போதை ஒழிப்பிற்காக எஸ்கேசி அறக்கட்டளை மற்றும் ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை சார்பில் மாரரத்தான் போட்டி
போதை ஒழிப்பிற்காக எஸ்கேசி அறக்கட்டளை மற்றும் ரெட்டேரி ஸ்ரீ குமரன் மருத்துவமனை சார்பில் மாரரத்தான் போட்டி
போதை பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரானநாளை முன்னிட்டு ஸ்ரீ குமரன் அறக்கட்டளை சார்பில் "போதை இல்லாத எதிர்காலம்" என்ற பெயரில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப் பந்தய போட்டி செங்குன்றம் தண்டல் கழனி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
சென்னை ரெட்டேரி, கொளத்தூர், செங்குன்றம், மாதவரம், புழல், பெரம்பூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 10 முதல்13 வயது வரை, 14 முதல்20 வயது வரை, 21 முதல்40 வயது வரை மற்றும் 41க்கு மேற்பட்ட வயது என நான்கு பிரிவுகளாக போட்டி நடத்தி ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அம்மன் டிஆர்ஓய், ஷெல்டர் ஹோம், சக்ரா ஸ்கேன், ரோட்டரி கொரட்டூர் மற்றும் இதர அமைப்புகளின் ஒத்துழைப்பால் இந்த மராத்தான் நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டது
இதில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி கௌசிக், இந்திய மருத்துவ சங்கத்தின் செங்குன்றம் கிளைத் தலைவர் டாக்டர். கோபால் துரைசாமி, காமராஜர் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி நிறுவன தலைவர் தங்கமுத்து, சென்னை வாழ் நாடார் சங்கத் துணைத்தலைவர் ரவீந்திரநாதன், ஸ்ரீ குமரன் மருத்துவமனையின் நிர்வாக அறக்கட்டளை அறங்காவலர் டாக்டர் சி. ஆச்சா ஆறுமுகசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும், நினைவு பரிசையும் வழங்கி கௌரவித்தனர்.
டாக்டர் சி. ஆச்சா ஆறுமுகசாமி கூறும்போது, "இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் சமூகங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவர்களாக வளர்வதே எங்கள் நோக்கம். போதை இல்லாத எதிர்காலம் என்பது மிகவும் சக்திவாய்ந்தது
மேலும் இந்நிகழ்வு மூலமாக போதை தடுப்பு வழிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவர்களும் இளைஞர்களும் சமூக மாற்றத் தூதுவர்களாக உருவாக ஊக்கமளிக்கப்பட்டதுடன், போதை இல்லாத தலைமுறையை உருவாக்க அனைவரும் ஒன்று சேர்ந்து உறுதியுடன் செயல்பட வேண்டும் என அறக்கட்டளை சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இதில் மாணவர்கள் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ரஞ்சித்

Comments
Post a Comment