தஞ்சாவூர் மாவட்ட தனியார் பள்ளிகள் சங்கம் மற்றும் தஞ்சாவூர் டெல்டா ரோட்டரி சங்கம்- தஞ்சாவூர் கிரானரி ரோட்டரி சங்கம், மற்றும் தஞ்சாவூர் ஹெரிடேஜ் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும், மாணவர்களுக்கான மாவட்ட அளவில் மாபெரும் ஓவிய போட்டி, இளந் தூரிகை -2024" நிகழ்ச்சியானது தஞ்சை பாரத் கலை அறிவியில் கல்லூரியில், 31.8.2024அன்றைய தினம் காலை,8:00- மணியளவில் போட்டி தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்டத் தனியார் பள்ளிகள் சங்க தலைவர், ச.சித்தார்த்தன் தலைமை தாங்கினார், தஞ்சாவூர் மாவட்ட. தனியார் பள்ளிகள் சங்க செயலாளரும், ரோட்டரி உதவி ஆளுநருமாகிய, இரா. பழனியப்பன் வரவேற்புரையாற்றினார். தஞ்சாவூர் மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க பொருளாளர்,மு. முகமது இக்பால், இணைச்செயலாளர்,பொ.பால பாலத்தண்டாயுதபாணி, இணைச்செயலாளர் திருமதி.க.இ.கிருஷ்ணராணி, பூதலூர் ஒன்றிய செயலாளர்,ந. திருநாவுக்கரசு, திருவையாறு ஒன்றிய செயலாளர், மே.ரங்கநாதன், செயற்குழு உறுப்பினர்,ஜி.மணிக்கண்ணன், ஒரத்தநாடு ஒன்றிய தலைவர்,த.செல்வம்,திருவோணம் ஒன்றிய செயலாளர்,அ. இராமகிருஷ்ணன்,செயற்குழு உறுப்பினர்,அ. சிராஜுதீன், செயற்குழு உறுப்பினர்,மு. புகழேந்தி, செயற்குழு உறுப்பினர்,இரா. ராஜா, செயற்குழு உறுப்பினர் திருமதி. பி. உமாராணி, ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். தஞ்சை மாவட்ட தனியார் பள்ளிகள் சங்க துணைத்தலைவர்,ஆ.கருணாநிதி தொடக்க உரையாற்றினார், சிறப்பு அழைப்பாளர்களாக: மாநில தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவர்,ம. ஆறுமுகம், பாரத் கல்வி குழுமம் செயலாளர், திருமதி. புனிதா கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுரை ஆற்றினார்கள்.
ரோட்டரி உதவி ஆளுநர், இரா. அண்ணாமலை,டெல்டா ரோட்டரி சங்க தலைவர்,த.சே.தனராஜ், கிரானரி ரோட்டரி சங்க தலைவர்,சிங். இரா.அன்பழகன், ஹெரிடேஜ் ரோட்டரி சங்க தலைவர்,க.இரகு ஆகியோர்கள் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு,இளந் தூரிகை-2024 போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்கள், நடைபெற்ற ஓவிய போட்டியில், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 52- பள்ளிகளிலிருந்து, ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள 860-மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர், இந்தஓவிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற,130-மாணவ, மாணவியருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது. இதில் தாளாளர்கள், நிர்வாகிகள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நடைபெற்ற நிகழ்ச்சிகளை துணைத் தலைவர்,லூ.லாரன்ஸ் தொகுத்து வழங்கினார்,நிகழ்ச்சியின் நிறைவாக செயற்குழு உறுப்பினர்,திருமதி. க.மகாலெட்சுமி நன்றி கூறினார்.செய்தியாளர் வேங்கை குணா

Comments
Post a Comment