கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் திமுக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் ஜோதி நகர் கிளைக் கழக செயலாளரும் , தொழிலதிபரும், மக்கள் சேவகருமான கேஏடி .அன்பு ஏற்பாட்டில் கலைஞரின் 102 வது பிறந்த நாளையொட்டி கழகக் கொடியேற்றி கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவியும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் வெகு விமர்சியாக கொண்டாடிய கட்சியினர்கள் !
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கேளம்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் கோவளம் செல்லும் பிரதான சாலையையொட்டி அமைந்துள்ள ஜோதி நகர் பகுதியில் இன்று காலை 10.00 மணி அளவில் திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகம் கேளம்பாக்கம் ஊராட்சி கிளைக் கழகம் சார்பில் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஜோதி நகர் கிளைக் கழகச் செயலாளரும், தொழிலதிபரும், மக்கள் சேவகருமான கே. ஏ .டி அன்பு தலைமை தாங்கினார் .
கேளம்பாக்கம் கிளைக் கழக செயலாளர் ராஜா மோசஸ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்கள்.கட்சியினர்களானமோகன் ,கனகராஜ், நடராஜ் வேணுகோபால் ஆகியோர்கள் அனைவரையும் வரவேற்றனர்கள். சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக பொறுப்பு குழு உறுப்பினர்ரும் , முன்னாள் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழகத் துணைச் செயலாளருமான கேளம்பாக்கம் கே. வாசுதேவன், கிளைக் கழகச் செயலாளரும், முன்னாள் கேளம்பாக்கம் ஊராட்சி துணைத்தலைவர் தி.கா.பாளையம் ஆகியோர்கள் கலந்துகொண்டு முதலாவதாக கட்சியின் கல்வெட்டில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் கழகக் கொடியினை ஏற்றி வைத்து பின்னர் மேடையின் மீது அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து ரோஜா மலர் தூவி வணங்கி , கலைஞரின் வாழ்வியல் குறித்து சிறப்புரையாற்றினார்கள் .
இதனைத் தொடர்ந்து கிளைகழகச் செயலாளரும், தொழிலதிபரும் மக்கள் சேவகருமான கே .ஏ. டி .அன்பு மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கி சிறப்புரையாற்றினார். பின்னர் மூவரும் இணைந்து பொதுமக்கள் கட்சியினர்களுக்கு கலைஞர் அவர்களின் 102வது பிறந்த நாளை லட்டு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினார்கள். இந்நிகழ்வில் கட்சியினை சேர்ந்த ராஜ்குமார், விஜயகுமார், ஷியாம், சர்மா,நாதன் ,சுமன் ,மருதுபாண்டி, அஸ்கர் அலிபாய் பொன்னுரங்கம்,பாபு ,முத்து, பாலு, சரவணன் ,பா. நிஷாந்தன் வினித் ,விக்கி, தென்னரசு, தட்சிணாமூர்த்தி, அருளானந்தம், ஏழுமலை ,ஐயப்பன் மகளிர் அணியினைச்சேர்ந்த லதா ,விஜய் ,சங்கீதா, சோபா ,மேரி, சைதாபாணு மற்றும் கட்சியினர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்கள். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜோதி நகர் கிளைக் கழக செயலாளரும், தொழிலதிபரும், மக்கள் சேவகருமான கே ஏ டி அன்பு கட்சியினர்களில் ஒருங்கிணைத்து செய்திருந்தார். வந்திருந்து கலந்து கொண்ட அனைவருக்கும் ஜோதி நகர் கிளைக் கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர் மூர்த்தி

Comments
Post a Comment