அண்ணாமலையார் தனது தந்தையான வல்லாள மகாராஜாவிற்கு திதி கொடுக்கும் நிகழ்வு முடிந்த மறுநாள் அண்ணாமலையாருக்கு மகாராஜாவாக பொறுப்பேற்கும் மகுடாபிஷேகம்
திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜாவிற்கு குழந்தை பேறு இல்லாமல், அண்ணாமலையாரை நினைத்து பிரார்த்தனை செய்தபோது, அண்ணாமலையாரே அவருக்கு குழந்தையாக பிறந்தார் என, தல புராணங்கள் கூறுகின்றன.
மேலும் வல்லாள மகாராஜா போரில் உயிர் நீர்த்தார் என்ற தகவல் அறிந்ததும் நாம் யார் ஈசானிய மைதானத்தில் நடைபெறும் தீர்த்தவாரியை பாதியில் முடித்துக் கொண்டு மேல தாளம் இன்றி அண்ணாமலையார் கோயிலுக்கு திரும்புவது ஐதீகம். அதேபோல் தனது தந்தையான வல்லாள மகாராஜாவிற்கு ஆண்டுதோறும் மாசி மக தீர்த்தவாரியில் அண்ணாமலையார் திதி கொடுக்கும் வைபோகம் கீழ்பென்னாத்தூர் அடுத்த பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள துரிஞ்சலாறு கவுதம நதிக்கரையில், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து பின்னர், அண்ணாமலையார் சூல வடிவில் துரிஞ்சலாறில் மூழ்கி தீர்த்திவாரி நடைபெறும் இதை தொடர்ந்து, சம்பந்தனுார் கிராம மக்கள், அண்ணாமலையாருக்கு சம்பந்தம் கட்டும் நிகழ்வு நடைபெற்று மறுநாளான இன்று அண்ணாமலையார் மகாராஜாவாக மகுடம் சூட்டும் நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலைய அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு அண்ணாமலையாருக்கு மகாராஜாவாக மகுடாபிஷேகம் சூட்டப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை வழிபட்டனர். மேலும் சத்ரிய பேரரசர் வல்லாள மகாராஜா வரலாற்று புத்தகத்தை வணிகர் சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன்,மோகன் சாமி, வெங்கடேஷ் குமார், ஜெயபால் ஆகியோர் வழங்கினர்.
செய்தியாளர் மூர்த்தி


Comments
Post a Comment