எஸ்.புதூர் ஸ்கை சவுரியம்வெல் ஷைன் லயன்ஸ் சங்கத்தின் சவுரியம் ஆண்டிற்கான பணி ஏற்பு விழா, இமயமாண்டின் தலைவர் Lion Er.ச. ஆனந்த் தலைமையில்,செ. புதூர் இராஜாமணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. செயலர் Ln.கி. சுரேஷ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். சாசனத் தலைவர் MJF Ln.ச. கார்த்திகேயன் மேனாள் ஆளுநர்,' PMJF Ln. S.முகமது ரஃபி அவர்களை அறிமுகம் செய்தார். தலைவராக Ln. LIC S. அன்பழகன், செயலராக Ln.R. கலைவாணன், பொருளாளராக Ln.S. சதீஷ், நிர்வாக அலுவலராக Ln.Dr.N. பிரகாஷ் மற்றும் சங்க நிர்வாகிகளை பணியில் அமர்த்தி, புதிய பொறுப்பாளர்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை மேனாள் ஆளுநர் விளக்கினார். மேலும் தமது பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சை மகாராஜா நிறுவனங்களின் தலைவராக உள்ள மேனாள் ஆளுநர், சங்கத்தின் சேவைத் திட்டத்திற்கு, ரூபாய் 10,000/- நன்கொடை வழங்கினார். புதிய தலைவர் Ln.S. அன்பழகனை, மேனாள் தலைவர் Ln. இரா. முத்துகிருஷ்ணன் அறிமுகம் செய்தார். சவுரியம் ஆண்டில் செய்ய உள்ள சேவைத் திட்டங்களை எடுத்துரைத்தார். மாவட்ட அவை ஆலோசகர் PMJF Ln.காசி பாலசுப்பிரமணியன் செ. புதூர் சிட்டி யூனியன் வங்கி மேலாளர், ச. கருணாநிதி, மதுரை வழக்கறிஞர், மு. சுரேஷ்குமார், கும்பகோணம் பர்னிச்சர் மார்ட் உரிமையாளர், சி. ராஜேந்திரன், மேலையூர் சாந்தா அன்பழகன் ஆகியோரை புதிய உறுப்பினர்களாக சங்கத்தில் இணைத்தார். பணியேற்பு விழாவிற்கு வருகை புரிந்த அனைவருக்கும், காய்கறி விதைபொட்டலங்கள், தேக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
10- பள்ளிகளுக்கு முதலுதவிப் பெட்டியும்,10- தூய்மைப் பணியாளர்களுக்குப் புடவையும், 5- கட்டடத் தொழிலாளர்களுக்கு கட்டுமான உபகரணங்களும், ஆதரவற்றோர் இல்லத்திற்கு மளிகை பொருட்களும், ஆளுநரின் சிறப்பு திட்டத்தின் கீழ் ஆறு பயனாளிகளுக்கு தலைக்கவசமும்,17- மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் ஐவருக்கு சீருடையும் வழங்கப்பட்டன. செ. புதூர், வடமட்டம் ஆகிய பள்ளிகளில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளும், ஊரகத் திறனாய்வு தேர்வு, தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கிப் பாராட்டப்பட்டனர். பணியேற்பு விழாவை முன்னிட்டு, தில்லையம்பூர் சங்க இயக்குனர் லயன் சம்பந்தம் பிறந்தநாளை முன்னிட்டு உணவு வழங்கப்பட்டது.
செ. புதூர் முப்பள்ளிகளில் பயிலும் 800-மாணவ, மாணவிகளுக்கு வாசன் கண் மருத்துவமனை மூலம், கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. கும்பகோணம் ஈஷ்வர் மனநலக் காப்பகத்திற்கு ரூபாய். 5000/-ம் நன்கொடை வழங்கப்பட்டது. கும்பகோணம் எல்ஐசி கிளை மேலாளர், சி.சிவாஜி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பணியேற்பு விழாவில் மாவட்ட அமைச்சரவை, இ செயலாளர் MJF Ln. Er. C. இளங்கோவன், மாவட்ட கூடுதல் அவைச் செயலர், Ln. N. சிவராமகிருஷ்ணன், மாவட்ட கூடுதல் அவைச் செயலாளர் Ln. G.செந்தில், மாவட்ட கூடுதல் அவைப் பொருளாளர் Ln. M. J.ஸ்டீபன், மண்டலத் தலைவர் MJF Dr. K. பழனிவேலு, வட்டாரத் தலைவர், Ln. V. சிவசங்கரன், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் MJF Ln.C.சீனிவாசன், Ln. A. பாலமுருகன், Ln. V. முத்துக்குமார், Ln. Dr. P.அன்பு சீனிவாசன், Ln. P. முத்துக்குமாரசாமி, LnS. கோவிந்தராஜ், Ln. V. இரமேஷ், Ln. M. சுந்தர், Ln. Er C.இராஜா ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். சங்க வழிகாட்டும் அரிமா MJF Ln. தி. முருகானந்தம் தொகுத்து வழங்கினார். விழாவில் 15க்கும் மேற்பட்ட தோழமை சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். சங்க மேலாளர் தலைவர் MJF Ln. S.மனோகரன் நன்றி கூறினார்.
செய்தியாளர் வேங்கை குணா
Comments
Post a Comment