தஞ்சாவூர் அக்ரோ சிட்டி லயன்ஸ் சங்க,. 14-ஆம் ஆண்டு பணியேற்பு விழா, தஞ்சை கோல்டன் ஜூப்ளி ஹாலில், 21.7.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை, 6:30- மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் அக்ரோ சிட்டி லயன்ஸ் சங்க தலைவர்,எஸ். சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட இரண்டாம். துணை ஆளுநர், விஜயலட்சுமி சண்முகவேல், புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி அவர்களை வாழ்த்தி சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில்: புதிய பொறுப்பாளர்களாக பதவி ஏற்றுக்கொண்ட நீங்கள், லயன்ஸ் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் இச்சங்கம் முன்னோடி சங்கமாக விளங்க உங்களுடைய உடல் உழைப்பை பயன்படுத்தி இச்சங்கத்திற்கு புகழை சேர்க்க வேண்டும். லயன்ஸ் சங்க கூட்டத்திற்கு வரும் அனைவரும், லயன்ஸ் பேஜை அணிந்து வர வேண்டும். லயன்ஸ் சங்கத்தினுடைய நிகழ்ச்சிகளில் அணிவிப்பதை தவிர்த்து, இனி வரும் காலங்களில் அதற்கான தொகையினை சங்கத்திற்கு வழங்கினால், இது சங்கத்தின் வளர்ச்சிக்கு பேர் உதவியாக இருக்கும் என இதனைஒரு கோரிக்கையாக வைக்கின்றேன். என இவ்வாறு கூறினார். டாக்டர்.டி. ஸ்டாலின் புதிய உறுப்பினர்களை இணைத்து அவர்களை வாழ்த்தி, சிறப்புரை வழங்கினார். என். சண்முகவேல் சேவை திட்டங்களை வழங்கி பாராட்டுரையாற்றினார், சிறப்பு விருந்தினர்,கே. பிரேம், எ. கருணைக்கடல் ஆகியோ சிறப்புரை ஆற்றினர். கே. ராஜ்குமார்,டி. ராஜ்குமார், நல்லாசிரியர்,ஆர்.செளரி,எம்.ஜே. முகமது இர்பான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மண்டல ஒருங்கிணைப்பாளர்களான: ஜே.இளங்கோவன், டி.எஸ்.சந்தோஷ்.கே.ஆர். பாண்டியன், கே. கலைச்செல்வன், கே. குட்டியப்பன், என். சுரேஷ்குமார், டாக்டர். எஸ்பி.கணபதி,எஸ். விஜயகுமார், எஸ். ரமேஷ்,கே. எழிலரசி ஆகியோர்களும் புதிய பொறுப்பாளர்களை வாழ்த்தினார்கள்.
2024-25-ஆம் ஆண்டிற்கான புதிய பொறுப்பாளர்கள்,எம். இராஜ்குமார், தலைமையில் பதவி ஏற்றுக்கொண்டனர். புதிய தலைவராக, எம். இராஜ்குமார், செயலாளர்,கே. சிறைச்செல்வன், பொருளாளர்,ஆர். குலோத்துங்கன், நிர்வாக அலுவலர், டாக்டர். இ. கார்த்திகேயன், உடனடி முன்னாள் தலைவர், எஸ். சித்தார்த்தன்,முதல் துணைத்தலைவர், டாக்டர். யூ.ஜோசப், இரண்டாம் துணைத் தலைவர்,வி. கவிக்குமார், சங்க நெறியாளர்,ஜே. இளங்கோவன் ஆகியோர்கள் பதவி. ஏற்று கொண்டனர். இயக்குனர்களாக:ஜே. இளங்கோவன், டாக்டர். யூ.ஜோசப், எஸ்.சித்தார்த்தன், டாக்டர். இ. கார்த்திகேயன், ஆகியோர்களும், ஒருங்கிணைப்பாளர்களாக: ஜோஸ்பைன் அனோசிட்டா, ஒருங்கிணைப்பாளர் கே. விக்னேஷ், ஒருங்கிணைப்பாளர் கே. இராஜசேகர், ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.எஸ்.சுதர்சன், தகவல் தொடர்பு(PRO) வி. தமிழ்ச்செல்வன், ஜே.வி. கீதா, அடக்குநர்,வி. ச லூமன் சங்கீத் ஆகியோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் அனைத்து சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் இச்சங்கத்தினுடைய இந்நாள், முன்னாள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள்,மற்றும் உறவினர்கள், நண்பர்கள் , திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். புதிய தலைவர், எம். இராஜ்குமார் அவர்கள் தன்னுடைய பிறந்தநாளில் பதவி ஏற்றுக் கொண்டிருப்பது, எல்லோருக்கும் கிடைக்கப் பெறாத சிறப்பு என்று சொல்லப்பட வேண்டும். நீ ஒரே நேரத்தில் புதிய தலைவராக பணி ஏற்றுக்கொண்டும், தன்னுடைய பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இது எல்லோருக்கும் கிடைக்கப்பெறாத வாய்ப்பு என்றேச் சொல்லப்பட வேண்டும். நிகழ்ச்சி நிறைவாக அவருடைய பிறந்த நாளை, கேக் வெட்டி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment