வங்கி தேசியமாக்கள் தினத்தை முன்னிட்டு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையின் சார்பில் தஞ்சாவூர் மேக்ஸ் விஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவசக் கண் பரிசோதனை முகாம் 19.07.2024 அன்று பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெற்றது. மதிப்புயர் பதிவாளர் முனைவர் சி.தியாகராசன் அவர்களும் பாங்க் ஆஃப் இந்தியா (BOIOASZ) தலைவர் திரு.மணிவண்ணன் அவர்களும் தலைமையேற்று இலவச கண்பரிசோதனை முகாமைத் தொடங்கி வைத்தனர்.
பதிவாளர் அவர்கள் கூறியதாவது கண்ணின் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் ஒளித்திறனைப் பாதுகாக்கும் பொருட்டு தொலைக்காட்சிப்பெட்டி, கைப்பேசி ஆகியவற்றை அதிக நேரம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டுமெனவும் கண்பரிசோதனையின் அவசியத்தையும், கண்தானத்தின் சிறப்புகளையும் விளக்கிக் கூறினார். மேலும் பாங்க் ஆஃப் இந்தியா முதன்மை மேலாளர் திரு.ஜகஸ்பிரியன், கிளை மேலாளர் செல்வி கவிப்ரியா மற்றும் அலுவலர் திரு விக்னேஷ் மணிவண்ணன், மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சு.முருகன், வங்கி ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். பல்கலைக்கழகக் கல்வியாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment