்சத்திர வழிபாடும்  நடைபெறுகிறது. கடந்த 7 வருடங்களாக  கும்பகோண சுற்றி சாலை ஓரத்தில் கடை வைத்திருப்பவர்கள், மற்றும் ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு  நேரில் சென்று அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் குடும்பத்தினர் பிறந்தநாள் விழா,திருமண நாள் நினைவு நாள் ஆகிய நாட்களில் ஏழை எளிய மக்கள்,முதியவர்கள் ,ஆகியோருக்கு அன்னதானம் வழங்குகிறோம். மாணவ மாணவிகளுக்கு தேவாரம் பாடல்கள் கற்றுத் தருகிறோம். "ஏழை, எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், மருத்துவ தேவைகளுக்கும் உதவி வருகிறது.  மத நல்லிணக்கத்துக்கும், சமூக சேவைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்வதாக கூறிக்கொள்வதைவிட, அதை விளம்பரப்படுத்தாமல் செயலில் காட்டுவதே உண்மையான சேவை. இதற்காகவே இந்த  அபிமுகன் தருமச்சாலை சார்பில், அனைத்து மதங்களின் விழாக்களையும் கொண்டாடுகிறோம்"என்றார். செய்தியாளர் இயேசு ராஜ்

கமுதி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கூடுதல் பதிவாளர் திடீர் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி - கண்ணார்பட்டி பகுதியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கூடுதல் பதிவாளர் (சென்னை - விற்பனை, திட்டம் மற்றும் வளர்ச்சி) சீனிவாசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உள்ள கிடங்குகளை பார்வையிட்டு, விவசாயிகளிடம் இருந்து அதிகஅளவில் விளை பொருட்களை கொள்முதல் செய்து  வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு விற்பனை செய்யவும் அறிவுருத்தினார்.  மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ள ஆர்கானிக் மிளகாய் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். சங்கத்தில் கூடுதல் கிடங்குகள் கட்டி,சேமிப்பு பயன்பாட்டை அதிகப்படுத்தவும், உரம், விவசாய விளை பொருள்கள் கொள்முதல். விற்பனை நடவடிக்கைகளை அதிகப்படுத்தவும் அறிவுறுத்தினார். குறிப்பாக இப்பகுதியில் விளையும் குண்டு மிளகாய் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்திட,சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்த திடீர் ஆய்வில் கூடுதல் பதிவாளர் சீனிவாசன், மண்டல இணைப்பதிவாளர் ஜினு, மத்திய கூட்டுறவு வங்கி மண்டல இணைப்பதிவாளர் ராஜலெட்சுமி, சரக துணை பதிவாளர் ரத்தினவேல், மேலாண்மை இயக்குனர் ப்ரீத்தி, சங்கப் பொ...

தனுஷ்கோடி அரிச்சல்முனையிலிருந்து கன்னியாகுமரி வரை இந்தோ-திபெத் எல்லை படையினர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது

தூத்துக்குடி ஜூலை 11 இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை சார்பாக, தனுஷ்கோடி அரிச்சல் முனையிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தொடங்கியது.  சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடியில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் பயிற்சி மையம் உள்ளது. இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர்கள் பயிற்சி பெற்று, ராணுவப் பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள். இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை சார்பாக தனுஷ்கோடி அரிச்சல் முனையிலிருந்து கன்னியாகுமரி வரையிலான கடலோரப் பகுதியில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில், பாதுகாப்புப் படை காவல் கண்காணிப்பாளர் கமாண்டன்ட் சந்தன் மிஸ்ரா தலைமையில் துணை கமாண்டன்ட் ஜெய பிரகாஷ் மற்றும் படை வீரர்கள் என 25 பேர் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர் வருகின்றனர். தனுஷ்கோடி அரிச்சல்முனையில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை ராமேசுவரம் சிறப்பு வட்டாட்சியர் அப்துல் ஜாபர் மற்றும் சரக கண்காணிப்பாளர் (பொறுப்பு) மகேஸ்வரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.  இந்த சைக்கிள் பேரணியானது ராமநாதபுரம், சாயல்குடி, தூத்துக்குடி, உவரி வழியாக தின...

