முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நல உதவிகள், மதிய உணவு..
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சென்னை வடகிழக்கு மாவட்டம் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பாடியநல்லூர் ஊராட்சியில் கழக கொடி ஏற்றி தூய்மைப் பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலை, அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளரும் சோழவரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவருமான மீ.வே.கருணாகரன் தலைமையில் பாடியநல்லூர் மொண்டியம்மன் நகர் பஜார் அருகே நடைபெற்றது.
சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு டாக்டர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, கழக கொடியேற்றி, தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், 1000 பேருக்கு மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்கினார்.
இதில் சோழவரம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் அ.காசிம் முகம்மது, துணைச் செயலாளர்கள் கே.எம். துரைவேல், ப.சீனிவாசன், கி.வீரம்மாள், பொருளாளர் செ.அரசு, மாவட்ட பிரதிநிதிகள் இரா.விஜயன், பா.சேகர், பொன்.கோதண்டன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பரசுராமன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் என்.முகம்மது அலி, துணை அமைப்பாளர்கள் ஆத்தூர் ஜி.ஆர். பத்மநாபன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளை, மகளிரணி, கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment