தேனி மாவட்டம், கேரள செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பழக்கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்பனைசெய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இது சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் இருந்து போலீசார் விரைந்து சென்று அப்பபகுதிகள் சோதனையிட்டனர் . அப்பொழுது முல்லைப் பெரியாறு ஆற்றின் பாலத்திற்கின் கீழ் திராட்சை கழிவுகள் மற்றும் கருப்பட்டி போன்ற ரசாயன பொருட்களுடன் மறைத்துவைத்திருந்த சுமார் 80 லிட்டர் அளவிலான கள்ள சாராயம் கைப்பற்றப்பட்டது. இதில் அப்பகுதியில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு 200, 300 என விற்றது தெரிய வந்தது. இதை அடுத்து கூடலூர் காலனி பகுதியை சேர்ந்த சந்திரன் மற்றும் அவருடைய மனைவி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் பிரபு

Comments
Post a Comment