செங்குன்றம் அருகே வடகரையில் எம்.வி.எம். மஹால் திறப்பு விழா நடைபெற்றது. பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன் திறந்து வைத்தார்.
சென்னை செங்குன்றம் அடுத்த வடகரையில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி.எம். ரமேஷ் குமார் கட்டியுள்ள எம்.வி.எம். மஹாலை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர். என்.ஆர். தனபாலன் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பெண்கள் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இவ்விழாவில் மறைந்த தாய் தந்தையருக்கு மலர் தூவி புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் வயலட் தனபாலன், எம்.வி.எம்.ரமேஷ்குமார், தமிழ்ச்செல்வி ரமேஷ் குமார், ராகுல் - ஸ்வஸ்திகா,மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர். புழல் ஏ.தர்மராஜ்,மாநில தலைமை நிலைய செயலாளர். எம்.ஆர். சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,மாநில வர்த்தக அணி செயலாளர். எம்.வைகுண்ட ராஜா, மாநில உயர்மட்ட குழு உறுப்பினர். உதயகுமார், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் காமராஜ், மாவட்ட செயலாளர் குலசை முத்துலிங்கம், தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.பாலமுருகன், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் மணிராஜ், தி.நகர் தொகுதி தலைவர் எம்.எம்.டி.ஏ.பாலமுருகன், அம்பத்தூர் தொகுதி தலைவர் சேர்மக்கனி, அம்பத்தூர் தொகுதி செயலாளர். காசிராஜன், நாடார் பாதுகாப்பு நல சங்கத்தலைவர் சங்கரலிங்கம், தமிழ்நாடு நாடார் பேரவையின் திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் சிலம்ப ஆசான் ஆர்.முருககனி, மாவட்ட செயலாளர் கே.பி.நல்லதம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் முன்னதாக வேல் பரத நாட்டி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் அசைவ உணவு பரிமாறப்பட்டது.

Comments
Post a Comment