திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நலத் துறை- (அமலாக்கம்) சார்பில் நுகர்வோர் சங்கங்கள் உடனான காலாண்டு கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் 24.06.2024 திங்கள் அன்று மாவட்ட தொழிலாளர் துறை உதவி ஆணையர் அ. ஜெயக்குமார் (அமலாக்கம்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களின் நிர்வாகிகள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். மேலும் இதில் பல்லடம் தாலூக்கா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் தலைவரும் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் கூட்டமைப்பின் ஓருங்கிணைப்பளருமான மணிக்குமார் பேசுகையில், மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் ஏஜென்சிகளில் பெட்ரோல் டீசல் நிரப்புகையில் லிட்டருக்கு 100 மிலி வரையில் எடைஅளவு குறைக்கப்படுவதாகவும் , எடையளவு ,விலை விபரம் காட்டும் வாகன எரிபொருள் விநியோகி மெஷினில் குழறுபடி செய்து ஏமாற்றுவதாகவும் புகார்கள் எழுகிறது. எனவே பெட்ரோல் பங்குகளில் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
மளிகைக்கடை,டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் பேக்கரி , ஹோட்டல்களில் பொட்டலங்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவு பொருட்களில்,டீ காபி உணவு பண்டங்களில் எடையளவு குறைபாடு உள்ளது. கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு நுகர்வோர்களின் பணத்தை சுரண்டி ஏமாற்றுவதாகவும் , தொடர் புகார்கள் எழுகிறது.இதன் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மேற்படி கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர் விற்பனையாளர்களுக்கு பல இடங்களில் ESI,PF விடுமுறை சம்பளம் உள்ளிட்ட சட்ட உரிமை காப்பீடுகள் அமல் படுத்துவதில்லை இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக பல்லடம் நகரப் பகுதிகளில் உள்ள பழங்கள் காய்கறி கடைகள் , ஹோட்டல்கள்,பேக்கரி மளிகை கடை டிபார்ட் மென்டல் ஸ்டோர்களில் அடிக்கடி ஆய்வு செய்து பொட்டல பொருட்களின் எடையளவு விலை மற்றும் எடையளவு கருவி களை பரிசோதித்து முறைகேடு செய்யும் வியாபாரிகள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்து வலியுறுத்தப்பட்டது.
செய்தியாளர் கோவிந்தராஜன்

Comments
Post a Comment