Skip to main content

Posts

Showing posts from August, 2025

பொன்மார் முதல்நிலை ஊராட்சி போலச்சேரியில் சுதந்திரத்தினத்தையொட்டி நடைபெற்ற மாரத்தான் போட்டி

பொன்மார் முதல்நிலை ஊராட்சி போலச்சேரியில் உள்ள டிஏபிசி தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இந்திய தாய்திருநாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்திலேயே முதல் முதலாக மிக பிரம்மாண்ட மாரத்தான் போட்டியை நடத்திய 09வதுவார்டு கவுன்சிலரும்,திமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக இளைஞரணி துணைஅமைப்பாளருமான போலச்சேரிபி .என்.எஸ் .செந்தில் ! வருகின்ற சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொன்மார் DABC அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் திமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக இளைஞரணி செயலாளரும் பொன்மார் முதல் நிலை ஊராட்சி மன்றத்தின் ஒன்பதாவது வார்டு கவுன்சிலருமான போலச்சேரி பி என் எஸ். செந்தில் ஏற்பாட்டில் வருகிற ஆகஸ்ட் 15 இந்திய தாய் திருநாட்டின் சுதந்திர தின விழாவை ஒட்டியும் மற்றும் போலச்சேரி பகுதி பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும், அதனை பேணிக்காப்பதின் அவசியத்தையும் வலியுறுத்தி நடைபெற்ற போலச்சேரி மாரத்தான்-2025 போட்டியில் 05 வயது முதல் 60 வயது வரை சுமார் 500 க்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி-2025 வெகு விமர்சையாக நட...

போதை பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

    திருப்போரூர்,ஆக. 12  திருப்போரூரில், போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது.திருப்போரூர், தண்டலம் ஸ்ரீ வாணி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை தாளாளர் மலர்விழி துவக்கி வைத்தார். போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்கள் எழுப்பியபடி, பள்ளி மாணவ -- மாணவியர், ஓ.எம்.ஆர்., சாலையில் பேரணி சென்றனர். திருப்போரூர் பேருந்து நிலையத்தில், பேரணி நிறைவடைந்தது.அங்கு, மதுப்பழக்கம், போதை பொருட்களுக்கு அடிமையாதல், தீய பழக்கங்களில் இருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்து, மாணவ - மாணவியர் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர். செய்தியாளர் : மூர்த்தி

ஈரோடு மாவட்டத்தில் போதைப்பொருட்களை தடுக்க 249 வழக்குகள் பதிவு... 107 கடைகளுக்கு சீல்

ஈரோடு. ஆக.13- ஈரோடு மாவட்டம் சித்தோடு ஐஆர்டிடி அரசு பொறியியல் கல்லூரியில் போதைப் பொருட்கள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, ஈரோடு மாவட்டத்தில் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து பள்ளி கல்லூரி மாணவ மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சித்தோடு ஐஆர்டிடி அரசு பொறியியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் உபயோகத்தை கட்டுப்படுத்துவதற்காக 16 வகையான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் கொடுத்த தகவல்களின் பேரில் உரிய விசாரணை நடத்தி 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததற்காக 107 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. என்றார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து துற...

கூடாரம் அமைத்து தங்கிவழிபடும் மக்கள்

  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வெளிமாவட்ட பக்தர்கள் காப்புகட்டி கூடாரம் அமைத்து தங்கி விரதம் இருந்து வருகின்றனர். திருவிழாவை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் உட்பட 2000 பக்தர்களுக்கும் மேல் காப்பு கட்டி விரதம் இருந்து வருவது வழக்கம். பக்தர்கள் ஆடி முதல் தேதி காப்பு கட்டி விரதம் இருந்து வருகின்றனர். சென்னை, மதுரை, விருதுநகர், சிவகங்கை தூத்துக்குடி தேனி நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காப்பு கட்டி கோயில் அருகே கூடாரம் அமைத்து தங்கி விரதம் இருந்து வருகின்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: சந்தன மாரியம்மன் ஆடி திருவிழாவிற்கு கடந்த பல ஆண்டுகளாக மாலை அணிந்து நேர்த்திகடன் செலுத்தி வருகிறோம். இந்த ஆண்டும் ஆடி முதல் தேதி மாலையிட்டு கோயில் அருகே கூடாரம் அமைத்து விரதம் இருந்து வருகின்றோம். கோயிலின் விசேஷமாக மாலை அணிவித்து கோயில் அருகே தங்கி இருப்பதால் தங்களது நேர்த்திகடன் நிறைவேறும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மாலை அணிவிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித...

நல்லூர் சுங்கச்சாவடி அலுவலகத்தை முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் தலைமையில் பாமகவினர் முற்றுகைப் போராட்டம்

  செங்குன்றம் அருகே சுங்கச்சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டுமுன்னாள் பாமக எம்எல்ஏ போராட்டம். மாநாட்டிற்கு சென்று திரும்பிய வாகனங்களுக்கு நள்ளிரவில் சுங்ககட்டணம் கேட்டு அனுமதிக்க மறுத்ததால் வாக்குவாதம். வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஞாயிறன்று பூம்புகாரில் மகளிர் மாநாடு அக்கட்சி நிறுவன தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. மாநிலம் முழுவதிலும் இருந்து வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டிற்கு கட்சி நிர்வாகிகள் வாகனங்களில் சென்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பாமக முன்னாள் எம்எல்ஏ ரவிராஜ் தலைமையில் அக்கட்சியினர் செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மாநாட்டிற்கு சென்று விட்டு நள்ளிரவில் திரும்பிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் கேட்டு சுங்கச்சாவடி ஊழியர்கள் அடாவடி செயலில் ஈடுபட்டதாகவும், வாகனத்திலிருந்த பெண்களை ஆபாசமாக பேசியதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து கட்சி மாநாடு...

ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் காரனோடை அருகே ஆத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் 21ம் ஆண்டு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் 15 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆலய தலைவர் வி.ஏ.செல்வம் தலைமையில் நடைபெற்ற திருவிழாவில் ஆலய இளைஞர் குழு தலைவர் வீரபத்திரன் முன்னிலை விகித்தார். முன்னதாக கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி வெள்ளிக்கிழமை காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் வாடை பொங்கல், திருவிளக்கு பூஜை, பூக்கூடை ஊர்வலம், சிவன் பார்வதி திருக்கல்யாணம், முளைப்பாரி ஊர்வலம், ஸ்ரீ சிவன் பார்வதி திருவீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 10 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி அளவில் அம்மன் தீச்சட்டி கரகம் ஏந்தி மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்துடன் குளக்கரையில் இருந்து புறப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர். இதில்  ஆலய விழா குழுவினர்கள் எஸ்.ரவி விஜயா, என்.ராஜமாணிக்கம் விமலா, பி.மாடசாமி விஜயலட்சுமி, பாபு தரணி, முனியேந்திரன் வசுமதி, பாண்டியன் லதா, விஜயன் ரங்கநாயகி, ம...