Skip to main content

பொது வேலை நிறுத்தத்தை ஒட்டி மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 161 பேர் கைது

கும்மிடிப்பூண்டி,ஜூலை.10. மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கையும், மக்கள் விரோத போக்கையும் கடைபிடிப்பதாக கூறி பல்வேறு தொழிற்சங்கள் சார்பில் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், கும்மிடிப்பூண்டியில் மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 161 பேர் காவல் துறையினரால் புதன்கிழமை கைது  செய்யப்பட்டனர்.


நான்கு சட்ட தொகுப்புகளை ரத்து செய்தல், முறை சாரா மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் 26ஆயிரம் ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட 13அம்ச  கோரிக்கைகளை வலியுறித்தி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை  செயல்படுத்திய நிலையில் கும்மிடிப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தொழிற் சங்க மையத்தின் மாவட்ட செயலாளர் ஜெ.அருள் தலைமையில் கும்மிடிப்பூண்டியில் கண்டனஆர்பாட்டம் மற்றும் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகி அர்ச்சுனன், எல்பிஎப் நிர்வாகி சிவக்குமார், காங்கிரஸ் கட்சி நிர்வாகி கே.ஏ.பிரேம்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுகுமார், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி சுல்தான் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வழக்கறிஞர் எம்.சம்பத், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி மாவட்ட செயலாளர் கே.எம்.விகேந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.நீலமேகம், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சாதிக் பாட்ஷா, மதிமுக மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 

கட்சி ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோபால் பங்கேற்று கண்டன உரையாற்றி மறியல் போராட்டத்தை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட இந்தய தொழிற்சங்க மையம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர், எல்ஐசி முகவர்கள் சங்கத்தினருடன் கும்மிடிப்பூண்டி பஜாரில் ஊர்வலமாக சென்று சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின் அவர்களை கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் போலீஸார் 

சாலை மறியலில் ஈடுபட்ட 161 பேரை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கும்மிடிப்பூண்டி பஜாரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்தியாளர் பிரான்சிஸ்

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...