செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில், தேசிய அளவிலான தொழில்நுட்ப மேலாண்மை விழாவான ‘ஆரூஷ்’ 16வது பதிப்பின் தொடக்க விழாவில், ஹோமிபாபா நேஷனல் இன்ஸ்ட்டியூட் நிறுவனர் டாக்டர் அனில் ககோட்கர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். இந்த டெக்னோ மேனேஜ்மென்ட் ஃபெஸ்ட் , இன்று முதல் தொடங்கி இந்த மாதம் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நான்கு நாள் விழாவில் நாடு முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் புகழ்பெற்ற நபர்களின் உரை, பயிற்சிபட்டறைகள், தொழில் முனைவோர் உச்சிமாநாடு, தொழில்துறை மாநாடு, மற்றும் கண்காட்சிகள் நடைபெறும்.
உலக புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டாண்ட்ஃ போர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் நிறைய புதிய படைப்புகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இந்தியாவிலும் அதேபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். நமது நாடு சிறந்த நிறுவனங்களின் தாயகமாகும், அவர்களில் சிறிய சதவீதத்தினர் இதுபோன்ற செயல்களை மேற்கொண்டாலும், நாம் நிறைய அதிசயங்களை சாதிக்க முடியும் என கூறினார்.
புதுமை மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதில் அதிக பங்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார். சிறந்த கருத்துக்களைக் கற்று, அவற்றை நிலையான முயற்சிகளாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என கூறிய எஸ்.ஆர்.எம் நிறுவனர் T.R.பாரிவேந்தர், அனில் ககோட்கருக்கு நினைவு பரிசினை வழங்கி கெளரவித்தார். மேலும் இந்நிகழ்வில் பதிவாளர் பொன்னுசாமி, டாக்டர் லெப்டினன்ட் கர்னல் ரவிக்குமார், எஸ்.ஆர்.எம் துணைவேந்தர் ரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: துஷால்


Comments
Post a Comment