Skip to main content

டெல்டாபாசனத்திற்கு காவிரியில் தண்ணீர் விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், தமிழ்நாடு விவசாய சங்கங்கள் ரயில் மறியல் போராட்டம்.!

காவிரி டெல்டாவில் சுமார்,15- லட்சம் ஏக்கரில் குருவை மற்றும் சம்பா சாகுபடிகள் நடந்து வந்துள்ளன.காவிரியில் சரியாக தண்ணீர் வராததாலும், பருவ மழைகள் அடிக்கடி பொய்த்துப் போவதாலும் குருவை,தாளடி,        சம்பா சாகுபடிகள் தொடர்ச்சியாக பாதித்து வருகின்றன. இந்த நிலையில் காவிரி ஆணையம், ஒழுங்காற்று குழு முடிவின்படி காவிரியில் தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டது .ஆனால் கர்நாடக அரசு தங்கள் அணைகளில் நீர் இருப்பு போதுமானதாக இல்லை என்ற பொய்யான காரணத்த்தைக்கூறி காவிரியில் தண்ணீர் விட மறுத்து விட்டது. காவிரியில் தண்ணீர் விடுவது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவையும் கர்நாடகா அரசு மதிக்கவில்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களின் குடிநீர் தேவையை கருதியும், குருவை மற்றும் சம்பா சாகுபடிக்கான வேலைகளுக்காகவும் கர்நாடக அரசு ஏற்கனவே மாதம் தோறும் தரவேண்டிய சுமார் 41 டிஎம்சி தண்ணீரை தர வலியுறுத்தியும்,    காவிரி ஆணையம், ஒழுங்காற்று குழு முடிவின்படியும் தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விடவும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவும் ,ஒன்றிய பாஜக அரசு,கர்நாடக அரசின் அடாவடித்தனத்தை கண்டித்தும், நியாயமான முடிவுகளை கர்நாடக நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாய சங்கங்கள் இன்று காலை 11-மணிக்கு தஞ்சாவூரில் வாஸ்கோடகாமா- வேளாங்கண்ணி ரயிலை மறித்த தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர் .

ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 12- பெண்கள் உள்ளிட்டு 76- பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்,சாமி. நடராஜன், மாநில நிர்வாக குழு உறுப்பினரும் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான,           கே. உலகநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர், ஆர்.இராமச்சந்திரன், தேசியக் குழு உறுப்பினர் அ.பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர், என்.வி.கண்ணன், மாவட்ட பொருளாளர் எம்.பழனிஅய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரயில் மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, மாவட்ட துணை செயலாளர் கோ.சக்திவேல், பொருளாளர் கோ.பாஸ்கர், ஒன்றிய குழு நிர்வாகிகள் குணசேகரன், ராமலிங்கம், ஐயாராசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர்  எம்.வடிவேலன், சரவணன், என் .குருசாமி , கரிகாலன், விவசாய சங்க  தஞ்சை ஒன்றிய செயலாளர் ஞானமாணிக்கம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.பக்ரசாமி, நிர்வாகக்குழு உறுப்பினர் கோவிந்தராஜன், பூதலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், மாவட்ட துணைத் தலைவர் தமிழரசன், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் சுரேஷ் குமார், தலைவர் கோவிந்தராஜ், வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கோ.ஜெய்சங்கர், நிர்வாகிகள்            தமிழ் முதல்வன் ,சிவா.தமிழ்நீதி, வீராசாமி , முருகானந்தம், வெற்றி மாதர் சங்கங்கள் சார்பில், மாவட்ட செயலாளர் கலைச்செல்வி, மாநில நிர்வாகி தமிழ்ச்செல்வி, நிர்வாகிகள் வசந்தி, கண்ணகி,முத்துலட்சுமி, சீதையம்மாள்,       ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர்t வெ.சேவையா,    மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் ஆகியோர் ரயில் மறியலில் பங்கேற்று கைதாகினர்.


செய்தியாளர் வேங்கை குணா

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...