சென்னை செங்குன்றம் அருகே வடகரை யில் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை கங்காதர ஈஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷே விழா ஆலய அர்ச்சகர் சம்பத்குமார் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.எஸ். அருண்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை பிரம்மச்சாரி பூஜை, சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை, மகா கணபதி ஓமம், தம்பதி பூஜை, நவகிரக ஹோமம் ஆகிய பூஜைகள் யாகசாலையில் நடத்தப்பட்டு ஸ்ரீ விஷ்ணு வராஹி அம்மன் கண் திறந்து, கும்ப அலங்காரம் செய்யப்பட்டு இரண்டு கால பூஜைகளுடன் பல்வேறு நதிகள் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கும்ப கலசத்தில் கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பரிவார தெய்வங்களாகிய விஷ்ணு ஸ்ரீ வராகி அம்மன், சீரடி சாய்பாபா, ஸ்ரீ ஆஞ்சநேயர் மூலவர்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சாமி அலங்காரம் செய்யப்பட்டு தூப தீபராதனை காண்பிக்கப்பட்டது. இதில் செங்குன்றம் வடகரை அழிஞ்சிவாக்கம் சுற்று வட்டார சிவ பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment