Skip to main content

மத்திய-மாநில அரசு பணிகள் மற்றும் பொதுத்துறை பணிகள் அனைத்தும் தமிழ்நாட்டவர்க்கே வழங்க வேண்டும்.! சிபிஐஎம்எல் மக்கள் விடுதலை தஞ்சையில் பரப்புரை

நாடு விடுதலை பெற்ற பிறகு மத்தியில் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்ட அதிகாரம் படிப்படியாக குறைக்கப்பட்டு, அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசே பறித்துக் கொண்டது. ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு நீட் தேர்வால் பறிபோனது. காவிரி நதிநீர் பிரச்சனைக்கு இன்றளவும் தீர்வு ஏற்படாதது, ஜிஎஸ்டி  வரி கொள்கையில் மாநிலங்களின் வருவாய் பறிபோனது, மாநில பட்டியலில் உள்ள கல்வியை பொதுப் பட்டியலுக்கு கொண்டு சென்று அந்தெந்த மாநில அரசுகளே கல்வி கொள்கையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பறித்துக் கொண்டது உள்ளிட்டு அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகிறது.

தற்போது  ஒன்றிய பிஜேபி அரசின் ஆட்சியில் கடந்த,10- ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மத்திய அரசு நிறுவனங்கள், மாநில அரசு நிறுவனங்களின் பணிகள் மற்றும் பொதுத்துறைகளின் பணிகளில் குறிப்பாக ரயில்வே, வங்கி, நிலக்கரி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில்  வட மாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகமாகி வருகிறது, தமிழ்நாட்டு இளைஞர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய நிலைமையிலே உள்ளனர். இந்த நிலையில் மற்ற மாநிலங்களில் அந்த மாநிலங்களின் இளைஞர்களுக்கே வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று  சட்டம் நிறைவேற்றியது போன்று, தமிழ்நாடு அரசும் மத்திய,மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணிகள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கே  வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் இயற்ற படவேண்டும்.

 கடந்த 2016-ல் அண்ணா திமுக ஆட்சிக்காலத்தில்,வெளி மாநிலத்தவர்களும் தேர்வு எழுதி மாநில அரசின் பணிகளில் சேரலாம் என்ற சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. 2021-தேர்தல் காலத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் அரசு பணிகளில் வேலைக்கு சேரலாம் என்ற சட்டத்தை திரும்ப பெறுவோம் என, திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால்  தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், தமிழ்நாட்டின் அரசு பணிகளில் வெளி மாநிலத்தவர்கள்,மாநில மொழியான தமிழ் மொழியில் படித்து தேர்ச்சி பெற்று பணிகளில் சேரலாம் என்று திமுக அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்து இளைஞர்களுக்கு வேதனை அளித்துள்ளது. அதிமுக,திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த இந்த இரண்டு சட்டங்களையும் தமிழ்நாடு அரசு உடனே திரும்பப் பெற வேண்டும், நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் வெற்றி பெற்ற, 40- நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் நாட்டரசின் மத்திய, மாநில அரசு பணிகள், பொதுத்துறை நிறுவனங்களின் வேலைகள் அனைத்தும் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற அதிகாரத்தை நாடாளுமன்றத்தில் வாதாடி பெற வேண்டும் என, வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி மாலெ மக்கள் விடுதலை சார்பில் மாநிலந் தழுவிய பரப்புரை இயக்கம் இன்று 23.07.2024 செவ்வாய்க்கிழமை காலை 10- மணிக்கு தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை முன்பு நடைபெற்றது. 

பரப்புரை இயக்கத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி மா-லெ மக்கள் விடுதலை மாநில துணைத்தலைவர் இரா.அருணாச்சலம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தமிழ் மாநில பொதுச் செயலாளர் கசி.விடுதலைக்குமரன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாநில துணை பொதுச் செயலாளர் இராமர், திருச்சி மாவட்ட செயலாளர் கவிஞர் பாட்டாளி, தஞ்சை மாவட்ட செயலாளர் சா.செந்தில்குமார், நிர்வாகிகள் வி. பாஸ்கர், ராதாகிருஷ்ணன், பாண்டியன், ப.ஜோதிவேல்,  இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், சமூக ஆர்வலர்கள் ஏகலைவன், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


செய்தியாளர் வேங்கை குணா

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...