மாமல்லபுரம், பிப்.13-
புதிய புரட்சிக் கழகத்தின் நிறுவனத்தலைவர் டாக்டர் ஓ.இ.சங்கரின் பிறந்தநாள் விழாவாக தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஏழை, எளியோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என சுமார் 20-ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு, இதுவரை அக் கட்சியினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர்.
மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நரிக்குறவர், இருளர், பழங்குடியினர் குடும்பங்களுக்கு வேட்டி, சேலை, பாய், போர்வை, தலையணை உள்ளிட்ட வீட்டு உபயோக அத்தியாவசிய பொருட்கள் உதவி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் தற்காப்பு கலைகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு, அதற்கான சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது வருகிறது.
“புதிய புரட்சிக் கழகம்” கட்சியின் இந்த நலத்திட்ட உதவிகள் தற்போது தமிழ்நாடு முழுவதும் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த ஊடகப்பிரிவு தலைவர் எம்.அஜித், எஸ்.சந்துரு உள்ளிட்டோர் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த பிறந்தநாள் நலத்திட்ட நிகழ்வுகளை கவனித்து வருகின்றனர்.
செய்தியாளர் தாஸ்


Comments
Post a Comment