தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வந்த பாலவிநாயகர் கோவில் தெரு,T.N.புதுக்குடி,புளியங்குடியை, சார்ந்த செண்பகவல்லி என்ற முதியவர் ஒருவர் தன் இரு மகனுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார் அதில்,சுமார் 40 வருட காலமாக புறம்போக்கு இடத்தில் மண்குடிசை கட்டி வசித்து வருவதாகவும் அந்த வீட்டில் உடல் ஊனமுற்ற மகள், காசநோய் வாய்ப்பட்ட கணவர் என மிகவும் வறுமையில் வயிற்று பிழைப்பு இன்றி வாழ்ந்து வருவதாகவும்.
இந்நிலையில் என்வீட்டின் மேல்புறம் உள்ள சக்திமாரியம்மன் கோவிலை விரிவுபடுத்தி கட்டிடம் கட்டி வருகின்றனர். அதனால் தெருவில் உள்ள கழிவுநீர் ஓடை அடைத்ததாகவும் பலமுறை மனு கொடுத்ததாகவும் தெரிவித்தார். என் வீட்டை இடிப்பதற்காக பரமசிவன், ஆவணி, பழனிச்சாமி , பாலசுப்பிரமணியன் கண்ணன், கார்த்தி, கணேசன், திருமலைச்செல்வி கவுன்சிலர், பாலமுரு கன்கவுன்சிலர் சகோதரர், மேலும் சிலர்
என்வீட்டை காலி செய்யவும் சொல்லுகின்றனர் எனவும் மனுகொடுத்திருந்தேன் தற்போது வரை என் மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கத்தில போர் குழாய் குடிதண்ணீர் பயன்படுத்தி வந்தேன் அந்த குழாய் உடைத்தனர். அதுவும் சரிசெய்யப்பட்டவில்லை.
சுமார் 2 வருடகாலமாக தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தேன் இதனால் என் கணவருக்கு மிகவும் மன உளைச்சலால் உடல் நிலை மிகவும் மோசமானது. அவரை நான் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது அவசர அவசரமாக கழிவுநீர் வாய்க்காலை தோண்டி என் வீட்டின் அருகில் திருப்பி விட்டுவிட்டு மூன்று நாட்களில் ஓடையை அவசரமாக கட்டி உள்ளனர் இதை கேட்ட போது என்னையும், என் மகளையும் அடிக்க வந்தனர்.
என் மனுமீது எந்த கருணையும் காட்டாத காரணத்தால். என் மனுக்களை சரிவர விசாரணை செய்யப்பட்டாத காரணத்தினால் அரசு அதிகாரி கேட்டபோது நான் பொறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டிருப்பதாக கூறி என் மனுவை தள்ளுபடி செய்தனர்.
எனக்கு பட்டா வழங்கவும் வாழ வழி செய்யவும் என கோரிக்கை வைத்தும் நிறைவேறாததால் இரு மகனுடன் தீ குளிக்க முயற்சி செய்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் அதனால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
செய்தியாளர் சந்திரன்

Comments
Post a Comment