வடகரை அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ கங்காதர ஈஸ்வரர் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

சென்னை செங்குன்றம் அருகே வடகரை யில் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை கங்காதர ஈஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷே விழா ஆலய அர்ச்சகர்  சம்பத்குமார் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.எஸ். அருண்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இதில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை பிரம்மச்சாரி பூஜை, சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை, மகா கணபதி ஓமம், தம்பதி பூஜை, நவகிரக ஹோமம் ஆகிய பூஜைகள் யாகசாலையில் நடத்தப்பட்டு ஸ்ரீ விஷ்ணு வராஹி அம்மன் கண் திறந்து, கும்ப அலங்காரம் செய்யப்பட்டு  இரண்டு கால பூஜைகளுடன் பல்வேறு நதிகள் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கும்ப கலசத்தில் கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து  புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து பரிவார தெய்வங்களாகிய விஷ்ணு ஸ்ரீ வராகி அம்மன், சீரடி சாய்பாபா, ஸ்ரீ ஆஞ்சநேயர் மூலவர்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  பின்னர் சாமி அ...

பூந்தமல்லியில் "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கை. அமைச்சர் நாசர், கிருஷ்ணசாமி எம்எல்ஏ பங்கேற்பு

தமிழ்­நாட்டு மக்­களை அநீ­தி­க­ளுக்கு எதி­ராக ஒன்­றி­ணைக்­கும் ஒப்­பு­யர்­விலா செயல் திட்­டத்­தின் கீழ் நம் மண் மொழி மானம் காக்க, “ஓர­ணி­யில் தமிழ்­நாடு” எனும் மாபெரும் முன்னெடுப்பை திமுக தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வாக்காளரையும் ‘‘ஓரணியில் தமிழ்நாடு’’ என்று பிரசார இயக்கத்தில் இணைக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.    அதன்படி, பூந்தமல்லி நகர  திமுக சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி பூந்தமல்லி நகரம் 7ஆவது வார்டில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பூந்தமல்லி நகர திமுக செயலாளர ஜி.ஆர்.திருமலை தலைமை தாங்கினார்.  பூந்தமல்லி நகர் மன்ற மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.  இந்த நிகழ்ச்சியில் பூந்தமல்லி நகர திமுக நிர்வாகிகள் எச். தாஜூதீன்,  ...

கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் 102-வது பிறந்தநாள் விழாவில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கழக மூத்த முன்னோடிகள் 102 பேருக்கு பொற்கிழி வழங்கும்விழா

கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் 102-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நேற்று மாலை 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரறிஞர் அண்ணா திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் செய்திருந்தார். மேலும் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார் விழாவிற்கு கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலை வகித்தார். கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஐ.லியோனி மற்றும் கழக வழக்கறிஞரணி இணைச் செயலாளர் சூர்யா வெற்றி கொண்டான், மாநில மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, சுந்தரராஜ்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகவேல், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக பொது மக்களுக்கான அசைவ அன்னதானத்தை கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி துவக்கி வைத்தார். விழாவில் கழக மூத்...

விளாங்காடு பாக்கத்தில் ஸ்ரீ வியாச வசந்த்த சாயி ஆலய மகா கும்பாபிஷே விழா கோலாகலமாக துவங்கியது.

சென்னை செங்குன்றம் அடுத்த விளாங்காடு பாக்கம் ஊராட்சி நியூஸ் ஸ்டார் சிட்டி அனெக்ஸ் பகுதியில் குடியிறுப்புவாசிகள் புதிதாக ஸ்ரீ வியாச வசந்த்த சாய் ஆலயத்தை கட்டி உள்ளனர்.  இதன் கும்பாபிஷே விழா முன்னாள்  புழல் ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் புழல் பெ.சரவணன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ச.பாரதி சரவணன் அவர்களின் தலைமையில் விமர்சையாக துவங்கியது.முன்னதாக விளங்காடு பாக்கம் ஆலயத்திலிருந்து மேளதளங்களுடன்  சாமி சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. பின்னர் குடியிருப்பு வாசிகளின்  ஆரத்தி பூஜை செய்து வரிசைத்தட்டுக்களுடன் சுவாமி சிலையானது ஊர்வலமாக புதிய ஆலயம் வந்தடைந்தது.  அதனைத் தொடர்ந்து யாகசாலையில் முதல் கால பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.இதில் விளங்காடு பக்கம் ஊராட்சி நியூ ஸ்டார் சிட்டி அனெக்ஸ் 7 மற்றும் 12ஐ சேர்ந்த குடியிருப்புவாசிகள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். செய்தியாளர் ரஞ்சித்

உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவை திட்டம் நிறைவு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கருப்பூர் கிராமத்தில் கும்பகோணம் மண்டலம் தஞ்சாவூர் அறிவுத்திருக்கோவில் அறக்கட்டளை சார்பில், உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவை திட்டம் நிறைவு விழா நிகழ்ச்சி,  விநாயகர் கோவில் அருகில் வளாகத்தில் நடந்தது.கடந்த, ஐந்து மாதமாக தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்பட்டு, அமைதி கிராமமாக அறிவித்து, நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.உலக சமுதாய சேவா சங்கம் தலைவர் மயிலானந்தன், ,இயக்குனர் முருகானந்தம் ஆகியோர்  தலைமை தாங்கினார்.  தஞ்சை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை ,துணைத் தலைவர் பரணிதரன், அழியாறு, அறிவுத்திருக்கோயில் மக்கள் தொடர்பு அலுவலர் வேத குமரச்செல்வன்,,  கருப்பூர் (மலை) சிவகுமார்,கருப்பூர் காந்தி நல்வாழ்வு சங்கம் நிறுவனர் மாவடியான், , ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். "தொடர்ந்து அனுபவமுறை பட காட்சிகள், யோகாசனம் , கரகாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக செயலாளர் சிவராமன் வரவேற்றார். நிறைவில்தஞ்சை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, நிர்வாக அறங்காவலர் பூர்ண சந்திரன் நன்றி கூறினார். செய்தியாளர் ஏசு ராஜ

பொது வேலை நிறுத்தத்தை ஒட்டி மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 161 பேர் கைது

கும்மிடிப்பூண்டி,ஜூலை.10. மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கையும், மக்கள் விரோத போக்கையும் கடைபிடிப்பதாக கூறி பல்வேறு தொழிற்சங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், கும்மிடிப்பூண்டியில் மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 161 பேர் காவல் துறையினரால் புதன்கிழமை கைது  செய்யப்பட்டனர். நான்கு சட்ட தொகுப்புகளை ரத்து செய்தல், முறை சாரா மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் 26ஆயிரம் ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட 13அம்ச  கோரிக்கைகளை வலியுறித்தி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை  செயல்படுத்திய நிலையில் கும்மிடிப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தொழிற் சங்க மையத்தின் மாவட்ட செயலாளர் ஜெ.அருள் தலைமையில் கும்மிடிப்பூண்டியில் கண்டனஆர்பாட்டம் மற்றும் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகி அர்ச்சுனன், எல்பிஎப் நிர்வாகி சிவக்குமார், காங்கிரஸ் கட்சி நிர்வாகி கே.ஏ.பிரேம்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுகுமார், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி சுல்தான் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்ட...

