தையூர் முதல்நிலை ஊராட்சி பொருாளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ள ஓரு ஏழைக் குடும்பத்திற்கு ரூ. 5,00,000 இலட்சம் மதிப்பில் புதிய வீடு .! தனது சொந்த செலவில் கட்டி தர உள்ள MR .ஜனார்த்தனன் பூமி பூஜை துவங்கி வைத்தார்..
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தையூர் முதல்நிலை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட இளவந்தாங்கல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் வசித்துவருபவர் வீரராகவன் அவரது மனைவி ஈஸ்வரி இவர்களுக்கு இரண்டு,மகன்கள் உள்ளனர்கள் . வீரராகவன் அருகில் உள்ள தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி வேலை செய்துவருகிறார். பொருாளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள இவர் இங்கு கட்டிடங்களுக்கு நடுவே ஓலைக்குடிசையில் வசித்துவருகிறார். இவரதுநிலையை தனது கட்சியினர்கள் மூலம் கேட்டறிந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி திருப்போரூர் ஒன்றியம் OMR ஜில்லா MR.ஜனா (எ) ஜனார்த்தனன் இவர்களுக்கு சிலநாட்டுகளுக்கு முன்பு ஆதரவு தெரிவித்து விரைவில் தங்களுக்கு ஓர்நற்செய்தி கூறுவதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து யாரும் எதிர்பாராதவகையில் கடந்த சனிக்கிழமையன்று கட்சியின் மாநிலத்தலைவர் விஜய் அவர்களின் 50வது பிறந்தநாளையொட்டி மாநிலப்பொதுச்செயலாளர் புஸ்ஸிN.ஆனந்த் அறிவுறுத்தலின்படியும் , செங்கல்பட்டு மாவட்ட தலைவர் செங்கை சூரியநாராயணன் வழிகாட்டுதலின்படியும் வீரராகவன் ஈஸ்வரி குடும்பத்தினர்களுக்கு புதியகட்டிடவீடு கட்டும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி சனிக்கிழமை மதியம் அவர்களது இல்லத்தில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் தையூர் ஊராட்சி இளவந்தாங்கள் பகுதி கிளை தலைவர் ஸ்டீபன் ,கிளை செயலாளர் E.சிவா,கிளை கௌரவ தலைவர் ஆனந்த், கிளை பொருளாளர் K.கௌதம்,கிளை உறுப்பினர்கள்: வேலு,கேளி,பாபு,ராஜா,விமல், செந்தில், நாகராஜ், பிரசாத்,வினோத்,கார்த்தி, வீரமுத்து, சுரேஷ், சுபாஷ்,ராஜேஷ்,விஜய், சுபாஷ்,மணி, கிஷோர், பாலாஜி,நரேஷ்,தமிழ், பிரவீன்,தீபக், ஹரி,தீனா,அஜய்,ராஜேஷ், பிரவீன், அஸ்வின்,விக்கி, ஐயப்பன், பாலாஜி,மணி, தருண், வெற்றி,இம்மான், சச்சின், சாம்,மணி,லியோ ஆகியோர்கள் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட திருப்போரூர் ஒன்றிய OMRஜில்லா MR .ஜனா (எ)ஜனார்த்தனன் கலந்துகொண்டு தலைமை தாங்கினார் . வீரராகவன் குடும்பத்தினர்கள் பூமிபூஜையில் கலந்துகொண்டு தங்களது புதியவீடுகட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கிவைத்து கண்ணீருடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதுகுறித்து இளவந்தாங்கல் கட்சியினர்கள் கூறுகையில் அண்ணன் OMR ஜில்லா MR . ஜனா (எ) ஜனார்த்தனனிடம் இவர்களின் நிலைமையை எடுத்துக்கூறினோம் உடனடியாக நேரில் வந்துபார்த்து விரைவில் நல்லதொரு முடிவு காணப்படு்ம் என்று தெரிவித்தார் . நாங்களும் அப்படியே இதனை விட்டுவிட்டோம் ஆனால் அண்ணன் ஜனா அவர்கள் இதனை மனதில் அப்படியே வைத்து எங்கள் தலைவர் பிறந்தநாளில் இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளார் .
மொத்தம் ரூபாய்,500,000இலட்சம் மதிப்பில் மதிப்பில் இந்தபுதிய வீட்டினை ஜனா அண்ணன் அவர்கள் தனது சொந்த செலவில் கட்டிமுடித்து விரைவில்இக்குடும்பத்தின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து தரயுள்ளார் என்று தெரிவித்தார். இதுகுறித்து வீரராகவன் குடும்பத்தினர்கள் கூறுகையில் எங்களின் நிலையை கண்டு நாங்கள் கேட்கமாலேயே வீடுகட்டி தரயுள்ள தம்பி ஜனா அவர்களுக்கு நாங்கள் என்றும் நன்றி கடன்பட்டுள்ளோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்கள். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இளவந்தாங்கல் கிளை நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து செய்திருந்தனர்கள் . செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்திலேயே முதலவதாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச்சேர்ந்த நிர்வாகி ஓருவர் தனது சொந்தசெலவில் ஓரு ஏழ்மையான குடும்பத்திற்கு வீடுகட்டிதரயுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் .
செய்தியாளர் மூர்த்தி

Comments
Post a Comment