கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் 102-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அசைவ அன்னதானத்தை கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி துவக்கி வைத்தார்
ராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் 102-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,இன்று புதன்கிழமை மாலை 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரறிஞர் அண்ணா திடலில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இவ்விழா திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமையில், அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, ராஜகண்ணப்பன் முன்னிலையில், கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஐ.லியோனி மற்றும் கழக வழக்கறிஞரணி இணைச் செயலாளர் சூர்யா வெற்றி கொண்டான், மாநில மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்,நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்
விழாவில் கழக மூத்த முன்னோடிகள் 102 பேருக்கு பொற்கிழி வழங்குதல், விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரம், 5000 ஏழை எளியோருக்கு வேஷ்டி, சேலைகள், சலவை தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி, சிகை அலங்காரக் கலைஞர்களுக்கு உபகரணங்கள் மற்றும் மரக்கன்று வழங்குதல், 5000 பேருக்கு அசைவ அன்னதானம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. முன்னதாக இன்று மதியம் பொதுமக்களுக்கு அசைவ அன்னதானத்தை கழக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி துவக்கி வைத்தார். அவருடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர். மேலும் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் செய்து வருகிறார்.
செய்தியாளர் அசோக்குமார்

Comments
Post a Comment