தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, சென்னை வடகிழக்கு மாவட்ட கழக செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமையில், மாதவரம் தொகுதி, வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானூர் ஊராட்சி ஆரிக்கம்பேடு அரசு பள்ளியை ஆய்வு செய்தும், கணபதி நகர் பகுதியில் நூறு நாள் வேலை செய்யும் பெண்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து பிஸ்கட், குளிர்பானங்களை வழங்கினார்.
வில்லிவாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மோரை கோ.தயாளன், மாவட்ட கவுன்சிலரும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளருமான மோரை மு.ச திஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெள்ளானூர் ஊராட்சி மன்றத் தலைவர் அ.பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார்.
இதில் வில்லிவாக்கம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, மாவட்ட ஒன்றிய துணைச் செயலாளர்கள் குணா தயாநிதி, ஏ.ராமதாஸ், மாவட்ட பிரதிநிதி பம்மதுகுளம் வி.பி. அண்ணாதுரை, கிளைச் செயலாளர் புனிதவேல், இளைஞரணி வடிவேல், சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரிய - ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் ரூபாய் 1000 வழங்கியதற்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் சம்பளத்தை உயர்த்தியமைக்காகவும் தமிழ்நாடு முதல்வருக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment