செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெல்லிக்குப்பம் முதல்நிலை ஊராட்சியில் 06வதுவார்டு அருள்மிகு ஶ்ரீ செல்வவிநாயகர் தெருவில் கடந்த சுமார் 50ஆண்டுகளுக்கு முன்னர் செல்வவிநாயகர் சிலையை இங்குள்ள பொதுமக்கள் வைத்து சிறியகூரை கோவில் வைத்துவழிப்பட்டுவந்தனத்கள் .காலப்போக்கில் இங்குள்ளவர்கள் இக்கோவிலினை புதியதாக கட்டி கும்பாபிஷேகம் செய்ய இந்தாண்டு கடந்த மார்ச் மாதம்முடிவு செய்து அதன்படி ஆலயத்தில் இருந்த செல்வவிநாயகருக்கு பாலாலயம் செய்து கோவில்கட்டு திருப்பணியினை துவங்கினார்கள்.
அதன்படி புதியதாக கருவறை ,விமான மண்டபம் , அர்த்தமண்டபம் ஆகியவைகள் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைப்பெற்று அனைத்து பணிகளும் நிறைவுற்ற நிலையில் இந்தமாதம் ஶ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்திற்கு அஷ்டபந்தபந்தன மஹாகும்பாபிஷேகம் செய்யமுடிவுசெய்யப்பட்டு அதன்படி கடந்த திங்கள்கிழமையன்று கோபூஜை விநாயகர் பூஜையும் அன்று மாலை முதல் கால யாக பூஜை துவங்கி மறுநாள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இரண்டாம் காலயாக பூஜையும் மாலை மூன்றாம் காலயாக பூஜையும் நடைப்பெற்று இன்று காலை சுமார் 07.15மணிக்கு நான்காம் காலயாக பூஜை துவங்கி ஸ்பர்சாஹீ தத்வார்ச்சனை , விஷேச த்ரவ்யாதி ஹோமமங்கள் நடைப்பெற்று காலை 09.15மணிக்குமங்கலவாத்தியத்துடன் கடம்புறப்பட்டு சரியாக 09.45மணிக்கு அருள்மிகு ஶ்ரீ செல்வவிநாயகர் ஆலய விமான மண்டபத்தில் கலசத்திற்கு கும்பாபிஷேகமமும் அதனைத்தொடர்ந்து மூலவருக்கு மஹாகும்பாபிஷேகமும் அதனைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபதூபஆராதனைகள் நடைப்பெற்றன. பக்தர்கள் நடைப்பெற்ற அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தை கண்டுகளித்து வரிசையில் நின்று விநாயகரை வழிப்பட்டு அன்னதானம் பெற்றுச்சென்றனர்கள் .இன்றிலிருந்து தொடர்ந்து 48நாட்களுக்கு மண்டலஅபிஷேகம் நடைபெறயுள்ளது. இந்நிகழ்ச்சியில் நெல்லிக்குப்பம் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர். என்.சி .பார்த்தசாரதி ,துணைத்தலைவர் வார்டு உறுப்பினர்கள் கிராம பெரியவர்கள் ,திருக்கோவிலுக்கு நன்கொடை வழங்கியவர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்துகொண்டனர்கள். அருள்மிகு ஶ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தினை ஐயாசாமி குடும்பத்தினர்கள் தனியாக நிலம் வாங்கி அதன்மீது ஊர்கிராம பொதுமக்கள் ஒத்துழைப்பில் திருப்பணிகளை சிறப்பாக செய்துமுடித்தனர்கள். இவர்களுக்கு திருக்கோவில் மற்றும் ஊராட்சி கிராம பொதுமக்கள் சார்பில் கும்பமரியாதை அளித்து கெளரவிக்கப்பட்டது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் திருக்கோவில் சார்பில் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்கள்.
செய்தியாளர் மூர்த்தி

Comments
Post a Comment