மத்திய அரசின் தேசிய ஆவணத்துறையின் பொது இயக்குனர், அருன் சிங்கால் இ.ஆ.ப, துணை இயக்குனர் தேவேந்திர சர்மா, தென் மண்டல இயக்குனர் முருகேசன் (பாண்டிச்சேரி) உள்ளிட்ட உயர்நிலைக் குழு நேற்று கும்பகோணம், சாரங்கபாணி தெருவில் உள்ள கணிதமேதை ராமானுஜன் வாழ்ந்த இல்லத்திற்கு வருகை தந்து,அங்கிருந்த அவருடைய சிலைக்கு மாலை அணிவித்தார்கள். மேலும் அவர் வாழ்ந்த வீட்டைப் பார்வையிட்டு நன்றாக பராமரிப்பதற்காகப் பாராட்டு தெரிவித்தனர், அவர்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், பேராசிரியர் சுகுமாரன், திரு. காரத்தி, முருகானந்தம், பேரா. நடராஜன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து கணிதமேதை ராமானுஜம் பயின்ற கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்தார்கள்.
அவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியன், பழைய மாணவர் சங்கத்தின் செயலர் சிவகுமார், மோகன், மற்றும்ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவிகள் வரவேற்பு அளித்தனர்.பள்ளி வளாகத்தில் இருந்த கணிதமேதை ராமானுஜன் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்பித்தார் கள்.. பின்னர் ராமானுஜன் பயின்ற வகுப்பறைகளையும், பள்ளியில் இருந்த அவருடைய புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிட்டார். ராமானுஜன் கல்வி பயின்றதற்கான சான்றுகளையும், அவருக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை பற்றிய ஆவணங்களையும், தலைமையாசிரியர் வழங்கினார். அடுத்து கணிதமேதை ராமானுஜம் பயின்ற கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்கு வருகை தந்தார். அவரை கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா, தாசில்தார் வெங்கடேஸ்வரன், கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் தங்கராஜ், ஜெயங்கொண்டம் கல்லூரி முதல்வர் முனைவர் இரமேஷ், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் வரவேற்றனர். கல்லூரி வளகாதிலிருந்த ராமானுஜன் சிலைக்கு மாலையிட்டு, மரக்கன்றையும் நட்டார். பேராசிரியர்கள் ராமானுஜன் குறித்த ஆவணங்களை பொது இயக்குனரிடம் காண்பித்தார்கள். மேலும்,கல்லூரியில் உள்ள தொன்மையான கட்டடத்தில் ராமானுஜன் பற்றிய கண்காட்சி சிறப்பாக அமைவதற்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் முயற்சிகள் எடுக்க கேட்டுக் கொண்டார்கள். நிறைவாக சாஸ்த்ரா பல்கலைக் கழக ராமானுஜன் அருங்காட்சியத்திற்கு வருகை தந்தார்கள். மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், கணித பேராசிரியர் நடராஜன் வரவேற்றனர். வளாகத்தில் இருந்த ராமானுஜன் சிலைக்கு மாலை அணிவித்து, அங்கிருந்த ராமானுஜன் பற்றிய அரிய ஆவணங்கள், புகைப்படங்கள் அடங்கிய அருங்காட்சியகத்தை பார்வையிட்டு, ராமானுஜன் பற்றிய மூல ஆவணங்களை வழங்குமாறு, பல்கலைக் கழக நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டார்கள்.
மத்திய அரசின் தேசிய ஆவணத்துறை இயக்குனர், கும்பகோணத்தில் உள்ள இராமானுஜன் தொடர்புடைய எல்லா இடங்களையும் பார்வையிடுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி பேராசிரியரும், மத்திய அரசின் விஞ்ஞான பிரச்சார ஆலோசனைக் குழு உறுப்பினருமான, பேராசிரியர் முனைவர்,வெ. சுகுமாரன் மற்றும் செ. புதூர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினுடைய தஞ்சை மாவட்டத் தலைவருமான,ச. கார்த்திகேயன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் செந்தில்குமார், ஞானசேகரன், தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர், தி. முருகானந்தம் ஆகியோர் செய்து இருந்தனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment