கேளம்பாக்கம் திருவள்ளூவர் கல்வி மன்றம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மூன்று அரசுப்பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர்.!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் நேற்று கல்வி கண்திறந்த காமராஜரின் 122வது பிறந்தநாளையொட்டி கேளம்பாக்கம் ஊராட்சி மன்றம், கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் திருவள்ளூவர் கல்வி மன்றம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் என்னும் தலைப்பில் கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் மூன்று அரசுப்பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை சீர்வரிசையாக வாகனங்களில் எடுத்துச்செல்லும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியானது வண்டலூர் செல்லும் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கேளியம்மன் கோவில் எதிரே அமைந்துள்ள அன்னை சமுதாய நலக்கூடத்திலிருந்து துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு கேளம்பாக்கம் சாத்தாங்குப்பம் விரிவாக்கப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் எக்ஸ்பிரஸ் எஸ்.எல்லப்பன் தலைமை தாங்கினார். கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் திருவள்ளூவர் கல்வி மன்றத்தின் நிறுவன இயக்குனர் கா.கோ.பழனி முன்னிலை வகித்தார் . ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாஸ்கரன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ராணிஎல்லப்பன் கலந்துகொண்டு கல்வி சீர்வரிசை கொண்டு செல்லும் வாகனத்தை கொடியசைத்து துவங்கிவைத்து பொதுமக்கள் கல்வியாளர்கள் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுடன் ஊர்வலமாக நடந்துச்சென்றார். இந்தஊர்வலமானது வண்டலூர் சாலையிலிருந்து ஓஎம்ஆர்வழியாக திரும்பி கோவளம் செல்லும் சாலை அருகே அமைந்துள்ள அரசினர்கள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றடைந்தது அங்கு தலைவர் ராணிஎல்லப்பன் முதலவதாக கல்விசீர்வரிசையாக 04பீரோ , 1000லிட்டர்சுத்திகரிப்பு செய்யக்கூடிய ஆர்ஓபிளாண்ட் , 15நாற்காலி , 40டியூப்லைட் , 01பெரியஸ்பீக்கர் ஆகியவற்றுடன் திருவள்ளூவர் சிலையை வழங்கினார். இதனைத்தொடர்ந்து அருகில் பெண்கள் அரசினர் மேல்பள்ளக்கு ஊர்வலமாக சென்று சாத்தாங்குப்பம் குடியிருப்போர் நலச்சங்கத்தலைவர் எக்ஸ்பிரஸ்.எஸ்.எல்லப்பன் அங்கிருந்த தலைமையாசிரியையிடம் கல்வி சீர்வரிசையாக ஸ்டீல் பீரோ 02 ,மரபீரோ 02 , டியூப்லைட் 40 , சீலிங்பேன் 10 ஆர்ஓபிளாண்ட் 01 , சின்டெக்ஸ்டேங்க் 02 ,01பெரியஸ்பீக்கர் , மரபெஞ்ச் 02 ஆகியவற்றை வழங்கி வாழ்த்துதெரிவித்தார்.
இறுதியாக ஓஎம்ஆர் சாலை அருகே இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் திருவள்ளூவர் கல்வி மன்றத்தின் நிறுவனத்தலைவர் கா.கோ.பழனி அவர்கள் சுமார் 350மாணவர்களுக்கு ஸ்டீல் டிபன்பாக்ஸ் ,வாட்டர் பாட்டில் இரண்டு நாற்காலி ஆகியவற்றை வழங்கிவாழ்த்து தெரிவித்தார். மூன்று பள்ளிகளிலும் சுமார் 11.80 இலட்சரூபாய் மதிப்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் கேளம்பாக்கம் ஊராட்சி வார்டு உறுப்பினர் உமர் , திமுக கட்சியைச்சேர்ந்த சுக்கூர் , முகம்து சுல்தான் உள்ளிட்டவர்களுடன் பொதுமக்கள் கல்வியாளர்கள் மனவளக்கலை மன்றத்தினர்கள் திரளாக கலந்துகொண்டனர்கள் . இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருவள்ளூவர் கல்வி மன்றத்தின் நிறுவனத்தலைவர் கா.கோ.பழனி அனைவரையும் ஒருங்கிணைத்து செய்திருந்தார். செங்கல்பட்டு மாவட்டத்திலேயே முதன்முதலவாக காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடி மூன்று பள்ளிகளுக்கு பலஇலட்சம்மதிப்பில் கல்வி உபகரணங்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவரை அனைத்து தரப்பினர்களும் வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்கள்.
செய்தியாளர் மூர்த்தி

Comments
Post a Comment