Skip to main content

ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.! மூடி மறைக்கும் சென்னை கமிஷ்னர்- சவுக்கு சங்கர்

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய 25க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமனும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மேலும் கொலை வழக்கில் திருவெங்கடம் என்ற குற்றவாளியை போலீசார் என்கவுண்டர் செய்திருந்தனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக யூடியூப்பர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

சவுக்கு சங்கர் வீடு முற்றுகை போராட்டம்

சென்னையில் நேற்று சவுக்கு சங்கர் வீட்டை துப்புரவு பணியாளர்கள் தாக்கினர். வீடு முழுவதும் மலம் மற்றும் குப்பையை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சவுக்கு சங்கர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு உள்ளது. இதனை நேரடியாக அறிந்தவர் கொலை குற்றவாளி திருவெங்கடம், எனவே இந்த கொலை விஷயத்தை எங்கே வெளியே சொல்லிவிடுவார் என்ற காரணத்தினால் செல்வப்பெருந்தகையை கொலை வழக்கில் இருந்து காப்பாற்ற திருவெங்கடத்தை சென்னை கமிஷ்னர் என்கவுண்டர் செய்ததாக கூறினார். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

இப்போதும் செல்வப்பெருந்தகையை காப்பாற்ற துப்புரவு தொழிலாளர்களை அவதூறாக பேசியதாக என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே எனது வீட்டில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் செல்வப்பெருந்துகையும் உள்ளார் கமிஷ்னர் அருண் உள்ளனர். இந்த புதிய வீட்டிற்கு குடியேறி 3 மாதங்கள் தான் ஆகிறது. இந்த வீட்டின் முகவரியை நான் எந்த இடத்திலும் பதிவு செய்யவில்லை. போலீசாருக்கு மட்டுமே புதிய வீட்டின் முகவரி தெரியும். இந்த நிலையில் தான் எனது படத்தை அட்டையாக தயாரித்து இரண்டு பஸ்கள் மூலமாக துப்புரவு தொழிலாளிகளை அழைத்து வந்து வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை கமிஷ்னர் காரணம்

காவல்துறை துறை தான் எனது முகவரியை அவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். முன்னதாக துப்புரவு தொழிலாளர்களோடு காங்கிரஸ் நிர்வாகி சாலையில் பேரணியாக செல்கிறார். இதனை போலீசார் கண்டு கொள்ளாதது ஏன்.? காவல்துறை நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். இது போன்ற தகவலை திரட்டுவது தான் உளவுத்துறையின் வேலை. அப்படியிருக்கையில் சென்னை போலீசாரின் உளவுத்துறை என்ன செய்து கொண்டுள்ளது என கேள்வி எழுப்பினார். எனவே இது போன்ற காரணங்களுக்காகத்தான் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தொடர்பு இருப்பதாக கூறுவதாக சவுக்கு சங்கர் தெரிவித்தார். 

Comments

Popular posts from this blog

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு

3 கிராம் தங்க நகைக்காக முதியவர் கொலை 2 பேர் கைது செய்யாறில் பரபரப்பு  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்த வெம்பாக்கம் வட்டம் குண்டியாந்தண்டல் கிராமத்தை சேர்ந்த மன்னாரு சாமி வயது 89 இவர் தினமும் காலை 7 மணி அளவில் குண்டியாந் தண்டல் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வருவது வழக்கம் அதுபோல் 13 11 2025 அன்று காலை 7 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அனைவரும் அக்கம்பக்கம் தேடியதில் அதே ஊரைச் சேர்ந்த மாதவன் என்பவர் கூறியதின் பெயரில் அருகில் இருந்த காரியா மேடைக்கு அருகில் உள்ள முட்புதாரில் இறந்து கிடந்ததாகும் அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக  தூசி காவல் நிலையத்தில் புகார் பேரில் போலீசார் விசாரணை செய்தது அதில் அதே ஊரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் தினேஷ்குமார் வயது 25 ஜன பிரகாஷ் மகன் பிரவீன் குமார் வயது 25 இருவரும் சேர்ந்து 3 கிராம் தங்கைக்காக கொலை செய்ததாக காவல் நிலையத்தில் ஒத்துக்கொண்டனர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளர் வெங்கடேஷ்

மாதவரம் பொன்னியம்மன்மேடு அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

சென்னை மாதவரம் அடுத்த பொன்னியம்மன்மேடு கற்பகம் நகர், நாகவல்லி அவென்யூ வில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நன்பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமிஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, உள்ளிட்ட மூன்று கால பூஜைகள் நடைபெற்று நான்காம் கால பூஜையாக யாகசாலை பூஜை, நாடி சந்தனம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரானது கிராம பெரியவர்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  அதனைத் தொடர்ந்து மூலவர் உற்சவர் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீரானது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.  ஸ்ரீ வர சித்தி விநாயகர் பல்வேறு வண்ண மலர்களாலும், வாசனை திரவியங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.  கும்பாபிஷே விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்ன...

“உன் கணவனின் விந்தில் விஷம் உள்ளது... என்னுடன் உறவு கொள்..!” - சிக்கிய ‘பலான’ போதகர்..!

  கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பெந்தகொஸ்தே சபையில் மதபோதகராக இருந்து வருபவர் ரெஜிமோன். சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் உடல்நலக் குறைவாக இருப்பதாக சபைக்கு வந்துள்ளார். அவருக்காக ரெஜிமோன் வேண்டுதல் செய்த நிலையிலும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உடல் ஆரோக்கியம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெண் சபைக்கு வராதது குறித்து கேட்ட ரெஜிமோன், சரியாக சபைக்கு வரும்படி கூற அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்படி அந்த பெண் செல்லும்போதெல்லாம் அவருக்கு தனியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என அழைத்து சென்ற ரெஜிமோன், உனது மார்பகம் அழகாக இருக்கிறது என்று வர்ணனை செய்து சில்மிஷ முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் “உனது கணவனின் விந்தில் விஷம் உள்ளது. அதனால்தான் உனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. நீ என்னுடன் உறவுக் கொண்டால் அதை சரிசெய்ய முடியும். எனது பரிசுத்தமான விந்து அந்த விஷத்தை போக்கும்” என்று கதைகளை அளந்து விட்டுள்ளார்.   சம்பவத்தன்று அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்து அவரை வன்கொடு...