ஓசூர் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் மீது இளம்பெண்கள் தொடர் புகார்..! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு..?
ஒசூரில் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் 6 லட்சம் ரூபாய் செலவில் சிகிச்சை மேற்கொண்ட பெண்னுக்கு அதிகப்படியான டோஸ் மருந்துகளாலும், சரியான சிகிச்சை இல்லாததாலும் அபார்ஷன் ஆனதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தொட்டி பகுதியை சேர்ந்தவர் ஜவகர்(28). சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த மீனா இருவரும் இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் ஒசூரில் உள்ள ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் கடந்த 2022 -ம் ஆண்டு நவம்பர் முதல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருமுட்டையும், ஜவகரிடம் பெறப்பட்ட விந்தனுக்கள் சரியான முறையில் இருப்பதாக ஐஸ்வர்யா நிர்வாகம் தெரிவித்ததால் கணவன் - மனைவியும் 5 லட்சம் ரூபாய் மேல் செலவிட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இந்த நிலையில், மே மாதம் 26 -ம் தேதி மீனாவிற்கு கருமூட்டை செலுத்தி இரு சிசுக்களும் வளர தொடங்கியிருப்பதாக கூறியதாகவும் 100 சதவீதம் குழந்தை உருவாவதில் எவ்வித சிக்கலும் இல்லை என உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து, ஜவகர், இந்த மாத தொடக்கத்தில் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மலேசியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில், மீனாவிற்கு அதிகப்படியான டோஸ் கொண்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 7 வாரங்கள் கரு வளர்ந்த நிலையில், தனியார் ஸ்கேன் மையத்தில் பரிசோதித்தபோது இரட்டை குழந்தைகளுக்கும் இதயம் உருவாகி சரியான முறையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 4 தினங்களுக்கு முன்பு மீனாவிற்கு வீட்டில் இரத்தப்போக்கு அதிகரித்ததால் மருத்துவரை தொடர்பு கொண்டபோது இரவில் மருத்துவர்கள் யாரும் இல்லை நீங்கள் வெளியில் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அலட்சியமாக கூறியுள்ளனர்.
ஆனால், கருத்தரித்தல் மையத்தில் சிகிச்சை பெற்று வருவதால் மற்ற தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க தயங்கி வெளியே அனுப்பியதாகவும், சரியான வழிகாட்டுதலோ, முறையான சிகிச்சையோ வழங்கவில்லையாம்.
ஆனாலும், அன்று இரவே கருத்தரித்தல் மையத்தினர் தெரிவித்த ஒசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதாகவும், இதனால் குழந்தைகள் அபார்ஷன் ஆனதாக வேதனையுடன் தெரித்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மீனா கூறுகையில்
ஒரு செவிலியரான எனக்கே இந்தநிலை என்றால் படிக்காத ஏழை மக்களின் நிலை என்ன? ஒசூரில் உள்ள ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தில் போதிய வசதிகளும், சிறந்த மருத்துவர்களும் இல்லை ஆகவே இந்த மருத்துவமனையை நிரந்தரமாக மூட தமிழக அரசு சுகாதாரதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஓசூர் மாநகர இளம்பெண்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை.

Comments
Post a Comment