திருவள்ளூர் கிழக்கு மாவட்டதிமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் பெரியபாளையத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி
திருவள்ளூர்மாவட்டம் பெரியபாளையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு நிறைவுவிழா மற்றும் 101வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான கராத்தே போட்டி நடை பெற்றது, இதில், தமிழகத்தைச் சேர்ந்த 250 வீரர்கள், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 200 வீரர்கள் என மொத்தம் 450 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாஸ்டர்கள் எம்.தெய்வசிகாமணி மற்றும் சி.ரமேஷ், காக்கவாக்கம் சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் 80 பேர் கலந்து கொண்ட நடுவர்கள் இப்போட்டியை நடத்தினர் இதில்,60 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.மாலை 4 மணிக்கு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,எல்லாபுரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளரும்,தலைமை செயற்குழு உறுப்பினருமான P.J.மூர்த்தி தலைமை தாங்கினார்.மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன், ஒன்றிய கழக செயலாளர்கள் A.சத்தியவேலு,சோழவரம் சேர்மன் N.செல்வசேகரன்,பேரூர் செயலாளர் P.முத்து, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் K.V.லோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் கே.ராஜேஷ், மாவட்ட துணை அமைப்பாளர் கராத்தே ஆர்.கே.தினகரன் ஆகியோர் வரவேற்றனர் இதில்,சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான T.J.கோவிந்தராசன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள், நினைவு பரிசு,பதக்கங்கள் உள்ளிட்டவைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில்,மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் என்.வில்சன்,பொற்றோர்ஆசீரியர் சங்க தலைவர் I.ஏழுமலை மற்றும் G.D.வேலுமயில் தேவராஜ் ஊத்துக்கோட்டை பேரூராட்சி 11வது வார்டு மன்ற உறுப்பினர் கோல்டு மணிகண்டன்,பெரியபாளையம் வழக்கறிஞர் ஆ.சீனிவாசன்,மொய்தீன்பாய்,, வடமதுரை அப்புன்,பார்த்தீபன், ஆத்துப்பாக்கம் வேலு, செல்வம்,லோகநாதன்,மகளிர் அணியை சேர்ந்த காமாட்சி, நளாயினி, சுந்தரிஅன்பு,சரண்யா, நிர்மலா உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,நகர,பேரூர்,கிளைக் கழக நிர்வாகிகள்,அணிகளின் அமைப்பாளர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் துரைபன்னீர் செல்வம்

Comments
Post a Comment