அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு,மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் 200 க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் மாநில தலைவர் குருநாதன் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 411 மனுக்களை பெற்று கொண்டார். இதில் ஆண்டிமடம்,கல்லாத்ததூர், தண்டலை,ராதாபுரம், காடுவெட்டி, மீன் சுருட்டி,மேலனிகுழி, இலையூர்,வாரியங்காவல், மருதூர், பொன்பரப்பி,சிறுகலத்தூர்,கொடுக்கூர், குவாகம், உடையார்பாளையம் இறவாங்குடி, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் 200 க்கும் மேற்பட்ட செங்குந்தர் கைத்தறி நெசவாளர்கள் வந்து எங்கள் சமுதாயத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டவர்களுக்குவீடுகள்இல்லை. எனவே எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவை செங்குந்தர் முதலியார் ஜன சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.என் குருநாதன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமியிடம் அளித்தனர்.அப்போது செங்குந்தர் முதலியார் ஜன சங்கத்தின் மாநில பொருளாளர் ஜி.கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், கடலூர் மாவட்ட அவைத் தலைவர் பி.ராசு, ஆகியோர் உடன் இருந்தனர் செய்தியாளர் AVR பாலு