Skip to main content

பணியில் நேர்மையின்றி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - கன்னியாகுமரி மாவட்ட SP டி.என்.ஹரி கிரன் பிரசாத் எச்சரிக்கை!

நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள்(Highway patrol)மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு காவலர்களை புதியதாக நியமித்து உத்தரவிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்: பணியில் நேர்மையின்றி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை!

 கன்னியாகுமரி மாவட்ட  மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப புதிதாக நியமித்து காவல் கண்காணிப்பாளர் டி.என்.ஹரி கிரன் பிரசாத்  உத்தரவு பிறப்பித்தார். இதில் ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் தாலுகா காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டனர்.

நெடுஞ்சாலை ரோந்து  மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவில் புதியதாக பணியமர்த்தப்பட்ட காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு  மாவட்ட காவல் அலுவலகத்தில்  கூட்டம்  நடைபெற்றது.

இதில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், புதியதாக நெடுஞ்சாலை ரோந்து, மதுவிலக்கு பிரிவில் பணிமாற்றப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் எனவும், பொதுமக்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்ளவும், பணியின் போது  விழிப்புடனும், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் பணியின்போது Smart kavalar app மற்றும் FRS app களை பயன்படுத்தி சந்தேக நபர்களின் நடமாட்டங்களை கண்காணிக்க வேண்டும். குற்றங்களை முன்கூட்டியே தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் மதுவிலக்கு அமல் பிரிவு காவலர்களிடம் மாவட்டத்தில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வதை தடுக்கவும் அதிக விலைக்கு மது விற்பவர்களை பிடிக்கவும்  இரவு நேரங்களில் விழிப்புடன் ரோந்து அலுவல்களில் ஈடுபட்டு மது விற்பனைகளை தடுக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். மேலும் பணியில் நேர்மையின்றி செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.மொத்தம் 140 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இதில் கலந்துகொண்டனர்.


செய்தியாளர் வாசுதேவன் 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...