இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் என்ற அமைப்பு கடந்த 1928 ஆம் ஆண்டு மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக துவங்கப்பட்டது.
இந்திய அளவில் இந்த அமைப்பின் 176 வது கிளையாக சென்னை செங்குன்றம் கிளை துவங்கப்பட்டுள்ளது.
இதன் துவக்கவிழாவும் மருத்துவர் தின விழாவும் சென்னை செங்குன்றம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் பி.செங்குட்டுவன், மாநில செயலாளர் எஸ்.கார்த்திக் பிரபு, பிரசாந்த் மருத்துவமனை நிர்வாகி கீதா ஹரிப்பிரியா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மருத்துவ தொழில் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
மேலும் சென்னை செங்குன்றம் கிளை தலைவராக டாக்டர் கோபால் துரைசாமி, செயலாளராக டாக்டர் கமல்ராஜ், நிதித்துறை செயலாளராக டாக்டர் லாவண்யா ஆகியோரை நியமனம் செய்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.
இதில் டாக்டர் லியோ ஜீவாஸ், ரெட்டேரி ஸ்ரீகுமரன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஆறுமுகசாமி, கொளத்தூர் பிரசாந்த் மருத்துவமனை இயக்குநர் பிரசாந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மண்டல துணைத்தலைவர் டாக்டர் நர்மதா, மாநில இணைச் செயலாளர் டாக்டர் எம்.அருண்குமார் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மருத்துவர் தினத்தை முன்னிட்டு சென்னை செங்குன்றம் கிளை சார்பில் மருத்துவர்கள் தின கேக் வெட்டி கொண்டாடி, மருத்துவர்கள் டாக்டர் சிற்றம்பலம், டாக்டர் வி.ஆர். மோகன் ராவ், டாக்டர் மோகன்குமார், டாக்டர் ஆனந்த் மற்றும் சமூக சேவைக்காக தங்கமுத்து, தமீம் அன்சாரி ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
செய்தியாளர் ரஞ்சித்

.jpeg)
Comments
Post a Comment