ஸ்ரீ ராதா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 13 வது வார்டு தபால் தெரு பகுதியில் புதிதாக எழுந்தருளி உள்ள ஸ்ரீ ராதா ருக்குமணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி  திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி தபால் தெரு பகுதியில் ஸ்ரீ ராதா ருக்மிணி சமேத  ஸ்ரீ வேணுகோபால சுவாமிகள் திருக்கோவில் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் கடந்த 29 தேதி பந்தக்கால் நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திங்களன்று அனுக்ஞை, குருவந்தனம், யஜமான சங்கல்பம், விஷ்வக்சேனர் ஆராதனை, மஹாகணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், சுதர்சன  ஹோமம், கோ பூஜை. தனபூஜை, தீபாரதனை, யாகசாலை நிர்மானம்,சுவாமி சிலைகள் கரிவலம் வருதல், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்பனம்,  கும்பலங்காரம், யாக சாலை பிரவேசம்,  கும்ப திருவாதாரனம், அக்னி பிரதிஷ்டை, முதல் கால யாக பூஜை, விசேஷ திரவ்யஹூதி, பூர்ணாஹூதி, விமான கோபுரம், கலசம், மூலவர் பிரதிஷ்டை நடைபெற்றது., தொடர்ந்து செவ்வாய்க்கிழமை புண்யாஹவாசனம், கும்ப திருவாதாரனம், இரண்டாம் கால யாக பூஜை, தீபாரதனை, பிர...

வளசரவாக்கத்தில் ஸ்ரீலட்சுமி விநாயகர், கார்ய சித்தி ஆஞ்சநேயர் கோயிலில் ரூ.3 கோடியில் புதிய ராஜகோபுரம் திருப்பணி... நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

சென்னை வளசரவாக்கம் காமகோடி நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி விநாயகர் மற்றும் கார்ய சித்தி ஆஞ்சநேயர் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் புதிய வடிவமைப்பில் சீரமைக்கப்பட்டு ராஜகோபுரம் கட்டும் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது.  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் ரூ.3 கோடி மதிப்பில் நூதன ராஜகோபுரம் மற்றும் கோயில் கட்டுமான பணிகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பூமி பூஜை நேற்று நடைபெற்றது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஜெ.பாலமுருகன் தலைமை தாங்கினார். கோயில் நிர்வாக அதிகாரி எம்.ஜெயராமன், பக்த ஜன சபை தலைவர் கே. ஜெயராமன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சந்தானம், அர்த்தநாரி, சம்பத் குமார், சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்த நிகழ்ச்சியில் நாகாலந்து ஆளுநர் இல. கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி வைத்தார்.  பின்னர் அவர் கூறியதாவது: ஆலயம் தொழுவது சாலமும் நன்று. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு ஏற்ப இன்றும் நாடு முழுவதும் கோயில்கள் கட்...

தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்: 80 பெண்கள் உள்பட 265பேர் கைது!

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மையமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், 42 தொழிலாளர் நல சட்டங்களை திரும்பபெற கோரி வலியுறுத்தியும் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்துக்கு தமிழ்நாட்டில் தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ஹெச்எம்எஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட மற்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் முன்பு பல்வேறு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பேராட்டத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் சுசீ ரவீந்திரன் தலைமை  தாங்கினார்.  இதில் சிஐடியு மாவட்...

கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் 102-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அசைவ அன்னதானத்தை கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி துவக்கி வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் 102-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,இன்று புதன்கிழமை மாலை 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரறிஞர் அண்ணா திடலில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இவ்விழா திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமையில், அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, ராஜகண்ணப்பன் முன்னிலையில், கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஐ.லியோனி மற்றும் கழக வழக்கறிஞரணி இணைச் செயலாளர் சூர்யா வெற்றி கொண்டான், மாநில மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்,நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர் விழாவில் கழக மூத்த முன்னோடிகள் 102 பேருக்கு பொற்கிழி வழங்குதல், விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரம், 5000 ஏழை எளியோருக்கு வேஷ்டி, சேலைகள், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, சிகை அலங்காரக் கலைஞர்களுக்கு உபகரணங்கள் மற்றும் மரக்கன்று வழங்குதல், 5000 பேருக்கு அசைவ அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மு...