வேலூர் மாவட்டம் , அணைக்கட்டு தாலுகா , ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரது பெற்றோர்கள் அருகில் உள்ள ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அந்த மாணவி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த மாணவியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். மாணவி கொடுத்த தகவலின் பேரில் மாணவியின் எதிர் வீட்டில் வசிக்கும் வேணுகோபால் (40 )என்பவர் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவரிடம் உல்லாசமாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் இரண்டு மாத கர்ப்பமாக ஆகியுள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பத்தாம் வகுப்பு பயிலும் மாணவியை கர்ப்பம் ஆக்கிய காமுகன் வேணுகோபாலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த வேப்பங்குப்பம் போலீ சார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் தொரப்பாட்டியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் வேணுகோபாலை காவலில் அடைத்தனர்.
செய்தியாளர் வாசுதேவன்

Comments
Post a Comment