திண்டுக்கல் அருகில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் வருகை தருகிறார். முன்னதாக 11-ந்தேதி காலையில் கரூரில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
அதனை தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் திண்டுக்கல் வருகை தருகிறார். முதலமைச்சருக்கு திண்டுக்கல் மேற்கு, கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்ட எல்லையான வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டியில் அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மாநகர, நகர பகுதி பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். திண்டுக்கல் வருகை தரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் செந்தில்குமார் ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்: அரியநாயகம்

Comments
Post a Comment