தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, 17வது வட்டம், வட பெரும்பாக்கம் பகுதியில் முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட பகுதி நேர ரேஷன் கடையை முழு நேர ரேஷன் கடையாக மாற்றி தமிழக அரசு ஆணை வழங்கியதையடுத்து ரேஷன் கடை திறப்பு விழா வடபெரும்பாக்கம் பகுதியில் நடைபெற்றது.
சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரேஷன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் எம்.நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர் கே.கருணாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment